< அப்போஸ்தலர் 7 >
1 ௧ பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
ⲁ̅ⲠⲈϪⲀϤ ⲆⲈ ⲚⲀϤ ⲚϪⲈⲠⲒⲀⲢⲬⲎⲈⲢⲈⲨⲤ ϪⲈ ⲀⲚ ⲚⲀⲒ ϢⲞⲠ ⲘⲠⲀⲒⲢⲎϮ.
2 ௨ அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
ⲃ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲈⲚⲤⲚⲎⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲈⲚⲒⲞϮ ⲤⲰⲦⲈⲘ ⲪⲚⲞⲨϮ ⲚⲦⲈⲠⲰⲞⲨ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈⲠⲈⲚⲒⲰⲦ ⲀⲂⲢⲀⲀⲘ ⲈϤⲬⲎ ⲈϨⲢⲎⲒ ϦⲈⲚϮⲘⲈⲤⲞⲠⲞⲦⲀⲘⲒⲀ ⲘⲠⲀⲦⲈϤϢⲰⲠⲒ ϦⲈⲚⲬⲀⲢⲢⲀⲚ.
3 ௩ நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
ⲅ̅ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲀⲘⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲔⲔⲀϨⲒ ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲈⲔⲤⲨⲄⲄⲈⲚⲒⲀ ⲀⲘⲞⲨ ⲈⲠⲒⲔⲀϨⲒ ⲈϮⲚⲀⲦⲀⲘⲞⲔ ⲈⲢⲞϤ.
4 ௪ அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
ⲇ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲔⲀϨⲒ ⲚⲦⲈⲚⲒⲬⲀⲖⲆⲈⲞⲤ ⲀϤϢⲰⲠⲒ ϦⲈⲚⲬⲀⲢⲢⲀⲚ ⲈⲂⲞⲖ ⲆⲈ ⲘⲘⲀⲨ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲐⲢⲈϤⲘⲞⲨ ⲚϪⲈⲠⲈϤⲒⲰⲦ ⲀϤⲞⲨⲞⲐⲂⲈϤ ⲈⲂⲞⲖ ⲈⲐⲢⲈϤϢⲰⲠⲒ ϦⲈⲚⲠⲀⲒⲔⲀϨⲒ ⲪⲀⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲦⲈⲦⲈⲚϢⲞⲠ ϨⲒⲰⲦϤ ϮⲚⲞⲨ.
5 ௫ இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
ⲉ̅ⲘⲠⲈϤϮ ⲚⲀϤ ⲚⲞⲨⲔⲖⲎⲢⲞⲚⲞⲘⲒⲀ ⲚϦⲎⲦϤ ⲞⲨⲆⲈ ⲞⲨϢⲈⲚⲦⲀⲦⲤⲒ ⲚⲦⲈⲞⲨϬⲀⲖⲞϪ ⲀϤⲰϢ ⲈⲦⲎⲒϤ ⲚⲀϤ ϦⲈⲚⲞⲨⲀⲘⲀϨⲒ ⲚⲈⲘ ⲠⲈϤϪⲢⲞϪ ⲘⲈⲚⲈⲚⲤⲰϤ ⲘⲘⲞⲚⲦⲈϤ ϢⲎⲢⲒ ⲆⲈ ⲘⲘⲀⲨ.
6 ௬ அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
ⲋ̅ⲀⲪⲚⲞⲨϮ ⲆⲈ ⲤⲀϪⲒ ⲘⲠⲀⲒⲢⲎϮ ϪⲈ ⲈⲢⲈ ⲠⲈⲔϪⲢⲞϪ ⲈⲢⲢⲈⲘⲚϪⲰⲒⲖⲒ ϦⲈⲚⲞⲨⲔⲀϨⲒ ⲚϢⲈⲘⲘⲞ ⲞⲨⲞϨ ⲈⲨⲈⲀⲒⲦⲞⲨ ⲘⲂⲰⲔ ⲞⲨⲞϨ ⲈⲨⲈⲦϨⲈⲘⲔⲰⲞⲨ ⲚⲨ ⲚⲢⲞⲘⲠⲒ.
7 ௭ அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
ⲍ̅ⲞⲨⲞϨ ⲠⲒϢⲖⲰⲖ ⲈⲦⲞⲨⲚⲀⲈⲢⲂⲰⲔ ⲚⲀϤ ⲈⲒⲈϮϨⲀⲠ ⲈⲢⲞϤ ⲀⲚⲞⲔ ⲠⲈϪⲈ ⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒ ⲈⲨⲈⲒ ⲈⲂⲞⲖ ⲈⲨⲈϢⲈⲘϢⲒ ⲘⲘⲞⲒ ϦⲈⲚⲠⲀⲒⲘⲀ ⲪⲀⲒ.
