< ஏசாயா 27 >

1 அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
Ын зиуа ачея, Домнул ва лови ку сабия Луй чя аспрэ, маре ши таре левиатанул, Бабилонул, шарпеле фугар (Асур), ши левиатанул, шарпеле инелат (Бабел), ши ва учиде балаурул де лынгэ маре (Еӂиптул).
2 அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
Ын зиуа ачея, кынтаць о кынтаре асупра вией челей май алесе:
3 யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
„Еу, Домнул, сунт Пэзиторул ей, Еу о уд ын фиекаре клипэ; Еу о пэзеск зи ши ноапте, ка сэ н-о ватэме нимень.
4 கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்;
Н-ам ничо мыние. Дар, дакэ вой гэси мэрэчинь ши спинь, вой мерӂе ла луптэ ымпотрива лор ши-й вой арде пе тоць,
5 இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான்.
афарэ нумай дакэ вор кэута окротиря Мя, вор фаче паче ку Мине, да, вор фаче паче ку Мине.”
6 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
Ын времуриле виитоаре, Иаков ва принде рэдэчинэ, Исраел ва ынфлори ши ва одрэсли ши ва умпле лумя ку роаделе луй.
7 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ?
Л-а ловит оаре Домнул кум а ловит пе чей че-л ловяу? Л-а учис Ел кум а учис пе чей че-л учидяу?
8 தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
Ку мэсурэ л-ай педепсит ын робие, луынду-л ку суфларя нэпрасникэ а вынтулуй де рэсэрит.
9 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
Астфел, нелеӂюиря луй Иаков а фост испэшитэ ши ятэ родул ертэрий пэкатулуй луй: Домнул а фэкут тоате петреле алтарелор ка ниште петре де вар префэкуте ын цэрынэ; идолий Астартеей ши стылпий Соарелуй ну се вор май ридика.
10 ௧0 பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
Кэч четатя чя таре а рэмас сингуратикэ, а ажунс о локуинцэ лэсатэ ши пэрэситэ ка пустиул. Ын еа паште вицелул, ын еа се кулкэ ши-й мэнынкэ рамуриле.
11 ௧௧ அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.
Кынд и се усукэ рамуриле, сунт рупте; вин фемеиле сэ ле ардэ. Кэч ачеста ера ун попор фэрэ причепере, де ачея Чел че л-а фэкут н-а авут милэ де ел ши Чел че л-а ынтокмит ну л-а ертат.
12 ௧௨ அக்காலத்திலே, யெகோவா ஆற்றங்கரையின் விளைவு துவங்கி எகிப்தின் நதிவரை போரடிப்பார்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள்.
Ын время ачея, Домнул ва скутура роаде де ла курсул рыулуй пынэ ла пырыул Еӂиптулуй, яр вой вець фи стрыншь унул кыте унул, копий ай луй Исраел!
13 ௧௩ அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த மலையிலே யெகோவாவைப் பணிந்துகொள்ளுவார்கள்.
Ын зиуа ачея, се ва суна ку трымбица чя маре ши атунч се вор ынтоарче чей сургюниць дин цара Асирией ши фугарий дин цара Еӂиптулуй. Ей се вор ынкина ынаинтя Домнулуй пе мунтеле чел сфынт, Иерусалим.

< ஏசாயா 27 >