< எபிரேயர் 11 >

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
ವಿಶ್ವಾಸ ಆಶಂಸಿತಾನಾಂ ನಿಶ್ಚಯಃ, ಅದೃಶ್ಯಾನಾಂ ವಿಷಯಾಣಾಂ ದರ್ಶನಂ ಭವತಿ|
2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
ತೇನ ವಿಶ್ವಾಸೇನ ಪ್ರಾಞ್ಚೋ ಲೋಕಾಃ ಪ್ರಾಮಾಣ್ಯಂ ಪ್ರಾಪ್ತವನ್ತಃ|
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
ಅಪರಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಾಕ್ಯೇನ ಜಗನ್ತ್ಯಸೃಜ್ಯನ್ತ, ದೃಷ್ಟವಸ್ತೂನಿ ಚ ಪ್ರತ್ಯಕ್ಷವಸ್ತುಭ್ಯೋ ನೋದಪದ್ಯನ್ತೈತದ್ ವಯಂ ವಿಶ್ವಾಸೇನ ಬುಧ್ಯಾಮಹೇ| (aiōn g165)
4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
ವಿಶ್ವಾಸೇನ ಹಾಬಿಲ್ ಈಶ್ವರಮುದ್ದಿಶ್ಯ ಕಾಬಿಲಃ ಶ್ರೇಷ್ಠಂ ಬಲಿದಾನಂ ಕೃತವಾನ್ ತಸ್ಮಾಚ್ಚೇಶ್ವರೇಣ ತಸ್ಯ ದಾನಾನ್ಯಧಿ ಪ್ರಮಾಣೇ ದತ್ತೇ ಸ ಧಾರ್ಮ್ಮಿಕ ಇತ್ಯಸ್ಯ ಪ್ರಮಾಣಂ ಲಬ್ಧವಾನ್ ತೇನ ವಿಶ್ವಾಸೇನ ಚ ಸ ಮೃತಃ ಸನ್ ಅದ್ಯಾಪಿ ಭಾಷತೇ|
5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
ವಿಶ್ವಾಸೇನ ಹನೋಕ್ ಯಥಾ ಮೃತ್ಯುಂ ನ ಪಶ್ಯೇತ್ ತಥಾ ಲೋಕಾನ್ತರಂ ನೀತಃ, ತಸ್ಯೋದ್ದೇಶಶ್ಚ ಕೇನಾಪಿ ನ ಪ್ರಾಪಿ ಯತ ಈಶ್ವರಸ್ತಂ ಲೋಕಾನ್ತರಂ ನೀತವಾನ್, ತತ್ಪ್ರಮಾಣಮಿದಂ ತಸ್ಯ ಲೋಕಾನ್ತರೀಕರಣಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಸ ಈಶ್ವರಾಯ ರೋಚಿತವಾನ್ ಇತಿ ಪ್ರಮಾಣಂ ಪ್ರಾಪ್ತವಾನ್|
6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
ಕಿನ್ತು ವಿಶ್ವಾಸಂ ವಿನಾ ಕೋಽಪೀಶ್ವರಾಯ ರೋಚಿತುಂ ನ ಶಕ್ನೋತಿ ಯತ ಈಶ್ವರೋಽಸ್ತಿ ಸ್ವಾನ್ವೇಷಿಲೋಕೇಭ್ಯಃ ಪುರಸ್ಕಾರಂ ದದಾತಿ ಚೇತಿಕಥಾಯಾಮ್ ಈಶ್ವರಶರಣಾಗತೈ ರ್ವಿಶ್ವಸಿತವ್ಯಂ|
7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
ಅಪರಂ ತದಾನೀಂ ಯಾನ್ಯದೃಶ್ಯಾನ್ಯಾಸನ್ ತಾನೀಶ್ವರೇಣಾದಿಷ್ಟಃ ಸನ್ ನೋಹೋ ವಿಶ್ವಾಸೇನ ಭೀತ್ವಾ ಸ್ವಪರಿಜನಾನಾಂ ರಕ್ಷಾರ್ಥಂ ಪೋತಂ ನಿರ್ಮ್ಮಿತವಾನ್ ತೇನ ಚ ಜಗಜ್ಜನಾನಾಂ ದೋಷಾನ್ ದರ್ಶಿತವಾನ್ ವಿಶ್ವಾಸಾತ್ ಲಭ್ಯಸ್ಯ ಪುಣ್ಯಸ್ಯಾಧಿಕಾರೀ ಬಭೂವ ಚ|
