< எபிரேயர் 11 >

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
ⲁ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲇⲉ ⲡⲧⲁϫⲣⲟ ⲧⲉ ⲛ̅ⲛⲉⲧⲉⲛϩⲉⲗⲡⲓⲍⲉ ⲉⲣⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲡⲟⲩⲱⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉϩⲃⲏⲩⲉ ⲉⲧⲉⲛ̅ⲧⲛ̅ⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁⲛ.
2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
ⲃ̅ⲛ̅ⲧⲁⲩⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲅⲁⲣ ϩⲁⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ϩⲛ̅ⲧⲁⲓ̈·
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
ⲅ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲛⲛⲟⲓ̈ ϫⲉ ⲛ̅ⲧⲁⲩⲥⲟⲃⲧⲉ ⲛ̅ⲛⲁⲓⲱⲛ ϩⲙ̅ⲡϣⲁϫⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ϫⲉ ⲡⲉⲧⲛ̅ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲛ̅ⲧⲁϥϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲧⲉⲛϥ̅ϣⲟⲟⲡ ⲁⲛ· (aiōn g165)
4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
ⲇ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲁⲁⲃⲉⲗ ⲧⲁⲗⲉϩⲟⲩⲉⲑⲩⲥⲓⲁ ⲉϩⲣⲁⲓ̈ ⲡⲁⲣⲁⲕⲁⲉⲓⲛ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲥ̅ ⲛ̅ⲧⲁⲩⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ϩⲁⲣⲟϥ ϫⲉ ⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲡⲉ. ⲉⲣⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲛⲁϥ ⲉϫⲛ̅ⲛⲉϥⲇⲱⲣⲟⲛ. ⲁⲩⲱ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲥ̅ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲙⲟⲩ. ⲉⲧⲓ ⲟⲛ ϥϣⲁϫⲉ·
5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
ⲉ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲛⲱⲭ ⲁⲩⲡⲟⲟⲛⲉϥ ⲉⲃⲟⲗ ⲉⲧⲙ̅ⲧⲣⲉϥⲛⲁⲩ ⲉⲡⲙⲟⲩ. ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩϩⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲟⲟⲛⲉϥ ⲉⲃⲟⲗ. ϩⲁⲑⲏ ⲅⲁⲣ ⲉⲙⲡⲁⲧⲟⲩⲡⲟⲟⲛⲉϥ ⲉⲃⲟⲗ ⲁⲩⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ϩⲁⲣⲟϥ ϫⲉ ⲁϥⲣ̅ⲁⲛⲁϥ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
ⲋ̅ⲁϫⲛ̅ⲡⲓⲥⲧⲓⲥ ⲇⲉ ⲟⲩⲁⲧϭⲟⲙ ⲡⲉ ⲉⲣ̅ⲁⲛⲁϥ. ϣ̅ϣⲉ ⲅⲁⲣ ⲉⲡⲉⲧⲛⲁϯⲡⲉϥⲟⲩⲟⲓ̈ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲡⲓⲥⲧⲉⲩⲉ ϫⲉ ϥϣⲟⲟⲡ ⲁⲩⲱ ϫⲉ ϥⲛⲁϣⲱⲡⲉ ⲛ̅ⲧⲁⲓⲃⲉⲕⲉ ⲛ̅ⲛⲉⲧϣⲓⲛⲉ ⲛ̅ⲥⲱϥ·
