< எபிரேயர் 10 >
1 ௧ இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது.
ⲁ̅ⲪⲚⲞⲘⲞⲤ ⲄⲀⲢ ⲈⲞⲨⲞⲚⲦⲀϤ ⲚⲞⲨϦⲎⲒⲂⲒ ⲚⲦⲈⲚⲒⲀⲄⲀⲐⲞⲚ ⲈⲐⲚⲎⲞⲨ ⲚⲦⲀⲒϨⲒⲔⲰⲚ ⲀⲚ ⲦⲈ ⲚⲦⲈⲚⲀⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲘⲢⲞⲘⲠⲒ ϦⲈⲚⲚⲀⲒϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲢⲰ ⲚⲀⲒ ⲈⲦⲞⲨⲒⲚⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈϦⲞⲨⲚ ϢⲀⲂⲞⲖ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲞⲨ ⲈⲚⲈϨ ⲈϪⲈⲔ ⲚⲎ ⲈⲐⲚⲎⲞⲨ ⲈϦⲞⲨⲚ.
2 ௨ பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?
ⲃ̅ⲘⲘⲞⲚ ⲚⲀⲨⲚⲀⲔⲎⲚ ⲀⲚ ⲠⲈ ⲈⲨⲒⲚⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲈⲐⲂⲈ ϪⲈ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲚⲤⲨⲚⲎⲆⲈⲤⲒⲤ ⲚⲦⲰⲞⲨ ⲚⲦⲈϨⲀⲚⲚⲞⲂⲒ ϦⲀ ⲚⲎ ⲈⲦϢⲈⲘϢⲒ ⲈⲀⲨⲦⲞⲨⲂⲞ ⲚⲞⲨⲤⲞⲠ.
3 ௩ அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
ⲅ̅ⲀⲖⲖⲀ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲚⲀⲨⲒⲢⲒ ⲘⲪⲘⲈⲨⲒ ⲚⲚⲒⲚⲞⲂⲒ ⲈⲦⲈⲘⲢⲞⲘⲠⲒ.
4 ௪ அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.
ⲇ̅ⲞⲨⲘⲈⲦⲀⲦϪⲞⲘ ⲄⲀⲢ ⲦⲈ ⲚⲦⲈⲠⲤⲚⲞϤ ⲚⲦⲈϨⲀⲚⲘⲀⲤⲒ ⲚⲈⲘ ϨⲀⲚⲂⲀⲢⲎⲒⲦ ⲈⲈⲖ ϨⲀⲚⲚⲞⲂⲒ.
5 ௫ ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
ⲉ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲈϤⲚⲎⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲚⲈⲘ ⲞⲨⲠⲢⲞⲤⲪⲰⲢⲀ ⲘⲠⲈⲔⲞⲨⲀϢⲞⲨ ⲞⲨⲤⲰⲘⲀ ⲆⲈ ⲠⲈⲦⲀⲔⲤⲈⲂⲦⲞⲦϤ ⲚⲎⲒ.
6 ௬ சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர்.
ⲋ̅ϨⲀⲚϬⲖⲒⲖ ⲚⲈⲘ ⲈⲐⲂⲈ ⲪⲚⲞⲂⲒ ⲘⲠⲈⲔϮⲘⲀϮ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲞⲨ.
7 ௭ அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
ⲍ̅ⲦⲞⲦⲈ ⲀⲒϪⲞⲤ ϪⲈ ⲒⲤ ϨⲎⲠⲠⲈ ϮⲚⲎⲞⲨ ϦⲈⲚⲞⲨⲔⲀϨⲒ ⲚϪⲰⲘ ⲈⲤⲤϦⲎⲞⲨⲦ ⲈⲐⲂⲎⲦ ⲈⲐⲢⲒⲒⲢⲒ ⲪⲚⲞⲨϮ ⲘⲠⲈⲦⲈϨⲚⲀⲔ.
8 ௮ நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு:
ⲏ̅ⲤⲀⲠϢⲰⲒ ϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ϨⲀⲚϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲚⲈⲘ ϨⲀⲚⲠⲢⲞⲤⲪⲰⲢⲀ ⲚⲈⲘ ϨⲀⲚϬⲖⲒⲖ ⲚⲈⲘ ⲈⲐⲂⲈ ⲪⲚⲞⲂⲒ ⲘⲠⲈⲔⲞⲨⲀϢⲞⲨ ⲞⲨⲆⲈ ⲘⲠⲈⲔϮ ⲘⲀϮ ⲈϪⲰⲞⲨ ⲈⲦⲈ ⲚⲎ ⲚⲈⲈⲦⲞⲨⲒⲚⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲔⲀⲦⲀ ⲠⲒⲚⲞⲘⲞⲤ.
