< எபிரேயர் 1 >
1 ௧ முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன்,
पहिले को युग म परमेश्वर न बापदादों सी थोड़ो थोड़ो कर क् अऊर तरह तरह सी भविष्यवक्तावों को द्वारा बाते करी,
2 ௨ இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
यो आखरी दिनो म ओन हम सी बेटा को द्वारा बाते करी। जेक ओन पूरी चिजों को उत्तराधिकारी ठहरायो अऊर ओकोच द्वारा परमेश्वर न पूरी सृष्टि की रचना करी हय। (aiōn )
3 ௩ இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
ऊ बेटा परमेश्वर की महिमा को उजाड़ो अऊर ओको स्वरूप की पक्की छाप आय, अऊर सब चिजों ख अपनी सामर्थ को वचन सी सम्भालय हय। ऊ आदमी जाती को पापों ख माफी कर क् स्वर्ग म जाय क महामहिम को दायो तरफ जाय क बैठ गयो।
4 ௪ இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.
यो तरह बेटा ख स्वर्गदूतों सी महान बनायो गयो उच तरह जसो परमेश्वर न ओख स्वर्गदूतों सी उत्तम नाम दियो।
5 ௫ எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா?
कहालीकि परमेश्वर न कोयी भी स्वर्गदूतों सी असो नहीं कह्यो, “तय मोरो बेटा आय, अज तय मोरो बाप बन्यो हय” अऊर नहीं कोयी स्वर्गदूत सी कह्यो हय “मय तोरो बाप बनू अऊर तय मोरो बेटा होजो?”
6 ௬ மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
पर जब परमेश्वर ओको पहिले जनम्यो सन्तान ख जगत म भेजय हय, त ऊ कह्य हय, “परमेश्वर को सब स्वर्गदूत ओकी आराधना करे।”
7 ௭ தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
पर परमेश्वर स्वर्गदूतों को बारे म यो कह्य हय, “ऊ अपनो दूतों ख हवा, अऊर अपनो सेवकों ख धधकती आगी बनावय हय।”
8 ௮ குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
पर परमेश्वर बेटा को बारे म असो कह्य हय, “हे परमेश्वर, तोरो सिंहासन, हमेशा हमेशा रहेंन: अऊर तोरो राज्यदण्ड न्याय सी चलेंन अऊर तुम्हरो अपनो लोगों पर अधिकारदण्ड रहेंन। (aiōn )
9 ௯ நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
तय न जो सच्चायी हय ओको सी प्रेम करयो हय अऊर दुष्टता सी घृना करय हय; यो वजह परमेश्वर, तोरो परमेश्वर न खुशी को तेल सी तोरो अभिषेक करन को द्वारा संगियों सी बढ़ क चुन्यो।”
10 ௧0 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது;
वचन यो भी कह्य हय, “हे प्रभु, सुरूवात सी तय न धरती की नींव डाली, अऊर स्वर्ग तोरो हाथों की कारीगरी आय।
11 ௧௧ அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;
हि त नाश होय जायेंन, पर तय बन्यो रहजो; अऊर हि सब कपड़ा को जसो जिर्न होय जायेंन,
12 ௧௨ ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
अऊर तय उन्ख कोट को जसो लपेटजो, अऊर हि कपड़ा को जसो बदल जायेंन। पर तय वसोच रहजो अऊर तोरो जीवन को अन्त नहीं होयेंन।”
13 ௧௩ மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா?
अऊर स्वर्गदूतों म सी परमेश्वर न कोन्को सी कब कह्यो, “तय मोरो दायो तरफ बैठ, जब तक कि मय तोरो दुश्मनों ख तोरो पाय को खल्लो की चौकी नहीं बनाय देऊ?”
14 ௧௪ அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?
का यो स्वर्गदूत वा आत्मायें नोहोय? जो आत्मायें परमेश्वर की सेवा अऊर ओको द्वारा उद्धार पान वालो ख मदत करन लायी भेजी जावय हंय?