< எபிரேயர் 11 >

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
ୱିଶ୍ୱାସ ଆଶଂସିତାନାଂ ନିଶ୍ଚଯଃ, ଅଦୃଶ୍ୟାନାଂ ୱିଷଯାଣାଂ ଦର୍ଶନଂ ଭୱତି|
2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
ତେନ ୱିଶ୍ୱାସେନ ପ୍ରାଞ୍ଚୋ ଲୋକାଃ ପ୍ରାମାଣ୍ୟଂ ପ୍ରାପ୍ତୱନ୍ତଃ|
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
ଅପରମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟେନ ଜଗନ୍ତ୍ୟସୃଜ୍ୟନ୍ତ, ଦୃଷ୍ଟୱସ୍ତୂନି ଚ ପ୍ରତ୍ୟକ୍ଷୱସ୍ତୁଭ୍ୟୋ ନୋଦପଦ୍ୟନ୍ତୈତଦ୍ ୱଯଂ ୱିଶ୍ୱାସେନ ବୁଧ୍ୟାମହେ| (aiōn g165)
4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
ୱିଶ୍ୱାସେନ ହାବିଲ୍ ଈଶ୍ୱରମୁଦ୍ଦିଶ୍ୟ କାବିଲଃ ଶ୍ରେଷ୍ଠଂ ବଲିଦାନଂ କୃତୱାନ୍ ତସ୍ମାଚ୍ଚେଶ୍ୱରେଣ ତସ୍ୟ ଦାନାନ୍ୟଧି ପ୍ରମାଣେ ଦତ୍ତେ ସ ଧାର୍ମ୍ମିକ ଇତ୍ୟସ୍ୟ ପ୍ରମାଣଂ ଲବ୍ଧୱାନ୍ ତେନ ୱିଶ୍ୱାସେନ ଚ ସ ମୃତଃ ସନ୍ ଅଦ୍ୟାପି ଭାଷତେ|
5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
ୱିଶ୍ୱାସେନ ହନୋକ୍ ଯଥା ମୃତ୍ୟୁଂ ନ ପଶ୍ୟେତ୍ ତଥା ଲୋକାନ୍ତରଂ ନୀତଃ, ତସ୍ୟୋଦ୍ଦେଶଶ୍ଚ କେନାପି ନ ପ୍ରାପି ଯତ ଈଶ୍ୱରସ୍ତଂ ଲୋକାନ୍ତରଂ ନୀତୱାନ୍, ତତ୍ପ୍ରମାଣମିଦଂ ତସ୍ୟ ଲୋକାନ୍ତରୀକରଣାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ସ ଈଶ୍ୱରାଯ ରୋଚିତୱାନ୍ ଇତି ପ୍ରମାଣଂ ପ୍ରାପ୍ତୱାନ୍|
6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
କିନ୍ତୁ ୱିଶ୍ୱାସଂ ୱିନା କୋଽପୀଶ୍ୱରାଯ ରୋଚିତୁଂ ନ ଶକ୍ନୋତି ଯତ ଈଶ୍ୱରୋଽସ୍ତି ସ୍ୱାନ୍ୱେଷିଲୋକେଭ୍ୟଃ ପୁରସ୍କାରଂ ଦଦାତି ଚେତିକଥାଯାମ୍ ଈଶ୍ୱରଶରଣାଗତୈ ର୍ୱିଶ୍ୱସିତୱ୍ୟଂ|
7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
ଅପରଂ ତଦାନୀଂ ଯାନ୍ୟଦୃଶ୍ୟାନ୍ୟାସନ୍ ତାନୀଶ୍ୱରେଣାଦିଷ୍ଟଃ ସନ୍ ନୋହୋ ୱିଶ୍ୱାସେନ ଭୀତ୍ୱା ସ୍ୱପରିଜନାନାଂ ରକ୍ଷାର୍ଥଂ ପୋତଂ ନିର୍ମ୍ମିତୱାନ୍ ତେନ ଚ ଜଗଜ୍ଜନାନାଂ ଦୋଷାନ୍ ଦର୍ଶିତୱାନ୍ ୱିଶ୍ୱାସାତ୍ ଲଭ୍ୟସ୍ୟ ପୁଣ୍ୟସ୍ୟାଧିକାରୀ ବଭୂୱ ଚ|