9 ௯ தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
ⲑ̅ⲦⲞⲦⲈ ⲀϤϪⲞⲤ ϪⲈ ⲒⲤ ϨⲎⲠⲠⲈ ϮⲚⲎⲞⲨ ⲈⲒⲢⲒ ⲘⲠⲈⲦⲈϨⲚⲀⲔ ϤϦⲰⲦⲈⲂ ⲘⲠⲒϨⲞⲨⲒⲦ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲦⲀϨⲈ ⲠⲒⲘⲀϨⲂ ⲈⲢⲀⲦϤ.
10 ௧0 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
ⲓ̅ⲪⲀⲒ ⲈⲦⲀⲚⲦⲞⲨⲂⲞ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲠⲈⲦⲈϨⲚⲀϤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ϮⲠⲢⲞⲤⲪⲰⲢⲀ ⲚⲦⲈⲠⲤⲰⲘⲀ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲞⲨⲤⲞⲠ.
11 ௧௧ அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான்.
ⲓ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲞⲨⲎⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲘⲘⲎⲚⲒ ⲈϤϢⲈⲘϢⲒ ⲚⲀⲒϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲢⲰ ⲈϤⲒⲚⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲚⲞⲨⲘⲎϢ ⲚⲤⲞⲠ ⲚⲀⲒ ⲈⲦⲈ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲞⲨ ⲈⲚⲈϨ ⲈⲈⲖ ⲚⲞⲂⲒ.
12 ௧௨ இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து,
ⲓ̅ⲃ̅ⲪⲀⲒ ⲆⲈ ⲀϤⲈⲚϤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲚⲈⲚⲚⲞⲂⲒ ⲚⲞⲨϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲚⲞⲨⲰⲦ ⲀϤϨⲈⲘⲤⲒ ⲤⲀⲞⲨⲒⲚⲀⲘ ⲘⲪⲚⲞⲨϮ ϢⲀ ⲈⲂⲞⲖ.
13 ௧௩ இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
ⲓ̅ⲅ̅ⲦⲞ ⲖⲞⲒⲠⲞⲚ ⲈϤϪⲞⲨϢⲦ ϢⲀⲦⲞⲨⲬⲰ ⲚⲚⲈϤϪⲀϪⲒ ⲤⲀⲠⲈⲤⲎⲦ ⲚⲚⲈϤϬⲀⲖⲀⲨϪ.
14 ௧௪ ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
ⲓ̅ⲇ̅ⲞⲨⲠⲢⲞⲤⲪⲰⲢⲀ ⲚⲞⲨⲰⲦ ⲈⲐⲚⲀϪⲈⲔ ⲚⲎ ⲈⲐⲚⲀⲦⲞⲨⲂⲰⲞⲨ ϢⲀ ⲈⲂⲞⲖ.
15 ௧௫ இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்:
ⲓ̅ⲉ̅ϤⲈⲢⲘⲈⲐⲢⲈ ⲄⲀⲢ ⲚⲀⲚ ⲚϪⲈⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲐⲢⲈϤϪⲞⲤ ⲄⲀⲢ
16 ௧௬ அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,
ⲓ̅ⲋ̅ϪⲈ ⲦⲀⲒⲆⲒⲀⲐⲎⲔⲎ ⲈⲦⲀⲒⲤⲈⲘⲚⲎⲦⲤ ⲚⲈⲘⲰⲞⲨ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲠⲈϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲈⲒⲈϮ ⲚⲚⲀⲚⲞⲘⲞⲤ ⲈϦⲢⲎⲒ ⲈⲠⲞⲨϨⲎⲦ ⲞⲨⲞϨ ϮⲚⲀⲤϦⲎⲦⲞⲨ ⲈϪⲈⲚ ⲚⲞⲨⲘⲈⲨⲒ.
17 ௧௭ அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
ⲓ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲚⲚⲀⲈⲢⲪⲘⲈⲨⲒ ϪⲈ ⲚⲚⲞⲨⲚⲞⲂⲒ ⲚⲈⲘ ⲚⲞⲨⲀⲚⲞⲘⲒⲀ.
