< கலாத்தியர் 5 >

1 ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.
ⲁ̅ϩⲛ̅ⲟⲩⲙⲛ̅ⲧⲣⲙ̅ϩⲉ ⲡⲉⲭ̅ⲥ̅ ⲁϥⲁⲁⲛ ⲛ̅ⲣⲙ̅ϩⲉ. ⲁϩⲉⲣⲁⲧⲧⲏⲩⲧⲛ̅ ϭⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲧⲙ̅ϣⲱⲡⲉ ⲟⲛ ϩⲁⲡⲛⲁϩⲃⲉϥ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧϩⲙ̅ϩⲁⲗ·
2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲃ̅ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲁⲛⲟⲕ ⲡⲁⲩⲗⲟⲥ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅. ϫⲉ ⲉⲧⲉⲧⲛ̅ϣⲁⲛⲥⲃ̅ⲃⲉⲧⲏⲩⲧⲛ̅ ⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ⲛⲁϯϩⲏⲩ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲗⲁⲁⲩ ⲁⲛ.
3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.
ⲅ̅ϯⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲇⲉ ⲟⲛ ⲛ̅ⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲉⲧⲥⲃ̅ⲃⲏⲩⲧ ϫⲉ ⲥⲉⲣⲟϥ ⲉⲣ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲧⲏⲣϥ̅.
4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.
ⲇ̅ⲁⲧⲉⲧⲛ̅ⲟⲩⲱⲥϥ̅ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ⲛⲁⲓ̈ ⲉⲧⲧⲙⲁⲉⲓⲟ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ. ⲁⲧⲉⲧⲛ̅ϩⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉϩⲙⲟⲧ.
5 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
ⲉ̅ⲁⲛⲟⲛ ⲅⲁⲣ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲛϭⲱϣⲧ̅ ⲉⲃⲟⲗ ϩⲏⲧⲥ̅ ⲛ̅ⲑⲉⲗⲡⲓⲥ ⲛ̅ⲧⲇⲓⲕⲁⲓⲟⲥⲩⲛⲏ.
6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.
ⲋ̅ϩⲙ̅ⲡⲉⲭ̅ⲥ̅ ⲅⲁⲣ ⲓ̅ⲥ̅ ⲟⲩⲇⲉ ⲙⲛ̅ⲥⲃ̅ⲃⲉ ϭⲙ̅ϭⲟⲙ. ⲟⲩⲇⲉ ⲙⲛ̅ⲧⲁⲧⲥⲃ̅ⲃⲉ. ⲁⲗⲗⲁ ⲟⲩⲡⲓⲥⲧⲓⲥ ⲧⲉ ⲉⲥⲉⲛⲉⲣⲅⲓ ϩⲓⲧⲛ̅ⲟⲩⲁⲅⲁⲡⲏ.
7 நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
ⲍ̅ⲛⲉⲧⲉⲧⲛ̅ⲡⲏⲧ ⲕⲁⲗⲱⲥ ⲡⲉ. ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥϯϫⲣⲟⲡ ⲛⲏⲧⲛ̅ ⲉⲧⲙ̅ⲡⲓⲑⲉ ⲉⲧⲙⲉ.
8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
ⲏ̅ⲡⲉⲓ̈ⲡⲓⲑⲉ ⲛ̅ⲟⲩⲉⲃⲟⲗ ⲁⲛ ⲡⲉ ϩⲙ̅ⲡⲉⲛⲧⲁϥⲧⲉϩⲙ̅ⲧⲏⲩⲧⲛ̅.
9 புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.
ⲑ̅ϣⲁⲣⲉⲟⲩⲕⲟⲩⲓ̈ ⲛ̅ⲑⲁⲃ ⲧⲣⲉⲡⲟⲩⲱϣⲙ̅ ⲧⲏⲣϥ̅ ϥⲓ.
10 ௧0 நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.
