< அப்போஸ்தலர் 3 >

1 ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
ਤ੍ਰੁʼਤੀਯਯਾਮਵੇਲਾਯਾਂ ਸਤ੍ਯਾਂ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਯਾਃ ਸਮਯੇ ਪਿਤਰਯੋਹਨੌ ਸਮ੍ਭੂਯ ਮਨ੍ਦਿਰੰ ਗੱਛਤਃ|
2 அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.
ਤਸ੍ਮਿੰਨੇਵ ਸਮਯੇ ਮਨ੍ਦਿਰਪ੍ਰਵੇਸ਼ਕਾਨਾਂ ਸਮੀਪੇ ਭਿਕ੍ਸ਼਼ਾਰਣਾਰ੍ਥੰ ਯੰ ਜਨ੍ਮਖਞ੍ਜਮਾਨੁਸ਼਼ੰ ਲੋਕਾ ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਸੁਨ੍ਦਰਨਾਮ੍ਨਿ ਦ੍ਵਾਰੇ ਪ੍ਰਤਿਦਿਨਮ੍ ਅਸ੍ਥਾਪਯਨ੍ ਤੰ ਵਹਨ੍ਤਸ੍ਤਦ੍ਵਾਰੰ ਆਨਯਨ੍|
3 அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
ਤਦਾ ਪਿਤਰਯੋਹਨੌ ਮਨ੍ਤਿਰੰ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁਮ੍ ਉਦ੍ਯਤੌ ਵਿਲੋਕ੍ਯ ਸ ਖਞ੍ਜਸ੍ਤੌ ਕਿਞ੍ਚਿਦ੍ ਭਿਕ੍ਸ਼਼ਿਤਵਾਨ੍|
4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
ਤਸ੍ਮਾਦ੍ ਯੋਹਨਾ ਸਹਿਤਃ ਪਿਤਰਸ੍ਤਮ੍ ਅਨਨ੍ਯਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਯਾ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਪ੍ਰੋਕ੍ਤਵਾਨ੍ ਆਵਾਂ ਪ੍ਰਤਿ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਕੁਰੁ|
5 அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
ਤਤਃ ਸ ਕਿਞ੍ਚਿਤ੍ ਪ੍ਰਾਪ੍ਤ੍ਯਾਸ਼ਯਾ ਤੌ ਪ੍ਰਤਿ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
ਤਦਾ ਪਿਤਰੋ ਗਦਿਤਵਾਨ੍ ਮਮ ਨਿਕਟੇ ਸ੍ਵਰ੍ਣਰੂਪ੍ਯਾਦਿ ਕਿਮਪਿ ਨਾਸ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਯਦਾਸ੍ਤੇ ਤਦ੍ ਦਦਾਮਿ ਨਾਸਰਤੀਯਸ੍ਯ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਨਾਮ੍ਨਾ ਤ੍ਵਮੁੱਥਾਯ ਗਮਨਾਗਮਨੇ ਕੁਰੁ|
7 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
ਤਤਃ ਪਰੰ ਸ ਤਸ੍ਯ ਦਕ੍ਸ਼਼ਿਣਕਰੰ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਮ੍ ਉਦਤੋਲਯਤ੍; ਤੇਨ ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਤ੍ ਤਸ੍ਯ ਜਨਸ੍ਯ ਪਾਦਗੁਲ੍ਫਯੋਃ ਸਬਲਤ੍ਵਾਤ੍ ਸ ਉੱਲਮ੍ਫ੍ਯ ਪ੍ਰੋੱਥਾਯ ਗਮਨਾਗਮਨੇ (ਅ)ਕਰੋਤ੍|
8 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.
ਤਤੋ ਗਮਨਾਗਮਨੇ ਕੁਰ੍ੱਵਨ੍ ਉੱਲਮ੍ਫਨ੍ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਦਨ੍ ਤਾਭ੍ਯਾਂ ਸਾਰ੍ੱਧੰ ਮਨ੍ਦਿਰੰ ਪ੍ਰਾਵਿਸ਼ਤ੍|
9 அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
ਤਤਃ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾਸ੍ਤੰ ਗਮਨਾਗਮਨੇ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਮ੍ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਦਨ੍ਤਞ੍ਚ ਵਿਲੋਕ੍ਯ
10 ௧0 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.
ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਸੁਨ੍ਦਰੇ ਦ੍ਵਾਰੇ ਯ ਉਪਵਿਸ਼੍ਯ ਭਿਕ੍ਸ਼਼ਿਤਵਾਨ੍ ਸਏਵਾਯਮ੍ ਇਤਿ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਤੰ ਪ੍ਰਤਿ ਤਯਾ ਘਟਨਯਾ ਚਮਤ੍ਕ੍ਰੁʼਤਾ ਵਿਸ੍ਮਯਾਪੰਨਾਸ਼੍ਚਾਭਵਨ੍|
11 ௧௧ சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
ਯਃ ਖਞ੍ਜਃ ਸ੍ਵਸ੍ਥੋਭਵਤ੍ ਤੇਨ ਪਿਤਰਯੋਹਨੋਃ ਕਰਯੋਰ੍ਧ੍ਟਤਯੋਃ ਸਤੋਃ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾ ਸੰਨਿਧਿਮ੍ ਆਗੱਛਨ੍|
12 ௧௨ பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?
ਤਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਪਿਤਰਸ੍ਤੇਭ੍ਯੋ(ਅ)ਕਥਯਤ੍, ਹੇ ਇਸ੍ਰਾਯੇਲੀਯਲੋਕਾ ਯੂਯੰ ਕੁਤੋ (ਅ)ਨੇਨਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮਨ੍ਯਧ੍ਵੇ? ਆਵਾਂ ਨਿਜਸ਼ਕ੍ਤ੍ਯਾ ਯਦ੍ਵਾ ਨਿਜਪੁਣ੍ਯੇਨ ਖਞ੍ਜਮਨੁਸ਼਼੍ਯਮੇਨੰ ਗਮਿਤਵਨ੍ਤਾਵਿਤਿ ਚਿਨ੍ਤਯਿਤ੍ਵਾ ਆਵਾਂ ਪ੍ਰਤਿ ਕੁਤੋ(ਅ)ਨਨ੍ਯਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਕੁਰੁਥ?
13 ௧௩ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
ਯੰ ਯੀਸ਼ੁੰ ਯੂਯੰ ਪਰਕਰੇਸ਼਼ੁ ਸਮਾਰ੍ਪਯਤ ਤਤੋ ਯੰ ਪੀਲਾਤੋ ਮੋਚਯਿਤੁਮ੍ ਏੱਛਤ੍ ਤਥਾਪਿ ਯੂਯੰ ਤਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਨ੍ ਨਾਙ੍ਗੀਕ੍ਰੁʼਤਵਨ੍ਤ ਇਬ੍ਰਾਹੀਮ ਇਸ੍ਹਾਕੋ ਯਾਕੂਬਸ਼੍ਚੇਸ਼੍ਵਰੋ(ਅ)ਰ੍ਥਾਦ੍ ਅਸ੍ਮਾਕੰ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ਾਣਾਮ੍ ਈਸ਼੍ਵਰਃ ਸ੍ਵਪੁਤ੍ਰਸ੍ਯ ਤਸ੍ਯ ਯੀਸ਼ੋ ਰ੍ਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਾਕਾਸ਼ਯਤ੍|
14 ௧௪ பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு,
ਕਿਨ੍ਤੁ ਯੂਯੰ ਤੰ ਪਵਿਤ੍ਰੰ ਧਾਰ੍ੰਮਿਕੰ ਪੁਮਾਂਸੰ ਨਾਙ੍ਗੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਹਤ੍ਯਾਕਾਰਿਣਮੇਕੰ ਸ੍ਵੇਭ੍ਯੋ ਦਾਤੁਮ੍ ਅਯਾਚਧ੍ਵੰ|
15 ௧௫ ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਤੰ ਜੀਵਨਸ੍ਯਾਧਿਪਤਿਮ੍ ਅਹਤ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਃ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਤ੍ ਤਮ੍ ਉਦਸ੍ਥਾਪਯਤ ਤਤ੍ਰ ਵਯੰ ਸਾਕ੍ਸ਼਼ਿਣ ਆਸ੍ਮਹੇ|
16 ௧௬ அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
ਇਮੰ ਯੰ ਮਾਨੁਸ਼਼ੰ ਯੂਯੰ ਪਸ਼੍ਯਥ ਪਰਿਚਿਨੁਥ ਚ ਸ ਤਸ੍ਯ ਨਾਮ੍ਨਿ ਵਿਸ਼੍ਵਾਸਕਰਣਾਤ੍ ਚਲਨਸ਼ਕ੍ਤਿੰ ਲਬ੍ਧਵਾਨ੍ ਤਸ੍ਮਿਨ੍ ਤਸ੍ਯ ਯੋ ਵਿਸ਼੍ਵਾਸਃ ਸ ਤੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਸਮ੍ਪੂਰ੍ਣਰੂਪੇਣ ਸ੍ਵਸ੍ਥਮ੍ ਅਕਾਰ੍ਸ਼਼ੀਤ੍|
17 ௧௭ சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்
ਹੇ ਭ੍ਰਾਤਰੋ ਯੂਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਅਧਿਪਤਯਸ਼੍ਚ ਅਜ੍ਞਾਤ੍ਵਾ ਕਰ੍ੰਮਾਣ੍ਯੇਤਾਨਿ ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤ ਇਦਾਨੀਂ ਮਮੈਸ਼਼ ਬੋਧੋ ਜਾਯਤੇ|
18 ௧௮ கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਦੁਃਖਭੋਗੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਮੁਖੇਭ੍ਯੋ ਯਾਂ ਯਾਂ ਕਥਾਂ ਪੂਰ੍ੱਵਮਕਥਯਤ੍ ਤਾਃ ਕਥਾ ਇੱਥੰ ਸਿੱਧਾ ਅਕਰੋਤ੍|
19 ௧௯ ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,
ਅਤਃ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਪਾਪਮੋਚਨਾਰ੍ਥੰ ਖੇਦੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਮਨਾਂਸਿ ਪਰਿਵਰ੍ੱਤਯਧ੍ਵੰ, ਤਸ੍ਮਾਦ੍ ਈਸ਼੍ਵਰਾਤ੍ ਸਾਨ੍ਤ੍ਵਨਾਪ੍ਰਾਪ੍ਤੇਃ ਸਮਯ ਉਪਸ੍ਥਾਸ੍ਯਤਿ;
20 ௨0 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.