8 ௮ மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
ⲏ̅ⲞⲨⲞϨ ⲀϤϮ ⲚⲀϤ ⲚⲞⲨⲆⲒⲀⲐⲎⲔⲎ ⲚⲦⲈⲠⲤⲈⲂⲒ ⲞⲨⲞϨ ⲠⲀⲒⲢⲎϮ ⲀϤϪⲪⲈ ⲒⲤⲀⲀⲔ ⲞⲨⲞϨ ⲀϤⲤⲞⲨⲂⲎⲦϤ ϦⲈⲚⲠⲒⲘⲀϨⲎ ⲚⲈϨⲞⲞⲨ ⲞⲨⲞϨ ⲒⲤⲀⲀⲔ ⲀϤϪⲪⲈ ⲒⲀⲔⲰⲂ ⲒⲀⲔⲰⲂ ⲀϤϪⲪⲞ ⲘⲠⲒⲒⲂ ⲘⲠⲀⲦⲢⲒⲀⲢⲬⲎⲤ.
9 ௯ அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
ⲑ̅ⲞⲨⲞϨ ⲚⲒⲠⲀⲦⲢⲒⲀⲢⲬⲎⲤ ⲀⲨⲬⲞϨ ⲈⲒⲰⲤⲎⲪ ⲀⲨⲦⲎⲒϤ ⲈⲂⲞⲖ ⲈϨⲢⲎⲒ ⲈⲬⲎⲘⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲢⲈ ⲪⲚⲞⲨϮ ⲬⲎ ⲚⲈⲘⲀϤ ⲠⲈ.
10 ௧0 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
ⲓ̅ⲀϤⲚⲀϨⲘⲈϤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈϤⲐⲖⲨⲮⲒⲤ ⲦⲎⲢⲞⲨ ⲀϤϮ ⲚⲀϤ ⲚⲞⲨϨⲘⲞⲦ ⲚⲈⲘ ⲞⲨⲤⲞⲪⲒⲀ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲀⲢⲀⲰ ⲠⲞⲨⲢⲞ ⲚⲬⲎⲘⲒ ⲀϤⲬⲀϤ ⲚϨⲨⲄⲞⲨⲘⲈⲚⲞⲤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲈⲚ ⲬⲎⲘⲒ ⲚⲈⲘ ⲈϪⲈⲚ ⲠⲈϤⲎⲒ ⲦⲎⲢϤ.
11 ௧௧ பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
ⲓ̅ⲁ̅ⲀϤⲒ ⲆⲈ ⲚϪⲈⲞⲨϨⲂⲰⲚ ⲈϪⲈⲚ ⲬⲎⲘⲒ ⲦⲎⲢϤ ⲚⲈⲘ ⲬⲀⲚⲀⲀⲚ ⲚⲈⲘ ⲞⲨⲚⲒϢϮ ⲚⲐⲖⲨⲮⲒⲤ ⲞⲨⲞϨ ⲚⲀⲨϪⲈⲘ ⲤⲞⲨⲞ ⲀⲚ ⲠⲈ ⲚϪⲈⲚⲈⲚⲒⲞϮ.
12 ௧௨ அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
ⲓ̅ⲃ̅ⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲚϪⲈⲒⲀⲔⲰⲂ ϪⲈ ⲤⲈϮ ⲤⲞⲨⲞ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲬⲎⲘⲒ ⲀϤⲦⲀⲞⲨⲞ ⲚⲚⲈⲚⲒⲞϮ ⲚϢⲞⲢⲠ.
13 ௧௩ இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ϦⲈⲚⲠⲒⲘⲀϨⲤⲞⲠ ⲂⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲚϪⲈⲒⲰⲤⲎⲪ ⲈⲚⲈϤⲤⲚⲎⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲠⲄⲈⲚⲞⲤ ⲚⲒⲰⲤⲎⲪ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈⲪⲀⲢⲀⲰ.
14 ௧௪ பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
ⲓ̅ⲇ̅ⲀϤⲞⲨⲰⲢⲠ ⲆⲈ ⲚϪⲈⲒⲰⲤⲎⲪ ⲀϤⲘⲞⲨϮ ⲈⲒⲀⲔⲰⲂ ⲠⲈϤⲒⲰⲦ ⲚⲈⲘ ⲦⲈϤⲤⲨⲄⲄⲈⲚⲒⲀ ⲦⲎⲢⲤ ⲈϨⲢⲎⲒ ϦⲈⲚⲞⲈ ⲘⲮⲨⲬⲎ.
