< அப்போஸ்தலர் 5 >
1 ௧ அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.
ਤਦਾ ਅਨਾਨਿਯਨਾਮਕ ਏਕੋ ਜਨੋ ਯਸ੍ਯ ਭਾਰ੍ੱਯਾਯਾ ਨਾਮ ਸਫੀਰਾ ਸ ਸ੍ਵਾਧਿਕਾਰੰ ਵਿਕ੍ਰੀਯ
2 ௨ தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
ਸ੍ਵਭਾਰ੍ੱਯਾਂ ਜ੍ਞਾਪਯਿਤ੍ਵਾ ਤਨ੍ਮੂਲ੍ਯਸ੍ਯੈਕਾਂਸ਼ੰ ਸਙ੍ਗੋਪ੍ਯ ਸ੍ਥਾਪਯਿਤ੍ਵਾ ਤਦਨ੍ਯਾਂਸ਼ਮਾਤ੍ਰਮਾਨੀਯ ਪ੍ਰੇਰਿਤਾਨਾਂ ਚਰਣੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਿਤਵਾਨ੍|
3 ௩ பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
ਤਸ੍ਮਾਤ੍ ਪਿਤਰੋਕਥਯਤ੍ ਹੇ ਅਨਾਨਿਯ ਭੂਮੇ ਰ੍ਮੂਲ੍ਯੰ ਕਿਞ੍ਚਿਤ੍ ਸਙ੍ਗੋਪ੍ਯ ਸ੍ਥਾਪਯਿਤੁੰ ਪਵਿਤ੍ਰਸ੍ਯਾਤ੍ਮਨਃ ਸੰਨਿਧੌ ਮ੍ਰੁʼਸ਼਼ਾਵਾਕ੍ਯੰ ਕਥਯਿਤੁਞ੍ਚ ਸ਼ੈਤਾਨ੍ ਕੁਤਸ੍ਤਵਾਨ੍ਤਃਕਰਣੇ ਪ੍ਰਵ੍ਰੁʼੱਤਿਮਜਨਯਤ੍?
4 ௪ அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
ਸਾ ਭੂਮਿ ਰ੍ਯਦਾ ਤਵ ਹਸ੍ਤਗਤਾ ਤਦਾ ਕਿੰ ਤਵ ਸ੍ਵੀਯਾ ਨਾਸੀਤ੍? ਤਰ੍ਹਿ ਸ੍ਵਾਨ੍ਤਃਕਰਣੇ ਕੁਤ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਕੁਕਲ੍ਪਨਾ ਤ੍ਵਯਾ ਕ੍ਰੁʼਤਾ? ਤ੍ਵੰ ਕੇਵਲਮਨੁਸ਼਼੍ਯਸ੍ਯ ਨਿਕਟੇ ਮ੍ਰੁʼਸ਼਼ਾਵਾਕ੍ਯੰ ਨਾਵਾਦੀਃ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਨਿਕਟੇ(ਅ)ਪਿ|
5 ௫ அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது.
ਏਤਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵੈਵ ਸੋ(ਅ)ਨਾਨਿਯੋ ਭੂਮੌ ਪਤਨ੍ ਪ੍ਰਾਣਾਨ੍ ਅਤ੍ਯਜਤ੍, ਤਦ੍ਵ੍ਰੁʼੱਤਾਨ੍ਤੰ ਯਾਵਨ੍ਤੋ ਲੋਕਾ ਅਸ਼੍ਰੁʼਣ੍ਵਨ੍ ਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਮਹਾਭਯਮ੍ ਅਜਾਯਤ੍|
6 ௬ வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
ਤਦਾ ਯੁਵਲੋਕਾਸ੍ਤੰ ਵਸ੍ਤ੍ਰੇਣਾੱਛਾਦ੍ਯ ਬਹਿ ਰ੍ਨੀਤ੍ਵਾ ਸ਼੍ਮਸ਼ਾਨੇ(ਅ)ਸ੍ਥਾਪਯਨ੍|
7 ௭ ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
ਤਤਃ ਪ੍ਰਹਰੈਕਾਨਨ੍ਤਰੰ ਕਿੰ ਵ੍ਰੁʼੱਤੰ ਤੰਨਾਵਗਤ੍ਯ ਤਸ੍ਯ ਭਾਰ੍ੱਯਾਪਿ ਤਤ੍ਰ ਸਮੁਪਸ੍ਥਿਤਾ|
8 ௮ பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.
