< எபிரேயர் 3 >
1 ௧ இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
హే స్వర్గీయస్యాహ్వానస్య సహభాగినః పవిత్రభ్రాతరః, అస్మాకం ధర్మ్మప్రతిజ్ఞాయా దూతోఽగ్రసరశ్చ యో యీశుస్తమ్ ఆలోచధ్వం|
2 ௨ மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
మూసా యద్వత్ తస్య సర్వ్వపరివారమధ్యే విశ్వాస్య ఆసీత్, తద్వత్ అయమపి స్వనియోజకస్య సమీపే విశ్వాస్యో భవతి|
3 ௩ வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார்.
పరివారాచ్చ యద్వత్ తత్స్థాపయితురధికం గౌరవం భవతి తద్వత్ మూససోఽయం బహుతరగౌరవస్య యోగ్యో భవతి|
4 ௪ ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
ఏకైకస్య నివేశనస్య పరిజనానాం స్థాపయితా కశ్చిద్ విద్యతే యశ్చ సర్వ్వస్థాపయితా స ఈశ్వర ఏవ|
5 ௫ சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான்.
మూసాశ్చ వక్ష్యమాణానాం సాక్షీ భృత్య ఇవ తస్య సర్వ్వపరిజనమధ్యే విశ్వాస్యోఽభవత్ కిన్తు ఖ్రీష్టస్తస్య పరిజనానామధ్యక్ష ఇవ|
6 ௬ கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம்.
వయం తు యది విశ్వాసస్యోత్సాహం శ్లాఘనఞ్చ శేషం యావద్ ధారయామస్తర్హి తస్య పరిజనా భవామః|
7 ௭ எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,
అతో హేతోః పవిత్రేణాత్మనా యద్వత్ కథితం, తద్వత్, "అద్య యూయం కథాం తస్య యది సంశ్రోతుమిచ్ఛథ|
8 ௮ வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.
తర్హి పురా పరీక్షాయా దినే ప్రాన్తరమధ్యతః| మదాజ్ఞానిగ్రహస్థానే యుష్మాభిస్తు కృతం యథా| తథా మా కురుతేదానీం కఠినాని మనాంసి వః|
9 ௯ அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள்.
యుష్మాకం పితరస్తత్ర మత్పరీక్షామ్ అకుర్వ్వత| కుర్వ్వద్భి ర్మేఽనుసన్ధానం తైరదృశ్యన్త మత్క్రియాః| చత్వారింశత్సమా యావత్ క్రుద్ధ్వాహన్తు తదన్వయే|
10 ௧0 எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி;
అవాదిషమ్ ఇమే లోకా భ్రాన్తాన్తఃకరణాః సదా| మామకీనాని వర్త్మాని పరిజానన్తి నో ఇమే|
11 ௧௧ என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
ఇతి హేతోరహం కోపాత్ శపథం కృతవాన్ ఇమం| ప్రేవేక్ష్యతే జనైరేతై ర్న విశ్రామస్థలం మమ|| "
12 ௧௨ சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
హే భ్రాతరః సావధానా భవత, అమరేశ్వరాత్ నివర్త్తకో యోఽవిశ్వాసస్తద్యుక్తం దుష్టాన్తఃకరణం యుష్మాకం కస్యాపి న భవతు|
13 ௧௩ உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
కిన్తు యావద్ అద్యనామా సమయో విద్యతే తావద్ యుష్మన్మధ్యే కోఽపి పాపస్య వఞ్చనయా యత్ కఠోరీకృతో న భవేత్ తదర్థం ప్రతిదినం పరస్పరమ్ ఉపదిశత|
14 ௧௪ நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.
యతో వయం ఖ్రీష్టస్యాంశినో జాతాః కిన్తు ప్రథమవిశ్వాసస్య దృఢత్వమ్ అస్మాభిః శేషం యావద్ అమోఘం ధారయితవ్యం|
15 ௧௫ இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
అద్య యూయం కథాం తస్య యది సంశ్రోతుమిచ్ఛథ, తర్హ్యాజ్ఞాలఙ్ఘనస్థానే యుష్మాభిస్తు కృతం యథా, తథా మా కురుతేదానీం కఠినాని మనాంసి వ ఇతి తేన యదుక్తం,
16 ௧௬ கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா?
తదనుసారాద్ యే శ్రుత్వా తస్య కథాం న గృహీతవన్తస్తే కే? కిం మూససా మిసరదేశాద్ ఆగతాః సర్వ్వే లోకా నహి?
17 ௧௭ மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே.
కేభ్యో వా స చత్వారింశద్వర్షాణి యావద్ అక్రుధ్యత్? పాపం కుర్వ్వతాం యేషాం కుణపాః ప్రాన్తరే ఽపతన్ కిం తేభ్యో నహి?
18 ௧௮ பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே?
ప్రవేక్ష్యతే జనైరేతై ర్న విశ్రామస్థలం మమేతి శపథః కేషాం విరుద్ధం తేనాకారి? కిమ్ అవిశ్వాసినాం విరుద్ధం నహి?
19 ௧௯ எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.
అతస్తే తత్ స్థానం ప్రవేష్టుమ్ అవిశ్వాసాత్ నాశక్నువన్ ఇతి వయం వీక్షామహే|