< எபேசியர் 5 >

1 எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
អតោ យូយំ ប្រិយពាលកា ឥវេឝ្វរស្យានុការិណោ ភវត,
2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
ខ្រីឞ្ដ ឥវ ប្រេមាចារំ កុរុត ច, យតះ សោៜស្មាសុ ប្រេម ក្ឫតវាន៑ អស្មាកំ វិនិមយេន ចាត្មនិវេទនំ ក្ឫត្វា គ្រាហ្យសុគន្ធាត៌្ហកម៑ ឧបហារំ ពលិញ្ចេឝ្វរាច ទត្តវាន៑។
3 மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.
កិន្តុ វេឝ្យាគមនំ សវ៌្វវិធាឝៅចក្រិយា លោភឝ្ចៃតេឞាម៑ ឧច្ចារណមបិ យុឞ្មាកំ មធ្យេ ន ភវតុ, ឯតទេវ បវិត្រលោកានាម៑ ឧចិតំ។
4 அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
អបរំ កុត្សិតាលាបះ ប្រលាបះ ឝ្លេឞោក្តិឝ្ច ន ភវតុ យត ឯតាន្យនុចិតានិ កិន្ត្វីឝ្វរស្យ ធន្យវាទោ ភវតុ។
5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
វេឝ្យាគាម្យឝៅចាចារី ទេវបូជក ឥវ គណ្យោ លោភី ចៃតេឞាំ កោឞិ ខ្រីឞ្ដស្យ រាជ្យេៜរ្ថត ឦឝ្វរស្យ រាជ្យេ កមប្យធិការំ ន ប្រាប្ស្យតីតិ យុឞ្មាភិះ សម្យក៑ ជ្ញាយតាំ។
6 இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
អនត៌្ហកវាក្យេន កោៜបិ យុឞ្មាន៑ ន វញ្ចយតុ យតស្តាទ្ឫគាចារហេតោរនាជ្ញាគ្រាហិឞុ លោកេឞ្វីឝ្វរស្យ កោបោ វត៌្តតេ។
7 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.
តស្មាទ៑ យូយំ តៃះ សហភាគិនោ ន ភវត។
8 முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
បូវ៌្វំ យូយម៑ អន្ធការស្វរូបា អាធ្វំ កិន្ត្វិទានីំ ប្រភុនា ទីប្តិស្វរូបា ភវថ តស្មាទ៑ ទីប្តេះ សន្តានា ឥវ សមាចរត។
9 வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
ទីប្តេ រ្យត៑ ផលំ តត៑ សវ៌្វវិធហិតៃឞិតាយាំ ធម៌្មេ សត្យាលាបេ ច ប្រកាឝតេ។
10 ௧0 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
ប្រភវេ យទ៑ រោចតេ តត៑ បរីក្ឞធ្វំ។
11 ௧௧ கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
យូយំ តិមិរស្យ វិផលកម៌្មណាម៑ អំឝិនោ ន ភូត្វា តេឞាំ ទោឞិត្វំ ប្រកាឝយត។
12 ௧௨ அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.
យតស្តេ លោកា រហមិ យទ៑ យទ៑ អាចរន្តិ តទុច្ចារណម៑ អបិ លជ្ជាជនកំ។
13 ௧௩ அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.
យតោ ទីប្ត្យា យទ៑ យត៑ ប្រកាឝ្យតេ តត៑ តយា ចកាស្យតេ យច្ច ចកាស្តិ តទ៑ ទីប្តិស្វរូបំ ភវតិ។
14 ௧௪ எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.