15 ௧௫ அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
ⲓ̅ⲉ̅ⲀϤⲒ ⲆⲈ ⲚϪⲈⲒⲀⲔⲰⲂ ⲈϦⲢⲎⲒ ⲈⲬⲎⲘⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞⲨ ⲚⲐⲞϤ ⲚⲈⲘ ⲚⲈⲚⲒⲞϮ.
16 ௧௬ அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
ⲓ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲞⲨⲞⲐⲂⲈϤ ⲈⲤⲨⲬⲈⲘ ⲀⲨⲬⲀϤ ϦⲈⲚⲠⲒⲘϨⲀⲨ ⲈⲦⲀϤϢⲞⲠϤ ⲚϪⲈⲀⲂⲢⲀⲀⲘ ϦⲀ ⲞⲨⲦⲒⲘⲎ ⲚϨⲀⲦ ⲚⲦⲞⲦⲞⲨ ⲚⲚⲈⲚϢⲎⲢⲒ ⲚⲈⲘⲰⲢ ϦⲈⲚⲤⲨⲬⲈⲘ.
17 ௧௭ ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
ⲓ̅ⲍ̅ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲆⲈ ⲈⲦⲀϤϦⲰⲚⲦ ⲚϪⲈⲠⲤⲎⲞⲨ ⲚⲦⲈϮⲈⲠⲀⲄⲄⲈⲖⲒⲀ ⲐⲎ ⲈⲦⲀ ⲪⲚⲞⲨϮ ⲰⲢⲔ ⲈⲐⲂⲎⲦⲤ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲀϤⲀⲒⲀⲒ ⲚϪⲈⲠⲒⲖⲀⲞⲤ ⲞⲨⲞϨ ⲀϤⲀⲘⲀϨⲒ ⲀϤⲀϢⲀⲒ ⲚϨⲢⲎⲒ ϦⲈⲚⲬⲎⲘⲒ.
18 ௧௮ யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
ⲓ̅ⲏ̅ϢⲀⲚⲦⲈϤⲦⲰⲚϤ ⲚϪⲈⲔⲈⲞⲨⲢⲞ ⲈϪⲈⲚ ⲬⲎⲘⲒ ⲚϤⲤⲰⲞⲨⲚ ⲀⲚ ⲚⲒⲰⲤⲎⲪ.
19 ௧௯ அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
ⲓ̅ⲑ̅ⲪⲀⲒ ⲀϤϪⲈⲘ ⲞⲨⲤⲂⲰ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲈⲚⲄⲈⲚⲞⲤ ⲀϤⲦϨⲈⲘⲔⲞ ⲚⲚⲈⲚⲒⲞϮ ⲈⲐⲢⲞⲨϨⲒⲞⲨⲒ ⲚⲚⲞⲨⲔⲞⲨϪⲒ ⲚⲀⲖⲰⲞⲨⲒ ⲈⲂⲞⲖ ⲈϢⲦⲈⲘⲦⲀⲚϦⲰⲞⲨ.
20 ௨0 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
ⲕ̅ⲚϦⲢⲎⲒ ⲆⲈ ϦⲈⲚⲠⲒⲤⲎⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀⲨⲘⲒⲤⲒ ⲘⲘⲰⲨⲤⲎⲤ ⲚⲈⲞⲨⲀⲤⲦⲒⲞⲤ ⲠⲈ ⲘⲪⲚⲞⲨϮ ⲪⲀⲒ ⲀⲨϢⲀⲚⲞⲨϢϤ ⲚⲄ ⲚⲀⲂⲞⲦ ϦⲈⲚⲠⲎⲒ ⲘⲠⲈϤⲒⲰⲦ.
21 ௨௧ அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
ⲕ̅ⲁ̅ⲈⲦⲀⲨϨⲒⲦϤ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲀⲤⲞⲖϤ ⲚϪⲈⲦϢⲈⲢⲒ ⲘⲪⲀⲢⲀⲰ.
22 ௨௨ மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
ⲕ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲦⲤⲀⲂⲈ ⲘⲰⲨⲤⲎⲤ ⲈⲤⲂⲰ ⲚⲒⲂⲈⲚ ⲚⲦⲈⲚⲒⲢⲈⲘⲚⲬⲎⲘⲒ ⲚⲀϤϪⲞⲢ ⲠⲈ ϦⲈⲚⲚⲈϤⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲚⲈϤϨⲂⲎⲞⲨⲒ.
23 ௨௩ அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
ⲕ̅ⲅ̅ⲈⲦⲀⲨϪⲰⲔ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲘⲚⲢⲞⲘⲠⲒ ⲚⲤⲎⲞⲨ ⲀⲤⲒ ⲈϪⲈⲚ ⲠⲈϤϨⲎⲦ ⲈϪⲈⲘⲠϢⲒⲚⲒ ⲚⲚⲈϤⲤⲚⲎ ⲞⲨ ⲚⲈⲚϢⲎⲢⲒ ⲘⲠⲒⲤⲖ.