ⲓ̅ⲁⲛⲟⲕ ϯⲧⲏⲕ ⲛ̅ϩⲏⲧ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ϩⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ϫⲉ ⲛ̅ⲧⲉⲧⲛⲁⲙⲉⲉⲩⲉ ⲉϭⲉⲗⲁⲁⲩ ⲁⲛ. ⲡⲉⲧϣⲧⲟⲣⲧⲣ̅ ⲇⲉ ⲙ̅ⲙⲱⲧⲛ̅ ⲛⲁϥⲓⲡⲉⲕⲣⲓⲙⲁ ⲡⲉⲧⲉⲛ̅ⲧⲟϥ ⲡⲉ·
11 ௧௧ சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
ⲓ̅ⲁ̅ⲛⲉⲥⲛⲏⲩ ⲉϣϫⲉⲁⲛⲟⲕ ⲉⲉⲓⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙ̅ⲡⲥⲃ̅ⲃⲉ. ⲁϩⲣⲟⲓ̈ ⲟⲛ ⲥⲉⲇⲓⲱⲕⲉ ⲙ̅ⲙⲟⲉⲓ. ⲉⲓ̈ⲉ ⲁϥⲟⲩⲱⲥϥ̅ ⲛ̅ϭⲓⲡⲉⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⲙ̅ⲡⲉⲥ̅xⲟ̅ⲥ̅.
12 ௧௨ உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.
ⲓ̅ⲃ̅ϩⲁⲙⲟⲓ̈ ⲟⲛ ⲛⲉⲩⲛⲁϭⲱϫⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉⲧϣⲧⲟⲣⲧⲣ̅ ⲙ̅ⲙⲱⲧⲛ̅.
13 ௧௩ சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲅⲁⲣ ⲛ̅ⲧⲁⲩⲧⲉϩⲙ̅ⲧⲏⲩⲧⲛ̅ ⲉⲩⲙⲛ̅ⲧⲣⲙ̅ϩⲉ. ⲛⲉⲥⲛⲏⲩ ⲙⲟⲛⲟⲛ ⲧⲉⲛⲙⲛ̅ⲧⲣⲙ̅ϩⲉ ⲙ̅ⲡⲣ̅ⲧⲣⲉⲥϣⲱⲡⲉ ⲉⲩⲁⲫⲟⲣⲙⲏ ⲛ̅ⲧⲥⲁⲣⲝ̅. ⲁⲗⲗⲁ ϩⲓⲧⲛ̅ⲧⲁⲅⲁⲡⲏ ⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲁⲣⲓϩⲙ̅ϩⲁⲗ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲉⲣⲏⲩ.
14 ௧௪ உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
ⲓ̅ⲇ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲅⲁⲣ ⲧⲏⲣϥ̅ ⲛ̅ⲧⲁϥϫⲱⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩϣⲁϫⲉ ⲛ̅ⲟⲩⲱⲧ ϩⲛ̅ⲉⲕⲉⲙⲉⲣⲉⲡⲉⲑⲓⲧⲟⲩⲱⲕ ⲛ̅ⲧⲉⲕϩⲉ.
15 ௧௫ நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
ⲓ̅ⲉ̅ⲉϣϫⲉⲧⲉⲧⲛ̅ⲗⲱⲕⲥ̅ ⲇⲉ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲉⲣⲏⲩ. ⲁⲩⲱ ⲧⲉⲧⲛ̅ⲟⲩⲱⲙ. ϭⲱϣⲧ̅ ⲙⲏⲡⲟⲧⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲱϫⲛ̅ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲉⲣⲏⲩ·
16 ௧௬ பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.
ⲓ̅ⲋ̅ϯϫⲱ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲙⲟⲟϣⲉ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅. ⲁⲩⲱ ⲧⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ ⲛ̅ⲧⲥⲁⲣⲝ̅ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ϫⲟⲕⲥ̅ ⲉⲃⲟⲗ.
17 ௧௭ சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.
ⲓ̅ⲍ̅ⲧⲥⲁⲣⲝ̅ ⲅⲁⲣ ⲉⲡⲓⲑⲩⲙⲉⲓ ⲟⲩⲃⲉⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅. ⲁⲩⲱ ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲟⲩⲃⲉⲧⲥⲁⲣⲝ̅. ⲛⲁⲓ̈ ϭⲉ ⲥⲉϯ ⲟⲩⲃⲉⲛⲉⲩⲉⲣⲏⲩ. ϫⲉⲕⲁⲁⲥ ⲛⲉⲧⲉⲧⲛ̅ⲟⲩⲁϣⲟⲩ ⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲁⲁⲩ.
18 ௧௮ ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.
ⲓ̅ⲏ̅ⲉϣϫⲉⲧⲉⲧⲛ̅ⲙⲟⲟϣⲉ ⲇⲉ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲉⲓ̈ⲉ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ϣⲟⲟⲡ ⲁⲛ ϩⲁⲡⲛⲟⲙⲟⲥ.
