< அப்போஸ்தலர் 7 >

1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
តតះ បរំ មហាយាជកះ ប្ឫឞ្ដវាន៑, ឯឞា កថាំ កិំ សត្យា?
2 அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
តតះ ស ប្រត្យវទត៑, ហេ បិតរោ ហេ ភ្រាតរះ សវ៌្វេ លាកា មនាំសិ និធទ្ធ្វំ។ អស្មាកំ បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ ហារណ្នគរេ វាសករណាត៑ បូវ៌្វំ យទា អរាម៑-នហរយិមទេឝេ អាសីត៑ តទា តេជោមយ ឦឝ្វរោ ទឝ៌នំ ទត្វា
3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
តមវទត៑ ត្វំ ស្វទេឝជ្ញាតិមិត្រាណិ បរិត្យជ្យ យំ ទេឝមហំ ទឝ៌យិឞ្យាមិ តំ ទេឝំ វ្រជ។
4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
អតះ ស កស្ទីយទេឝំ វិហាយ ហារណ្នគរេ ន្យវសត៑, តទនន្តរំ តស្យ បិតរិ ម្ឫតេ យត្រ ទេឝេ យូយំ និវសថ ស ឯនំ ទេឝមាគច្ឆត៑។
5 இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
កិន្ត្វីឝ្វរស្តស្មៃ កមប្យធិការម៑ អត៌្ហាទ៑ ឯកបទបរិមិតាំ ភូមិមបិ នាទទាត៑; តទា តស្យ កោបិ សន្តានោ នាសីត៑ តថាបិ សន្តានៃះ សាទ៌្ធម៑ ឯតស្យ ទេឝស្យាធិការី ត្វំ ភវិឞ្យសីតិ តម្ប្រត្យង្គីក្ឫតវាន៑។
6 அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
ឦឝ្វរ ឥត្ថម៑ អបរមបិ កថិតវាន៑ តវ សន្តានាះ បរទេឝេ និវត្ស្យន្តិ តតស្តទ្ទេឝីយលោកាឝ្ចតុះឝតវត្សរាន៑ យាវត៑ តាន៑ ទាសត្វេ ស្ថាបយិត្វា តាន៑ ប្រតិ កុវ្យវហារំ ករិឞ្យន្តិ។
7 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
អបរម៑ ឦឝ្វរ ឯនាំ កថាមបិ កថិតវាន៑, យេ លោកាស្តាន៑ ទាសត្វេ ស្ថាបយិឞ្យន្តិ តាល្លោកាន៑ អហំ ទណ្ឌយិឞ្យាមិ, តតះ បរំ តេ ពហិគ៌តាះ សន្តោ មាម៑ អត្រ ស្ថានេ សេវិឞ្យន្តេ។
8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
បឝ្ចាត៑ ស តស្មៃ ត្វក្ឆេទស្យ និយមំ ទត្តវាន៑, អត ឥស្ហាកនាម្និ ឥព្រាហីម ឯកបុត្រេ ជាតេ, អឞ្ដមទិនេ តស្យ ត្វក្ឆេទម៑ អករោត៑។ តស្យ ឥស្ហាកះ បុត្រោ យាកូព៑, តតស្តស្យ យាកូពោៜស្មាកំ ទ្វាទឝ បូវ៌្វបុរុឞា អជាយន្ត។
9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
តេ បូវ៌្វបុរុឞា ឦឞ៌្យយា បរិបូណ៌ា មិសរទេឝំ ប្រេឞយិតុំ យូឞផំ វ្យក្រីណន៑។
10 ௧0 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
កិន្ត្វីឝ្វរស្តស្យ សហាយោ ភូត្វា សវ៌្វស្យា ទុគ៌តេ រក្ឞិត្វា តស្មៃ ពុទ្ធិំ ទត្ត្វា មិសរទេឝស្យ រាជ្ញះ ផិរៅណះ ប្រិយបាត្រំ ក្ឫតវាន៑ តតោ រាជា មិសរទេឝស្យ ស្វីយសវ៌្វបរិវារស្យ ច ឝាសនបទំ តស្មៃ ទត្តវាន៑។
11 ௧௧ பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
តស្មិន៑ សមយេ មិសរ-កិនានទេឝយោ រ្ទុព៌្ហិក្ឞហេតោរតិក្លិឞ្ដត្វាត៑ នះ បូវ៌្វបុរុឞា ភក្ឞ្យទ្រវ្យំ នាលភន្ត។
12 ௧௨ அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
កិន្តុ មិសរទេឝេ ឝស្យានិ សន្តិ, យាកូព៑ ឥមាំ វាត៌្តាំ ឝ្រុត្វា ប្រថមម៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞាន៑ មិសរំ ប្រេឞិតវាន៑។