24 ௨௪ அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
ⲕ̅ⲇ̅ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲆⲈ ⲞⲨⲀⲒ ⲈⲨϬⲒ ⲘⲘⲞϤ ⲚϪⲞⲚⲤ ⲀϤϢⲈⲚϨⲎⲦ ⲀϤⲒⲢⲒ ⲚⲞⲨϬⲒ ⲘⲠϢⲒϢ ⲘⲪⲎ ⲈⲚⲀⲨⲦϨⲈⲘⲔⲞ ⲘⲘⲞϤ ⲀϤϦⲰⲦⲈⲂ ⲘⲠⲒⲢⲈⲘⲚⲬⲎ ⲘⲒ.
25 ௨௫ தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
ⲕ̅ⲉ̅ⲈⲚⲀϤⲘⲈⲨⲒ ⲆⲈ ⲠⲈ ϪⲈ ⲤⲈⲚⲀⲔⲀϮ ⲚϪⲈⲚⲈϤⲤⲚⲎⲞⲨ ϪⲈ ⲪⲚⲞⲨϮ ⲚⲀϮ ⲚⲞⲨⲞⲨϪⲀⲒ ⲚⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲘⲠⲞⲨⲔⲀϮ.
26 ௨௬ மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
ⲕ̅ⲋ̅ⲠⲈϤⲢⲀⲤϮ ⲆⲈ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈϨⲀⲚⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲈⲨⲘⲖⲀϦ ⲞⲨⲞϨ ⲚⲀϤϨⲰⲦⲠ ⲘⲘⲰⲞⲨ ⲠⲈ ⲈⲞⲨϨⲒⲢⲎⲚⲎ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲢⲰⲘⲒ ⲚⲤⲚⲎⲞⲨ ⲈⲐⲂⲈⲞⲨ ⲦⲈⲦⲈⲚϬⲒ ⲚⲚⲈⲦⲈⲚⲈⲢⲎⲞⲨ ⲚϪⲞⲚⲤ.
27 ௨௭ ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
ⲕ̅ⲍ̅ⲪⲎ ⲆⲈ ⲈⲦϬⲒ ⲘⲠⲈϤϢⲪⲎⲢ ⲚϪⲞⲚⲤ ⲀϤϪⲞⲖϤ ⲈⲂⲞⲖ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲚⲒⲘ ⲠⲈ ⲈⲦⲀϤⲬⲀⲔ ⲚⲀⲢⲬⲰⲚ ⲒⲈ ⲢⲈϤϮϨⲀⲠ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲚ.
28 ௨௮ நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
ⲕ̅ⲏ̅ⲘⲎ ⲈⲔⲞⲨⲰϢ ⲈϦⲞⲐⲂⲈⲦ ⲚⲐⲞⲔ ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲀⲔϦⲰⲦⲈⲂ ⲘⲠⲒⲢⲈⲘⲚⲬⲎⲘⲒ ⲚⲤⲀϤ.
29 ௨௯ இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
ⲕ̅ⲑ̅ⲀϤⲪⲰⲦ ⲆⲈ ⲚϪⲈⲘⲰⲨⲤⲎⲤ ϦⲈⲚⲠⲀⲒⲤⲀϪⲒ ⲀϤⲈⲢⲢⲈⲘⲚϪⲰⲒⲖⲒ ϦⲈⲚⲠⲔⲀϨⲒ ⲘⲘⲀⲆⲒⲀⲘ ⲠⲒⲘⲀ ⲈⲦⲀϤϪⲪⲈ ϢⲎⲢⲒ ⲂⲘⲘⲀⲨ.
30 ௩0 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
ⲗ̅ⲈⲦⲀⲨϪⲰⲔ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲘⲚⲢⲞⲘⲠⲒ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈⲢⲞϤ ϦⲈⲚⲠϢⲀϤⲈ ⲚⲦⲈⲠⲦⲰⲞⲨ ⲚⲤⲒⲚⲀ ⲚϪⲈⲞⲨⲀⲄⲄⲈⲖⲞⲤ ϦⲈⲚⲞⲨϢⲀϨ ⲚⲬⲢⲰⲘ ϨⲒϪⲈⲚ ⲞⲨⲂⲀⲦⲞⲤ.
