< கொலோசெயர் 1 >
1 ௧ தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
১ঈশ্ৱরস্যেচ্ছযা যীশুখ্রীষ্টস্য প্রেরিতঃ পৌলস্তীমথিযো ভ্রাতা চ কলসীনগরস্থান্ পৱিত্রান্ ৱিশ্ৱস্তান্ খ্রীষ্টাশ্রিতভ্রাতৃন্ প্রতি পত্রং লিখতঃ|
2 ௨ கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
২অস্মাকং তাত ঈশ্ৱরঃ প্রভু র্যীশুখ্রীষ্টশ্চ যুষ্মান্ প্রতি প্রসাদং শান্তিঞ্চ ক্রিযাস্তাং|
3 ௩ கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
৩খ্রীষ্টে যীশৌ যুষ্মাকং ৱিশ্ৱাসস্য সর্ৱ্ৱান্ পৱিত্রলোকান্ প্রতি প্রেম্নশ্চ ৱার্ত্তাং শ্রুৎৱা
4 ௪ பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
৪ৱযং সদা যুষ্মদর্থং প্রার্থনাং কুর্ৱ্ৱন্তঃ স্ৱর্গে নিহিতাযা যুষ্মাকং ভাৱিসম্পদঃ কারণাৎ স্ৱকীযপ্রভো র্যীশুখ্রীষ্টস্য তাতম্ ঈশ্ৱরং ধন্যং ৱদামঃ|
5 ௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
৫যূযং তস্যা ভাৱিসম্পদো ৱার্ত্তাং যযা সুসংৱাদরূপিণ্যা সত্যৱাণ্যা জ্ঞাপিতাঃ
6 ௬ அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
৬সা যদ্ৱৎ কৃস্নং জগদ্ অভিগচ্ছতি তদ্ৱদ্ যুষ্মান্ অপ্যভ্যগমৎ, যূযঞ্চ যদ্ দিনম্ আরভ্যেশ্ৱরস্যানুগ্রহস্য ৱার্ত্তাং শ্রুৎৱা সত্যরূপেণ জ্ঞাতৱন্তস্তদারভ্য যুষ্মাকং মধ্যেঽপি ফলতি ৱর্দ্ধতে চ|
7 ௭ அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
৭অস্মাকং প্রিযঃ সহদাসো যুষ্মাকং কৃতে চ খ্রীষ্টস্য ৱিশ্ৱস্তপরিচারকো য ইপফ্রাস্তদ্ ৱাক্যং
8 ௮ ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
৮যুষ্মান্ আদিষ্টৱান্ স এৱাস্মান্ আত্মনা জনিতং যুষ্মাকং প্রেম জ্ঞাপিতৱান্|
9 ௯ இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
৯ৱযং যদ্ দিনম্ আরভ্য তাং ৱার্ত্তাং শ্রুতৱন্তস্তদারভ্য নিরন্তরং যুষ্মাকং কৃতে প্রার্থনাং কুর্ম্মঃ ফলতো যূযং যৎ পূর্ণাভ্যাম্ আত্মিকজ্ঞানৱুদ্ধিভ্যাম্ ঈশ্ৱরস্যাভিতমং সম্পূর্ণরূপেণাৱগচ্ছেত,
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
১০প্রভো র্যোগ্যং সর্ৱ্ৱথা সন্তোষজনকঞ্চাচারং কুর্য্যাতার্থত ঈশ্ৱরজ্ঞানে ৱর্দ্ধমানাঃ সর্ৱ্ৱসৎকর্ম্মরূপং ফলং ফলেত,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
১১যথা চেশ্ৱরস্য মহিমযুক্তযা শক্ত্যা সানন্দেন পূর্ণাং সহিষ্ণুতাং তিতিক্ষাঞ্চাচরিতুং শক্ষ্যথ তাদৃশেন পূর্ণবলেন যদ্ বলৱন্তো ভৱেত,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
১২যশ্চ পিতা তেজোৱাসিনাং পৱিত্রলোকানাম্ অধিকারস্যাংশিৎৱাযাস্মান্ যোগ্যান্ কৃতৱান্ তং যদ্ ধন্যং ৱদেত ৱরম্ এনং যাচামহে|
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
১৩যতঃ সোঽস্মান্ তিমিরস্য কর্ত্তৃৎৱাদ্ উদ্ধৃত্য স্ৱকীযস্য প্রিযপুত্রস্য রাজ্যে স্থাপিতৱান্|
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
১৪তস্মাৎ পুত্রাদ্ ৱযং পরিত্রাণম্ অর্থতঃ পাপমোচনং প্রাপ্তৱন্তঃ|
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