7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
ⲍ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲁⲩⲧⲟⲩⲛⲟⲩⲉⲓⲁⲧϥ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲱϩⲉ ⲉⲧⲃⲉⲛⲉⲧϥ̅ⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁⲛ. ⲛ̅ⲧⲉⲣⲉϥⲣ̅ϩⲟⲧⲉ ⲁϥⲧⲁⲙⲓⲟ ⲛ̅ⲟⲩϭⲓⲃⲱⲧⲟⲥ ⲉⲡⲉⲩϫⲁⲓ̈ ⲙ̅ⲡⲉϥⲏⲓ̈. ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧⲥ̅ ⲁϥⲧϭⲁⲓⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ. ⲁⲩⲱ ⲁϥϣⲱⲡⲉ ⲛ̅ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ ⲕⲁⲧⲁⲧⲡⲓⲥⲧⲓⲥ·
8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
ⲏ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲁⲃⲣⲁϩⲁⲙ ⲁϥⲥⲱⲧⲙ̅ ⲉⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲡⲙⲁ ⲉⲧϥ̅ⲛⲁϫⲓⲧϥ̅ ⲉⲩⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ⲁϥⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲛϥ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲉϥⲙⲟⲟϣⲉ ⲉⲧⲱⲛ·
9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
ⲑ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲁϥⲟⲩⲱϩ ϩⲙ̅ⲡⲕⲁϩ ⲙ̅ⲡⲉⲣⲏⲧ ϩⲱⲥ ϣⲙ̅ⲙⲟ. ⲉⲁϥⲟⲩⲱϩ ϩⲛ̅ϩⲉⲛ(ϩ)ⲃⲱ ⲙⲛ̅ⲓ̈ⲥⲁⲕ ⲁⲩⲱ ⲓ̈ⲁⲕⲱⲃ ⲛ̅ϣⲃⲣ̅ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲙ̅ⲡⲓⲉⲣⲏⲧ ⲛ̅ⲟⲩⲱⲧ.
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
ⲓ̅ⲛⲉϥϭⲱϣⲧ ⲅⲁⲣ ⲉⲃⲟⲗ ϩⲏⲧⲥ̅ ⲛ̅ⲧⲡⲟⲗⲓⲥ ⲉⲧⲉⲩⲛ̅ⲧⲥ̅ⲥⲛ̅ⲧⲉ ⲙ̅ⲙⲁⲩ. ⲧⲁⲓ̈ ⲉⲡⲉⲥⲧⲉⲭⲛⲓⲧⲏⲥ ⲙⲛ̅ⲡⲉⲥⲇⲏⲙⲓⲟⲩⲣⲅⲟⲥ ⲡⲉ ⲡⲛⲟⲩⲧⲉ·
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
ⲓ̅ⲁ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ϩⲱⲱⲥ ⲥⲁⲣⲣⲁ ⲧⲁϭⲣⲏⲛ ⲁⲥϫⲓ ⲛ̅ⲟⲩϭⲟⲙ ⲉⲩⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⲛ̅ⲥⲡⲉⲣⲙⲁ ⲡⲁⲣⲁⲡⲟⲩⲟⲉⲓϣ ⲛ̅ⲧⲉⲥϭⲟⲧ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲥⲧⲁⲛϩⲉⲧⲡⲉⲛⲧⲁϥⲉⲣⲏⲧ.
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
ⲓ̅ⲃ̅ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲉⲁⲩϫⲡⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲁ ⲉⲁⲡⲉϥⲥⲱⲙⲁ ⲣ̅ⲡⲕⲉⲕⲁϭⲟⲙ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲑⲉ ⲛ̅ⲛ̅ⲥⲓⲟⲩ ⲛ̅ⲧⲡⲉ ϩⲛ̅ⲧⲉⲩⲁϣⲏ. ⲁⲩⲱ ⲛ̅ⲑⲉ ⲙ̅ⲡϣⲟ ⲉⲧϩⲁⲧⲙ̅ⲡⲉⲥⲡⲟⲧⲟⲩ ⲛ̅ⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲉⲧⲉⲙⲛ̅ⲧϥ̅ⲏⲡⲉ.
