< எபிரேயர் 4 >
1 ௧ ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம்.
అపరం తద్విశ్రామప్రాప్తేః ప్రతిజ్ఞా యది తిష్ఠతి తర్హ్యస్మాకం కశ్చిత్ చేత్ తస్యాః ఫలేన వఞ్చితో భవేత్ వయమ్ ఏతస్మాద్ బిభీమః|
2 ௨ ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை.
యతో ఽస్మాకం సమీపే యద్వత్ తద్వత్ తేషాం సమీపేఽపి సుసంవాదః ప్రచారితో ఽభవత్ కిన్తు తైః శ్రుతం వాక్యం తాన్ ప్రతి నిష్ఫలమ్ అభవత్, యతస్తే శ్రోతారో విశ్వాసేన సార్ద్ధం తన్నామిశ్రయన్|
3 ௩ விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார்.
తద్ విశ్రామస్థానం విశ్వాసిభిరస్మాభిః ప్రవిశ్యతే యతస్తేనోక్తం, "అహం కోపాత్ శపథం కృతవాన్ ఇమం, ప్రవేక్ష్యతే జనైరేతై ర్న విశ్రామస్థలం మమ| " కిన్తు తస్య కర్మ్మాణి జగతః సృష్టికాలాత్ సమాప్తాని సన్తి|
4 ௪ ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.
యతః కస్మింశ్చిత్ స్థానే సప్తమం దినమధి తేనేదమ్ ఉక్తం, యథా, "ఈశ్వరః సప్తమే దినే స్వకృతేభ్యః సర్వ్వకర్మ్మభ్యో విశశ్రామ| "
5 ௫ அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
కిన్త్వేతస్మిన్ స్థానే పునస్తేనోచ్యతే, యథా, "ప్రవేక్ష్యతే జనైరేతై ర్న విశ్రామస్థలం మమ| "
6 ௬ எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும்,
ఫలతస్తత్ స్థానం కైశ్చిత్ ప్రవేష్టవ్యం కిన్తు యే పురా సుసంవాదం శ్రుతవన్తస్తైరవిశ్వాసాత్ తన్న ప్రవిష్టమ్,
7 ௭ இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
ఇతి హేతోః స పునరద్యనామకం దినం నిరూప్య దీర్ఘకాలే గతేఽపి పూర్వ్వోక్తాం వాచం దాయూదా కథయతి, యథా, "అద్య యూయం కథాం తస్య యది సంశ్రోతుమిచ్ఛథ, తర్హి మా కురుతేదానీం కఠినాని మనాంసి వః| "
8 ௮ யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
అపరం యిహోశూయో యది తాన్ వ్యశ్రామయిష్యత్ తర్హి తతః పరమ్ అపరస్య దినస్య వాగ్ ఈశ్వరేణ నాకథయిష్యత|
9 ௯ எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது.
అత ఈశ్వరస్య ప్రజాభిః కర్త్తవ్య ఏకో విశ్రామస్తిష్ఠతి|
10 ௧0 ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான்.
అపరమ్ ఈశ్వరో యద్వత్ స్వకృతకర్మ్మభ్యో విశశ్రామ తద్వత్ తస్య విశ్రామస్థానం ప్రవిష్టో జనోఽపి స్వకృతకర్మ్మభ్యో విశ్రామ్యతి|
11 ௧௧ எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம்.
అతో వయం తద్ విశ్రామస్థానం ప్రవేష్టుం యతామహై, తదవిశ్వాసోదాహరణేన కోఽపి న పతతు|
12 ௧௨ தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.
ఈశ్వరస్య వాదోఽమరః ప్రభావవిశిష్టశ్చ సర్వ్వస్మాద్ ద్విధారఖఙ్గాదపి తీక్ష్ణః, అపరం ప్రాణాత్మనో ర్గ్రన్థిమజ్జయోశ్చ పరిభేదాయ విచ్ఛేదకారీ మనసశ్చ సఙ్కల్పానామ్ అభిప్రేతానాఞ్చ విచారకః|
13 ௧௩ அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
అపరం యస్య సమీపే స్వీయా స్వీయా కథాస్మాభిః కథయితవ్యా తస్యాగోచరః కోఽపి ప్రాణీ నాస్తి తస్య దృష్టౌ సర్వ్వమేవానావృతం ప్రకాశితఞ్చాస్తే|
14 ௧௪ வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.
అపరం య ఉచ్చతమం స్వర్గం ప్రవిష్ట ఏతాదృశ ఏకో వ్యక్తిరర్థత ఈశ్వరస్య పుత్రో యీశురస్మాకం మహాయాజకోఽస్తి, అతో హేతో ర్వయం ధర్మ్మప్రతిజ్ఞాం దృఢమ్ ఆలమ్బామహై|
15 ௧௫ நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
అస్మాకం యో మహాయాజకో ఽస్తి సోఽస్మాకం దుఃఖై ర్దుఃఖితో భవితుమ్ అశక్తో నహి కిన్తు పాపం వినా సర్వ్వవిషయే వయమివ పరీక్షితః|
16 ௧௬ எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
అతఏవ కృపాం గ్రహీతుం ప్రయోజనీయోపకారార్థమ్ అనుగ్రహం ప్రాప్తుఞ్చ వయమ్ ఉత్సాహేనానుగ్రహసింహాసనస్య సమీపం యామః|