< அப்போஸ்தலர் 3 >

1 ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
ត្ឫតីយយាមវេលាយាំ សត្យាំ ប្រាត៌្ហនាយាះ សមយេ បិតរយោហនៅ សម្ភូយ មន្ទិរំ គច្ឆតះ។
2 அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.
តស្មិន្នេវ សមយេ មន្ទិរប្រវេឝកានាំ សមីបេ ភិក្ឞារណាត៌្ហំ យំ ជន្មខញ្ជមានុឞំ លោកា មន្ទិរស្យ សុន្ទរនាម្និ ទ្វារេ ប្រតិទិនម៑ អស្ថាបយន៑ តំ វហន្តស្តទ្វារំ អានយន៑។
3 அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
តទា បិតរយោហនៅ មន្តិរំ ប្រវេឞ្ដុម៑ ឧទ្យតៅ វិលោក្យ ស ខញ្ជស្តៅ កិញ្ចិទ៑ ភិក្ឞិតវាន៑។
4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
តស្មាទ៑ យោហនា សហិតះ បិតរស្តម៑ អនន្យទ្ឫឞ្ដ្យា និរីក្ឞ្យ ប្រោក្តវាន៑ អាវាំ ប្រតិ ទ្ឫឞ្ដិំ កុរុ។
5 அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
តតះ ស កិញ្ចិត៑ ប្រាប្ត្យាឝយា តៅ ប្រតិ ទ្ឫឞ្ដិំ ក្ឫតវាន៑។
6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
តទា បិតរោ គទិតវាន៑ មម និកដេ ស្វណ៌រូប្យាទិ កិមបិ នាស្តិ កិន្តុ យទាស្តេ តទ៑ ទទាមិ នាសរតីយស្យ យីឝុខ្រីឞ្ដស្យ នាម្នា ត្វមុត្ថាយ គមនាគមនេ កុរុ។
7 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
តតះ បរំ ស តស្យ ទក្ឞិណករំ ធ្ឫត្វា តម៑ ឧទតោលយត៑; តេន តត្ក្ឞណាត៑ តស្យ ជនស្យ បាទគុល្ផយោះ សពលត្វាត៑ ស ឧល្លម្ផ្យ ប្រោត្ថាយ គមនាគមនេ ៜករោត៑។
8 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.
តតោ គមនាគមនេ កុវ៌្វន៑ ឧល្លម្ផន៑ ឦឝ្វរំ ធន្យំ វទន៑ តាភ្យាំ សាទ៌្ធំ មន្ទិរំ ប្រាវិឝត៑។
9 அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
តតះ សវ៌្វេ លោកាស្តំ គមនាគមនេ កុវ៌្វន្តម៑ ឦឝ្វរំ ធន្យំ វទន្តញ្ច វិលោក្យ
10 ௧0 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.
មន្ទិរស្យ សុន្ទរេ ទ្វារេ យ ឧបវិឝ្យ ភិក្ឞិតវាន៑ សឯវាយម៑ ឥតិ ជ្ញាត្វា តំ ប្រតិ តយា ឃដនយា ចមត្ក្ឫតា វិស្មយាបន្នាឝ្ចាភវន៑។
11 ௧௧ சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
យះ ខញ្ជះ ស្វស្ថោភវត៑ តេន បិតរយោហនោះ ករយោទ៌្ហ្ដតយោះ សតោះ សវ៌្វេ លោកា សន្និធិម៑ អាគច្ឆន៑។
12 ௧௨ பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?
តទ៑ ទ្ឫឞ្ដ្វា បិតរស្តេភ្យោៜកថយត៑, ហេ ឥស្រាយេលីយលោកា យូយំ កុតោ ៜនេនាឝ្ចយ៌្យំ មន្យធ្វេ? អាវាំ និជឝក្ត្យា យទ្វា និជបុណ្យេន ខញ្ជមនុឞ្យមេនំ គមិតវន្តាវិតិ ចិន្តយិត្វា អាវាំ ប្រតិ កុតោៜនន្យទ្ឫឞ្ដិំ កុរុថ?