13 ௧௩ இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
តតោ ទ្វិតីយវារគមនេ យូឞផ៑ ស្វភ្រាត្ឫភិះ បរិចិតោៜភវត៑; យូឞផោ ភ្រាតរះ ផិរៅណ៑ រាជេន បរិចិតា អភវន៑។
14 ௧௪ பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
អនន្តរំ យូឞផ៑ ភ្រាត្ឫគណំ ប្រេឞ្យ និជបិតរំ យាកូពំ និជាន៑ បញ្ចាធិកសប្តតិសំខ្យកាន៑ ជ្ញាតិជនាំឝ្ច សមាហូតវាន៑។
15 ௧௫ அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
តស្មាទ៑ យាកូព៑ មិសរទេឝំ គត្វា ស្វយម៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞាឝ្ច តស្មិន៑ ស្ថានេៜម្រិយន្ត។
16 ௧௬ அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
តតស្តេ ឝិខិមំ នីតា យត៑ ឝ្មឝានម៑ ឥព្រាហីម៑ មុទ្រាទត្វា ឝិខិមះ បិតុ រ្ហមោរះ បុត្រេភ្យះ ក្រីតវាន៑ តត្ឝ្មឝានេ ស្ថាបយាញ្ចក្រិរេ។
17 ௧௭ ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
តតះ បរម៑ ឦឝ្វរ ឥព្រាហីមះ សន្និធៅ ឝបថំ ក្ឫត្វា យាំ ប្រតិជ្ញាំ ក្ឫតវាន៑ តស្យាះ ប្រតិជ្ញាយាះ ផលនសមយេ និកដេ សតិ ឥស្រាយេល្លោកា សិមរទេឝេ វទ៌្ធមានា ពហុសំខ្យា អភវន៑។
18 ௧௮ யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
ឝេឞេ យូឞផំ យោ ន បរិចិនោតិ តាទ្ឫឝ ឯកោ នរបតិរុបស្ថាយ
19 ௧௯ அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
អស្មាកំ ជ្ញាតិភិះ សាទ៌្ធំ ធូត៌្តតាំ វិធាយ បូវ៌្វបុរុឞាន៑ ប្រតិ កុវ្យវហរណបូវ៌្វកំ តេឞាំ វំឝនាឝនាយ តេឞាំ នវជាតាន៑ ឝិឝូន៑ ពហិ រ្និរក្ឞេបយត៑។
20 ௨0 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
ឯតស្មិន៑ សមយេ មូសា ជជ្ញេ, ស តុ បរមសុន្ទរោៜភវត៑ តថា បិត្ឫគ្ឫហេ មាសត្រយបយ៌្យន្តំ បាលិតោៜភវត៑។
21 ௨௧ அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
កិន្តុ តស្មិន៑ ពហិន៌ិក្ឞិប្តេ សតិ ផិរៅណរាជស្យ កន្យា តម៑ ឧត្តោល្យ នីត្វា ទត្តកបុត្រំ ក្ឫត្វា បាលិតវតី។
22 ௨௨ மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
តស្មាត៑ ស មូសា មិសរទេឝីយាយាះ សវ៌្វវិទ្យាយាះ បារទ្ឫឞ្វា សន៑ វាក្យេ ក្រិយាយាញ្ច ឝក្តិមាន៑ អភវត៑។
23 ௨௩ அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
ស សម្បូណ៌ចត្វារិំឝទ្វត្សរវយស្កោ ភូត្វា ឥស្រាយេលីយវំឝនិជភ្រាត្ឫន៑ សាក្ឞាត៑ កត៌ុំ មតិំ ចក្រេ។
24 ௨௪ அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
តេឞាំ ជនមេកំ ហិំសិតំ ទ្ឫឞ្ដ្វា តស្យ សបក្ឞះ សន៑ ហិំសិតជនម៑ ឧបក្ឫត្យ មិសរីយជនំ ជឃាន។
25 ௨௫ தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
តស្យ ហស្តេនេឝ្វរស្តាន៑ ឧទ្ធរិឞ្យតិ តស្យ ភ្រាត្ឫគណ ឥតិ ជ្ញាស្យតិ ស ឥត្យនុមានំ ចការ, កិន្តុ តេ ន ពុពុធិរេ។
26 ௨௬ மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
តត្បរេ ៜហនិ តេឞាម៑ ឧភយោ រ្ជនយោ រ្វាក្កលហ ឧបស្ថិតេ សតិ មូសាះ សមីបំ គត្វា តយោ រ្មេលនំ កត៌្តុំ មតិំ ក្ឫត្វា កថយាមាស, ហេ មហាឝយៅ យុវាំ ភ្រាតរៅ បរស្បរម៑ អន្យាយំ កុតះ កុរុថះ?