18 ௧௮ இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
ⲓ̅ⲏ̅ⲠⲒⲘⲀ ⲄⲀⲢ ⲈⲦⲈ ⲞⲨⲬⲰ ⲈⲂⲞⲖ ⲘⲘⲞϤ ⲚⲦⲈⲚⲀⲒ ⲒⲈ ⲘⲘⲞⲚ ⲠⲢⲞⲤⲪⲰⲢⲀ ϪⲈ ⲈⲐⲂⲈ ⲪⲚⲞⲂⲒ.
19 ௧௯ ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,
ⲓ̅ⲑ̅ⲈⲞⲨⲞⲚ ⲚⲦⲀⲚ ⲞⲨⲚ ⲘⲘⲀⲨ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ⲚⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲈⲪⲘⲰⲒⲦ ⲈϦⲞⲨⲚ ⲚⲦⲈⲚⲈⲐⲞⲨⲀⲂ ϦⲈⲚⲠⲤⲚⲞϤ ⲚⲒⲎⲤⲞⲨⲤ.
20 ௨0 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும்,
ⲕ̅ⲪⲎ ⲈⲦⲀϤⲀⲒϤ ⲘⲂⲈⲢⲒ ⲚⲀⲚ ⲠⲒⲘⲰⲒⲦ ⲘⲂⲈⲢⲒ ⲞⲨⲞϨ ⲈⲦⲞⲚϦ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠⲒⲔⲀⲦⲀⲠⲈⲦⲀⲤⲘⲀ ⲈⲦⲈ ⲦⲈϤⲤⲀⲢⲜ ⲦⲈ.
21 ௨௧ தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும்,
ⲕ̅ⲁ̅ⲚⲈⲘ ⲞⲨⲚⲒϢϮ ⲚⲞⲨⲎⲂ ⲈϪⲈⲚ ⲠⲎⲒ ⲘⲪⲚⲞⲨϮ.
22 ௨௨ தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
ⲕ̅ⲃ̅ⲘⲀⲢⲈⲚⲒ ⲈϦⲞⲨⲚ ϦⲈⲚⲞⲨϨⲎⲦ ⲘⲘⲎⲒ ⲚⲈⲘ ⲞⲨϪⲰⲔ ⲚⲦⲈⲞⲨⲚⲀϨϮ ⲈⲨⲚⲞⲨϪϦ ⲚϪⲈⲚⲈⲚϨⲎⲦ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲤⲨⲚⲎⲆⲈⲤⲒⲤ ⲈⲤϨⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲠⲈⲚⲤⲰⲘⲀ ϪⲰⲔⲈⲘ ϦⲈⲚⲞⲨⲘⲰⲞⲨ ⲈϤⲦⲞⲨⲂⲎ ⲞⲨⲦ.
23 ௨௩ அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.
ⲕ̅ⲅ̅ⲘⲀⲢⲈⲚⲀⲘⲞⲚⲒ ⲘⲠⲒⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈϮϨⲈⲖⲠⲒⲤ ⲚⲀⲦⲢⲒⲔⲒ ϤⲈⲚϨⲞⲦ ⲄⲀⲢ ⲚϪⲈⲪⲎ ⲈⲦⲀϤⲰϢ
24 ௨௪ மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து;
ⲕ̅ⲇ̅ⲘⲀⲢⲈⲚϮϨⲐⲎⲚ ⲈⲚⲈⲚⲈⲢⲎⲞⲨ ϦⲈⲚⲞⲨⲬⲞϨ ⲚⲦⲈⲞⲨⲀⲄⲀⲠⲎ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲂⲎⲞⲨⲒ ⲈⲚⲀⲚⲈⲨ.
25 ௨௫ சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும்.
ⲕ̅ⲉ̅ⲚⲦⲈⲚⲬⲰ ⲚⲤⲰⲚ ⲀⲚ ⲚⲦⲈⲚⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲈ ⲦⲔⲀϨⲤ ⲚⲦⲈϨⲀⲚⲞⲨⲞⲚ ⲦⲈ ⲀⲖⲖⲀ ⲈⲢⲈⲦⲈⲚϮⲚⲞⲘϮ ⲚϨⲞⲨⲞ ⲘⲀⲖⲖⲞⲚ ϨⲞⲤⲞⲚ ⲈⲢⲈⲦⲈⲚⲚⲀⲨ ϪⲈ ⲀⲨϦⲰⲚⲦ ⲚϪⲈⲠⲒⲈϨⲞⲞⲨ.