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
ⲓ̅ⲅ̅ⲕⲁⲧⲁⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲁⲩⲙⲟⲩ ⲛ̅ϭⲓⲛⲁⲓ̈ ⲧⲏⲣⲟⲩ ⲙ̅ⲡⲟⲩϫⲓ ⲛ̅ⲛⲉⲣⲏⲧ ⲁⲗⲗⲁ ⲁⲩⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲙ̅ⲡⲟⲩⲉ ⲁⲩⲁⲥⲡⲁⲍⲉ. ⲁⲩⲱ ⲁⲩϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ϫⲉ ⲁⲛϩⲉⲛϣⲙ̅ⲙⲟ. ⲁⲩⲱ ⲁⲛϩⲉⲛⲣⲙ̅ⲛ̅ϭⲟⲓ̈ⲗⲉ ϩⲓϫⲙ̅ⲡⲕⲁϩ.
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
ⲓ̅ⲇ̅ⲛⲉⲧϫⲱ ⲅⲁⲣ ⲛ̅ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲉⲉⲓϩⲉ ⲉⲩⲟⲩⲱⲛϩ̅ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲉⲩϣⲓⲛⲉ ⲛ̅ⲥⲁⲟⲩⲡⲟⲗⲓⲥ.
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
ⲓ̅ⲉ̅ⲛ̅ⲛⲉⲩⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲛⲧⲁⲩⲉⲓ ⲉⲃⲟⲗ ⲛ̅ϩⲏⲧⲥ̅. ⲛⲉⲁⲩⲣ̅ⲧⲉ ⲡⲉ ⲛ̅ⲕⲟⲧⲟⲩ ⲉⲣⲟⲥ.
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
ⲓ̅ⲋ̅ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲉⲩⲟⲩⲉϣⲧⲉⲧⲥⲟⲧⲡ̅ ⲉⲧⲉⲧⲁⲧⲡⲉ ⲧⲉ. ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϯϣⲓⲡⲉ ⲛⲁⲩ ⲁⲛ ⲉⲧⲣⲉⲩⲉⲡⲓⲕⲁⲗⲉⲓ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ⲛⲟⲩⲧⲉ ⲉϫⲱⲟⲩ ⲁϥⲥⲟⲃⲧⲉ ⲅⲁⲣ ⲛⲁⲩ ⲛ̅ⲟⲩⲡⲟⲗⲓⲥ·
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
ⲓ̅ⲍ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲁⲃⲣⲁϩⲁⲙ ⲁϥⲧⲁⲗⲉⲓ̈ⲥⲁⲁⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲩⲡⲓⲣⲁⲍⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲩⲱ ⲁϥⲧⲁⲗⲉⲡⲉϥϣⲏⲣⲉ ⲛ̅ⲟⲩⲱⲧ ⲉϩⲣⲁⲓ̈ ⲛ̅ϭⲓⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡ ⲉⲣⲟϥ ⲛ̅ⲛⲉⲣⲏⲧ
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
ⲓ̅ⲏ̅ⲡⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲩϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁϥ ϫⲉ ϩⲛ̅ⲓ̈ⲥⲁⲁⲕ ⲉⲩⲛⲁⲙⲟⲩⲧⲉ ⲛⲁⲕ ⲉⲩⲥⲡⲉⲣⲙⲁ.