27 ௨௭ ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
តតះ សមីបវាសិនំ ប្រតិ យោ ជនោៜន្យាយំ ចការ ស តំ ទូរីក្ឫត្យ កថយាមាស, អស្មាកមុបរិ ឝាស្ត្ឫត្វវិចារយិត្ឫត្វបទយោះ កស្ត្វាំ និយុក្តវាន៑?
28 ௨௮ நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
ហ្យោ យថា មិសរីយំ ហតវាន៑ តថា កិំ មាមបិ ហនិឞ្យសិ?
29 ௨௯ இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
តទា មូសា ឯតាទ្ឫឝីំ កថាំ ឝ្រុត្វា បលាយនំ ចក្រេ, តតោ មិទិយនទេឝំ គត្វា ប្រវាសី សន៑ តស្ថៅ, តតស្តត្រ ទ្វៅ បុត្រៅ ជជ្ញាតេ។
30 ௩0 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
អនន្តរំ ចត្វារិំឝទ្វត្សរេឞុ គតេឞុ សីនយបវ៌្វតស្យ ប្រាន្តរេ ប្រជ្វលិតស្តម្ពស្យ វហ្និឝិខាយាំ បរមេឝ្វរទូតស្តស្មៃ ទឝ៌នំ ទទៅ។
31 ௩௧ மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
មូសាស្តស្មិន៑ ទឝ៌នេ វិស្មយំ មត្វា វិឝេឞំ ជ្ញាតុំ និកដំ គច្ឆតិ,
32 ௩௨ நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
ឯតស្មិន៑ សមយេ, អហំ តវ បូវ៌្វបុរុឞាណាម៑ ឦឝ្វរោៜរ្ថាទ៑ ឥព្រាហីម ឦឝ្វរ ឥស្ហាក ឦឝ្វរោ យាកូព ឦឝ្វរឝ្ច, មូសាមុទ្ទិឝ្យ បរមេឝ្វរស្យៃតាទ្ឫឝី វិហាយសីយា វាណី ពភូវ, តតះ ស កម្បាន្វិតះ សន៑ បុន រ្និរីក្ឞិតុំ ប្រគល្ភោ ន ពភូវ។
33 ௩௩ பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
បរមេឝ្វរស្តំ ជគាទ, តវ បាទយោះ បាទុកេ មោចយ យត្រ តិឞ្ឋសិ សា បវិត្រភូមិះ។
34 ௩௪ எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
អហំ មិសរទេឝស្ថានាំ និជលោកានាំ ទុទ៌្ទឝាំ និតាន្តម៑ អបឝ្យំ, តេឞាំ កាតយ៌្យោក្តិញ្ច ឝ្រុតវាន៑ តស្មាត៑ តាន៑ ឧទ្ធត៌្តុម៑ អវរុហ្យាគមម៑; ឥទានីម៑ អាគច្ឆ មិសរទេឝំ ត្វាំ ប្រេឞយាមិ។
35 ௩௫ உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
កស្ត្វាំ ឝាស្ត្ឫត្វវិចារយិត្ឫត្វបទយោ រ្និយុក្តវាន៑, ឥតិ វាក្យមុក្ត្វា តៃ រ្យោ មូសា អវជ្ញាតស្តមេវ ឦឝ្វរះ ស្តម្ពមធ្យេ ទឝ៌នទាត្រា តេន ទូតេន ឝាស្តារំ មុក្តិទាតារញ្ច ក្ឫត្វា ប្រេឞយាមាស។
36 ௩௬ இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ស ច មិសរទេឝេ សូផ្នាម្និ សមុទ្រេ ច បឝ្ចាត៑ ចត្វារិំឝទ្វត្សរាន៑ យាវត៑ មហាប្រាន្តរេ នានាប្រការាណ្យទ្ភុតានិ កម៌្មាណិ លក្ឞណានិ ច ទឝ៌យិត្វា តាន៑ ពហិះ ក្ឫត្វា សមានិនាយ។
37 ௩௭ இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
ប្រភុះ បរមេឝ្វរោ យុឞ្មាកំ ភ្រាត្ឫគណស្យ មធ្យេ មាទ្ឫឝម៑ ឯកំ ភវិឞ្យទ្វក្តារម៑ ឧត្បាទយិឞ្យតិ តស្យ កថាយាំ យូយំ មនោ និធាស្យថ, យោ ជន ឥស្រាយេលះ សន្តានេភ្យ ឯនាំ កថាំ កថយាមាស ស ឯឞ មូសាះ។