8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
ୱିଶ୍ୱାସେନେବ୍ରାହୀମ୍ ଆହୂତଃ ସନ୍ ଆଜ୍ଞାଂ ଗୃହୀତ୍ୱା ଯସ୍ୟ ସ୍ଥାନସ୍ୟାଧିକାରସ୍ତେନ ପ୍ରାପ୍ତୱ୍ୟସ୍ତତ୍ ସ୍ଥାନଂ ପ୍ରସ୍ଥିତୱାନ୍ କିନ୍ତୁ ପ୍ରସ୍ଥାନସମଯେ କ୍କ ଯାମୀତି ନାଜାନାତ୍|
9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
ୱିଶ୍ୱାସେନ ସ ପ୍ରତିଜ୍ଞାତେ ଦେଶେ ପରଦେଶୱତ୍ ପ୍ରୱସନ୍ ତସ୍ୟାଃ ପ୍ରତିଜ୍ଞାଯାଃ ସମାନାଂଶିଭ୍ୟାମ୍ ଇସ୍ହାକା ଯାକୂବା ଚ ସହ ଦୂଷ୍ୟୱାସ୍ୟଭୱତ୍|
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
ଯସ୍ମାତ୍ ସ ଈଶ୍ୱରେଣ ନିର୍ମ୍ମିତଂ ସ୍ଥାପିତଞ୍ଚ ଭିତ୍ତିମୂଲଯୁକ୍ତଂ ନଗରଂ ପ୍ରତ୍ୟୈକ୍ଷତ|
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
ଅପରଞ୍ଚ ୱିଶ୍ୱାସେନ ସାରା ୱଯୋତିକ୍ରାନ୍ତା ସନ୍ତ୍ୟପି ଗର୍ଭଧାରଣାଯ ଶକ୍ତିଂ ପ୍ରାପ୍ୟ ପୁତ୍ରୱତ୍ୟଭୱତ୍, ଯତଃ ସା ପ୍ରତିଜ୍ଞାକାରିଣଂ ୱିଶ୍ୱାସ୍ୟମ୍ ଅମନ୍ୟତ|
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
ତତୋ ହେତୋ ର୍ମୃତକଲ୍ପାଦ୍ ଏକସ୍ମାତ୍ ଜନାଦ୍ ଆକାଶୀଯନକ୍ଷତ୍ରାଣୀୱ ଗଣନାତୀତାଃ ସମୁଦ୍ରତୀରସ୍ଥସିକତା ଇୱ ଚାସଂଖ୍ୟା ଲୋକା ଉତ୍ପେଦିରେ|
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
ଏତେ ସର୍ୱ୍ୱେ ପ୍ରତିଜ୍ଞାଯାଃ ଫଲାନ୍ୟପ୍ରାପ୍ୟ କେୱଲଂ ଦୂରାତ୍ ତାନି ନିରୀକ୍ଷ୍ୟ ୱନ୍ଦିତ୍ୱା ଚ, ପୃଥିୱ୍ୟାଂ ୱଯଂ ୱିଦେଶିନଃ ପ୍ରୱାସିନଶ୍ଚାସ୍ମହ ଇତି ସ୍ୱୀକୃତ୍ୟ ୱିଶ୍ୱାସେନ ପ୍ରାଣାନ୍ ତତ୍ୟଜୁଃ|
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
ଯେ ତୁ ଜନା ଇତ୍ଥଂ କଥଯନ୍ତି ତୈଃ ପୈତୃକଦେଶୋ ଽସ୍ମାଭିରନ୍ୱିଷ୍ୟତ ଇତି ପ୍ରକାଶ୍ୟତେ|
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
ତେ ଯସ୍ମାଦ୍ ଦେଶାତ୍ ନିର୍ଗତାସ୍ତଂ ଯଦ୍ୟସ୍ମରିଷ୍ୟନ୍ ତର୍ହି ପରାୱର୍ତ୍ତନାଯ ସମଯମ୍ ଅଲପ୍ସ୍ୟନ୍ତ|