8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
ವಿಶ್ವಾಸೇನೇಬ್ರಾಹೀಮ್ ಆಹೂತಃ ಸನ್ ಆಜ್ಞಾಂ ಗೃಹೀತ್ವಾ ಯಸ್ಯ ಸ್ಥಾನಸ್ಯಾಧಿಕಾರಸ್ತೇನ ಪ್ರಾಪ್ತವ್ಯಸ್ತತ್ ಸ್ಥಾನಂ ಪ್ರಸ್ಥಿತವಾನ್ ಕಿನ್ತು ಪ್ರಸ್ಥಾನಸಮಯೇ ಕ್ಕ ಯಾಮೀತಿ ನಾಜಾನಾತ್|
9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
ವಿಶ್ವಾಸೇನ ಸ ಪ್ರತಿಜ್ಞಾತೇ ದೇಶೇ ಪರದೇಶವತ್ ಪ್ರವಸನ್ ತಸ್ಯಾಃ ಪ್ರತಿಜ್ಞಾಯಾಃ ಸಮಾನಾಂಶಿಭ್ಯಾಮ್ ಇಸ್ಹಾಕಾ ಯಾಕೂಬಾ ಚ ಸಹ ದೂಷ್ಯವಾಸ್ಯಭವತ್|
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
ಯಸ್ಮಾತ್ ಸ ಈಶ್ವರೇಣ ನಿರ್ಮ್ಮಿತಂ ಸ್ಥಾಪಿತಞ್ಚ ಭಿತ್ತಿಮೂಲಯುಕ್ತಂ ನಗರಂ ಪ್ರತ್ಯೈಕ್ಷತ|
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
ಅಪರಞ್ಚ ವಿಶ್ವಾಸೇನ ಸಾರಾ ವಯೋತಿಕ್ರಾನ್ತಾ ಸನ್ತ್ಯಪಿ ಗರ್ಭಧಾರಣಾಯ ಶಕ್ತಿಂ ಪ್ರಾಪ್ಯ ಪುತ್ರವತ್ಯಭವತ್, ಯತಃ ಸಾ ಪ್ರತಿಜ್ಞಾಕಾರಿಣಂ ವಿಶ್ವಾಸ್ಯಮ್ ಅಮನ್ಯತ|
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
ತತೋ ಹೇತೋ ರ್ಮೃತಕಲ್ಪಾದ್ ಏಕಸ್ಮಾತ್ ಜನಾದ್ ಆಕಾಶೀಯನಕ್ಷತ್ರಾಣೀವ ಗಣನಾತೀತಾಃ ಸಮುದ್ರತೀರಸ್ಥಸಿಕತಾ ಇವ ಚಾಸಂಖ್ಯಾ ಲೋಕಾ ಉತ್ಪೇದಿರೇ|
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
ಏತೇ ಸರ್ವ್ವೇ ಪ್ರತಿಜ್ಞಾಯಾಃ ಫಲಾನ್ಯಪ್ರಾಪ್ಯ ಕೇವಲಂ ದೂರಾತ್ ತಾನಿ ನಿರೀಕ್ಷ್ಯ ವನ್ದಿತ್ವಾ ಚ, ಪೃಥಿವ್ಯಾಂ ವಯಂ ವಿದೇಶಿನಃ ಪ್ರವಾಸಿನಶ್ಚಾಸ್ಮಹ ಇತಿ ಸ್ವೀಕೃತ್ಯ ವಿಶ್ವಾಸೇನ ಪ್ರಾಣಾನ್ ತತ್ಯಜುಃ|
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
ಯೇ ತು ಜನಾ ಇತ್ಥಂ ಕಥಯನ್ತಿ ತೈಃ ಪೈತೃಕದೇಶೋ ಽಸ್ಮಾಭಿರನ್ವಿಷ್ಯತ ಇತಿ ಪ್ರಕಾಶ್ಯತೇ|
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