ਤਤਃ ਪਿਤਰਸ੍ਤਾਮ੍ ਅਪ੍ਰੁʼੱਛਤ੍, ਯੁਵਾਭ੍ਯਾਮ੍ ਏਤਾਵਨ੍ਮੁਦ੍ਰਾਭ੍ਯੋ ਭੂਮਿ ਰ੍ਵਿਕ੍ਰੀਤਾ ਨ ਵਾ? ਏਤਤ੍ਵੰ ਵਦ; ਤਦਾ ਸਾ ਪ੍ਰਤ੍ਯਵਾਦੀਤ੍ ਸਤ੍ਯਮ੍ ਏਤਾਵਦ੍ਭ੍ਯੋ ਮੁਦ੍ਰਾਭ੍ਯ ਏਵ|
9 ௯ பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
ਤਤਃ ਪਿਤਰੋਕਥਯਤ੍ ਯੁਵਾਂ ਕਥੰ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯਾਤ੍ਮਾਨੰ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੁਮ੍ ਏਕਮਨ੍ਤ੍ਰਣਾਵਭਵਤਾਂ? ਪਸ਼੍ਯ ਯੇ ਤਵ ਪਤਿੰ ਸ਼੍ਮਸ਼ਾਨੇ ਸ੍ਥਾਪਿਤਵਨ੍ਤਸ੍ਤੇ ਦ੍ਵਾਰਸ੍ਯ ਸਮੀਪੇ ਸਮੁਪਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ ਤ੍ਵਾਮਪਿ ਬਹਿਰ੍ਨੇਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
10 ௧0 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள்.
ਤਤਃ ਸਾਪਿ ਤਸ੍ਯ ਚਰਣਸੰਨਿਧੌ ਪਤਿਤ੍ਵਾ ਪ੍ਰਾਣਾਨ੍ ਅਤ੍ਯਾਕ੍ਸ਼਼ੀਤ੍| ਪਸ਼੍ਚਾਤ੍ ਤੇ ਯੁਵਾਨੋ(ਅ)ਭ੍ਯਨ੍ਤਰਮ੍ ਆਗਤ੍ਯ ਤਾਮਪਿ ਮ੍ਰੁʼਤਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਬਹਿ ਰ੍ਨੀਤ੍ਵਾ ਤਸ੍ਯਾਃ ਪਤ੍ਯੁਃ ਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਸ਼੍ਮਸ਼ਾਨੇ ਸ੍ਥਾਪਿਤਵਨ੍ਤਃ|
11 ௧௧ சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.
ਤਸ੍ਮਾਤ੍ ਮਣ੍ਡਲ੍ਯਾਃ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾ ਅਨ੍ਯਲੋਕਾਸ਼੍ਚ ਤਾਂ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸਾਧ੍ਵਸੰ ਗਤਾਃ|
12 ௧௨ அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਪ੍ਰੇਰਿਤਾਨਾਂ ਹਸ੍ਤੈ ਰ੍ਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਬਹ੍ਵਾਸ਼੍ਚਰ੍ੱਯਾਣ੍ਯਦ੍ਭੁਤਾਨਿ ਕਰ੍ੰਮਾਣ੍ਯਕ੍ਰਿਯਨ੍ਤ; ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਸਰ੍ੱਵ ਏਕਚਿੱਤੀਭੂਯ ਸੁਲੇਮਾਨੋ (ਅ)ਲਿਨ੍ਦੇ ਸਮ੍ਭੂਯਾਸਨ੍|
13 ௧௩ மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
ਤੇਸ਼਼ਾਂ ਸਙ੍ਘਾਨ੍ਤਰ੍ਗੋ ਭਵਿਤੁੰ ਕੋਪਿ ਪ੍ਰਗਲ੍ਭਤਾਂ ਨਾਗਮਤ੍ ਕਿਨ੍ਤੁ ਲੋਕਾਸ੍ਤਾਨ੍ ਸਮਾਦ੍ਰਿਯਨ੍ਤ|
14 ௧௪ அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள்.
