< ஓசியா 13 >

1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான்.
زمانی چنین بود که هرگاه افرایم سخن می‌گفت، مردم از ترس می‌لرزیدند، چون او در اسرائیل قبیله‌ای مهم بود. ولی اکنون مردم افرایم با پرستش بعل محکوم به فنا شده است.
2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
قوم بیش از پیش نافرمانی می‌کنند. نقره‌های خود را آب می‌کنند تا آن را در قالب ریخته برای خود بتهایی بسازند بتهایی که حاصل فکر و دست انسان است. می‌گویند: «برای این بتها قربانی کنید! بتهای گوساله شکل را ببوسید!»
3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
این قوم مثل مه و شبنم صبحگاهی به‌زودی از بین خواهند رفت و مثل کاه در برابر باد و مثل دودی که از دودکش خارج می‌شود زایل خواهند شد.
4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
خداوند می‌فرماید: «تنها من خدا هستم و از زمانی که شما را از مصر بیرون آورده‌ام خداوند شما بوده‌ام. غیر از من خدای دیگری نیست و نجا‌ت‌دهندۀ دیگری وجود ندارد.
5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன்.
در بیابان، در آن سرزمین خشک و سوزان، از شما مواظبت نمودم؛
6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
ولی پس از اینکه خوردید و سیر شدید، مغرور شده، مرا فراموش کردید.
7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
بنابراین، مثل شیر به شما حمله می‌کنم و مانند پلنگی، در کنار راه در کمین شما خواهم نشست.
8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
مثل ماده خرسی که بچه‌هایش را از او گرفته باشند، شما را تکه‌تکه خواهم کرد؛ و مانند شیری شما را خواهم بلعید، و چون حیوانی وحشی شما را خواهم درید.
9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்?
«ای اسرائیل، هلاک خواهی شد، آن هم توسط من که تنها یاور تو هستم.
10 ௧0 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
کجا هستند پادشاه و رهبرانی که برای خود خواستی؟ آیا آنها می‌توانند تو را نجات دهند؟
11 ௧௧ நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
در خشم خود پادشاهی به تو دادم و در غضبم او را گرفتم.
12 ௧௨ எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
«گناهان اسرائیل ثبت شده و آمادهٔ مجازات است.
13 ௧௩ பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.
با وجود این، فرصتی برای زنده ماندن او هست. اما او مانند بچه لجوجی است که نمی‌خواهد از رحم مادرش بیرون بیاید!
14 ௧௪ அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
آیا او را از چنگال گور برهانم؟ آیا از مرگ نجاتش بدهم؟ ای مرگ، بلاهای تو کجاست؟ و ای گور هلاکت تو کجاست؟ من دیگر بر این قوم رحم نخواهم کرد. (Sheol h7585)
15 ௧௫ இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
هر چند افرایم در میان برادرانش ثمربخش بود، ولی من باد شرقی را از بیابان به شدت بر او می‌وزانم تا تمام چشمه‌ها و چاههای او خشک شود و ثروتش به تاراج رود.
16 ௧௬ சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.
سامره باید سزای گناهانش را ببیند، چون بر ضد خدای خود برخاسته است. مردمش به دست سپاهیان مهاجم کشته خواهند شد، بچه‌هایش به زمین کوبیده شده، از بین خواهند رفت و شکم زنان حامله‌اش با شمشیر پاره خواهد شد.»

< ஓசியா 13 >