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
ⲓ̅ⲑ̅ⲉⲁϥⲙⲟⲕⲙⲉⲕ ϫⲉ ⲟⲩⲛ̅ϣϭⲟⲙ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲟⲛ ⲁϥϫⲓⲧϥ̅ ϩⲛ̅ⲟⲩⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ·
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
ⲕ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲧⲃⲉⲛⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲁⲓ̈ⲥⲁⲁⲕ ⲥⲙⲟⲩ ⲉⲓ̈ⲁⲕⲱⲃ ⲙⲛ̅ⲏ̅ⲥⲁⲩ·
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
ⲕ̅ⲁ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲓ̈ⲁⲕⲱⲃ ⲉϥⲛⲁⲙⲟⲩ ⲁϥⲥⲙⲟⲩ ⲉⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲛ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏⲫ. ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱϣⲧ̅ ⲛ̅ϩⲧⲏϥ ⲙ̅ⲡⲉϥϭⲉⲣⲱⲃ·
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
ⲕ̅ⲃ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲓ̈ⲱⲥⲏⲫ ⲉϥⲛⲁⲙⲟⲩ ⲁϥⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲉⲧⲃⲉⲡⲉⲓ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲓ̅ⲏ̅ⲗ. ⲁⲩⲱ ⲁϥϩⲱⲛ ⲉⲧⲃⲉⲛⲉϥⲕⲉⲉⲥ·
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
ⲕ̅ⲅ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲧⲉⲣⲟⲩϫⲡⲟ ⲙ̅ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲁⲩϩⲟⲡϥ̅ ⲛ̅ϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ⲉⲃⲟⲧ ϩⲓⲧⲛ̅ⲛⲉϥⲉⲓⲟⲧⲉ. ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲩⲛⲁⲩ ⲉⲡϣⲏⲣⲉ ϣⲏⲙ ⲉⲛⲉⲥⲱϥ ⲙ̅ⲡⲟⲩⲣ̅ϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲇⲓⲁⲧⲁⲅⲙⲁ ⲙ̅ⲡⲣ̅ⲣⲟ·
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
ⲕ̅ⲇ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲧⲉⲣⲉⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲣ̅ⲛⲟϭ ⲙ̅ⲡϥ̅ⲟⲩⲱϣ ⲉⲧⲣⲉⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲧϣⲉⲉⲣⲉ ⲙ̅ⲫⲁⲣⲁⲱ.
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
ⲕ̅ⲉ̅ⲉⲁϥⲥⲱⲧⲡ ⲛⲁϥ ⲛ̅ϩⲟⲩⲟ ⲉϣⲡ̅ϩⲓⲥⲉ ⲙⲛ̅ⲡⲗⲁⲟⲥ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲉϩⲟⲩⲉϫⲓ ⲛ̅ⲧⲁⲡⲟⲗⲁⲩⲥⲓⲥ ⲙ̅ⲡⲛⲟⲃⲉ ⲡⲣⲟⲥⲟⲩⲟⲩⲟⲉⲓϣ.
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
ⲕ̅ⲋ̅ⲉⲁϥⲉⲡⲡⲛⲟϭⲛⲉϭ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ϫⲉ ⲟⲩϩⲟⲩⲉⲙⲛ̅ⲧⲣⲙ̅ⲙⲁⲟ ⲡⲉ ⲉϩⲟⲩⲉⲛⲁϩⲱⲱⲣ ⲛ̅ⲕⲏⲙⲉ. ⲛⲉϥϭⲱϣⲧ̅ ⲅⲁⲣ ⲡⲉ ⲉⲡⲧⲟⲩⲉⲓⲟ ⲛⲁϥ ⲙ̅ⲡⲉϥⲃⲉⲕⲉ·
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
ⲕ̅ⲍ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲁϥⲕⲁⲕⲏⲙⲉ ⲛ̅ⲥⲱϥ ⲙ̅ⲡϥ̅ⲣ̅ϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡϭⲱⲛⲧ̅ ⲙ̅ⲡⲣ̅ⲣⲟ. ⲡⲉⲧⲉⲙⲉⲩⲛⲁⲩ ⲅⲁⲣ ⲉⲣⲟϥ ⲛⲉϥϭⲉⲉⲧ ⲉⲣⲟϥ ⲡⲉ ϩⲱⲥ ⲉϥⲛⲁⲩ ⲉⲣⲟϥ·
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
ⲕ̅ⲏ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲁϥⲣ̅ⲡ̅ⲡⲁⲥⲭⲁ ⲙⲛ̅ⲡⲡⲱⲛ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲥⲛⲟϥ ϫⲉ ⲛ̅ⲛⲉⲡⲉⲧⲧⲁⲕⲟ ⲛ̅ⲛ̅ϣⲣ̅ⲡⲙ̅ⲙⲓⲥⲉ ϫⲱϩ ⲉⲣⲟⲟⲩ.