ਸ੍ਤ੍ਰਿਯਃ ਪੁਰੁਸ਼਼ਾਸ਼੍ਚ ਬਹਵੋ ਲੋਕਾ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯ ਪ੍ਰਭੁੰ ਸ਼ਰਣਮਾਪੰਨਾਃ|
15 ௧௫ சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
ਪਿਤਰਸ੍ਯ ਗਮਨਾਗਮਨਾਭ੍ਯਾਂ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਤਸ੍ਯ ਛਾਯਾ ਕਸ੍ਮਿੰਸ਼੍ਚਿੱਜਨੇ ਲਗਿਸ਼਼੍ਯਤੀਤ੍ਯਾਸ਼ਯਾ ਲੋਕਾ ਰੋਗਿਣਃ ਸ਼ਿਵਿਕਯਾ ਖਟ੍ਵਯਾ ਚਾਨੀਯ ਪਥਿ ਪਥਿ ਸ੍ਥਾਪਿਤਵਨ੍ਤਃ|
16 ௧௬ சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.
ਚਤੁਰ੍ਦਿਕ੍ਸ੍ਥਨਗਰੇਭ੍ਯੋ ਬਹਵੋ ਲੋਕਾਃ ਸਮ੍ਭੂਯ ਰੋਗਿਣੋ(ਅ)ਪਵਿਤ੍ਰਭੁਤਗ੍ਰਸ੍ਤਾਂਸ਼੍ਚ ਯਿਰੂਸ਼ਾਲਮਮ੍ ਆਨਯਨ੍ ਤਤਃ ਸਰ੍ੱਵੇ ਸ੍ਵਸ੍ਥਾ ਅਕ੍ਰਿਯਨ੍ਤ|
17 ௧௭ அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
ਅਨਨ੍ਤਰੰ ਮਹਾਯਾਜਕਃ ਸਿਦੂਕਿਨਾਂ ਮਤਗ੍ਰਾਹਿਣਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਸਹਚਰਾਸ਼੍ਚ
18 ௧௮ அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
ਮਹਾਕ੍ਰੋਧਾਨ੍ਤ੍ਵਿਤਾਃ ਸਨ੍ਤਃ ਪ੍ਰੇਰਿਤਾਨ੍ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਨੀਚਲੋਕਾਨਾਂ ਕਾਰਾਯਾਂ ਬੱਧ੍ਵਾ ਸ੍ਥਾਪਿਤਵਨ੍ਤਃ|
19 ௧௯ கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
ਕਿਨ੍ਤੁ ਰਾਤ੍ਰੌ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਦੂਤਃ ਕਾਰਾਯਾ ਦ੍ਵਾਰੰ ਮੋਚਯਿਤ੍ਵਾ ਤਾਨ੍ ਬਹਿਰਾਨੀਯਾਕਥਯਤ੍,
20 ௨0 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
ਯੂਯੰ ਗਤ੍ਵਾ ਮਨ੍ਦਿਰੇ ਦਣ੍ਡਾਯਮਾਨਾਃ ਸਨ੍ਤੋ ਲੋਕਾਨ੍ ਪ੍ਰਤੀਮਾਂ ਜੀਵਨਦਾਯਿਕਾਂ ਸਰ੍ੱਵਾਂ ਕਥਾਂ ਪ੍ਰਚਾਰਯਤ|
21 ௨௧ அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள்.