38 ௩௮ சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
មហាប្រាន្តរស្ថមណ្ឌលីមធ្យេៜបិ ស ឯវ សីនយបវ៌្វតោបរិ តេន សាទ៌្ធំ សំលាបិនោ ទូតស្យ ចាស្មត្បិត្ឫគណស្យ មធ្យស្ថះ សន៑ អស្មភ្យំ ទាតវ្យនិ ជីវនទាយកានិ វាក្យានិ លេភេ។
39 ௩௯ இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
អស្មាកំ បូវ៌្វបុរុឞាស្តម៑ អមាន្យំ កត្វា ស្វេភ្យោ ទូរីក្ឫត្យ មិសរទេឝំ បរាវ្ឫត្យ គន្តុំ មនោភិរភិលឞ្យ ហារោណំ ជគទុះ,
40 ௪0 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
អស្មាកម៑ អគ្រេៜគ្រេ គន្តុម៑ អស្មទត៌្ហំ ទេវគណំ និម៌្មាហិ យតោ យោ មូសា អស្មាន៑ មិសរទេឝាទ៑ ពហិះ ក្ឫត្វានីតវាន៑ តស្យ កិំ ជាតំ តទស្មាភិ រ្ន ជ្ញាយតេ។
41 ௪௧ அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
តស្មិន៑ សមយេ តេ គោវត្សាក្ឫតិំ ប្រតិមាំ និម៌្មាយ តាមុទ្ទិឝ្យ នៃវេទ្យមុត្ម្ឫជ្យ ស្វហស្តក្ឫតវស្តុនា អានន្ទិតវន្តះ។
42 ௪௨ அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
តស្មាទ៑ ឦឝ្វរស្តេឞាំ ប្រតិ វិមុខះ សន៑ អាកាឝស្ថំ ជ្យោតិគ៌ណំ បូជយិតុំ តេភ្យោៜនុមតិំ ទទៅ, យាទ្ឫឝំ ភវិឞ្យទ្វាទិនាំ គ្រន្ថេឞុ លិខិតមាស្តេ, យថា, ឥស្រាយេលីយវំឝា រេ ចត្វារិំឝត្សមាន៑ បុរា។ មហតិ ប្រាន្តរេ សំស្ថា យូយន្តុ យានិ ច។ ពលិហោមាទិកម៌្មាណិ ក្ឫតវន្តស្តុ តានិ កិំ។ មាំ សមុទ្ទិឝ្យ យុឞ្មាភិះ ប្រក្ឫតានីតិ នៃវ ច។
43 ௪௩ பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
កិន្តុ វោ មោលកាខ្យស្យ ទេវស្យ ទូឞ្យមេវ ច។ យុឞ្មាកំ រិម្ផនាខ្យាយា ទេវតាយាឝ្ច តារកា។ ឯតយោរុភយោ រ្មូត៌ី យុឞ្មាភិះ បរិបូជិតេ។ អតោ យុឞ្មាំស្តុ ពាពេលះ បារំ នេឞ្យាមិ និឝ្ចិតំ។
44 ௪௪ மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
អបរញ្ច យន្និទឝ៌នម៑ អបឝ្យស្តទនុសារេណ ទូឞ្យំ និម៌្មាហិ យស្មិន៑ ឦឝ្វរោ មូសាម៑ ឯតទ្វាក្យំ ពភាឞេ តត៑ តស្យ និរូបិតំ សាក្ឞ្យស្វរូបំ ទូឞ្យម៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞៃះ សហ ប្រាន្តរេ តស្ថៅ។
45 ௪௫ மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
បឝ្ចាត៑ យិហោឝូយេន សហិតៃស្តេឞាំ វំឝជាតៃរស្មត្បូវ៌្វបុរុឞៃះ ស្វេឞាំ សម្មុខាទ៑ ឦឝ្វរេណ ទូរីក្ឫតានាម៑ អន្យទេឝីយានាំ ទេឝាធិក្ឫតិកាលេ សមានីតំ តទ៑ ទូឞ្យំ ទាយូទោធិការំ យាវត៑ តត្រ ស្ថាន អាសីត៑។
46 ௪௬ இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ស ទាយូទ៑ បរមេឝ្វរស្យានុគ្រហំ ប្រាប្យ យាកូព៑ ឦឝ្វរាត៌្ហម៑ ឯកំ ទូឞ្យំ និម៌្មាតុំ វវាញ្ឆ;
47 ௪௭ சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
កិន្តុ សុលេមាន៑ តទត៌្ហំ មន្ទិរម៑ ឯកំ និម៌្មិតវាន៑។
48 ௪௮ ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