ತೇ ಯಸ್ಮಾದ್ ದೇಶಾತ್ ನಿರ್ಗತಾಸ್ತಂ ಯದ್ಯಸ್ಮರಿಷ್ಯನ್ ತರ್ಹಿ ಪರಾವರ್ತ್ತನಾಯ ಸಮಯಮ್ ಅಲಪ್ಸ್ಯನ್ತ|
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
ಕಿನ್ತು ತೇ ಸರ್ವ್ವೋತ್ಕೃಷ್ಟಮ್ ಅರ್ಥತಃ ಸ್ವರ್ಗೀಯಂ ದೇಶಮ್ ಆಕಾಙ್ಕ್ಷನ್ತಿ ತಸ್ಮಾದ್ ಈಶ್ವರಸ್ತಾನಧಿ ನ ಲಜ್ಜಮಾನಸ್ತೇಷಾಮ್ ಈಶ್ವರ ಇತಿ ನಾಮ ಗೃಹೀತವಾನ್ ಯತಃ ಸ ತೇಷಾಂ ಕೃತೇ ನಗರಮೇಕಂ ಸಂಸ್ಥಾಪಿತವಾನ್|
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
ಅಪರಮ್ ಇಬ್ರಾಹೀಮಃ ಪರೀಕ್ಷಾಯಾಂ ಜಾತಾಯಾಂ ಸ ವಿಶ್ವಾಸೇನೇಸ್ಹಾಕಮ್ ಉತ್ಸಸರ್ಜ,
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
ವಸ್ತುತ ಇಸ್ಹಾಕಿ ತವ ವಂಶೋ ವಿಖ್ಯಾಸ್ಯತ ಇತಿ ವಾಗ್ ಯಮಧಿ ಕಥಿತಾ ತಮ್ ಅದ್ವಿತೀಯಂ ಪುತ್ರಂ ಪ್ರತಿಜ್ಞಾಪ್ರಾಪ್ತಃ ಸ ಉತ್ಸಸರ್ಜ|
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
ಯತ ಈಶ್ವರೋ ಮೃತಾನಪ್ಯುತ್ಥಾಪಯಿತುಂ ಶಕ್ನೋತೀತಿ ಸ ಮೇನೇ ತಸ್ಮಾತ್ ಸ ಉಪಮಾರೂಪಂ ತಂ ಲೇಭೇ|
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
ಅಪರಮ್ ಇಸ್ಹಾಕ್ ವಿಶ್ವಾಸೇನ ಯಾಕೂಬ್ ಏಷಾವೇ ಚ ಭಾವಿವಿಷಯಾನಧ್ಯಾಶಿಷಂ ದದೌ|
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
ಅಪರಂ ಯಾಕೂಬ್ ಮರಣಕಾಲೇ ವಿಶ್ವಾಸೇನ ಯೂಷಫಃ ಪುತ್ರಯೋರೇಕೈಕಸ್ಮೈ ಜನಾಯಾಶಿಷಂ ದದೌ ಯಷ್ಟ್ಯಾ ಅಗ್ರಭಾಗೇ ಸಮಾಲಮ್ಬ್ಯ ಪ್ರಣನಾಮ ಚ|
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
ಅಪರಂ ಯೂಷಫ್ ಚರಮಕಾಲೇ ವಿಶ್ವಾಸೇನೇಸ್ರಾಯೇಲ್ವಂಶೀಯಾನಾಂ ಮಿಸರದೇಶಾದ್ ಬಹಿರ್ಗಮನಸ್ಯ ವಾಚಂ ಜಗಾದ ನಿಜಾಸ್ಥೀನಿ ಚಾಧಿ ಸಮಾದಿದೇಶ|
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
ನವಜಾತೋ ಮೂಸಾಶ್ಚ ವಿಶ್ವಾಸಾತ್ ತ್ರಾನ್ ಮಾಸಾನ್ ಸ್ವಪಿತೃಭ್ಯಾಮ್ ಅಗೋಪ್ಯತ ಯತಸ್ತೌ ಸ್ವಶಿಶುಂ ಪರಮಸುನ್ದರಂ ದೃಷ್ಟವನ್ತೌ ರಾಜಾಜ್ಞಾಞ್ಚ ನ ಶಙ್ಕಿತವನ್ತೌ|
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