19 ௧௯ சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
ⲓ̅ⲑ̅ⲥⲉⲟⲩⲟⲛϩ̅ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲛ̅ϭⲓⲛⲉϩⲃⲏⲩⲉ ⲛ̅ⲧⲥⲁⲣⲝ̅ ⲉⲧⲉⲛⲁⲓ̈ ⲛⲉ. ⲙ̅ⲡⲟⲣⲛⲓⲁ. ⲛ̅ϫⲱϩⲙ̅. ⲛ̅ⲥⲱⲱϥ.
20 ௨0 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
ⲕ̅ⲙ̅ⲙⲛ̅ⲧⲣⲉϥϣⲙ̅ϣⲉⲉⲓⲇⲱⲗⲟⲛ. ⲙ̅ⲙⲛ̅ⲧⲣⲉϥⲣ̅ⲡⲁϩⲣⲉ. ⲙ̅ⲙⲛ̅ⲧϫⲁϫⲉ. ⲛ̅ϯⲧⲱⲛ. ⲛ̅ⲕⲱϩ. ⲛ̅ϭⲱⲛⲧ̅ ⲙ̅ⲙⲛ̅ⲧⲣⲉϥϯⲧⲱⲛ. ⲙ̅ⲡⲱⲣϫ. ⲛ̅ϩⲁⲓⲣⲉⲥⲓⲥ.
21 ௨௧ பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲁ̅ⲛ̅ⲗⲁ. ⲛ̅ϯϩⲉ. ⲛ̅ϫⲏⲣ ⲙⲛ̅ⲛⲉⲧⲉⲓⲛⲉ ⲛ̅ⲛⲁⲓ̈. ⲛⲉϯϣⲣⲡ̅ϫⲱ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲛⲏⲧⲛ̅. ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲛⲧⲁⲓ̈ϣⲣⲡ̅ϫⲟⲟⲩ. ϫⲉ ⲛⲉⲧⲉⲓⲣⲉ ⲛ̅ⲧⲉⲓ̈ϩⲉ ⲛ̅ⲥⲉⲛⲁⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓ ⲁⲛ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ·
22 ௨௨ ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
ⲕ̅ⲃ̅ⲡⲕⲁⲣⲡⲟⲥ ⲇⲉ ⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅ ⲡⲉ ⲧⲁⲅⲁⲡⲏ. ⲡⲣⲁϣⲉ. ϯⲣⲏⲛⲏ. ⲧⲙⲛ̅ⲧϩⲁⲣϣ̅ϩⲏⲧ. ⲧⲙⲛ̅ⲧⲭⲣⲏⲥⲧⲟⲥ. ⲡⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ. ⲧⲡⲓⲥⲧⲓⲥ.
23 ௨௩ சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
ⲕ̅ⲅ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲙ̅ⲣⲁϣ. ⲧⲉⲅⲕⲣⲁⲧⲓⲁ. ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲉⲓ̈ⲙⲓⲛⲉ ⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ϯ ⲟⲩⲃⲏⲩ ⲁⲛ.
24 ௨௪ கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
ⲕ̅ⲇ̅ⲛⲁⲡⲉⲭ̅ⲥ̅ ⲇⲉ ⲓ̅ⲥ̅ ⲁⲩⲥ̅xⲟ̅ⲩ̅ ⲛ̅ⲧⲥⲁⲣⲝ̅ ⲙⲛ̅ⲙ̅ⲡⲁⲑⲟⲥ. ⲙⲛ̅ⲛⲉⲡⲓⲑⲩⲙⲓⲁ.
25 ௨௫ நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
ⲕ̅ⲉ̅ⲉϣϫⲉⲧⲛ̅ⲟⲛϩ̅ ϩⲙ̅ⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅. ⲙⲁⲣⲛ̅ⲁϩⲉ ⲟⲛ ⲉⲡⲉⲡ̅ⲛ̅ⲁ̅.
26 ௨௬ வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.
ⲕ̅ⲋ̅ⲙ̅ⲡⲣ̅ⲧⲣⲉⲛϣⲱⲡⲉ ⲛ̅ϣⲟⲩϣⲟⲩ. ⲉⲛⲡⲣⲟⲕⲁⲗⲉⲓ ⲛ̅ⲛⲉⲛⲉⲣⲏⲩ. ⲉⲛⲫⲑⲟⲛⲉⲓ ⲉⲛⲉⲛⲉⲣⲏⲩ.

< கலாத்தியர் 5 >