31 ௩௧ மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
ⲗ̅ⲁ̅ⲘⲰⲨⲤⲎⲤ ⲆⲈ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲈⲠⲒϨⲞⲢⲀⲘⲀ ⲀϤⲈⲢϢⲪⲎⲢⲒ ⲈϤⲚⲀⲒ ⲆⲈ ⲈϮⲚⲒⲀⲦϤ ⲀⲤϢⲰⲠⲒ ⲚϪⲈⲞⲨⲤⲘⲎ ⲚⲦⲈⲠϬⲞⲒⲤ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ
32 ௩௨ நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
ⲗ̅ⲃ̅ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲪⲚⲞⲨϮ ⲚⲦⲈⲚⲈⲔⲒⲞϮ ⲪⲚⲞⲨϮ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲚⲈⲘ ⲪⲚⲞⲨϮ ⲚⲒⲤⲀⲀⲔ ⲚⲈⲘ ⲪⲚⲞⲨϮ ⲚⲒⲀⲔⲰⲂ ⲀϤⲤⲐⲈⲢⲦⲈⲢ ⲆⲈ ⲚϪⲈⲘⲰⲨⲤⲎⲤ ⲘⲠⲈϤⲈⲢⲦⲞⲖⲘⲀⲚ ⲈϮⲚⲒⲀⲦϤ.
33 ௩௩ பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
ⲗ̅ⲅ̅ⲠⲈϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲆⲈ ⲚⲀϤ ϪⲈ ⲂⲰⲖ ⲘⲠⲒⲐⲰⲞⲨⲒ ⲈⲂⲞⲖ ϨⲒ ⲚⲈⲔϬⲀⲖⲀⲨϪ ⲠⲒⲘⲀ ⲄⲀⲢ ⲈⲦⲈⲔⲞϨⲒ ⲈⲢⲀⲦⲔ ϨⲒϪⲰϤ ⲞⲨⲔⲀϨⲒ ⲈϤⲞⲨⲀⲂ ⲠⲈ.
34 ௩௪ எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
ⲗ̅ⲇ̅ϦⲈⲚ ⲞⲨⲚⲀⲨ ⲀⲒⲚⲀⲨ ⲈⲠⲦϨⲈⲘⲔⲞ ⲘⲠⲀⲖⲀⲞⲤ ⲈⲦϦⲈⲚ ⲬⲎⲘⲒ ⲞⲨⲞϨ ⲀⲒⲤⲰⲦⲈⲘ ⲈⲠⲞⲨϤⲒⲀϨⲞⲘ ⲀⲒⲒ ⲈⲠⲈⲤⲎⲦ ⲈⲚⲀϨⲘⲞⲨ ϮⲚⲞⲨ ⲆⲈ ⲀⲘⲞⲨ ⲚⲦⲀⲞⲨⲞⲢⲠⲔ ⲈϨⲢⲎⲒ ⲈⲬⲎⲘⲒ.
35 ௩௫ உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
ⲗ̅ⲉ̅ⲪⲀⲒ ⲠⲈ ⲘⲰⲨⲤⲎⲤ ⲈⲦⲀⲨϪⲞⲖϤ ⲈⲂⲞⲖ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲚⲒⲘ ⲀϤⲬⲀⲔ ⲚⲀⲢⲬⲰⲚ ⲒⲈ ⲢⲈϤϮϨⲀⲠ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲚ ⲪⲀⲒ ⲆⲈ ⲀⲪⲚⲞⲨϮ ⲦⲀⲞⲨⲞϤ ⲚⲀⲢⲬⲰⲚ ⲚⲈⲘ ⲢⲈϤⲤⲰϮ ϦⲈⲚⲦϪⲒϪ ⲘⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲪⲎ ⲈⲦⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲈⲢⲞϤ ϦⲈⲚⲠⲒⲂⲀⲦⲞⲤ.
36 ௩௬ இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ⲗ̅ⲋ̅ⲪⲎ ⲈⲦⲀϤⲈⲚⲞⲨ ⲈⲂⲞⲖ ⲈⲀϤⲒⲢⲒ ⲚϨⲀⲚⲘⲎ ⲒⲚⲒ ⲚⲈⲘ ϨⲀⲚϢⲪⲎⲢⲒ ϦⲈⲚⲠⲔⲀϨⲒ ⲚⲬⲎⲘⲒ ⲚⲈⲘ ⲪⲒⲞⲘ ⲚϢⲀⲢⲒ ⲚⲈⲘ ϦⲈⲚⲠϢⲀϤⲈ ⲚⲘⲚⲢⲞⲘⲠⲒ.