ਇਤਿ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤੇ ਪ੍ਰਤ੍ਯੂਸ਼਼ੇ ਮਨ੍ਦਿਰ ਉਪਸ੍ਥਾਯ ਉਪਦਿਸ਼਼੍ਟਵਨ੍ਤਃ| ਤਦਾ ਸਹਚਰਗਣੇਨ ਸਹਿਤੋ ਮਹਾਯਾਜਕ ਆਗਤ੍ਯ ਮਨ੍ਤ੍ਰਿਗਣਮ੍ ਇਸ੍ਰਾਯੇਲ੍ਵੰਸ਼ਸ੍ਯ ਸਰ੍ੱਵਾਨ੍ ਰਾਜਸਭਾਸਦਃ ਸਭਾਸ੍ਥਾਨ੍ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕਾਰਾਯਾਸ੍ਤਾਨ੍ ਆਪਯਿਤੁੰ ਪਦਾਤਿਗਣੰ ਪ੍ਰੇਰਿਤਵਾਨ੍|
22 ௨௨ அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
ਤਤਸ੍ਤੇ ਗਤ੍ਵਾ ਕਾਰਾਯਾਂ ਤਾਨ੍ ਅਪ੍ਰਾਪ੍ਯ ਪ੍ਰਤ੍ਯਾਗਤ੍ਯ ਇਤਿ ਵਾਰ੍ੱਤਾਮ੍ ਅਵਾਦਿਸ਼਼ੁਃ,
23 ௨௩ சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
ਵਯੰ ਤਤ੍ਰ ਗਤ੍ਵਾ ਨਿਰ੍ੱਵਿਘ੍ਨੰ ਕਾਰਾਯਾ ਦ੍ਵਾਰੰ ਰੁੱਧੰ ਰਕ੍ਸ਼਼ਕਾਂਸ਼੍ਚ ਦ੍ਵਾਰਸ੍ਯ ਬਹਿਰ੍ਦਣ੍ਡਾਯਮਾਨਾਨ੍ ਅਦਰ੍ਸ਼ਾਮ ਏਵ ਕਿਨ੍ਤੁ ਦ੍ਵਾਰੰ ਮੋਚਯਿਤ੍ਵਾ ਤਨ੍ਮਧ੍ਯੇ ਕਮਪਿ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਤਾਃ|
24 ௨௪ இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
ਏਤਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਮਹਾਯਾਜਕੋ ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਸੇਨਾਪਤਿਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਸ਼੍ਚ, ਇਤ ਪਰੰ ਕਿਮਪਰੰ ਭਵਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਚਿਨ੍ਤਯਿਤ੍ਵਾ ਸਨ੍ਦਿਗ੍ਧਚਿੱਤਾ ਅਭਵਨ੍|
25 ௨௫ அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
ਏਤਸ੍ਮਿੰਨੇਵ ਸਮਯੇ ਕਸ਼੍ਚਿਤ੍ ਜਨ ਆਗਤ੍ਯ ਵਾਰ੍ੱਤਾਮੇਤਾਮ੍ ਅਵਦਤ੍ ਪਸ਼੍ਯਤ ਯੂਯੰ ਯਾਨ੍ ਮਾਨਵਾਨ੍ ਕਾਰਾਯਾਮ੍ ਅਸ੍ਥਾਪਯਤ ਤੇ ਮਨ੍ਦਿਰੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤੋ ਲੋਕਾਨ੍ ਉਪਦਿਸ਼ਨ੍ਤਿ|
26 ௨௬ உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
ਤਦਾ ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਸੇਨਾਪਤਿਃ ਪਦਾਤਯਸ਼੍ਚ ਤਤ੍ਰ ਗਤ੍ਵਾ ਚੇੱਲੋਕਾਃ ਪਾਸ਼਼ਾਣਾਨ੍ ਨਿਕ੍ਸ਼਼ਿਪ੍ਯਾਸ੍ਮਾਨ੍ ਮਾਰਯਨ੍ਤੀਤਿ ਭਿਯਾ ਵਿਨਤ੍ਯਾਚਾਰੰ ਤਾਨ੍ ਆਨਯਨ੍|
27 ௨௭ அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
ਤੇ ਮਹਾਸਭਾਯਾ ਮਧ੍ਯੇ ਤਾਨ੍ ਅਸ੍ਥਾਪਯਨ੍ ਤਤਃ ਪਰੰ ਮਹਾਯਾਜਕਸ੍ਤਾਨ੍ ਅਪ੍ਰੁʼੱਛਤ੍,
28 ௨௮ நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
ਅਨੇਨ ਨਾਮ੍ਨਾ ਸਮੁਪਦੇਸ਼਼੍ਟੁੰ ਵਯੰ ਕਿੰ ਦ੍ਰੁʼਢੰ ਨ ਨ੍ਯਸ਼਼ੇਧਾਮ? ਤਥਾਪਿ ਪਸ਼੍ਯਤ ਯੂਯੰ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਤੇਨੋਪਦੇਸ਼ੇਨੇ ਯਿਰੂਸ਼ਾਲਮੰ ਪਰਿਪੂਰ੍ਣੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਜਨਸ੍ਯ ਰਕ੍ਤਪਾਤਜਨਿਤਾਪਰਾਧਮ੍ ਅਸ੍ਮਾਨ੍ ਪ੍ਰਤ੍ਯਾਨੇਤੁੰ ਚੇਸ਼਼੍ਟਧ੍ਵੇ|
29 ௨௯ அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது.
