< எபிரேயர் 9 >
1 ௧ அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
ស ប្រថមោ និយម អារាធនាយា វិវិធរីតិភិរៃហិកបវិត្រស្ថានេន ច វិឝិឞ្ដ អាសីត៑។
2 ௨ எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும்.
យតោ ទូឞ្យមេកំ និរមីយត តស្យ ប្រថមកោឞ្ឋស្យ នាម បវិត្រស្ថានមិត្យាសីត៑ តត្រ ទីបវ្ឫក្ឞោ ភោជនាសនំ ទឝ៌នីយបូបានាំ ឝ្រេណី ចាសីត៑។
3 ௩ இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது.
តត្បឝ្ចាទ៑ ទ្វិតីយាយាស្តិរឞ្ករិណ្យា អភ្យន្តរេ ៜតិបវិត្រស្ថានមិតិនាមកំ កោឞ្ឋមាសីត៑,
4 ௪ அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
តត្រ ច សុវណ៌មយោ ធូបាធារះ បរិតះ សុវណ៌មណ្ឌិតា និយមមញ្ជូឞា ចាសីត៑ តន្មធ្យេ មាន្នាយាះ សុវណ៌ឃដោ ហារោណស្យ មញ្ជរិតទណ្ឌស្តក្ឞិតៅ និយមប្រស្តរៅ,
5 ௫ அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
តទុបរិ ច ករុណាសនេ ឆាយាការិណៅ តេជោមយៅ កិរូពាវាស្តាម៑, ឯតេឞាំ វិឝេឞវ្ឫត្តាន្តកថនាយ នាយំ សមយះ។
6 ௬ இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.
ឯតេឞ្វីទ្ឫក៑ និម៌្មិតេឞុ យាជកា ឦឝ្វរសេវាម៑ អនុតិឞ្ឋនតោ ទូឞ្យស្យ ប្រថមកោឞ្ឋំ និត្យំ ប្រវិឝន្តិ។
7 ௭ இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
កិន្តុ ទ្វិតីយំ កោឞ្ឋំ ប្រតិវឞ៌ម៑ ឯកក្ឫត្វ ឯកាកិនា មហាយាជកេន ប្រវិឝ្យតេ កិន្ត្វាត្មនិមិត្តំ លោកានាម៑ អជ្ញានក្ឫតបាបានាញ្ច និមិត្តម៑ ឧត្សជ៌្ជនីយំ រុធិរម៑ អនាទាយ តេន ន ប្រវិឝ្យតេ។
8 ௮ அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
ឥត្យនេន បវិត្រ អាត្មា យត៑ ជ្ញាបយតិ តទិទំ តត៑ ប្រថមំ ទូឞ្យំ យាវត៑ តិឞ្ឋតិ តាវត៑ មហាបវិត្រស្ថានគាមី បន្ថា អប្រកាឝិតស្តិឞ្ឋតិ។
9 ௯ அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள்.
តច្ច ទូឞ្យំ វត៌្តមានសមយស្យ ទ្ឫឞ្ដាន្តះ, យតោ ហេតោះ សាម្ប្រតំ សំឝោធនកាលំ យាវទ៑ យន្និរូបិតំ តទនុសារាត៑ សេវាការិណោ មានសិកសិទ្ធិករណេៜសមត៌្ហាភិះ
10 ௧0 உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
កេវលំ ខាទ្យបេយេឞុ វិវិធមជ្ជនេឞុ ច ឝារីរិករីតិភិ រ្យុក្តានិ នៃវេទ្យានិ ពលិទានានិ ច ភវន្តិ។
11 ௧௧ கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,
អបរំ ភាវិមង្គលានាំ មហាយាជកះ ខ្រីឞ្ដ ឧបស្ថាយាហស្តនិម៌្មិតេនាត៌្ហត ឯតត្ស្ឫឞ្ដេ រ្ពហិព៌្ហូតេន ឝ្រេឞ្ឋេន សិទ្ធេន ច ទូឞ្យេណ គត្វា
12 ௧௨ வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
ឆាគានាំ គោវត្សានាំ វា រុធិរម៑ អនាទាយ ស្វីយរុធិរម៑ អាទាយៃកក្ឫត្វ ឯវ មហាបវិត្រស្ថានំ ប្រវិឝ្យានន្តកាលិកាំ មុក្តិំ ប្រាប្តវាន៑។ (aiōnios )
13 ௧௩ அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால்,
វ្ឫឞឆាគានាំ រុធិរេណ គវីភស្មនះ ប្រក្ឞេបេណ ច យទ្យឝុចិលោកាះ ឝារីរិឝុចិត្វាយ បូយន្តេ,
14 ௧௪ நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
តហ៌ិ កិំ មន្យធ្វេ យះ សទាតនេនាត្មនា និឞ្កលង្កពលិមិវ ស្វមេវេឝ្វរាយ ទត្តវាន៑, តស្យ ខ្រីឞ្ដស្យ រុធិរេណ យុឞ្មាកំ មនាំស្យមរេឝ្វរស្យ សេវាយៃ កិំ ម្ឫត្យុជនកេភ្យះ កម៌្មភ្យោ ន បវិត្រីការិឞ្យន្តេ? (aiōnios )
15 ௧௫ ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ស នូតននិយមស្យ មធ្យស្ថោៜភវត៑ តស្យាភិប្រាយោៜយំ យត៑ ប្រថមនិយមលង្ឃនរូបបាបេភ្យោ ម្ឫត្យុនា មុក្តៅ ជាតាយាម៑ អាហូតលោកា អនន្តកាលីយសម្បទះ ប្រតិជ្ញាផលំ លភេរន៑។ (aiōnios )
16 ௧௬ ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
យត្រ និយមោ ភវតិ តត្រ និយមសាធកស្យ ពលេ រ្ម្ឫត្យុនា ភវិតវ្យំ។
17 ௧௭ எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
យតោ ហតេន ពលិនា និយមះ ស្ថិរីភវតិ កិន្តុ និយមសាធកោ ពលិ រ្យាវត៑ ជីវតិ តាវត៑ និយមោ និរត៌្ហកស្តិឞ្ឋតិ។
18 ௧௮ அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.
