< எபேசியர் 5 >
1 ௧ எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
ⲁ̅ϢⲰⲠⲒ ⲞⲨⲚ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲚⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚϢⲎⲢⲒ ⲘⲘⲈⲚⲢⲒⲦ.
2 ௨ கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
ⲃ̅ⲞⲨⲞϨ ⲘⲞϢⲒ ϦⲈⲚⲞⲨⲀⲄⲀⲠⲎ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲞⲚ ⲈⲦⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲘⲘⲰⲦⲈⲚ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲎⲒϤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲚⲞⲨⲠⲢⲞⲤⲪⲞⲢⲀ ⲚⲈⲘ ⲞⲨϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲈⲨⲤⲐⲞⲒ ⲚⲤⲐⲞⲒⲚⲞⲨϤⲒ.
3 ௩ மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.
ⲅ̅ϮⲠⲞⲢⲚⲒⲀ ⲆⲈ ⲚⲈⲘ ϬⲰϦⲈⲘ ⲚⲒⲂⲈⲚ ⲒⲈ ⲞⲨⲘⲈⲦⲢⲈϤϬⲒⲚϪⲞⲚⲤ ⲘⲠⲈⲚⲐⲢⲞⲨϪⲈ ⲠⲈⲤⲢⲀⲚ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤⲈⲘⲠϢⲀ ⲚⲚⲒⲀⲄⲒⲞⲤ.
4 ௪ அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
ⲇ̅ⲚⲒⲤⲀϪⲒ ⲈⲦϢⲞⲨⲒⲦ ⲚⲈⲘ ⲚⲒⲤⲀϪⲒ ⲘⲘⲈⲦⲤⲞϪ ⲒⲈ ϮⲘⲈⲦⲈⲨⲦⲢⲀⲠⲈⲖⲞⲤ ⲚⲀⲒ ⲈⲦⲤⲈⲘⲠϢⲀ ⲚⲀⲒⲦⲞⲨ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲘⲀⲖⲖⲞⲚ ⲞⲨϢⲈⲠϨⲘⲞⲦ.
5 ௫ விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
ⲉ̅ⲪⲀⲒ ⲄⲀⲢ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲘⲒ ⲈⲢⲞϤ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞϤ ϪⲈ ⲠⲞⲢⲚⲞⲤ ⲚⲒⲂⲈⲚ ⲒⲈ ⲀⲔⲀⲐⲀⲢⲦⲞⲤ ⲚⲒⲂⲈⲚ ⲒⲈ ⲢⲈϤϬⲒⲚϪⲞⲚⲤ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈ ϮⲘⲈⲦϢⲀⲘϢⲈ ⲒⲆⲰⲖⲞⲚ ⲦⲈ ⲘⲘⲞⲚⲦⲈϤ ⲔⲖⲎ ⲢⲞⲚⲞⲘⲒⲀ ⲘⲘⲀⲨ ϦⲈⲚϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲈⲘ ⲪⲚⲞⲨϮ.
6 ௬ இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
ⲋ̅ⲘⲠⲈⲚⲐⲢⲈ ϨⲖⲒ ⲈⲢϨⲀⲖ ⲘⲘⲰⲦⲈⲚ ϦⲈⲚϨⲀⲚⲤⲀϪⲒ ⲈⲨϢⲞⲨⲒⲦ ⲈⲐⲂⲈ ⲚⲀⲒ ⲄⲀⲢ ϤⲚⲎⲞⲨ ⲚϪⲈⲠⲒϪⲰⲚⲦ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲚⲒϢⲎⲢⲒ ⲚⲦⲈϮⲘⲈⲦⲀⲦⲐⲰⲦ ⲚϨⲎⲦ.
7 ௭ அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.
ⲍ̅ⲘⲠⲈⲢϢⲰⲠⲒ ⲞⲨⲚ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚϢⲪⲎⲢ ⲈⲢⲰⲞⲨ.
8 ௮ முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
ⲏ̅ⲚⲀⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲄⲀⲢ ⲚⲬⲀⲔⲒ ⲚⲞⲨⲤⲎⲞⲨ ϮⲚⲞⲨ ⲆⲈ ⲞⲨⲞⲨⲰⲒⲚⲒ ϦⲈⲚⲠϬⲞⲒⲤ ⲘⲞϢⲒ ϨⲰⲤ ϨⲀⲚϢⲎⲢⲒ ⲚⲦⲈⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ.
9 ௯ வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
ⲑ̅ⲠⲞⲨⲦⲀϨ ⲄⲀⲢ ⲚⲦⲈⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ⲀϤⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲠⲈⲐⲚⲀⲚⲈϤ ⲚⲒⲂⲈⲚ ⲚⲈⲘ ⲞⲨⲆⲒⲔⲈⲞⲤⲨⲚⲎ ⲚⲈⲘ ⲞⲨⲘⲈⲐⲘⲎⲒ.
10 ௧0 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
ⲓ̅ⲈⲢⲈⲦⲈⲚⲈⲢⲆⲞⲔⲒⲘⲀⲌⲒⲚ ϪⲈ ⲞⲨ ⲠⲈⲐⲢⲀⲚⲀϤ ⲘⲠϬⲞⲒⲤ.
