< எபிரேயர் 3 >

1 இப்படியிருக்க, பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
ಹೇ ಸ್ವರ್ಗೀಯಸ್ಯಾಹ್ವಾನಸ್ಯ ಸಹಭಾಗಿನಃ ಪವಿತ್ರಭ್ರಾತರಃ, ಅಸ್ಮಾಕಂ ಧರ್ಮ್ಮಪ್ರತಿಜ್ಞಾಯಾ ದೂತೋಽಗ್ರಸರಶ್ಚ ಯೋ ಯೀಶುಸ್ತಮ್ ಆಲೋಚಧ್ವಂ|
2 மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
ಮೂಸಾ ಯದ್ವತ್ ತಸ್ಯ ಸರ್ವ್ವಪರಿವಾರಮಧ್ಯೇ ವಿಶ್ವಾಸ್ಯ ಆಸೀತ್, ತದ್ವತ್ ಅಯಮಪಿ ಸ್ವನಿಯೋಜಕಸ್ಯ ಸಮೀಪೇ ವಿಶ್ವಾಸ್ಯೋ ಭವತಿ|
3 வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான்; அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார்.
ಪರಿವಾರಾಚ್ಚ ಯದ್ವತ್ ತತ್ಸ್ಥಾಪಯಿತುರಧಿಕಂ ಗೌರವಂ ಭವತಿ ತದ್ವತ್ ಮೂಸಸೋಽಯಂ ಬಹುತರಗೌರವಸ್ಯ ಯೋಗ್ಯೋ ಭವತಿ|
4 ஏனென்றால், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.
ಏಕೈಕಸ್ಯ ನಿವೇಶನಸ್ಯ ಪರಿಜನಾನಾಂ ಸ್ಥಾಪಯಿತಾ ಕಶ್ಚಿದ್ ವಿದ್ಯತೇ ಯಶ್ಚ ಸರ್ವ್ವಸ್ಥಾಪಯಿತಾ ಸ ಈಶ್ವರ ಏವ|
5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான்.
ಮೂಸಾಶ್ಚ ವಕ್ಷ್ಯಮಾಣಾನಾಂ ಸಾಕ್ಷೀ ಭೃತ್ಯ ಇವ ತಸ್ಯ ಸರ್ವ್ವಪರಿಜನಮಧ್ಯೇ ವಿಶ್ವಾಸ್ಯೋಽಭವತ್ ಕಿನ್ತು ಖ್ರೀಷ್ಟಸ್ತಸ್ಯ ಪರಿಜನಾನಾಮಧ್ಯಕ್ಷ ಇವ|
6 கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால், நாமே அவருடைய வீடாக இருப்போம்.
ವಯಂ ತು ಯದಿ ವಿಶ್ವಾಸಸ್ಯೋತ್ಸಾಹಂ ಶ್ಲಾಘನಞ್ಚ ಶೇಷಂ ಯಾವದ್ ಧಾರಯಾಮಸ್ತರ್ಹಿ ತಸ್ಯ ಪರಿಜನಾ ಭವಾಮಃ|
7 எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,
ಅತೋ ಹೇತೋಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಯದ್ವತ್ ಕಥಿತಂ, ತದ್ವತ್, "ಅದ್ಯ ಯೂಯಂ ಕಥಾಂ ತಸ್ಯ ಯದಿ ಸಂಶ್ರೋತುಮಿಚ್ಛಥ|
8 வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.
ತರ್ಹಿ ಪುರಾ ಪರೀಕ್ಷಾಯಾ ದಿನೇ ಪ್ರಾನ್ತರಮಧ್ಯತಃ| ಮದಾಜ್ಞಾನಿಗ್ರಹಸ್ಥಾನೇ ಯುಷ್ಮಾಭಿಸ್ತು ಕೃತಂ ಯಥಾ| ತಥಾ ಮಾ ಕುರುತೇದಾನೀಂ ಕಠಿನಾನಿ ಮನಾಂಸಿ ವಃ|
9 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ಪಿತರಸ್ತತ್ರ ಮತ್ಪರೀಕ್ಷಾಮ್ ಅಕುರ್ವ್ವತ| ಕುರ್ವ್ವದ್ಭಿ ರ್ಮೇಽನುಸನ್ಧಾನಂ ತೈರದೃಶ್ಯನ್ತ ಮತ್ಕ್ರಿಯಾಃ| ಚತ್ವಾರಿಂಶತ್ಸಮಾ ಯಾವತ್ ಕ್ರುದ್ಧ್ವಾಹನ್ತು ತದನ್ವಯೇ|
10 ௧0 எனவே, நான் அந்த வம்சத்தாரை வெறுத்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி;
ಅವಾದಿಷಮ್ ಇಮೇ ಲೋಕಾ ಭ್ರಾನ್ತಾನ್ತಃಕರಣಾಃ ಸದಾ| ಮಾಮಕೀನಾನಿ ವರ್ತ್ಮಾನಿ ಪರಿಜಾನನ್ತಿ ನೋ ಇಮೇ|