តស្មាត៑ ស បូវ៌្វនិយមោៜបិ រុធិរបាតំ វិនា ន សាធិតះ។
19 ௧௯ எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
ផលតះ សវ៌្វលោកាន៑ ប្រតិ វ្យវស្ថានុសារេណ សវ៌្វា អាជ្ញាះ កថយិត្វា មូសា ជលេន សិន្ទូរវណ៌លោម្នា ឯឞោវត្ឫណេន ច សាទ៌្ធំ គោវត្សានាំ ឆាគានាញ្ច រុធិរំ គ្ឫហីត្វា គ្រន្ថេ សវ៌្វលោកេឞុ ច ប្រក្ឞិប្យ ពភាឞេ,
20 ௨0 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
យុឞ្មាន៑ អធីឝ្វរោ យំ និយមំ និរូបិតវាន៑ តស្យ រុធិរមេតត៑។
21 ௨௧ இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
តទ្វត៑ ស ទូឞ្យេៜបិ សេវាត៌្ហកេឞុ សវ៌្វបាត្រេឞុ ច រុធិរំ ប្រក្ឞិប្តវាន៑។
22 ௨௨ நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
អបរំ វ្យវស្ថានុសារេណ ប្រាយឝះ សវ៌្វាណិ រុធិរេណ បរិឞ្ក្រិយន្តេ រុធិរបាតំ វិនា បាបមោចនំ ន ភវតិ ច។
23 ௨௩ ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.
អបរំ យានិ ស្វគ៌ីយវស្តូនាំ ទ្ឫឞ្ដាន្តាស្តេឞាម៑ ឯតៃះ បាវនម៑ អាវឝ្យកម៑ អាសីត៑ កិន្តុ សាក្ឞាត៑ ស្វគ៌ីយវស្តូនាម៑ ឯតេភ្យះ ឝ្រេឞ្ឋេ រ្ពលិទានៃះ បាវនមាវឝ្យកំ។
24 ௨௪ அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார்.
យតះ ខ្រីឞ្ដះ សត្យបវិត្រស្ថានស្យ ទ្ឫឞ្ដាន្តរូបំ ហស្តក្ឫតំ បវិត្រស្ថានំ ន ប្រវិឞ្ដវាន៑ កិន្ត្វស្មន្និមិត្តម៑ ឥទានីម៑ ឦឝ្វរស្យ សាក្ឞាទ៑ ឧបស្ថាតុំ ស្វគ៌មេវ ប្រវិឞ្ដះ។
25 ௨௫ பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
យថា ច មហាយាជកះ ប្រតិវឞ៌ំ បរឝោណិតមាទាយ មហាបវិត្រស្ថានំ ប្រវិឝតិ តថា ខ្រីឞ្ដេន បុនះ បុនរាត្មោត្សគ៌ោ ន កត៌្តវ្យះ,
26 ௨௬ அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
កត៌្តវ្យេ សតិ ជគតះ ស្ឫឞ្ដិកាលមារភ្យ ពហុវារំ តស្យ ម្ឫត្យុភោគ អាវឝ្យកោៜភវត៑; កិន្ត្វិទានីំ ស អាត្មោត្សគ៌េណ បាបនាឝាត៌្ហម៑ ឯកក្ឫត្វោ ជគតះ ឝេឞកាលេ ប្រចកាឝេ។ (aiōn )
27 ௨௭ அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
អបរំ យថា មានុឞស្យៃកក្ឫត្វោ មរណំ តត៑ បឝ្ចាទ៑ វិចារោ និរូបិតោៜស្តិ,
28 ௨௮ கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.
តទ្វត៑ ខ្រីឞ្ដោៜបិ ពហូនាំ បាបវហនាត៌្ហំ ពលិរូបេណៃកក្ឫត្វ ឧត្សស្ឫជេ, អបរំ ទ្វិតីយវារំ បាបាទ៑ ភិន្នះ សន៑ យេ តំ ប្រតីក្ឞន្តេ តេឞាំ បរិត្រាណាត៌្ហំ ទឝ៌នំ ទាស្យតិ។