11 ௧௧ கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
ⲓ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢⲈⲢϢⲪⲎⲢ ⲈⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲀⲦⲞⲨⲦⲀϨ ⲚⲦⲈⲠⲬⲀⲔⲒ ⲘⲀⲖⲖⲞⲚ ⲆⲈ ⲞⲨⲞϨ ⲤⲞϨⲒ.
12 ௧௨ அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.
ⲓ̅ⲃ̅ⲚⲈⲦⲞⲨⲢⲀ ⲘⲘⲰⲞⲨ ⲄⲀⲢ ⲚⲬⲰⲠ ⲞⲨϢⲒⲠⲒ ⲠⲈ ⲈⲈⲢⲠⲔⲈϪⲞⲦⲞⲨ.
13 ௧௩ அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.
ⲓ̅ⲅ̅ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈϢⲀⲢⲈ ⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ⲤⲀϨⲰⲞⲨ ϢⲀⲨⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ϨⲰⲂ ⲄⲀⲢ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲞⲨⲞⲚϨ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞⲨⲰⲒⲚⲒ ⲠⲈ.
14 ௧௪ எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.
ⲓ̅ⲇ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲦⲰⲚⲔ ⲪⲎ ⲈⲦⲈⲚⲔⲞⲦ ⲞⲨⲞϨ ⲞϨⲒ ⲈⲢⲀⲦⲔ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲢⲞⲔ.
15 ௧௫ எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,
ⲓ̅ⲉ̅ⲀⲚⲀⲨ ⲞⲨⲚ ⲀⲔⲢⲒⲂⲰⲤ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ϪⲈ ⲈⲢⲈⲦⲈⲚⲘⲞϢⲒ ⲚⲀϢ ⲚⲢⲎϮ ⲘⲪⲢⲎϮ ⲀⲚ ⲚϨⲀⲚⲀⲦⲤⲂⲰ ⲀⲖⲖⲀ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲤⲀⲂⲈⲨ.
16 ௧௬ நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ⲓ̅ⲋ̅ⲈⲢⲈⲦⲈⲚϢⲰⲠ ⲘⲠⲒⲤⲎⲞⲨ ϪⲈ ⲚⲒⲈϨⲞⲞⲨ ⲤⲈϨⲰⲞⲨ.
17 ௧௭ எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
ⲓ̅ⲍ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲘⲠⲈⲢϢⲰⲠⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚⲀⲦϨⲎ ⲦⲀⲖⲖⲀ ⲔⲀϮ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲪⲞⲨⲰϢ ⲘⲪⲚⲞⲨϮ.
18 ௧௮ பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;
ⲓ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢⲐⲒϦⲒ ϦⲈⲚⲠⲎⲢⲠ ⲪⲎ ⲈⲦⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲘⲈⲦⲀⲦⲞⲨϪⲀⲒ ϢⲞⲠ ⲚϦⲎⲦϤ ⲀⲖⲖⲀ ϢⲰⲠⲒ ⲈⲢⲈⲦⲈⲚϪⲎⲔ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀ.
19 ௧௯ சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
ⲓ̅ⲑ̅ⲈⲢⲈⲦⲈⲚⲤⲀϪⲒ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲚϨⲀⲚⲮⲀⲖⲘⲞⲤ ⲚⲈⲘ ϨⲀⲚⲤⲘⲞⲨ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲰⲆⲎ ⲘⲠⲚⲀⲦⲒⲔⲞⲚ ⲈⲢⲈⲦⲈⲚϨⲰⲤ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲢⲮⲀⲖⲒⲚ ⲘⲠϬⲞⲒⲤ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚϨⲎⲦ.
20 ௨0 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
ⲕ̅ⲈⲢⲈⲦⲈⲚϢⲈⲠϨⲘⲞⲦ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ϦⲈⲚⲪⲢⲀⲚ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲈⲘ ⲪⲚⲞⲨϮ ⲪⲒⲰⲦ
21 ௨௧ தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
ⲕ̅ⲁ̅ⲈⲢⲈⲦⲈⲚϬⲚⲞ ⲚϪⲰⲦⲈⲚ ⲚⲚⲈⲦⲈⲚⲈⲢⲎⲞⲨ ϦⲈⲚϮϨⲞϮ ⲚⲦⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
22 ௨௨ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
ⲕ̅ⲃ̅ⲚⲒϨⲒⲞⲘⲒ ⲘⲀⲢⲞⲨϬⲚⲈϪⲰⲞⲨ ⲚⲚⲞⲨϨⲀⲒ ⲘⲪⲢⲎϮ ⲘⲠϬⲞⲒⲤ.
23 ௨௩ கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
ⲕ̅ⲅ̅ϪⲈ ⲠⲒⲢⲰⲘⲒ ⲦⲀⲪⲈ ⲚϮⲤϨⲒⲘⲒ ⲠⲈ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲦⲈ ⲦⲀⲪⲈ ⲚϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ⲦⲈ ⲚⲐⲞϤ ⲠⲈ ⲠⲤⲰⲦⲎⲢ ⲘⲠⲒⲤⲰⲘⲀ.