26 ௨௬ சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,
ⲕ̅ⲋ̅ⲀⲚϢⲀⲚⲈⲢⲚⲞⲂⲒ ⲄⲀⲢ ⲈⲚⲞⲨⲰϢ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲐⲢⲈⲚϬⲒ ⲘⲠⲤⲞⲨⲈⲚ ϮⲘⲈⲐⲘⲎⲒ ⲘⲘⲞⲚ ϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ϪⲈ ⲤⲰϪⲠ ⲈⲐⲂⲈ ϨⲀⲚⲚⲞⲂⲒ.
27 ௨௭ நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
ⲕ̅ⲍ̅ⲞⲨϪⲒⲚϪⲞⲨϢⲦ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈⲞⲨϨⲀⲠ ⲈϤⲞⲒ ⲚϨⲞϮ ⲚⲈⲘ ⲞⲨⲬⲞϨ ⲚⲦⲈⲞⲨⲬⲢⲰⲘ ⲈϤⲚⲀⲞⲨⲰⲘ ⲚⲤⲀⲚⲎ ⲈⲦϮ ⲞⲨⲂⲎϤ.
28 ௨௮ மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
ⲕ̅ⲏ̅ⲀⲢⲈϢⲀⲚ ⲞⲨⲀⲒ ϢⲈϢ ⲪⲚⲞⲘⲞⲤ ⲘⲘⲰⲨⲤⲎ ⲤⲀϬⲚⲈ ⲘⲈⲦϢⲈⲚϨⲎⲦ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲘⲈⲐⲢⲈ ⲂⲒⲈ ⲄϢⲀϤⲘⲞⲨ.
29 ௨௯ தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
ⲕ̅ⲑ̅ⲒⲈ ⲦⲈⲦⲈⲚⲘⲈⲨⲒ ϪⲈ ϤⲚⲀⲘⲠϢⲀ ⲚⲞⲨⲎⲢ ⲚⲦϨⲈⲘⲔⲞ ⲈⲨϨⲰⲞⲨ ⲚϨⲞⲨⲞ ⲚϪⲈⲪⲎ ⲈⲐⲚⲀϨⲰⲘⲒ ⲈϪⲈⲚ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲀϤⲬⲀ ⲠⲤⲚⲞϤ ⲚⲦⲈϮⲆⲒⲀⲐⲎⲔⲎ ⲚⲦⲞⲦϤ ϪⲈ ϤϬⲀϦⲈⲘ ⲪⲎ ⲈⲦⲀϤⲦⲞⲨⲂⲞ ⲚϨⲢⲎⲒ ⲚϦⲎⲦϤ ⲞⲨⲞϨ ⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲦⲈⲠⲒϨⲘⲞⲦ ⲀϤϢⲰϢϤ.
30 ௩0 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.
ⲗ̅ⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲄⲀⲢ ⲘⲪⲎ ⲈⲦⲀϤϪⲞⲤ ϪⲈ ⲠϬⲒⲘⲠⲒϢⲒϢ ⲪⲰⲒ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀⲚⲞⲔ ⲈⲐⲚⲀϮ ϢⲈⲂⲒⲰ ⲞⲨⲞϨ ⲠⲀⲖⲒⲚ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲀϮϨⲀⲠ ⲈⲠⲈϤⲖⲀⲞⲤ.
31 ௩௧ ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.
ⲗ̅ⲁ̅ⲞⲨⲈⲢϨⲞϮ ⲚϨⲞⲨⲞ ⲠⲈ ⲈⲢⲀⲞⲨⲰ ⲈϦⲢⲎⲒ ⲈⲚⲈⲚϪⲒϪ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲦⲞⲚϦ.
32 ௩௨ முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே.
ⲗ̅ⲃ̅ⲀⲢⲒⲪⲘⲈⲨⲒ ⲚⲚⲈⲦⲈⲚⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈϢⲞⲢⲠ ⲚⲀⲢⲈⲦⲈⲚϬⲒ ⲘⲪⲞⲨⲰⲒⲚⲒ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦⲞⲨ ⲈⲀⲦⲈⲦⲈⲚⲀⲘⲞⲚⲒ ⲚⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲚⲦⲈϨⲀⲚⲘⲔⲀⲨϨ.