ឯតត្ការណាទ៑ ឧក្តម៑ អាស្តេ, "ហេ និទ្រិត ប្រពុធ្យស្វ ម្ឫតេភ្យឝ្ចោត្ថិតិំ កុរុ។ តត្ក្ឫតេ សូយ៌្យវត៑ ខ្រីឞ្ដះ ស្វយំ ត្វាំ ទ្យោតយិឞ្យតិ។ "
15 ௧௫ எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,
អតះ សាវធានា ភវត, អជ្ញានា ឥវ មាចរត កិន្តុ ជ្ញានិន ឥវ សតក៌ម៑ អាចរត។
16 ௧௬ நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
សមយំ ពហុមូល្យំ គណយធ្វំ យតះ កាលា អភទ្រាះ។
17 ௧௭ எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
តស្មាទ៑ យូយម៑ អជ្ញានា ន ភវត កិន្តុ ប្រភោរភិមតំ កិំ តទវគតា ភវត។
18 ௧௮ பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;
សវ៌្វនាឝជនកេន សុរាបានេន មត្តា មា ភវត កិន្ត្វាត្មនា បូយ៌្យធ្វំ។
19 ௧௯ சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
អបរំ គីតៃ រ្គានៃះ បារមាត៌្ហិកកីត៌្តនៃឝ្ច បរស្បរម៑ អាលបន្តោ មនសា សាទ៌្ធំ ប្រភុម៑ ឧទ្ទិឝ្យ គាយត វាទយត ច។
20 ௨0 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
សវ៌្វទា សវ៌្វវិឞយេៜស្មត្ប្រភោ យីឝោះ ខ្រីឞ្ដស្យ នាម្នា តាតម៑ ឦឝ្វរំ ធន្យំ វទត។
21 ௨௧ தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
យូយម៑ ឦឝ្វរាទ៑ ភីតាះ សន្ត អន្យេៜបរេឞាំ វឝីភូតា ភវត។
22 ௨௨ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
ហេ យោឞិតះ, យូយំ យថា ប្រភោស្តថា ស្វស្វស្វាមិនោ វឝង្គតា ភវត។
23 ௨௩ கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
យតះ ខ្រីឞ្ដោ យទ្វត៑ សមិតេ រ្មូទ៌្ធា ឝរីរស្យ ត្រាតា ច ភវតិ តទ្វត៑ ស្វាមី យោឞិតោ មូទ៌្ធា។
24 ௨௪ எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
អតះ សមិតិ រ្យទ្វត៑ ខ្រីឞ្ដស្យ វឝីភូតា តទ្វទ៑ យោឞិទ្ភិរបិ ស្វស្វស្វាមិនោ វឝតា ស្វីកត៌្តវ្យា។
25 ௨௫ கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,
អបរញ្ច ហេ បុរុឞាះ, យូយំ ខ្រីឞ្ដ ឥវ ស្វស្វយោឞិត្សុ ប្រីយធ្វំ។
26 ௨௬ தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
ស ខ្រីឞ្ដោៜបិ សមិតៅ ប្រីតវាន៑ តស្យាះ ក្ឫតេ ច ស្វប្រាណាន៑ ត្យក្តវាន៑ យតះ ស វាក្យេ ជលមជ្ជនេន តាំ បរិឞ្ក្ឫត្យ បាវយិតុម្
27 ௨௭ கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
អបរំ តិលកវល្យាទិវិហីនាំ បវិត្រាំ និឞ្កលង្កាញ្ច តាំ សមិតិំ តេជស្វិនីំ ក្ឫត្វា ស្វហស្តេ សមប៌យិតុញ្ចាភិលឞិតវាន៑។
28 ௨௮ அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
តស្មាត៑ ស្វតនុវត៑ ស្វយោឞិតិ ប្រេមករណំ បុរុឞស្យោចិតំ, យេន ស្វយោឞិតិ ប្រេម ក្រិយតេ តេនាត្មប្រេម ក្រិយតេ។
29 ௨௯ தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
កោៜបិ កទាបិ ន ស្វកីយាំ តនុម៑ ឫតីយិតវាន៑ កិន្តុ សវ៌្វេ តាំ វិភ្រតិ បុឞ្ណន្តិ ច។ ខ្រីឞ្ដោៜបិ សមិតិំ ប្រតិ តទេវ ករោតិ,
30 ௩0 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.
យតោ វយំ តស្យ ឝរីរស្យាង្គានិ មាំសាស្ថីនិ ច ភវាមះ។
31 ௩௧ இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
ឯតទត៌្ហំ មានវះ ស្វមាតាបិតរោ បរិត្យជ្យ ស្វភាយ៌្យាយាម៑ អាសំក្ឞ្យតិ តៅ ទ្វៅ ជនាវេកាង្គៅ ភវិឞ្យតះ។
32 ௩௨ இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
ឯតន្និគូឍវាក្យំ គុរុតរំ មយា ច ខ្រីឞ្ដសមិតី អធិ តទ៑ ឧច្យតេ។
33 ௩௩ எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
អតឯវ យុឞ្មាកម៑ ឯកៃកោ ជន អាត្មវត៑ ស្វយោឞិតិ ប្រីយតាំ ភាយ៌្យាបិ ស្វាមិនំ សមាទត៌្តុំ យតតាំ។

< எபேசியர் 5 >