ਤਤਃ ਪਿਤਰੋਨ੍ਯਪ੍ਰੇਰਿਤਾਸ਼੍ਚ ਪ੍ਰਤ੍ਯਵਦਨ੍ ਮਾਨੁਸ਼਼ਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਹਣਾਦ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਹਣਮ੍ ਅਸ੍ਮਾਕਮੁਚਿਤਮ੍|
30 ௩0 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி,
ਯੰ ਯੀਸ਼ੁੰ ਯੂਯੰ ਕ੍ਰੁਸ਼ੇ ਵੇਧਿਤ੍ਵਾਹਤ ਤਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਪੈਤ੍ਰੁʼਕ ਈਸ਼੍ਵਰ ਉੱਥਾਪ੍ਯ
31 ௩௧ இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.
ਇਸ੍ਰਾਯੇਲ੍ਵੰਸ਼ਾਨਾਂ ਮਨਃਪਰਿਵਰ੍ੱਤਨੰ ਪਾਪਕ੍ਸ਼਼ਮਾਞ੍ਚ ਕਰ੍ੱਤੁੰ ਰਾਜਾਨੰ ਪਰਿਤ੍ਰਾਤਾਰਞ੍ਚ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਸ੍ਵਦਕ੍ਸ਼਼ਿਣਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਤਸ੍ਯਾੰਨਤਿਮ੍ ਅਕਰੋਤ੍|
32 ௩௨ இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள்.
ਏਤਸ੍ਮਿਨ੍ ਵਯਮਪਿ ਸਾਕ੍ਸ਼਼ਿਣ ਆਸ੍ਮਹੇ, ਤਤ੍ ਕੇਵਲੰ ਨਹਿ, ਈਸ਼੍ਵਰ ਆਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਭ੍ਯੋ ਯੰ ਪਵਿਤ੍ਰਮ੍ ਆਤ੍ਮਨੰ ਦੱਤਵਾਨ੍ ਸੋਪਿ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਸ੍ਤਿ|
33 ௩௩ அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.
ਏਤਦ੍ਵਾਕ੍ਯੇ ਸ਼੍ਰੁਤੇ ਤੇਸ਼਼ਾਂ ਹ੍ਰੁʼਦਯਾਨਿ ਵਿੱਧਾਨ੍ਯਭਵਨ੍ ਤਤਸ੍ਤੇ ਤਾਨ੍ ਹਨ੍ਤੁੰ ਮਨ੍ਤ੍ਰਿਤਵਨ੍ਤਃ|
34 ௩௪ அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
ਏਤਸ੍ਮਿੰਨੇਵ ਸਮਯੇ ਤਤ੍ਸਭਾਸ੍ਥਾਨਾਂ ਸਰ੍ੱਵਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਸੁਖ੍ਯਾਤੋ ਗਮਿਲੀਯੇਲ੍ਨਾਮਕ ਏਕੋ ਜਨੋ ਵ੍ਯਵਸ੍ਥਾਪਕਃ ਫਿਰੂਸ਼ਿਲੋਕ ਉੱਥਾਯ ਪ੍ਰੇਰਿਤਾਨ੍ ਕ੍ਸ਼਼ਣਾਰ੍ਥੰ ਸ੍ਥਾਨਾਨ੍ਤਰੰ ਗਨ੍ਤੁਮ੍ ਆਦਿਸ਼੍ਯ ਕਥਿਤਵਾਨ੍,
35 ௩௫ சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ਹੇ ਇਸ੍ਰਾਯੇਲ੍ਵੰਸ਼ੀਯਾਃ ਸਰ੍ੱਵੇ ਯੂਯਮ੍ ਏਤਾਨ੍ ਮਾਨੁਸ਼਼ਾਨ੍ ਪ੍ਰਤਿ ਯਤ੍ ਕਰ੍ੱਤੁਮ੍ ਉਦ੍ਯਤਾਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਸਾਵਧਾਨਾ ਭਵਤ|
36 ௩௬ ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள்.