ਪੁਨਸ਼੍ਚ ਪੂਰ੍ੱਵਕਾਲਮ੍ ਆਰਭ੍ਯ ਪ੍ਰਚਾਰਿਤੋ ਯੋ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਤਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪ੍ਰੇਸ਼਼ਯਿਸ਼਼੍ਯਤਿ|
21 ௨௧ உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
ਕਿਨ੍ਤੁ ਜਗਤਃ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਮਾਰਭ੍ਯ ਈਸ਼੍ਵਰੋ ਨਿਜਪਵਿਤ੍ਰਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਗਣੋਨ ਯਥਾ ਕਥਿਤਵਾਨ੍ ਤਦਨੁਸਾਰੇਣ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕਾਰ੍ੱਯਾਣਾਂ ਸਿੱਧਿਪਰ੍ੱਯਨ੍ਤੰ ਤੇਨ ਸ੍ਵਰ੍ਗੇ ਵਾਸਃ ਕਰ੍ੱਤਵ੍ਯਃ| (aiōn g165)
22 ௨௨ மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰਭੁਃ ਪਰਮੇਸ਼੍ਵਰੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣਮਧ੍ਯਾਤ੍ ਮਤ੍ਸਦ੍ਰੁʼਸ਼ੰ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਕ੍ਤਾਰਮ੍ ਉਤ੍ਪਾਦਯਿਸ਼਼੍ਯਤਿ, ਤਤਃ ਸ ਯਤ੍ ਕਿਞ੍ਚਿਤ੍ ਕਥਯਿਸ਼਼੍ਯਤਿ ਤਤ੍ਰ ਯੂਯੰ ਮਨਾਂਸਿ ਨਿਧੱਧ੍ਵੰ|
23 ௨௩ அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਪ੍ਰਾਣੀ ਤਸ੍ਯ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਃ ਕਥਾਂ ਨ ਗ੍ਰਹੀਸ਼਼੍ਯਤਿ ਸ ਨਿਜਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯਾਦ੍ ਉੱਛੇਤ੍ਸ੍ਯਤੇ," ਇਮਾਂ ਕਥਾਮ੍ ਅਸ੍ਮਾਕੰ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ੇਭ੍ਯਃ ਕੇਵਲੋ ਮੂਸਾਃ ਕਥਯਾਮਾਸ ਇਤਿ ਨਹਿ,
24 ௨௪ சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.
ਸ਼ਿਮੂਯੇਲ੍ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਮ੍ ਆਰਭ੍ਯ ਯਾਵਨ੍ਤੋ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਕ੍ਯਮ੍ ਅਕਥਯਨ੍ ਤੇ ਸਰ੍ੱਵਏਵ ਸਮਯਸ੍ਯੈਤਸ੍ਯ ਕਥਾਮ੍ ਅਕਥਯਨ੍|
25 ௨௫ நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
ਯੂਯਮਪਿ ਤੇਸ਼਼ਾਂ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾਂ ਸਨ੍ਤਾਨਾਃ, "ਤਵ ਵੰਸ਼ੋਦ੍ਭਵਪੁੰਸਾ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੀਯਾ ਲੋਕਾ ਆਸ਼ਿਸ਼਼ੰ ਪ੍ਰਾਪ੍ਤਾ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ", ਇਬ੍ਰਾਹੀਮੇ ਕਥਾਮੇਤਾਂ ਕਥਯਿਤ੍ਵਾ ਈਸ਼੍ਵਰੋਸ੍ਮਾਕੰ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ੈਃ ਸਾਰ੍ੱਧੰ ਯੰ ਨਿਯਮੰ ਸ੍ਥਿਰੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤਸ੍ਯ ਨਿਯਮਸ੍ਯਾਧਿਕਾਰਿਣੋਪਿ ਯੂਯੰ ਭਵਥ|
26 ௨௬ அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
ਅਤ ਈਸ਼੍ਵਰੋ ਨਿਜਪੁਤ੍ਰੰ ਯੀਸ਼ੁਮ੍ ਉੱਥਾਪ੍ਯ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਸ੍ਵਸ੍ਵਪਾਪਾਤ੍ ਪਰਾਵਰ੍ੱਤ੍ਯ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯਮ੍ ਆਸ਼ਿਸ਼਼ੰ ਦਾਤੁੰ ਪ੍ਰਥਮਤਸ੍ਤੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਨਿਕਟੰ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਵਾਨ੍|

< அப்போஸ்தலர் 3 >