37 ௩௭ இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
ⲗ̅ⲍ̅ⲪⲀⲒ ⲠⲈ ⲘⲰⲨⲤⲎⲤ ⲈⲦⲀϤϪⲞⲤ ⲚⲚⲈⲚϢⲎⲢⲒ ⲘⲠⲒⲤⲖ ϪⲈ ⲈⲢⲈ ⲪⲚⲞⲨϮ ⲦⲞⲨⲚⲞⲤ ⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲚⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲤⲚⲎⲞⲨ ⲚⲀ ⲠⲀⲢⲎϮ ⲤⲰⲦⲈⲘ ⲚⲤⲰϤ.
38 ௩௮ சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
ⲗ̅ⲏ̅ⲪⲀⲒ ⲠⲈⲦⲀϤϢⲰⲠⲒ ϦⲈⲚϮⲈⲔⲔⲖⲎⲤⲒⲀ ϨⲒ ⲠϢⲀϤⲈ ⲚⲈⲘ ⲠⲒⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲈⲦⲤⲀϪⲒ ⲚⲈⲘⲀϤ ϨⲒϪⲈⲚ ⲠⲦⲰⲞⲨ ⲚⲤⲒⲚⲀ ⲚⲈⲘ ⲚⲈⲚⲒⲞϮ ⲪⲀⲒ ⲈⲦⲀϤϬⲒ ⲚϨⲀⲚⲤⲀϪⲒ ⲚⲰⲚϦ ⲈⲦⲎⲒⲦⲞⲨ ⲚⲰⲦⲈⲚ.
39 ௩௯ இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
ⲗ̅ⲑ̅ⲪⲀⲒ ⲈⲦⲈ ⲘⲠⲞⲨⲞⲨⲰϢ ⲈⲤⲰⲦⲈⲘ ⲚⲤⲰϤ ⲚϪⲈⲚⲈⲚⲒⲞϮ ⲀⲖⲖⲀ ⲀⲨⲬⲀϤ ⲞⲨⲞϨ ⲀⲨⲔⲞⲦⲞⲨ ϦⲈⲚⲠⲞⲨϨⲎⲦ ⲈϨⲢⲎⲒ ⲈⲬⲎⲘⲒ.
40 ௪0 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
ⲙ̅ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲀⲀⲢⲰⲚ ϪⲈ ⲘⲀⲐⲀⲘⲒⲞ ⲚⲀⲚ ⲚϨⲀⲚⲚⲞⲨϮ ⲚⲀⲒ ⲈⲐⲚⲀⲤⲰⲔ ϦⲀϪⲰⲚ ⲪⲀⲒ ⲄⲀⲢ ⲠⲈ ⲘⲰⲨⲤⲎⲤ ⲈⲦⲀϤⲈⲚⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲔⲀϨⲒ ⲚⲬⲎⲘⲒ ⲚⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲀⲚ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲈⲦⲀϤϢⲰⲠⲒ ⲘⲘⲞϤ.
41 ௪௧ அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
ⲙ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲐⲀⲘⲒⲞ ⲚⲰⲞⲨ ⲚⲞⲨⲘⲀⲤⲒ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲀⲨⲒⲚⲒ ⲚⲞⲨϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲈϨⲢⲎⲒ ⲘⲠⲒⲒⲆⲰⲖⲞⲚ ⲞⲨⲞϨ ⲀⲨⲞⲨⲚⲞϤ ϦⲈⲚⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲚⲞⲨϪⲒϪ.
42 ௪௨ அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
ⲙ̅ⲃ̅ⲀϤⲔⲞⲦⲞⲨ ⲚϪⲈⲪⲚⲞⲨϮ ⲈϢⲈⲘϢⲒ ⲚϮⲤⲦⲢⲀⲦⲒⲀ ⲚⲦⲈⲦⲪⲈ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲤϦⲎ ⲞⲨⲦ ϨⲒ ⲠϪⲰⲘ ⲚⲦⲈⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ϪⲈ ⲘⲎ ϨⲀⲚϦⲞⲖϦⲈⲖ ⲚⲈⲘ ϨⲀⲚϢⲞⲨϢⲰⲞⲨϢⲒ ⲀⲢⲈⲦⲈⲚⲈⲚⲞⲨ ⲚⲎⲒ ⲚϨⲢⲎⲒ ϨⲒ ⲠϢⲀϤⲈ ⲚⲘⲚⲢⲞⲘⲠⲒ ⲠⲎⲒ ⲘⲠⲒⲤⲖ.
43 ௪௩ பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
ⲙ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲦⲈⲦⲈⲚϬⲒ ⲚϮⲤⲔⲨⲚⲎ ⲚⲦⲈⲘⲞⲖⲞⲬ ⲚⲈⲘ ⲠⲒⲤⲒⲞⲨ ⲚⲦⲈⲠⲈⲦⲈⲚⲚⲞⲨϮ ⲢⲎⲪⲀⲚ ⲚⲒⲦⲨⲠⲞⲤ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲐⲀⲘⲒⲰⲞⲨ ⲈⲞⲨⲰϢⲦ ⲘⲘⲰⲞⲨ ⲈⲒⲈⲞⲨⲈⲦⲈⲂ ⲐⲎⲚⲞⲨ ⲈⲂⲞⲖ ⲈⲚⲒⲤⲀ ⲚⲦⲈⲂⲀⲂⲨⲖⲰⲚ.
