< எசேக்கியேல் 37 >

1 யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,
Була́ надо мною Господня рука, і Дух Госпо́дній ви́провадив мене, і спинив мене серед долини, а вона — повна кісто́к!
2 என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது.
І Він обвів мене біля них навко́ло, аж ось їх дуже багато на пове́рхні долини, і ось вони стали дуже сухі!
3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
І сказав Він мені: „Сину лю́дський, чи оживу́ть оці ко́сті?“А я відказав: „Господи Боже, — Ти знаєш!“
4 அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
І сказав Він мені: „Пророку́й про ці кості, та й скажеш до них: Сухі ко́сті, послухайте слова Господнього!
5 யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.
Так говорить Господь Бог до цих кісто́к: Ось Я введу́ у вас духа — і ви оживе́те!
6 நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
І дам на вас жи́ли, і ви́росте на вас тіло, і простягну́ на вас шкіру, і дам у вас духа, — і ви оживе́те. І пізна́єте ви, що Я — Госпо́дь!“
7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது.
І пророкував я, як наказано. І зня́вся шум, коли я пророкува́в, і ось гу́ркіт, а ко́сті зближа́лися, кістка до кістки своєї.
8 நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது.
І побачив я, аж ось на них жи́ли, і виросло тіло, і була натя́гнена на них шкіра зве́рху, та духа не було в них.
9 அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
І сказав Він мені: „Пророкуй до духа, пророкуй, сину лю́дський, та й скажеш до духа: Так говорить Господь Бог: Прилинь, духу, з чотирьох вітрі́в, і дихни́ на цих забитих, — і нехай оживу́ть!“
10 ௧0 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள்.
І я пророкував, як Він наказав був мені, — і ввійшов у них дух, і вони ожили́, і постава́ли на ноги свої, — ві́йсько дуже-дуже велике!
11 ௧௧ அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
І сказав Він мені: „Сину лю́дський, ці кості — вони ввесь Ізраїлів дім. Ось вони кажуть: Повисиха́ли наші кості, і заги́нула наша надія, нам кіне́ць!
12 ௧௨ ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன்.
Тому́ пророкуй та й скажеш до них: Так говорить Господь Бог: Ось Я повідчиня́ю ваші гроби́, і позво́джу вас із ваших гробі́в, мій наро́де, і введу́ вас до Ізраїлевої землі!
13 ௧௩ என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
І пізнаєте ви, що Я Госпо́дь, коли Я повідчиня́ю ваші гроби́, і коли позво́джу вас із ваших гробі́в, Мій наро́де!
14 ௧௪ என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
І дам Я в вас Свого Духа, — і ви оживе́те, і вміщу́ вас на вашій землі, і пізна́єте ви, що Я, Госпо́дь, сказав це й зробив, говорить Госпо́дь!“
15 ௧௫ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
І було́ мені слово Господнє таке:
16 ௧௬ மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் மக்களுக்கும் உரியது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் உரிய யோசேப்பின் கோலென்று எழுதி,
„А ти, сину лю́дський, візьми́ собі один кусок де́рева, і напиши на ньому: „Юді та синам Ізраїля, його дру́зям“. І візьми ще один кусок дерева, і напиши на ньому: „Йо́сипові дерево Єфрема та всьому домові Ізраїля, дру́зям його“.
17 ௧௭ அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இணையச்செய், அவைகள் உன்னுடைய கையில் ஒன்றாகும்.
І зблизь їх собі одне до о́дного на один кусок дерева, — і вони стануть за одне́ в твоїй руці!
18 ௧௮ இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால்,
І як скажуть до тебе сини твого наро́ду, говорячи: Чи не оголо́сиш нам, що́ це в те́бе таке?
19 ௧௯ நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என்னுடைய கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.
то скажи їм: Так говорить Госпо́дь Бог: Ось Я візьму́ дерево Йо́сипа, що в Єфремовій руці, та племе́на Ізраїлеві, його дру́зів, і дам на нього дерево Юди, і вчиню́ їх за одне дерево, — і стануть вони одним у Моїй руці!
20 ௨0 சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன்னுடைய கையில் இருக்கவேண்டும்.
І будуть ці дере́ва, що напишеш на них, у руці твоїй на їхніх оча́х.
21 ௨௧ நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து,
І скажи до них: Так говорить Госпо́дь Бог: Ось Я візьму́ Ізраїлевих синів з-посеред наро́дів, куди вони пішли, і позбира́ю їх знавко́ла, і введу́ їх до їхньої землі.
22 ௨௨ அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை.
І зроблю́ їх за один наро́д у краї на Ізраїлевих гора́х, і бу́де для всіх них один цар за царя, і не бу́дуть уже двома́ наро́дами, і не бу́дуть уже більш поді́лені на двоє царств.
23 ௨௩ அவர்கள் இனித் தங்களுடைய அசுத்தமான சிலைகளினாலும் தங்களுடைய அருவருப்புகளினாலும் தங்களுடைய எல்லா மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவம்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை விளக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன்.
І більш не будуть вони занечи́щуватися своїми бовва́нами й гидо́тами своїми та всіма́ своїми пере́ступами, спасу́ їх зо всіх їхніх осе́ль, де вони гріши́ли, й очи́щу їх. І будуть вони мені наро́дом, а Я буду їм Богом!
24 ௨௪ என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லோருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என்னுடைய நியாயங்களில் நடந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்து,
А раб Мій Давид буде царем над ними, і один па́стир буде для всіх них, і постановами Моїми вони будуть ходити, а устави Мої будуть стерегти́ й вико́нувати їх.
25 ௨௫ நான் என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்களுடைய தகப்பன்மார்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாக இருப்பார்.
І ося́дуть вони на тій землі, яку Я дав був Моєму рабові Яковові, що сиділи на ній їхні батьки́, і ося́дуть на ній вони та їхні сини, та сини синів їхніх аж навіки, а Мій раб Давид буде їм кня́зем навіки!
26 ௨௬ நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன்.
І складу́ з ними заповіта миру, — це буде вічний запові́т із ними. І зміцню́ їх, і намно́жу їх, і дам Свою святиню серед них на віки!
27 ௨௭ என்னுடைய இருப்பிடம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள்.
І буде місце Мого пробува́ння над ними, і Я буду їм Богом, а вони Мені бу́дуть наро́дом.
28 ௨௮ அப்படியே என்னுடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
І пізнають ці наро́ди, що Я — Госпо́дь, що освятив Ізраїля, коли буде Моя святиня серед них навіки!“

< எசேக்கியேல் 37 >