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
ⲕ̅ⲑ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲁⲩϫⲓⲟⲟⲣ ⲛ̅ⲧⲉⲣⲩⲑⲣⲁ ⲑⲁⲗⲁⲥⲥⲁ ⲛ̅ⲑⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲟⲩⲕⲁϩ ⲉϥϣⲟⲩⲱⲟⲩ. ⲧⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲩϫⲟⲛⲧⲟⲩ ⲙ̅ⲙⲟⲥ ⲛ̅ϭⲓⲛ̅ⲣⲙ̅ⲛ̅ⲕⲏⲙⲉ ⲁⲩⲱⲙⲥ̅·
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
ⲗ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲛ̅ⲥⲟⲃⲧ̅ ⲛ̅ϩⲓⲉⲣⲓⲭⲱ ⲁⲩϩⲉ ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲕⲱⲧⲉ ⲉⲣⲟⲟⲩ ⲛ̅ⲥⲁϣϥ̅ ⲛ̅ϩⲟⲟⲩ·
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
ⲗ̅ⲁ̅ϩⲛ̅ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ϩⲣⲁⲁⲃ ⲧⲡⲟⲣⲛⲏ ⲙ̅ⲡⲥ̅ϩⲉ ⲉⲃⲟⲗ ⲙⲛ̅ⲛⲉⲛⲧⲁⲩⲣ̅ⲁⲧⲛⲁϩⲧⲉ. ⲉⲁⲥϣⲱⲡ ⲉⲣⲟⲥ ⲛ̅ⲛ̅ϫⲱⲣ ϩⲛ̅ⲟⲩⲉⲓⲣⲏⲛⲏ·
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
ⲗ̅ⲃ̅ⲉⲓ̈ⲛⲁϫⲉⲟⲩ ⲟⲛ. ⲡⲉⲟⲩⲟⲉⲓϣ ⲅⲁⲣ ⲛⲁⲕⲁⲁⲧ ⲉⲉⲓϣⲁϫⲉ. ⲉⲧⲃⲉⲅⲉⲇⲉⲱⲛ. ⲃⲁⲣⲁⲕ. ⲥⲁⲙⲯⲱⲛ. ⲓ̈ⲉⲫⲑⲁⲉ. ⲇⲁⲩⲉⲓⲇ ⲙⲛ̅ⲥⲁⲙⲟⲩⲏⲗ. ⲙⲛ̅ⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ ⲙ̅ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
ⲗ̅ⲅ̅ⲛⲁⲓ̈ ⲉⲛⲧⲁⲩϫⲣⲟ ⲉⲛⲓⲙⲛ̅ⲧⲉⲣⲱⲟⲩ ϩⲓⲧⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ. ⲁⲩⲣ̅ϩⲱⲃ ⲉⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ. ⲁⲩⲙⲁⲧⲉ ⲛ̅ⲛⲉⲣⲏⲧ. ⲁⲩⲧⲱⲙ ⲛ̅ⲧⲧⲁⲡⲣⲟ ⲛ̅ⲙ̅ⲙⲟⲩⲓ̈.
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
ⲗ̅ⲇ̅ⲁⲩⲱϣⲙ̅ ⲛ̅ⲧϭⲟⲙ ⲛ̅ⲧⲥⲁⲧⲉ. ⲁⲩⲣ̅ⲃⲟⲗ ⲉⲧⲧⲁⲡⲣⲟ ⲛ̅ⲧⲥⲏϥⲉ. ⲁⲩϭⲙ̅ϭⲟⲙ ϩⲛ̅ⲧⲙⲛ̅ⲧϭⲱⲃ ⲁⲩϣⲱⲡⲉ ⲉⲩϫⲟⲟⲣ ϩⲙ̅ⲡⲡⲟⲗⲉⲙⲟⲥ ⲁⲩϭⲱⲧⲡ̅ ⲛ̅ⲙ̅ⲡⲁⲣⲉⲙⲃⲟⲗⲏ ⲛ̅ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ.