১৫স চাদৃশ্যস্যেশ্ৱরস্য প্রতিমূর্তিঃ কৃৎস্নাযাঃ সৃষ্টেরাদিকর্ত্তা চ|
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
১৬যতঃ সর্ৱ্ৱমেৱ তেন সসৃজে সিংহাসনরাজৎৱপরাক্রমাদীনি স্ৱর্গমর্ত্ত্যস্থিতানি দৃশ্যাদৃশ্যানি ৱস্তূনি সর্ৱ্ৱাণি তেনৈৱ তস্মৈ চ সসৃজিরে|
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
১৭স সর্ৱ্ৱেষাম্ আদিঃ সর্ৱ্ৱেষাং স্থিতিকারকশ্চ|
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
১৮স এৱ সমিতিরূপাযাস্তনো র্মূর্দ্ধা কিঞ্চ সর্ৱ্ৱৱিষযে স যদ্ অগ্রিযো ভৱেৎ তদর্থং স এৱ মৃতানাং মধ্যাৎ প্রথমত উত্থিতোঽগ্রশ্চ|
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
১৯যত ঈশ্ৱরস্য কৃৎস্নং পূর্ণৎৱং তমেৱাৱাসযিতুং
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
২০ক্রুশে পাতিতেন তস্য রক্তেন সন্ধিং ৱিধায তেনৈৱ স্ৱর্গমর্ত্ত্যস্থিতানি সর্ৱ্ৱাণি স্ৱেন সহ সন্ধাপযিতুঞ্চেশ্ৱরেণাভিলেষে|
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
২১পূর্ৱ্ৱং দূরস্থা দুষ্ক্রিযারতমনস্কৎৱাৎ তস্য রিপৱশ্চাস্ত যে যূযং তান্ যুষ্মান্ অপি স ইদানীং তস্য মাংসলশরীরে মরণেন স্ৱেন সহ সন্ধাপিতৱান্|
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
২২যতঃ স স্ৱসম্মুখে পৱিত্রান্ নিষ্কলঙ্কান্ অনিন্দনীযাংশ্চ যুষ্মান্ স্থাপযিতুম্ ইচ্ছতি|
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
২৩কিন্ত্ৱেতদর্থং যুষ্মাভি র্বদ্ধমূলৈঃ সুস্থিরৈশ্চ ভৱিতৱ্যম্, আকাশমণ্ডলস্যাধঃস্থিতানাং সর্ৱ্ৱলোকানাং মধ্যে চ ঘুষ্যমাণো যঃ সুসংৱাদো যুষ্মাভিরশ্রাৱি তজ্জাতাযাং প্রত্যাশাযাং যুষ্মাভিরচলৈ র্ভৱিতৱ্যং|
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
২৪তস্য সুসংৱাদস্যৈকঃ পরিচারকো যোঽহং পৌলঃ সোঽহম্ ইদানীম্ আনন্দেন যুষ্মদর্থং দুঃখানি সহে খ্রীষ্টস্য ক্লেশভোগস্য যোংশোঽপূর্ণস্তমেৱ তস্য তনোঃ সমিতেঃ কৃতে স্ৱশরীরে পূরযামি চ|
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
২৫যত ঈশ্ৱরস্য মন্ত্রণযা যুষ্মদর্থম্ ঈশ্ৱরীযৱাক্যস্য প্রচারস্য ভারো মযি সমপিতস্তস্মাদ্ অহং তস্যাঃ সমিতেঃ পরিচারকোঽভৱং|
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
২৬তৎ নিগূঢং ৱাক্যং পূর্ৱ্ৱযুগেষু পূর্ৱ্ৱপুরুষেভ্যঃ প্রচ্ছন্নম্ আসীৎ কিন্ত্ৱিদানীং তস্য পৱিত্রলোকানাং সন্নিধৌ তেন প্রাকাশ্যত| (aiōn )
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
২৭যতো ভিন্নজাতীযানাং মধ্যে তৎ নিগূঢৱাক্যং কীদৃগ্গৌরৱনিধিসম্বলিতং তৎ পৱিত্রলোকান্ জ্ঞাপযিতুম্ ঈশ্ৱরোঽভ্যলষৎ| যুষ্মন্মধ্যৱর্ত্তী খ্রীষ্ট এৱ স নিধি র্গৈরৱাশাভূমিশ্চ|
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
২৮তস্মাদ্ ৱযং তমেৱ ঘোষযন্তো যদ্ একৈকং মানৱং সিদ্ধীভূতং খ্রীষ্টে স্থাপযেম তদর্থমেকৈকং মানৱং প্রবোধযামঃ পূর্ণজ্ঞানেন চৈকৈকং মানৱং উপদিশামঃ|
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
২৯এতদর্থং তস্য যা শক্তিঃ প্রবলরূপেণ মম মধ্যে প্রকাশতে তযাহং যতমানঃ শ্রাভ্যামি|