33 ௩௩ நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.
ⲗ̅ⲅ̅ⲪⲀⲒ ⲘⲈⲚ ϪⲈ ϦⲈⲚϨⲀⲚϢⲰϢ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲞϪϨⲈϪ ⲈⲨⲈⲢⲐⲈⲀⲦⲢⲒⲌⲒⲚ ⲘⲘⲰⲦⲈⲚ ⲪⲀⲒ ⲆⲈ ϪⲈ ⲀⲢⲈⲦⲈⲚⲈⲢϢⲪⲎⲢ ⲚⲚⲎ ⲈⲐⲘⲞϢⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
34 ௩௪ நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.
ⲗ̅ⲇ̅ⲔⲈ ⲄⲀⲢ ⲀⲢⲈⲦⲈⲚϢⲈⲠⲘⲔⲀϨ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲦⲤⲞⲚϨ ⲞⲨⲞϨ ⲠϨⲰⲖⲈⲘ ⲚⲦⲈⲚⲈⲦⲈⲚϨⲨⲠⲀⲢⲬⲞⲚⲦⲀ ⲀⲢⲈⲦⲈⲚϢⲞⲠϤ ⲈⲢⲰⲦⲈⲚ ϦⲈⲚⲞⲨⲢⲀϢⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ϪⲈ ⲞⲨⲞⲚⲦⲰⲦⲈⲚ ⲘⲘⲀⲨ ⲚⲞⲨⲘⲈⲦⲢⲀⲘⲀⲞ ⲈⲤⲤⲞⲦⲠ ⲞⲨⲞϨ ⲈⲤⲚⲀⲞϨⲒ ϢⲀ ⲈⲂⲞⲖ.
35 ௩௫ ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள்.
ⲗ̅ⲉ̅ⲠⲈⲦⲈⲚⲞⲨⲰⲚϨ ⲞⲨⲚ ⲈⲂⲞⲖ ⲘⲠⲈⲢϨⲒⲦϤ ⲈⲂⲞⲖ ⲪⲀⲒ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚⲦⲀϤ ⲚⲞⲨⲚⲒϢϮ ⲚϢⲈⲂⲒⲈ ⲂⲈⲬⲈ ⲘⲘⲀⲨ.
36 ௩௬ நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.
ⲗ̅ⲋ̅ⲀⲢⲈⲦⲈⲚⲈⲢⲬⲢⲒⲀ ⲚⲞⲨϨⲨⲠⲞⲘⲞⲚⲎ ϨⲒⲚⲀ ⲀⲢⲈⲦⲈⲚϢⲀⲚⲒⲢⲒ ⲘⲪⲞⲨⲰϢ ⲘⲪⲚⲞⲨϮ ⲚⲦⲈⲦⲈⲚϬⲒ ⲘⲠⲒⲰϢ.
37 ௩௭ வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.
ⲗ̅ⲍ̅ⲈⲦⲒ ⲄⲀⲢ ⲔⲈⲔⲞⲨϪⲒ ϨⲞⲤⲞⲚ ϨⲞⲤⲞⲚ ϤⲚⲀⲒ ⲚϪⲈⲠⲈⲐⲚⲎⲞⲨ ⲞⲨⲞϨ ϤⲚⲀⲰⲤⲔ ⲀⲚ
38 ௩௮ விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார்.
ⲗ̅ⲏ̅ⲠⲒⲐⲘⲎⲒ ⲆⲈ ϤⲚⲀⲰⲚϦ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲀϤϢⲀⲚϨⲰⲠ ⲚⲚⲈ ⲦⲀⲮⲨⲬⲎ ϮⲘⲀϮ ⲚϦⲎⲦϤ.
39 ௩௯ நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
ⲗ̅ⲑ̅ⲀⲚⲞⲚ ⲆⲈ ⲀⲚⲞⲚ ⲚⲀⲞⲨϨⲰⲠ ⲀⲚ ⲚⲦⲈⲞⲨⲪⲰⲦ ⲈⲪⲀϨⲞⲨ ⲈⲨⲦⲀⲔⲞ ⲀⲖⲖⲀ ⲚⲦⲈⲞⲨⲚⲀϨϮ ⲈⲨⲦⲀⲚϦⲞ ⲚⲦⲈϮⲮⲨⲬⲎ.