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
ⲗ̅ⲉ̅ⲁϩⲉⲛⲥϩⲓⲙⲉ ϫⲓ ⲛ̅ⲛⲉⲩⲣⲉϥⲙⲟⲟⲩⲧ ⲁⲩⲧⲟⲩⲛⲟⲥⲟⲩ ⲛⲁⲩ. ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ⲁⲩϩⲁⲧⲟⲩ ⲙ̅ⲡⲟⲩϣⲱⲡ ⲉⲣⲟⲟⲩ ⲙ̅ⲡⲥⲱⲧⲉ ⲙ̅ⲡⲉⲩⲥⲱⲙⲁ. ϫⲉ ⲉⲩⲉϫⲓ ⲛ̅ⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲉⲧⲥⲟⲧⲡ̅.
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
ⲗ̅ⲋ̅ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲇⲉ ⲁⲩϫⲟⲛⲧⲟⲩ ϩⲛ̅ϩⲉⲛⲥⲱⲃⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲙⲛ̅ϩⲉⲛⲙⲁⲥⲧⲓⲅⲝ̅. ⲉⲧⲉⲓ ⲇⲉ ϩⲛ̅ϩⲉⲛⲙⲣ̅ⲣⲉ ⲙⲛ̅ⲡⲉϣⲧⲉⲕⲟ.
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
ⲗ̅ⲍ̅ⲁⲩⲟⲩⲁⲥⲧⲟⲩ. ⲁⲩϩⲓⲱⲛⲉ ⲉⲣⲟⲟⲩ. ⲁⲩⲙⲟⲩ ϩⲛ̅ⲟⲩϩⲱⲧⲃ̅ ⲛ̅ⲥⲏϥⲉ. ⲁⲩⲙⲟⲟϣⲉ ϩⲛ̅ϩⲉⲛⲃⲁⲗⲟⲧ ⲙⲛ̅ϩⲉⲛϣⲁⲁⲣ ⲛ̅ⲃⲁⲁⲙⲡⲉ ⲉⲩⲣ̅ϭⲣⲱϩ. ⲉⲩⲑⲗⲓⲃⲉ. ⲉⲩⲙⲟⲕϩ̅.
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
ⲗ̅ⲏ̅ⲛⲁⲓ̈ ⲉⲧⲉⲙ̅ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲙ̅ⲡϣⲁ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲁⲛ. ⲉⲩⲥⲟⲣⲙ̅ ϩⲓⲛ̅ϫⲁⲓ̈ⲉ. ⲙⲛ̅ⲛ̅ⲧⲟⲟⲩ. ⲙⲛ̅ⲛ̅ⲉⲓⲁ. ⲙⲛ̅ⲛⲉϣⲕⲟⲗ ⲙ̅ⲡⲕⲁϩ.
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
ⲗ̅ⲑ̅ⲁⲩⲱ ⲉⲁⲩⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ϩⲁⲣⲟⲟⲩ ⲧⲏⲣⲟⲩ ϩⲓⲧⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙ̅ⲡⲟⲩϫⲓ ⲛ̅ⲛⲉⲣⲏⲧ.
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
ⲙ̅ⲉⲣⲉⲡⲛⲟⲩⲧⲉ ϭⲱϣⲧ̅ ⲉⲩϩⲱⲃ ⲉϥⲥⲟⲧⲡ̅ ⲉⲧⲃⲏⲏⲧⲛ̅ ϫⲉ ⲛ̅ⲛⲉⲩϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲁϫⲛⲧⲛ̅·

< எபிரேயர் 11 >