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
କିନ୍ତୁ ତେ ସର୍ୱ୍ୱୋତ୍କୃଷ୍ଟମ୍ ଅର୍ଥତଃ ସ୍ୱର୍ଗୀଯଂ ଦେଶମ୍ ଆକାଙ୍କ୍ଷନ୍ତି ତସ୍ମାଦ୍ ଈଶ୍ୱରସ୍ତାନଧି ନ ଲଜ୍ଜମାନସ୍ତେଷାମ୍ ଈଶ୍ୱର ଇତି ନାମ ଗୃହୀତୱାନ୍ ଯତଃ ସ ତେଷାଂ କୃତେ ନଗରମେକଂ ସଂସ୍ଥାପିତୱାନ୍|
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
ଅପରମ୍ ଇବ୍ରାହୀମଃ ପରୀକ୍ଷାଯାଂ ଜାତାଯାଂ ସ ୱିଶ୍ୱାସେନେସ୍ହାକମ୍ ଉତ୍ସସର୍ଜ,
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
ୱସ୍ତୁତ ଇସ୍ହାକି ତୱ ୱଂଶୋ ୱିଖ୍ୟାସ୍ୟତ ଇତି ୱାଗ୍ ଯମଧି କଥିତା ତମ୍ ଅଦ୍ୱିତୀଯଂ ପୁତ୍ରଂ ପ୍ରତିଜ୍ଞାପ୍ରାପ୍ତଃ ସ ଉତ୍ସସର୍ଜ|
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
ଯତ ଈଶ୍ୱରୋ ମୃତାନପ୍ୟୁତ୍ଥାପଯିତୁଂ ଶକ୍ନୋତୀତି ସ ମେନେ ତସ୍ମାତ୍ ସ ଉପମାରୂପଂ ତଂ ଲେଭେ|
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
ଅପରମ୍ ଇସ୍ହାକ୍ ୱିଶ୍ୱାସେନ ଯାକୂବ୍ ଏଷାୱେ ଚ ଭାୱିୱିଷଯାନଧ୍ୟାଶିଷଂ ଦଦୌ|
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
ଅପରଂ ଯାକୂବ୍ ମରଣକାଲେ ୱିଶ୍ୱାସେନ ଯୂଷଫଃ ପୁତ୍ରଯୋରେକୈକସ୍ମୈ ଜନାଯାଶିଷଂ ଦଦୌ ଯଷ୍ଟ୍ୟା ଅଗ୍ରଭାଗେ ସମାଲମ୍ବ୍ୟ ପ୍ରଣନାମ ଚ|
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
ଅପରଂ ଯୂଷଫ୍ ଚରମକାଲେ ୱିଶ୍ୱାସେନେସ୍ରାଯେଲ୍ୱଂଶୀଯାନାଂ ମିସରଦେଶାଦ୍ ବହିର୍ଗମନସ୍ୟ ୱାଚଂ ଜଗାଦ ନିଜାସ୍ଥୀନି ଚାଧି ସମାଦିଦେଶ|
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
ନୱଜାତୋ ମୂସାଶ୍ଚ ୱିଶ୍ୱାସାତ୍ ତ୍ରାନ୍ ମାସାନ୍ ସ୍ୱପିତୃଭ୍ୟାମ୍ ଅଗୋପ୍ୟତ ଯତସ୍ତୌ ସ୍ୱଶିଶୁଂ ପରମସୁନ୍ଦରଂ ଦୃଷ୍ଟୱନ୍ତୌ ରାଜାଜ୍ଞାଞ୍ଚ ନ ଶଙ୍କିତୱନ୍ତୌ|
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
ଅପରଂ ୱଯଃପ୍ରାପ୍ତୋ ମୂସା ୱିଶ୍ୱାସାତ୍ ଫିରୌଣୋ ଦୌହିତ୍ର ଇତି ନାମ ନାଙ୍ଗୀଚକାର|
