< எபிரேயர் 7 >
1 ௧ இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
১শালমস্য রাজা সর্ৱ্ৱোপরিস্থস্যেশ্ৱরস্য যাজকশ্চ সন্ যো নৃপতীনাং মারণাৎ প্রত্যাগতম্ ইব্রাহীমং সাক্ষাৎকৃত্যাশিষং গদিতৱান্,
2 ௨ இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும்.
২যস্মৈ চেব্রাহীম্ সর্ৱ্ৱদ্রৱ্যাণাং দশমাংশং দত্তৱান্ স মল্কীষেদক্ স্ৱনাম্নোঽর্থেন প্রথমতো ধর্ম্মরাজঃ পশ্চাৎ শালমস্য রাজার্থতঃ শান্তিরাজো ভৱতি|
3 ௩ இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
৩অপরং তস্য পিতা মাতা ৱংশস্য নির্ণয আযুষ আরম্ভো জীৱনস্য শেষশ্চৈতেষাম্ অভাৱো ভৱতি, ইত্থং স ঈশ্ৱরপুত্রস্য সদৃশীকৃতঃ, স ৎৱনন্তকালং যাৱদ্ যাজকস্তিষ্ঠতি|
4 ௪ இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
৪অতএৱাস্মাকং পূর্ৱ্ৱপুরুষ ইব্রাহীম্ যস্মৈ লুঠিতদ্রৱ্যাণাং দশমাংশং দত্তৱান্ স কীদৃক্ মহান্ তদ্ আলোচযত|
5 ௫ லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள்.
৫যাজকৎৱপ্রাপ্তা লেৱেঃ সন্তানা ৱ্যৱস্থানুসারেণ লোকেভ্যোঽর্থত ইব্রাহীমো জাতেভ্যঃ স্ৱীযভ্রাতৃভ্যো দশমাংশগ্রহণস্যাদেশং লব্ধৱন্তঃ|
6 ௬ ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான்.
৬কিন্ত্ৱসৌ যদ্যপি তেষাং ৱংশাৎ নোৎপন্নস্তথাপীব্রাহীমো দশমাংশং গৃহীতৱান্ প্রতিজ্ঞানাম্ অধিকারিণম্ আশিষং গদিতৱাংশ্চ|
7 ௭ சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை.
৭অপরং যঃ শ্রেযান্ স ক্ষুদ্রতরাযাশিষং দদাতীত্যত্র কোঽপি সন্দেহো নাস্তি|
8 ௮ அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன்.
৮অপরম্ ইদানীং যে দশমাংশং গৃহ্লন্তি তে মৃত্যোরধীনা মানৱাঃ কিন্তু তদানীং যো গৃহীতৱান্ স জীৱতীতিপ্রমাণপ্রাপ্তঃ|
9 ௯ அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால்,
৯অপরং দশমাংশগ্রাহী লেৱিরপীব্রাহীম্দ্ৱারা দশমাংশং দত্তৱান্ এতদপি কথযিতুং শক্যতে|
10 ௧0 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
১০যতো যদা মল্কীষেদক্ তস্য পিতরং সাক্ষাৎ কৃতৱান্ তদানীং স লেৱিঃ পিতুরুরস্যাসীৎ|
11 ௧௧ அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன?
১১অপরং যস্য সম্বন্ধে লোকা ৱ্যৱস্থাং লব্ধৱন্তস্তেন লেৱীযযাজকৱর্গেণ যদি সিদ্ধিঃ সমভৱিষ্যৎ তর্হি হারোণস্য শ্রেণ্যা মধ্যাদ্ যাজকং ন নিরূপ্যেশ্ৱরেণ মল্কীষেদকঃ শ্রেণ্যা মধ্যাদ্ অপরস্যৈকস্য যাজকস্যোত্থাপনং কুত আৱশ্যকম্ অভৱিষ্যৎ?
12 ௧௨ ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும்.
১২যতো যাজকৱর্গস্য ৱিনিমযেন সুতরাং ৱ্যৱস্থাযা অপি ৱিনিমযো জাযতে|
13 ௧௩ இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே.
১৩অপরঞ্চ তদ্ ৱাক্যং যস্যোদ্দেশ্যং সোঽপরেণ ৱংশেন সংযুক্তাঽস্তি তস্য ৱংশস্য চ কোঽপি কদাপি ৱেদ্যাঃ কর্ম্ম ন কৃতৱান্|
14 ௧௪ நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே.