44 ௪௪ மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
ⲙ̅ⲇ̅ϮⲤⲔⲨⲚⲎ ⲚⲦⲈϮⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ⲐⲎ ⲈⲚⲀⲤ ⲚⲦⲈⲚⲈⲚⲒⲞϮ ϨⲒ ⲠϢⲀϤⲈ ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲀϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲚϪⲈⲪⲎ ⲈⲦⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲘⲰⲨⲤⲎⲤ ⲈⲐⲀⲘⲒⲞⲤ ⲔⲀⲦⲀ ⲠⲒⲦⲨⲠⲞⲤ ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲈⲢⲞϤ.
45 ௪௫ மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
ⲙ̅ⲉ̅ⲐⲀⲒ ⲈⲦⲀⲨⲞⲖⲤ ⲈϦⲞⲨⲚ ⲚⲈⲘⲰⲞⲨ ⲈⲀⲨϢⲞⲠⲤ ⲈⲢⲰⲞⲨ ⲚϪⲈⲚⲈⲚⲒⲞϮ ⲚⲈⲘ ⲒⲎⲤⲞⲨ ϦⲈⲚⲠⲒⲀⲘⲀϨⲒ ⲚⲦⲈⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲚⲎ ⲈⲦⲀ ⲪⲚⲞⲨϮ ϨⲒⲦⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲀⲦϨⲎ ⲘⲠϨⲞ ⲚⲦⲈⲚⲈⲚⲒⲞϮ ϢⲀ ⲚⲒⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈⲆⲀⲨⲒⲆ.
46 ௪௬ இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ⲙ̅ⲋ̅ⲪⲎ ⲈⲦⲀϤϪⲒⲘⲒ ⲚⲞⲨϨⲘⲞⲦ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲚⲞⲨϮ ⲀϤⲈⲢⲈⲦⲒⲚ ⲈⲐⲀⲘⲒⲞ ⲚⲞⲨⲘⲀ ⲚϢⲰⲠⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲚⲒⲀⲔⲰⲂ.
47 ௪௭ சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
ⲙ̅ⲍ̅ⲤⲞⲖⲞⲘⲰⲚ ⲆⲈ ⲀϤⲔⲈⲦ ⲞⲨⲎⲒ ⲚⲀϤ.
48 ௪௮ ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
ⲙ̅ⲏ̅ⲀⲖⲖⲀ ⲚⲀⲢⲈ ⲠⲈⲦϬⲞⲤⲒ ϢⲞⲠ ⲀⲚ ϦⲈⲚϨⲀⲚⲘⲞⲨⲚⲔ ⲚϪⲒϪ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲈ ⲠⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ϪⲰ ⲘⲘⲞⲤ
49 ௪௯ வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
ⲙ̅ⲑ̅ϪⲈ ⲦⲪⲈ ⲠⲈ ⲠⲀⲐⲢⲞⲚⲞⲤ ⲠⲔⲀϨⲒ ⲆⲈ ⲠⲈ ⲪⲘⲀ ⲚⲤⲈⲘⲚⲒ ⲚⲦⲈⲚⲀϬⲀⲖⲀⲨϪ ⲀϢ ⲚⲎⲒ ⲪⲎ ⲈⲦⲈⲦⲈⲚⲚⲀⲔⲞⲦϤ ⲚⲎⲒ ⲠⲈϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲒⲈ ⲀϢ ⲠⲈ ⲪⲘⲀ ⲚⲦⲈⲠⲀⲘⲀ ⲚⲈⲘⲦⲞⲚ.
50 ௫0 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
ⲛ̅ⲘⲎ ⲦⲀϪⲒϪ ⲀⲚ ⲀⲤⲐⲀⲘⲒⲈ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ.
51 ௫௧ “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
ⲛ̅ⲁ̅ⲚⲒⲚⲀϢϮ ⲚⲀϨⲂⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲦⲤⲈⲂⲒ ϦⲈⲚⲠⲞⲨⲔⲈϨⲎⲦ ⲚⲈⲘ ⲚⲞⲨⲔⲈⲘⲀϢϪ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲦⲈⲦⲈⲚϮ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲈⲚ ⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲘⲪⲢⲎϮ ⲚⲚⲈⲦⲈⲚⲔⲈⲒⲞϮ ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ.
