< எபேசியர் 6 >

1 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
హే బాలకాః, యూయం ప్రభుమ్ ఉద్దిశ్య పిత్రోరాజ్ఞాగ్రాహిణో భవత యతస్తత్ న్యాయ్యం|
2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும்,
త్వం నిజపితరం మాతరఞ్చ సమ్మన్యస్వేతి యో విధిః స ప్రతిజ్ఞాయుక్తః ప్రథమో విధిః
3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.
ఫలతస్తస్మాత్ తవ కల్యాణం దేశే చ దీర్ఘకాలమ్ ఆయు ర్భవిష్యతీతి|
4 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.
అపరం హే పితరః, యూయం స్వబాలకాన్ మా రోషయత కిన్తు ప్రభో ర్వినీత్యాదేశాభ్యాం తాన్ వినయత|
5 வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து;
హే దాసాః, యూయం ఖ్రీష్టమ్ ఉద్దిశ్య సభయాః కమ్పాన్వితాశ్చ భూత్వా సరలాన్తఃకరణైరైహికప్రభూనామ్ ఆజ్ఞాగ్రాహిణో భవత|
6 மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள்.
దృష్టిగోచరీయపరిచర్య్యయా మానుషేభ్యో రోచితుం మా యతధ్వం కిన్తు ఖ్రీష్టస్య దాసా ఇవ నివిష్టమనోభిరీశ్చరస్యేచ్ఛాం సాధయత|
7 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து,
మానవాన్ అనుద్దిశ్య ప్రభుమేవోద్దిశ్య సద్భావేన దాస్యకర్మ్మ కురుధ్వం|
8 மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.
దాసముక్తయో ర్యేన యత్ సత్కర్మ్మ క్రియతే తేన తస్య ఫలం ప్రభుతో లప్స్యత ఇతి జానీత చ|
9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
అపరం హే ప్రభవః, యుష్మాభి ర్భర్త్సనం విహాయ తాన్ ప్రతి న్యాయ్యాచరణం క్రియతాం యశ్చ కస్యాపి పక్షపాతం న కరోతి యుష్మాకమపి తాదృశ ఏకః ప్రభుః స్వర్గే విద్యత ఇతి జ్ఞాయతాం|
10 ௧0 கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள்.
అధికన్తు హే భ్రాతరః, యూయం ప్రభునా తస్య విక్రమయుక్తశక్త్యా చ బలవన్తో భవత|
11 ௧௧ நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.
యూయం యత్ శయతానశ్ఛలాని నివారయితుం శక్నుథ తదర్థమ్ ఈశ్వరీయసుసజ్జాం పరిధద్ధ్వం|
12 ௧௨ ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
యతః కేవలం రక్తమాంసాభ్యామ్ ఇతి నహి కిన్తు కర్తృత్వపరాక్రమయుక్తైస్తిమిరరాజ్యస్యేహలోకస్యాధిపతిభిః స్వర్గోద్భవై ర్దుష్టాత్మభిరేవ సార్ద్ధమ్ అస్మాభి ర్యుద్ధం క్రియతే| (aiōn g165)
13 ௧௩ எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
అతో హేతో ర్యూయం యయా సంకులే దినేఽవస్థాతుం సర్వ్వాణి పరాజిత్య దృఢాః స్థాతుఞ్చ శక్ష్యథ తామ్ ఈశ్వరీయసుసజ్జాం గృహ్లీత|
14 ௧௪ சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;
వస్తుతస్తు సత్యత్వేన శృఙ్ఖలేన కటిం బద్ధ్వా పుణ్యేన వర్మ్మణా వక్ష ఆచ్ఛాద్య
15 ௧௫ சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;
శాన్తేః సువార్త్తయా జాతమ్ ఉత్సాహం పాదుకాయుగలం పదే సమర్ప్య తిష్ఠత|
16 ௧௬ சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.
యేన చ దుష్టాత్మనోఽగ్నిబాణాన్ సర్వ్వాన్ నిర్వ్వాపయితుం శక్ష్యథ తాదృశం సర్వ్వాచ్ఛాదకం ఫలకం విశ్వాసం ధారయత|
17 ௧௭ இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
శిరస్త్రం పరిత్రాణమ్ ఆత్మనః ఖఙ్గఞ్చేశ్వరస్య వాక్యం ధారయత|
18 ௧௮ எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
సర్వ్వసమయే సర్వ్వయాచనేన సర్వ్వప్రార్థనేన చాత్మనా ప్రార్థనాం కురుధ్వం తదర్థం దృఢాకాఙ్క్షయా జాగ్రతః సర్వ్వేషాం పవిత్రలోకానాం కృతే సదా ప్రార్థనాం కురుధ్వం|
19 ௧௯ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,
అహఞ్చ యస్య సుసంవాదస్య శృఙ్ఖలబద్ధః ప్రచారకదూతోఽస్మి తమ్ ఉపయుక్తేనోత్సాహేన ప్రచారయితుం యథా శక్నుయాం
20 ௨0 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
తథా నిర్భయేన స్వరేణోత్సాహేన చ సుసంవాదస్య నిగూఢవాక్యప్రచారాయ వక్తృతా యత్ మహ్యం దీయతే తదర్థం మమాపి కృతే ప్రార్థనాం కురుధ్వం|
21 ௨௧ அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
అపరం మమ యావస్థాస్తి యచ్చ మయా క్రియతే తత్ సర్వ్వం యద్ యుష్మాభి ర్జ్ఞాయతే తదర్థం ప్రభునా ప్రియభ్రాతా విశ్వాస్యః పరిచారకశ్చ తుఖికో యుష్మాన్ తత్ జ్ఞాపయిష్యతి|
22 ௨௨ நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.
యూయం యద్ అస్మాకమ్ అవస్థాం జానీథ యుష్మాకం మనాంసి చ యత్ సాన్త్వనాం లభన్తే తదర్థమేవాహం యుష్మాకం సన్నిధిం తం ప్రేషితవాన|
23 ௨௩ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக.
అపరమ్ ఈశ్వరః ప్రభు ర్యీశుఖ్రీష్టశ్చ సర్వ్వేభ్యో భ్రాతృభ్యః శాన్తిం విశ్వాససహితం ప్రేమ చ దేయాత్|
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
యే కేచిత్ ప్రభౌ యీశుఖ్రీష్టేఽక్షయం ప్రేమ కుర్వ్వన్తి తాన్ ప్రతి ప్రసాదో భూయాత్| తథాస్తు|

< எபேசியர் 6 >