ಅಪರಂ ವಯಃಪ್ರಾಪ್ತೋ ಮೂಸಾ ವಿಶ್ವಾಸಾತ್ ಫಿರೌಣೋ ದೌಹಿತ್ರ ಇತಿ ನಾಮ ನಾಙ್ಗೀಚಕಾರ|
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
ಯತಃ ಸ ಕ್ಷಣಿಕಾತ್ ಪಾಪಜಸುಖಭೋಗಾದ್ ಈಶ್ವರಸ್ಯ ಪ್ರಜಾಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ದುಃಖಭೋಗಂ ವವ್ರೇ|
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
ತಥಾ ಮಿಸರದೇಶೀಯನಿಧಿಭ್ಯಃ ಖ್ರೀಷ್ಟನಿಮಿತ್ತಾಂ ನಿನ್ದಾಂ ಮಹತೀಂ ಸಮ್ಪತ್ತಿಂ ಮೇನೇ ಯತೋ ಹೇತೋಃ ಸ ಪುರಸ್ಕಾರದಾನಮ್ ಅಪೈಕ್ಷತ|
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
ಅಪರಂ ಸ ವಿಶ್ವಾಸೇನ ರಾಜ್ಞಃ ಕ್ರೋಧಾತ್ ನ ಭೀತ್ವಾ ಮಿಸರದೇಶಂ ಪರಿತತ್ಯಾಜ, ಯತಸ್ತೇನಾದೃಶ್ಯಂ ವೀಕ್ಷಮಾಣೇನೇವ ಧೈರ್ಯ್ಯಮ್ ಆಲಮ್ಬಿ|
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
ಅಪರಂ ಪ್ರಥಮಜಾತಾನಾಂ ಹನ್ತಾ ಯತ್ ಸ್ವೀಯಲೋಕಾನ್ ನ ಸ್ಪೃಶೇತ್ ತದರ್ಥಂ ಸ ವಿಶ್ವಾಸೇನ ನಿಸ್ತಾರಪರ್ವ್ವೀಯಬಲಿಚ್ಛೇದನಂ ರುಧಿರಸೇಚನಞ್ಚಾನುಷ್ಠಿತಾವಾನ್|
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
ಅಪರಂ ತೇ ವಿಶ್ವಾಸಾತ್ ಸ್ಥಲೇನೇವ ಸೂಫ್ಸಾಗರೇಣ ಜಗ್ಮುಃ ಕಿನ್ತು ಮಿಸ್ರೀಯಲೋಕಾಸ್ತತ್ ಕರ್ತ್ತುಮ್ ಉಪಕ್ರಮ್ಯ ತೋಯೇಷು ಮಮಜ್ಜುಃ|
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
ಅಪರಞ್ಚ ವಿಶ್ವಾಸಾತ್ ತೈಃ ಸಪ್ತಾಹಂ ಯಾವದ್ ಯಿರೀಹೋಃ ಪ್ರಾಚೀರಸ್ಯ ಪ್ರದಕ್ಷಿಣೇ ಕೃತೇ ತತ್ ನಿಪಪಾತ|
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
ವಿಶ್ವಾಸಾದ್ ರಾಹಬ್ನಾಮಿಕಾ ವೇಶ್ಯಾಪಿ ಪ್ರೀತ್ಯಾ ಚಾರಾನ್ ಅನುಗೃಹ್ಯಾವಿಶ್ವಾಸಿಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ನ ವಿನನಾಶ|
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
ಅಧಿಕಂ ಕಿಂ ಕಥಯಿಷ್ಯಾಮಿ? ಗಿದಿಯೋನೋ ಬಾರಕಃ ಶಿಮ್ಶೋನೋ ಯಿಪ್ತಹೋ ದಾಯೂದ್ ಶಿಮೂಯೇಲೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಶ್ಚೈತೇಷಾಂ ವೃತ್ತಾನ್ತಕಥನಾಯ ಮಮ ಸಮಯಾಭಾವೋ ಭವಿಷ್ಯತಿ|
