< எபேசியர் 4 >
1 ௧ எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,
Ime wa mina he nitro nitu Baci, mibreyi duyi zren ndindi me nitu kon uyostron mbi'a.
2 ௨ மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
Me breyi duyi zren ni katu grji nitie sensren, vusron, nikpa kpa'mbi ny'me.
3 ௩ சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.
Nghonyu ndi ndu katu kabrumbi u brji tsratsra wa'a loyi nji ni si maa
4 ௪ உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;
Ikpa riri, ni brji tsratsra riri, nawa bana yoyi ni yosron riri'a.
5 ௫ ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
Baci riri kpa ny'me riri ni Batisma riri.
6 ௬ எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.
Ni Brji tsratsra riri, ni tiembu wawuu; wawuuyi he nimi wawuu.
7 ௭ கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
Ko nha kpa zizima ni gon u nu Kristi nu ta.
8 ௮ ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
Nasi'a tre ndi wa hon he ni mi shu'a a ji bi ya nimiya, da nu inu (gifts) ni ndi ba.
9 ௯ ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?
Ange he nji, “A ho?” ba si tre ndi a ghji he ni juju meme?
10 ௧0 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார்.
Wawu wa'a ghji wawuyi a hon he ni shu.
11 ௧௧ மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும்,
Baci anu inu (baye baye) na wa; manzani, anabawa bi bla tre rhji, bi khba nibi tsro.
12 ௧௨ பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும்,
A nu ndu yi du bi hu Rhji tie mgbe mgble da me kpa Kristi.
13 ௧௩ அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
A tie nawa dadu bi hu ma khi mgbamgban ni tre ma da na ka tie mrye wa ba kaba rji'a na, bana ka tre Baci cuwo na, itre Rrhji ni shu bawo ni sron ni minde Kristi
14 ௧௪ நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,
A he nawa ndi du ndjiori na katatie mhri ko nghu nghu wa nifu ta, ko tro memema ni tsro uche na.
15 ௧௫ அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.
Hla tre jaji ni son, ki sen ni gon gbugbuu ni mi ma wa a hi tu'a kristi.
16 ௧௬ அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
Kristi a me kpa'a biwa ba kpa y'me. Ikpa kabi ni nghma nghma ma, da du kpa me kpama ni mi son.
17 ௧௭ எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள்.
Mi nuyi mrye ni mi nde Baci, nala son bibi son wu bitsri wa ba son meme son wadi a hama ni kpe ndi ndia.
18 ௧௮ அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;
Ba son ni bwu hama ni mrye ndi ndi don ban to kon rji na nitu gbe hrihri sron.
19 ௧௯ உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
Bana klu shon na, ba yo tumba nitie kpe bi memema.
20 ௨0 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
Ana toki ba tsro ba ndu ndindi u Baci'a na.
21 ௨௧ இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
Mi ban ndi biwo ni tumaye, ndi ba tsroyi ni tuma, ura jaji tre he nimi Yesu.
22 ௨௨ அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு,
Ba troyi ndi duyi kakon meme ma u sen cuwa ndi ka meme kpi u cice nrji taga, ahi cice ndi'a tie meme nitu meme bran shishi ma.
23 ௨௩ உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி,
Ka meme ndi taga ni duba kayi tie sa nimi brji u sron mbi.
24 ௨௪ உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.
ndi sru ndi sa wa ba tie wu na bibi kpa Baci wa w haina ni latre ni son ndi ndi.
25 ௨௫ அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.
Kace cuwo no hla tre ndindima nitu vayime don ki rji ni kpa riri.
26 ௨௬ நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;
Tierafu ndi na latre na.
27 ௨௭ பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.
Na nu shetan kon na.
28 ௨௮ திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.
Indi wa ni ybi'a na ybi gana. ka ybi cuwo nitiendu ndi ndi ma ni fe kpe wa ani zobi wa bana heri mgbe mgble na.
29 ௨௯ கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள்.
Du tre memema rhju ni nyu bina, du tre ndindi ma rhju wa ari zo biwa bawo'a.
30 ௩0 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.
Na kpa sron brhji tsra tsra urhji tie meme na, ni tumayi ba hrayi gbyen vi u gbu j'bu.
31 ௩௧ எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும்.
Ka gbe rjirji dri, itse, infu, ivi, kpa tsri (imren) ni kpi bi meme ma wawuu.
32 ௩௨ ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
To tie ni kpambi, ni heni losron, wruhle nni kpambi nawa Rhji ni mi krisiti wruhle nitawu'a.