< ஏசாயா 53 >

1 எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
Ngubani olikholiweyo ilizwi lethu, njalo amandla kaThixo abonakaliswe kubani na?
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
Wakhula phambi kwakhe njengehlumela, lanjengempande emhlabathini owomileyo. Wayengelabuhle lobukhosi ukuba asikhange, kungelalutho esimeni sakhe olungenza simfune.
3 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம்.
Weyiswa njalo waliwa ngabantu, umuntu wezinsizi, njalo ekujayele ukuhlupheka. Lowo abantu abangafuniyo ukukhangelana laye weyiswa, asimhloniphanga.
4 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம்.
Ngempela wathatha inhlungu zethu wathwala insizi zethu, kodwa thina sathi utshaywe nguNkulunkulu, ebethwe nguye, njalo uhlutshiwe.
5 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
Kodwa wagwazwa ngenxa yezono zethu, wachobozwa ngenxa yokona kwethu, ukuhlutshwa kwakhe kwasilethela ukuthula, njalo sasiliswa ngamanxeba akhe.
6 நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.
Thina sonke silahlekile njengezimvu, munye ngamunye wethu uphambukele endleleni yakhe; njalo uThixo ubeke phezu kwakhe ukona kwethu sonke.
7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.
Wancindezelwa wahlutshwa, kodwa kawuvulanga umlomo wakhe; wakhokhelwa ukuyabulawa njengewundlu, njalo njengemvu ithule phambi komgundi wayo, laye kawuvulanga umlomo wakhe.
8 துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார்.
Ngokuncindezelwa langokwahlulela wathathwa. Ngubani ongakhuluma ngesizukulwane sakhe na? Ngoba wasuswa elizweni labaphilayo; watshaywa ngenxa yeziphambeko zabantu bami.
9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
Wabelwa ingcwaba kanye lababi, kanye labanothileyo ekufeni kwakhe, lanxa kungeladlakela alwenzayo njalo kungekho inkohliso emlonyeni wakhe.
10 ௧0 யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Ikanti kwakuyintando kaThixo ukumchoboza lokumenza ahlupheke, njalo lanxa uThixo esenza ukuphila kwakhe umnikelo wecala, uzabona inzalo yakhe, andise insuku zokuphila kwakhe, lentando kaThixo izaphumelela ngaye.
11 ௧௧ அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
Emva kokuhlupheka komoya wakhe, uzabona ukukhanya kokuphila asuthiseke; ngokwazi kwayo inceku yami elungileyo izalungisa abanengi, ithwale izono zabo.
12 ௧௨ அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Ngakho-ke ngizamnika isabelo phakathi kwabakhulu, njalo uzakwabelana impango labalamandla ngoba wanikela ukuphila kwakhe ekufeni, wabalwa ndawonye lezoni; ngoba wathwala izono zabanengi, wancengela izoni.

< ஏசாயா 53 >