24 ௨௪ எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
ⲕ̅ⲇ̅ⲀⲖⲖⲀ ⲘⲪⲢⲎϮ ⲈϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ϬⲚⲞ ⲚϪⲰⲤ ⲘⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲀⲒⲢⲎϮ ϨⲰⲞⲨ ⲚⲒϨⲒⲞⲘⲒ ⲘⲀⲢⲞⲨϬ ⲚⲈϪⲰⲞⲨ ⲚⲚⲞⲨϨⲀⲒ ϦⲈⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ.
25 ௨௫ கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,
ⲕ̅ⲉ̅ⲚⲒⲢⲰⲘⲒ ⲀⲢⲒⲀⲄⲀⲠⲀⲚ ⲚⲚⲈⲦⲈⲚϨⲒⲞⲘⲒ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲚϮⲈⲔⲔⲖⲎ ⲤⲒⲀ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲎⲒϤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲤ
26 ௨௬ தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
ⲕ̅ⲋ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲦⲞⲨⲂⲞⲤ ⲈⲀϤⲦⲞⲨⲂⲞⲤ ϦⲈⲚⲠⲒⲰⲘⲤ ⲚⲦⲈⲠⲒⲘⲰⲞⲨ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲠⲤⲀϪⲒ.
27 ௨௭ கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
ⲕ̅ⲍ̅ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲦⲀϨⲈ ϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ⲚⲀϤ ⲈⲢⲀⲦⲤ ⲈⲤϦⲈⲚ ⲞⲨⲰⲞⲨ ⲘⲘⲞⲚ ⲀϬⲚⲒ ⲚϦⲎⲦⲤ ⲒⲈ ⲐⲰⲖⲈⲂ ⲒⲈ ⲚⲬⲀⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲀⲒ ⲀⲖⲖⲀ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲤϢⲰⲠⲒ ⲈⲤⲞⲨⲀⲂ ⲞⲨⲞϨ ⲈⲤⲞⲒ ⲚⲀⲦⲐⲰⲖⲈⲂ.
28 ௨௮ அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
ⲕ̅ⲏ̅ⲠⲀⲒⲢⲎϮ ϨⲰⲞⲨ ⲚⲒⲢⲰⲘⲒ ⲤⲈⲘⲠϢⲀ ⲚⲦⲞⲨⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲚⲚⲞⲨϨⲒⲞⲘⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲞⲨⲤⲰⲘⲀ ⲪⲎ ⲄⲀⲢ ⲈⲦⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲚⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲀϤⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲘⲘⲞϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ.
29 ௨௯ தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
ⲕ̅ⲑ̅ⲘⲠⲈ ϨⲖⲒ ⲄⲀⲢ ⲘⲈⲤⲦⲈ ⲦⲈϤⲤⲀⲢⲜ ⲈⲚⲈϨ ⲀⲖⲖⲀ ϢⲀϤϢⲀⲚⲞⲨϢⲤ ⲞⲨⲞϨ ϢⲀϤⲈⲢⲐⲀⲖⲠⲒⲚ ⲘⲘⲞⲤ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ϨⲰϤ ⲘⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲈⲦⲀϤⲒⲢⲒ ⲚϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ.
30 ௩0 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.
ⲗ̅ϪⲈ ⲀⲚⲞⲚ ϨⲀⲚⲘⲈⲖⲞⲤ ⲚⲦⲈⲠⲈϤⲤⲰⲘⲀ.
31 ௩௧ இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
ⲗ̅ⲁ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲈⲢⲈ ⲠⲒⲢⲰⲘⲒ ⲬⲀ ⲠⲈϤⲒⲰⲦ ⲚⲈⲘ ⲦⲈϤⲘⲀⲨ ⲚⲤⲰϤ ⲞⲨⲞϨ ⲈϤⲈⲦⲞⲘϤ ⲈⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲈⲨⲈϢⲰⲠⲒ ⲘⲠⲂ ⲈⲨⲤⲀⲢⲜ ⲚⲞⲨⲰⲦ
32 ௩௨ இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
ⲗ̅ⲃ̅ⲠⲀⲒⲘⲨⲤⲦⲎⲢⲒⲞⲚ ⲞⲨⲚⲒϢϮ ⲠⲈ ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲈⲘ ϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ.
33 ௩௩ எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
ⲗ̅ⲅ̅ⲠⲖⲎⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ⲔⲀⲦⲀ ⲪⲞⲨⲀⲒ ⲪⲞⲨⲀⲒ ⲘⲘⲰⲦⲈⲚ ⲘⲀⲢⲈϤⲈⲢⲀⲄⲀⲠⲀⲚ ⲚⲦⲈϤⲤϨⲒⲘⲒ ⲘⲠⲈϤⲢⲎϮ ϮⲤϨⲒⲘⲒ ⲆⲈ ϨⲰⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲤⲈⲢϨⲞϮ ϦⲀⲦϨⲎ ⲘⲠⲈⲤϨⲀⲒ.