11 ௧௧ என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
ಇತಿ ಹೇತೋರಹಂ ಕೋಪಾತ್ ಶಪಥಂ ಕೃತವಾನ್ ಇಮಂ| ಪ್ರೇವೇಕ್ಷ್ಯತೇ ಜನೈರೇತೈ ರ್ನ ವಿಶ್ರಾಮಸ್ಥಲಂ ಮಮ|| "
12 ௧௨ சகோதரர்களே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
ಹೇ ಭ್ರಾತರಃ ಸಾವಧಾನಾ ಭವತ, ಅಮರೇಶ್ವರಾತ್ ನಿವರ್ತ್ತಕೋ ಯೋಽವಿಶ್ವಾಸಸ್ತದ್ಯುಕ್ತಂ ದುಷ್ಟಾನ್ತಃಕರಣಂ ಯುಷ್ಮಾಕಂ ಕಸ್ಯಾಪಿ ನ ಭವತು|
13 ௧௩ உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
ಕಿನ್ತು ಯಾವದ್ ಅದ್ಯನಾಮಾ ಸಮಯೋ ವಿದ್ಯತೇ ತಾವದ್ ಯುಷ್ಮನ್ಮಧ್ಯೇ ಕೋಽಪಿ ಪಾಪಸ್ಯ ವಞ್ಚನಯಾ ಯತ್ ಕಠೋರೀಕೃತೋ ನ ಭವೇತ್ ತದರ್ಥಂ ಪ್ರತಿದಿನಂ ಪರಸ್ಪರಮ್ ಉಪದಿಶತ|
14 ௧௪ நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால், கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம்.
ಯತೋ ವಯಂ ಖ್ರೀಷ್ಟಸ್ಯಾಂಶಿನೋ ಜಾತಾಃ ಕಿನ್ತು ಪ್ರಥಮವಿಶ್ವಾಸಸ್ಯ ದೃಢತ್ವಮ್ ಅಸ್ಮಾಭಿಃ ಶೇಷಂ ಯಾವದ್ ಅಮೋಘಂ ಧಾರಯಿತವ್ಯಂ|
15 ௧௫ இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
ಅದ್ಯ ಯೂಯಂ ಕಥಾಂ ತಸ್ಯ ಯದಿ ಸಂಶ್ರೋತುಮಿಚ್ಛಥ, ತರ್ಹ್ಯಾಜ್ಞಾಲಙ್ಘನಸ್ಥಾನೇ ಯುಷ್ಮಾಭಿಸ್ತು ಕೃತಂ ಯಥಾ, ತಥಾ ಮಾ ಕುರುತೇದಾನೀಂ ಕಠಿನಾನಿ ಮನಾಂಸಿ ವ ಇತಿ ತೇನ ಯದುಕ್ತಂ,
16 ௧௬ கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா?
ತದನುಸಾರಾದ್ ಯೇ ಶ್ರುತ್ವಾ ತಸ್ಯ ಕಥಾಂ ನ ಗೃಹೀತವನ್ತಸ್ತೇ ಕೇ? ಕಿಂ ಮೂಸಸಾ ಮಿಸರದೇಶಾದ್ ಆಗತಾಃ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ನಹಿ?
17 ௧௭ மேலும், அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார்? பாவம் செய்தவர்களைத்தானே? அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே.
ಕೇಭ್ಯೋ ವಾ ಸ ಚತ್ವಾರಿಂಶದ್ವರ್ಷಾಣಿ ಯಾವದ್ ಅಕ್ರುಧ್ಯತ್? ಪಾಪಂ ಕುರ್ವ್ವತಾಂ ಯೇಷಾಂ ಕುಣಪಾಃ ಪ್ರಾನ್ತರೇ ಽಪತನ್ ಕಿಂ ತೇಭ್ಯೋ ನಹಿ?
18 ௧௮ பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே?
ಪ್ರವೇಕ್ಷ್ಯತೇ ಜನೈರೇತೈ ರ್ನ ವಿಶ್ರಾಮಸ್ಥಲಂ ಮಮೇತಿ ಶಪಥಃ ಕೇಷಾಂ ವಿರುದ್ಧಂ ತೇನಾಕಾರಿ? ಕಿಮ್ ಅವಿಶ್ವಾಸಿನಾಂ ವಿರುದ್ಧಂ ನಹಿ?
19 ௧௯ எனவே, அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்.
ಅತಸ್ತೇ ತತ್ ಸ್ಥಾನಂ ಪ್ರವೇಷ್ಟುಮ್ ಅವಿಶ್ವಾಸಾತ್ ನಾಶಕ್ನುವನ್ ಇತಿ ವಯಂ ವೀಕ್ಷಾಮಹೇ|

< எபிரேயர் 3 >