52 ௫௨ தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
ⲛ̅ⲃ̅ⲚⲒⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈⲦⲈ ⲘⲠⲈ ⲚⲈⲦⲈⲚⲒⲞϮ ϬⲞϪⲒ ⲚⲤⲰϤ ⲞⲨⲞϨ ⲀⲨϦⲰⲦⲈⲂ ⲚⲚⲎ ⲈⲦⲀⲨⲈⲢϢⲞⲢⲠ ⲚϨⲒⲰⲒϢ ⲘⲠϪⲒⲚⲒ ⲚⲦⲈⲠⲒⲐⲘⲎⲒ ⲪⲀⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲦⲎⲒϤ ⲞⲨⲞϨ ⲀⲢⲈⲦⲈⲚϦⲞⲐⲂⲈϤ.
53 ௫௩ தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
ⲛ̅ⲅ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲀⲢⲈⲦⲈⲚϬⲒ ⲘⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲈϨⲀⲚⲐⲰϢ ⲚⲀⲄⲄⲈⲖⲞⲤ ⲘⲠⲈⲦⲈⲚⲀⲢⲈϨ ⲈⲢⲞϤ.
54 ௫௪ இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
ⲛ̅ⲇ̅ⲚⲀⲒ ⲆⲈ ⲈⲦⲀⲨⲤⲞⲐⲘⲞⲨ ⲚⲀⲨϢⲞⲠϢⲈⲠ ⲘⲠⲞⲨϨⲎⲦ ⲞⲨⲞϨ ⲚⲀⲨϦⲢⲀϪⲢⲈϪ ⲚⲚⲞⲨⲚⲀϪϨⲒ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ.
55 ௫௫ அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
ⲛ̅ⲉ̅ⲤⲦⲈⲪⲀⲚⲞⲤ ⲆⲈ ⲈϤⲘⲈϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ ⲚⲈⲘ ⲪⲚⲀϨϮ ⲀϤⲤⲞⲘⲤ ⲈϨⲢⲎⲒ ⲈⲦⲪⲈ ⲀϤⲚⲀⲨ ⲈⲠⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲤⲀⲞⲨⲒⲚⲀⲘ ⲘⲪⲚⲞⲨϮ.
56 ௫௬ அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
ⲛ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ϪⲈ ϨⲎⲠⲠⲈ ϮⲚⲀⲨ ⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲈⲨⲞⲨⲎⲚ ⲞⲨⲞϨ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲤⲀⲞⲨⲒⲚⲀⲘ ⲘⲪⲚⲞⲨϮ.
57 ௫௭ அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
ⲛ̅ⲍ̅ⲀⲨⲰϢ ⲈⲂⲞⲖ ⲦⲎⲢⲞⲨ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲚⲤⲘⲎ ⲀⲨⲀⲘⲀϨⲒ ⲚⲚⲞⲨⲘⲀϢϪ ⲞⲨⲞϨ ⲀⲨϬⲞϪⲒ ⲈⲨⲤⲞⲠ ⲦⲎⲢⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ.
58 ௫௮ அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
ⲛ̅ⲏ̅ⲀⲨϨⲒⲦϤ ⲤⲀⲂⲞⲖ ⲚϮⲂⲀⲔⲒ ⲀⲨϨⲒⲰⲚⲒ ⲈϪⲰϤ ⲞⲨⲞϨ ⲚⲒⲘⲈⲐⲢⲈⲨ ⲀⲨⲬⲰ ⲚⲚⲞⲨϨⲂⲰⲤ ϦⲀⲢⲀⲦϤ ⲚⲞⲨϦⲈⲖϢⲒⲢⲒ ⲈⲠⲈϤⲢⲀⲚ ⲠⲈ ⲤⲀⲨⲖⲞⲤ.
59 ௫௯ அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
ⲛ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲀⲨϨⲒⲰⲚⲒ ⲈϪⲈⲚ ⲤⲦⲈⲪⲀⲚⲞⲤ ⲈϤϮϨⲞ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ϢⲈⲠ ⲠⲀⲠⲚⲈⲨⲘⲀⲈⲢⲞⲔ.
60 ௬0 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
ⲝ̅ⲀϤϨⲒⲦϤ ⲈϪⲈⲚ ⲚⲈϤⲔⲈⲖⲒ ⲀϤⲰϢ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲚⲒϢϮ ⲚⲤⲘⲎ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲚⲈⲔⲈⲠ ⲠⲀⲒⲚⲞⲂⲒ ⲈⲢⲰⲞⲨ ⲪⲀⲒ ⲆⲈ ⲈⲦⲀϤϪⲞϤ ⲀϤⲈⲚⲔⲞⲦ.