১৪ৱস্তুতস্তু যং ৱংশমধি মূসা যাজকৎৱস্যৈকাং কথামপি ন কথিতৱান্ তস্মিন্ যিহূদাৱংশেঽস্মাকং প্রভু র্জন্ম গৃহীতৱান্ ইতি সুস্পষ্টং|
15 ௧௫ அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது.
১৫তস্য স্পষ্টতরম্ অপরং প্রমাণমিদং যৎ মল্কীষেদকঃ সাদৃশ্যৱতাপরেণ তাদৃশেন যাজকেনোদেতৱ্যং,
16 ௧௬ அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல்,
১৬যস্য নিরূপণং শরীরসম্বন্ধীযৱিধিযুক্তযা ৱ্যৱস্থাযা ন ভৱতি কিন্ত্ৱক্ষযজীৱনযুক্তযা শক্ত্যা ভৱতি|
17 ௧௭ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
১৭যত ঈশ্ৱর ইদং সাক্ষ্যং দত্তৱান্, যথা, "ৎৱং মক্লীষেদকঃ শ্রেণ্যাং যাজকোঽসি সদাতনঃ| " (aiōn )
18 ௧௮ முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது.
১৮অনেনাগ্রৱর্ত্তিনো ৱিধে দুর্ব্বলতাযা নিষ্ফলতাযাশ্চ হেতোরর্থতো ৱ্যৱস্থযা কিমপি সিদ্ধং ন জাতমিতিহেতোস্তস্য লোপো ভৱতি|
19 ௧௯ நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம்.
১৯যযা চ ৱযম্ ঈশ্ৱরস্য নিকটৱর্ত্তিনো ভৱাম এতাদৃশী শ্রেষ্ঠপ্রত্যাশা সংস্থাপ্যতে|
20 ௨0 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்;
২০অপরং যীশুঃ শপথং ৱিনা ন নিযুক্তস্তস্মাদপি স শ্রেষ্ঠনিযমস্য মধ্যস্থো জাতঃ|
21 ௨௧ இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
২১যতস্তে শপথং ৱিনা যাজকা জাতাঃ কিন্ত্ৱসৌ শপথেন জাতঃ যতঃ স ইদমুক্তঃ, যথা,
22 ௨௨ அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
২২"পরমেশ ইদং শেপে ন চ তস্মান্নিৱর্ত্স্যতে| ৎৱং মল্কীষেদকঃ শ্রেণ্যাং যাজকোঽসি সদাতনঃ| " (aiōn )
23 ௨௩ அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.
২৩তে চ বহৱো যাজকা অভৱন্ যতস্তে মৃত্যুনা নিত্যস্থাযিৎৱাৎ নিৱারিতাঃ,
24 ௨௪ ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
২৪কিন্ত্ৱসাৱনন্তকালং যাৱৎ তিষ্ঠতি তস্মাৎ তস্য যাজকৎৱং ন পরিৱর্ত্তনীযং| (aiōn )
25 ௨௫ மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.
২৫ততো হেতো র্যে মানৱাস্তেনেশ্ৱরস্য সন্নিধিং গচ্ছন্তি তান্ স শেষং যাৱৎ পরিত্রাতুং শক্নোতি যতস্তেষাং কৃতে প্রার্থনাং কর্ত্তুং স সততং জীৱতি|
26 ௨௬ பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
২৬অপরম্ অস্মাকং তাদৃশমহাযাজকস্য প্রযোজনমাসীদ্ যঃ পৱিত্রো ঽহিংসকো নিষ্কলঙ্কঃ পাপিভ্যো ভিন্নঃ স্ৱর্গাদপ্যুচ্চীকৃতশ্চ স্যাৎ|
27 ௨௭ அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார்.
২৭অপরং মহাযাজকানাং যথা তথা তস্য প্রতিদিনং প্রথমং স্ৱপাপানাং কৃতে ততঃ পরং লোকানাং পাপানাং কৃতে বলিদানস্য প্রযোজনং নাস্তি যত আত্মবলিদানং কৃৎৱা তদ্ এককৃৎৱস্তেন সম্পাদিতং|
28 ௨௮ நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
২৮যতো ৱ্যৱস্থযা যে মহাযাজকা নিরূপ্যন্তে তে দৌর্ব্বল্যযুক্তা মানৱাঃ কিন্তু ৱ্যৱস্থাতঃ পরং শপথযুক্তেন ৱাক্যেন যো মহাযাজকো নিরূপিতঃ সো ঽনন্তকালার্থং সিদ্ধঃ পুত্র এৱ| (aiōn )