ਇਤਃ ਪੂਰ੍ੱਵੰ ਥੂਦਾਨਾਮੈਕੋ ਜਨ ਉਪਸ੍ਥਾਯ ਸ੍ਵੰ ਕਮਪਿ ਮਹਾਪੁਰੁਸ਼਼ਮ੍ ਅਵਦਤ੍, ਤਤਃ ਪ੍ਰਾਯੇਣ ਚਤੁਃਸ਼ਤਲੋਕਾਸ੍ਤਸ੍ਯ ਮਤਗ੍ਰਾਹਿਣੋਭਵਨ੍ ਪਸ਼੍ਚਾਤ੍ ਸ ਹਤੋਭਵਤ੍ ਤਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਣੋ ਯਾਵਨ੍ਤੋ ਲੋਕਾਸ੍ਤੇ ਸਰ੍ੱਵੇ ਵਿਰ੍ਕੀਰ੍ਣਾਃ ਸਨ੍ਤੋ (ਅ)ਕ੍ਰੁʼਤਕਾਰ੍ੱਯਾ ਅਭਵਨ੍|
37 ௩௭ அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.
ਤਸ੍ਮਾੱਜਨਾਤ੍ ਪਰੰ ਨਾਮਲੇਖਨਸਮਯੇ ਗਾਲੀਲੀਯਯਿਹੂਦਾਨਾਮੈਕੋ ਜਨ ਉਪਸ੍ਥਾਯ ਬਹੂੱਲੋਕਾਨ੍ ਸ੍ਵਮਤੰ ਗ੍ਰਾਹੀਤਵਾਨ੍ ਤਤਃ ਸੋਪਿ ਵ੍ਯਨਸ਼੍ਯਤ੍ ਤਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਣੋ ਯਾਵਨ੍ਤੋ ਲੋਕਾ ਆਸਨ੍ ਤੇ ਸਰ੍ੱਵੇ ਵਿਕੀਰ੍ਣਾ ਅਭਵਨ੍|
38 ௩௮ இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;
ਅਧੁਨਾ ਵਦਾਮਿ, ਯੂਯਮ੍ ਏਤਾਨ੍ ਮਨੁਸ਼਼੍ਯਾਨ੍ ਪ੍ਰਤਿ ਕਿਮਪਿ ਨ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਕ੍ਸ਼਼ਾਨ੍ਤਾ ਭਵਤ, ਯਤ ਏਸ਼਼ ਸਙ੍ਕਲ੍ਪ ਏਤਤ੍ ਕਰ੍ੰਮ ਚ ਯਦਿ ਮਨੁਸ਼਼੍ਯਾਦਭਵਤ੍ ਤਰ੍ਹਿ ਵਿਫਲੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
39 ௩௯ தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
ਯਦੀਸ਼੍ਵਰਾਦਭਵਤ੍ ਤਰ੍ਹਿ ਯੂਯੰ ਤਸ੍ਯਾਨ੍ਯਥਾ ਕਰ੍ੱਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਥ, ਵਰਮ੍ ਈਸ਼੍ਵਰਰੋਧਕਾ ਭਵਿਸ਼਼੍ਯਥ|
40 ௪0 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
ਤਦਾ ਤਸ੍ਯ ਮਨ੍ਤ੍ਰਣਾਂ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਤੇ ਪ੍ਰੇਰਿਤਾਨ੍ ਆਹੂਯ ਪ੍ਰਹ੍ਰੁʼਤ੍ਯ ਯੀਸ਼ੋ ਰ੍ਨਾਮ੍ਨਾ ਕਾਮਪਿ ਕਥਾਂ ਕਥਯਿਤੁੰ ਨਿਸ਼਼ਿਧ੍ਯ ਵ੍ਯਸਰ੍ਜਨ੍|
41 ௪௧ அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਨਾਮਾਰ੍ਥੰ ਵਯੰ ਲੱਜਾਭੋਗਸ੍ਯ ਯੋਗ੍ਯਤ੍ਵੇਨ ਗਣਿਤਾ ਇਤ੍ਯਤ੍ਰ ਤੇ ਸਾਨਨ੍ਦਾਃ ਸਨ੍ਤਃ ਸਭਾਸ੍ਥਾਨਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਅਗੱਛਨ੍|
42 ௪௨ தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਪ੍ਰਤਿਦਿਨੰ ਮਨ੍ਦਿਰੇ ਗ੍ਰੁʼਹੇ ਗ੍ਰੁʼਹੇ ਚਾਵਿਸ਼੍ਰਾਮਮ੍ ਉਪਦਿਸ਼੍ਯ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਸੁਸੰਵਾਦੰ ਪ੍ਰਚਾਰਿਤਵਨ੍ਤਃ|