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
ವಿಶ್ವಾಸಾತ್ ತೇ ರಾಜ್ಯಾನಿ ವಶೀಕೃತವನ್ತೋ ಧರ್ಮ್ಮಕರ್ಮ್ಮಾಣಿ ಸಾಧಿತವನ್ತಃ ಪ್ರತಿಜ್ಞಾನಾಂ ಫಲಂ ಲಬ್ಧವನ್ತಃ ಸಿಂಹಾನಾಂ ಮುಖಾನಿ ರುದ್ಧವನ್ತೋ
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
ವಹ್ನೇರ್ದಾಹಂ ನಿರ್ವ್ವಾಪಿತವನ್ತಃ ಖಙ್ಗಧಾರಾದ್ ರಕ್ಷಾಂ ಪ್ರಾಪ್ತವನ್ತೋ ದೌರ್ಬ್ಬಲ್ಯೇ ಸಬಲೀಕೃತಾ ಯುದ್ಧೇ ಪರಾಕ್ರಮಿಣೋ ಜಾತಾಃ ಪರೇಷಾಂ ಸೈನ್ಯಾನಿ ದವಯಿತವನ್ತಶ್ಚ|
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
ಯೋಷಿತಃ ಪುನರುತ್ಥಾನೇನ ಮೃತಾನ್ ಆತ್ಮಜಾನ್ ಲೇಭಿರೇ, ಅಪರೇ ಚ ಶ್ರೇಷ್ಠೋತ್ಥಾನಸ್ಯ ಪ್ರಾಪ್ತೇರಾಶಯಾ ರಕ್ಷಾಮ್ ಅಗೃಹೀತ್ವಾ ತಾಡನೇನ ಮೃತವನ್ತಃ|
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
ಅಪರೇ ತಿರಸ್ಕಾರೈಃ ಕಶಾಭಿ ರ್ಬನ್ಧನೈಃ ಕಾರಯಾ ಚ ಪರೀಕ್ಷಿತಾಃ|
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
ಬಹವಶ್ಚ ಪ್ರಸ್ತರಾಘಾತೈ ರ್ಹತಾಃ ಕರಪತ್ರೈ ರ್ವಾ ವಿದೀರ್ಣಾ ಯನ್ತ್ರೈ ರ್ವಾ ಕ್ಲಿಷ್ಟಾಃ ಖಙ್ಗಧಾರೈ ರ್ವಾ ವ್ಯಾಪಾದಿತಾಃ| ತೇ ಮೇಷಾಣಾಂ ಛಾಗಾನಾಂ ವಾ ಚರ್ಮ್ಮಾಣಿ ಪರಿಧಾಯ ದೀನಾಃ ಪೀಡಿತಾ ದುಃಖಾರ್ತ್ತಾಶ್ಚಾಭ್ರಾಮ್ಯನ್|
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
ಸಂಸಾರೋ ಯೇಷಾಮ್ ಅಯೋಗ್ಯಸ್ತೇ ನಿರ್ಜನಸ್ಥಾನೇಷು ಪರ್ವ್ವತೇಷು ಗಹ್ವರೇಷು ಪೃಥಿವ್ಯಾಶ್ಛಿದ್ರೇಷು ಚ ಪರ್ಯ್ಯಟನ್|
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
ಏತೈಃ ಸರ್ವ್ವೈ ರ್ವಿಶ್ವಾಸಾತ್ ಪ್ರಮಾಣಂ ಪ್ರಾಪಿ ಕಿನ್ತು ಪ್ರತಿಜ್ಞಾಯಾಃ ಫಲಂ ನ ಪ್ರಾಪಿ|
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
ಯತಸ್ತೇ ಯಥಾಸ್ಮಾನ್ ವಿನಾ ಸಿದ್ಧಾ ನ ಭವೇಯುಸ್ತಥೈವೇಶ್ವರೇಣಾಸ್ಮಾಕಂ ಕೃತೇ ಶ್ರೇಷ್ಠತರಂ ಕಿಮಪಿ ನಿರ್ದಿದಿಶೇ|

< எபிரேயர் 11 >