តថាបិ យះ សវ៌្វោបរិស្ថះ ស កស្មិំឝ្ចិទ៑ ហស្តក្ឫតេ មន្ទិរេ និវសតីតិ នហិ, ភវិឞ្យទ្វាទី កថាមេតាំ កថយតិ, យថា,
49 ௪௯ வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
បរេឝោ វទតិ ស្វគ៌ោ រាជសិំហាសនំ មម។ មទីយំ បាទបីឋញ្ច ប្ឫថិវី ភវតិ ធ្រុវំ។ តហ៌ិ យូយំ ក្ឫតេ មេ កិំ ប្រនិម៌្មាស្យថ មន្ទិរំ។ វិឝ្រាមាយ មទីយំ វា ស្ថានំ កិំ វិទ្យតេ ត្វិហ។
50 ௫0 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
សវ៌្វាណ្យេតានិ វស្តូនិ កិំ មេ ហស្តក្ឫតានិ ន៕
51 ௫௧ “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
ហេ អនាជ្ញាគ្រាហកា អន្តះករណេ ឝ្រវណេ ចាបវិត្រលោកាះ យូយម៑ អនវរតំ បវិត្រស្យាត្មនះ ប្រាតិកូល្យម៑ អាចរថ, យុឞ្មាកំ បូវ៌្វបុរុឞា យាទ្ឫឝា យូយមបិ តាទ្ឫឝាះ។
52 ௫௨ தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
យុឞ្មាកំ បូវ៌្វបុរុឞាះ កំ ភវិឞ្យទ្វាទិនំ នាតាឌយន៑? យេ តស្យ ធាម៌្មិកស្យ ជនស្យាគមនកថាំ កថិតវន្តស្តាន៑ អឃ្នន៑ យូយម៑ អធូនា វិឝ្វាសឃាតិនោ ភូត្វា តំ ធាម៌្មិកំ ជនម៑ អហត។
53 ௫௩ தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
យូយំ ស្វគ៌ីយទូតគណេន វ្យវស្ថាំ ប្រាប្យាបិ តាំ នាចរថ។
54 ௫௪ இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
ឥមាំ កថាំ ឝ្រុត្វា តេ មនះសុ ពិទ្ធាះ សន្តស្តំ ប្រតិ ទន្តឃឞ៌ណម៑ អកុវ៌្វន៑។
55 ௫௫ அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
កិន្តុ ស្តិផានះ បវិត្រេណាត្មនា បូណ៌ោ ភូត្វា គគណំ ប្រតិ ស្ថិរទ្ឫឞ្ដិំ ក្ឫត្វា ឦឝ្វរស្យ ទក្ឞិណេ ទណ្ឌាយមានំ យីឝុញ្ច វិលោក្យ កថិតវាន៑;
56 ௫௬ அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
បឝ្យ, មេឃទ្វារំ មុក្តម៑ ឦឝ្វរស្យ ទក្ឞិណេ ស្ថិតំ មានវសុតញ្ច បឝ្យាមិ។
57 ௫௭ அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
តទា តេ ប្រោច្ចៃះ ឝព្ទំ ក្ឫត្វា កណ៌េឞ្វង្គុលី រ្និធាយ ឯកចិត្តីភូយ តម៑ អាក្រមន៑។
58 ௫௮ அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
បឝ្ចាត៑ តំ នគរាទ៑ ពហិះ ក្ឫត្វា ប្រស្តរៃរាឃ្នន៑ សាក្ឞិណោ លាកាះ ឝៅលនាម្នោ យូនឝ្ចរណសន្និធៅ និជវស្ត្រាណិ ស្ថាបិតវន្តះ។
59 ௫௯ அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
អនន្តរំ ហេ ប្រភោ យីឝេ មទីយមាត្មានំ គ្ឫហាណ ស្តិផានស្យេតិ ប្រាត៌្ហនវាក្យវទនសមយេ តេ តំ ប្រស្តរៃរាឃ្នន៑។
60 ௬0 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
តស្មាត៑ ស ជានុនី បាតយិត្វា ប្រោច្ចៃះ ឝព្ទំ ក្ឫត្វា, ហេ ប្រភេ បាបមេតទ៑ ឯតេឞុ មា ស្ថាបយ, ឥត្យុក្ត្វា មហានិទ្រាំ ប្រាប្នោត៑។

< அப்போஸ்தலர் 7 >