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
ଯତଃ ସ କ୍ଷଣିକାତ୍ ପାପଜସୁଖଭୋଗାଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ପ୍ରଜାଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ଦୁଃଖଭୋଗଂ ୱୱ୍ରେ|
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
ତଥା ମିସରଦେଶୀଯନିଧିଭ୍ୟଃ ଖ୍ରୀଷ୍ଟନିମିତ୍ତାଂ ନିନ୍ଦାଂ ମହତୀଂ ସମ୍ପତ୍ତିଂ ମେନେ ଯତୋ ହେତୋଃ ସ ପୁରସ୍କାରଦାନମ୍ ଅପୈକ୍ଷତ|
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
ଅପରଂ ସ ୱିଶ୍ୱାସେନ ରାଜ୍ଞଃ କ୍ରୋଧାତ୍ ନ ଭୀତ୍ୱା ମିସରଦେଶଂ ପରିତତ୍ୟାଜ, ଯତସ୍ତେନାଦୃଶ୍ୟଂ ୱୀକ୍ଷମାଣେନେୱ ଧୈର୍ୟ୍ୟମ୍ ଆଲମ୍ବି|
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
ଅପରଂ ପ୍ରଥମଜାତାନାଂ ହନ୍ତା ଯତ୍ ସ୍ୱୀଯଲୋକାନ୍ ନ ସ୍ପୃଶେତ୍ ତଦର୍ଥଂ ସ ୱିଶ୍ୱାସେନ ନିସ୍ତାରପର୍ୱ୍ୱୀଯବଲିଚ୍ଛେଦନଂ ରୁଧିରସେଚନଞ୍ଚାନୁଷ୍ଠିତାୱାନ୍|
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
ଅପରଂ ତେ ୱିଶ୍ୱାସାତ୍ ସ୍ଥଲେନେୱ ସୂଫ୍ସାଗରେଣ ଜଗ୍ମୁଃ କିନ୍ତୁ ମିସ୍ରୀଯଲୋକାସ୍ତତ୍ କର୍ତ୍ତୁମ୍ ଉପକ୍ରମ୍ୟ ତୋଯେଷୁ ମମଜ୍ଜୁଃ|
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
ଅପରଞ୍ଚ ୱିଶ୍ୱାସାତ୍ ତୈଃ ସପ୍ତାହଂ ଯାୱଦ୍ ଯିରୀହୋଃ ପ୍ରାଚୀରସ୍ୟ ପ୍ରଦକ୍ଷିଣେ କୃତେ ତତ୍ ନିପପାତ|
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
ୱିଶ୍ୱାସାଦ୍ ରାହବ୍ନାମିକା ୱେଶ୍ୟାପି ପ୍ରୀତ୍ୟା ଚାରାନ୍ ଅନୁଗୃହ୍ୟାୱିଶ୍ୱାସିଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ନ ୱିନନାଶ|
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
ଅଧିକଂ କିଂ କଥଯିଷ୍ୟାମି? ଗିଦିଯୋନୋ ବାରକଃ ଶିମ୍ଶୋନୋ ଯିପ୍ତହୋ ଦାଯୂଦ୍ ଶିମୂଯେଲୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନଶ୍ଚୈତେଷାଂ ୱୃତ୍ତାନ୍ତକଥନାଯ ମମ ସମଯାଭାୱୋ ଭୱିଷ୍ୟତି|
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
ୱିଶ୍ୱାସାତ୍ ତେ ରାଜ୍ୟାନି ୱଶୀକୃତୱନ୍ତୋ ଧର୍ମ୍ମକର୍ମ୍ମାଣି ସାଧିତୱନ୍ତଃ ପ୍ରତିଜ୍ଞାନାଂ ଫଲଂ ଲବ୍ଧୱନ୍ତଃ ସିଂହାନାଂ ମୁଖାନି ରୁଦ୍ଧୱନ୍ତୋ
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
ୱହ୍ନେର୍ଦାହଂ ନିର୍ୱ୍ୱାପିତୱନ୍ତଃ ଖଙ୍ଗଧାରାଦ୍ ରକ୍ଷାଂ ପ୍ରାପ୍ତୱନ୍ତୋ ଦୌର୍ବ୍ବଲ୍ୟେ ସବଲୀକୃତା ଯୁଦ୍ଧେ ପରାକ୍ରମିଣୋ ଜାତାଃ ପରେଷାଂ ସୈନ୍ୟାନି ଦୱଯିତୱନ୍ତଶ୍ଚ|
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
ଯୋଷିତଃ ପୁନରୁତ୍ଥାନେନ ମୃତାନ୍ ଆତ୍ମଜାନ୍ ଲେଭିରେ, ଅପରେ ଚ ଶ୍ରେଷ୍ଠୋତ୍ଥାନସ୍ୟ ପ୍ରାପ୍ତେରାଶଯା ରକ୍ଷାମ୍ ଅଗୃହୀତ୍ୱା ତାଡନେନ ମୃତୱନ୍ତଃ|
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
ଅପରେ ତିରସ୍କାରୈଃ କଶାଭି ର୍ବନ୍ଧନୈଃ କାରଯା ଚ ପରୀକ୍ଷିତାଃ|
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
ବହୱଶ୍ଚ ପ୍ରସ୍ତରାଘାତୈ ର୍ହତାଃ କରପତ୍ରୈ ର୍ୱା ୱିଦୀର୍ଣା ଯନ୍ତ୍ରୈ ର୍ୱା କ୍ଲିଷ୍ଟାଃ ଖଙ୍ଗଧାରୈ ର୍ୱା ୱ୍ୟାପାଦିତାଃ| ତେ ମେଷାଣାଂ ଛାଗାନାଂ ୱା ଚର୍ମ୍ମାଣି ପରିଧାଯ ଦୀନାଃ ପୀଡିତା ଦୁଃଖାର୍ତ୍ତାଶ୍ଚାଭ୍ରାମ୍ୟନ୍|
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
ସଂସାରୋ ଯେଷାମ୍ ଅଯୋଗ୍ୟସ୍ତେ ନିର୍ଜନସ୍ଥାନେଷୁ ପର୍ୱ୍ୱତେଷୁ ଗହ୍ୱରେଷୁ ପୃଥିୱ୍ୟାଶ୍ଛିଦ୍ରେଷୁ ଚ ପର୍ୟ୍ୟଟନ୍|
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
ଏତୈଃ ସର୍ୱ୍ୱୈ ର୍ୱିଶ୍ୱାସାତ୍ ପ୍ରମାଣଂ ପ୍ରାପି କିନ୍ତୁ ପ୍ରତିଜ୍ଞାଯାଃ ଫଲଂ ନ ପ୍ରାପି|
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
ଯତସ୍ତେ ଯଥାସ୍ମାନ୍ ୱିନା ସିଦ୍ଧା ନ ଭୱେଯୁସ୍ତଥୈୱେଶ୍ୱରେଣାସ୍ମାକଂ କୃତେ ଶ୍ରେଷ୍ଠତରଂ କିମପି ନିର୍ଦିଦିଶେ|

< எபிரேயர் 11 >