13 ௧௩ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
យំ យីឝុំ យូយំ បរករេឞុ សមាប៌យត តតោ យំ បីលាតោ មោចយិតុម៑ ឯច្ឆត៑ តថាបិ យូយំ តស្យ សាក្ឞាន៑ នាង្គីក្ឫតវន្ត ឥព្រាហីម ឥស្ហាកោ យាកូពឝ្ចេឝ្វរោៜរ្ថាទ៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞាណាម៑ ឦឝ្វរះ ស្វបុត្រស្យ តស្យ យីឝោ រ្មហិមានំ ប្រាកាឝយត៑។
14 ௧௪ பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு,
កិន្តុ យូយំ តំ បវិត្រំ ធាម៌្មិកំ បុមាំសំ នាង្គីក្ឫត្យ ហត្យាការិណមេកំ ស្វេភ្យោ ទាតុម៑ អយាចធ្វំ។
15 ௧௫ ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
បឝ្ចាត៑ តំ ជីវនស្យាធិបតិម៑ អហត កិន្ត្វីឝ្វរះ ឝ្មឝានាត៑ តម៑ ឧទស្ថាបយត តត្រ វយំ សាក្ឞិណ អាស្មហេ។
16 ௧௬ அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
ឥមំ យំ មានុឞំ យូយំ បឝ្យថ បរិចិនុថ ច ស តស្យ នាម្និ វិឝ្វាសករណាត៑ ចលនឝក្តិំ លព្ធវាន៑ តស្មិន៑ តស្យ យោ វិឝ្វាសះ ស តំ យុឞ្មាកំ សវ៌្វេឞាំ សាក្ឞាត៑ សម្បូណ៌រូបេណ ស្វស្ថម៑ អកាឞ៌ីត៑។
17 ௧௭ சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்
ហេ ភ្រាតរោ យូយំ យុឞ្មាកម៑ អធិបតយឝ្ច អជ្ញាត្វា កម៌្មាណ្យេតានិ ក្ឫតវន្ត ឥទានីំ មមៃឞ ពោធោ ជាយតេ។
18 ௧௮ கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
កិន្ត្វីឝ្វរះ ខ្រីឞ្ដស្យ ទុះខភោគេ ភវិឞ្យទ្វាទិនាំ មុខេភ្យោ យាំ យាំ កថាំ បូវ៌្វមកថយត៑ តាះ កថា ឥត្ថំ សិទ្ធា អករោត៑។
19 ௧௯ ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,
អតះ ស្វេឞាំ បាបមោចនាត៌្ហំ ខេទំ ក្ឫត្វា មនាំសិ បរិវត៌្តយធ្វំ, តស្មាទ៑ ឦឝ្វរាត៑ សាន្ត្វនាប្រាប្តេះ សមយ ឧបស្ថាស្យតិ;
20 ௨0 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.
បុនឝ្ច បូវ៌្វកាលម៑ អារភ្យ ប្រចារិតោ យោ យីឝុខ្រីឞ្ដស្តម៑ ឦឝ្វរោ យុឞ្មាន៑ ប្រតិ ប្រេឞយិឞ្យតិ។
21 ௨௧ உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
កិន្តុ ជគតះ ស្ឫឞ្ដិមារភ្យ ឦឝ្វរោ និជបវិត្រភវិឞ្យទ្វាទិគណោន យថា កថិតវាន៑ តទនុសារេណ សវ៌្វេឞាំ កាយ៌្យាណាំ សិទ្ធិបយ៌្យន្តំ តេន ស្វគ៌េ វាសះ កត៌្តវ្យះ។ (aiōn g165)
22 ௨௨ மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.
យុឞ្មាកំ ប្រភុះ បរមេឝ្វរោ យុឞ្មាកំ ភ្រាត្ឫគណមធ្យាត៑ មត្សទ្ឫឝំ ភវិឞ្យទ្វក្តារម៑ ឧត្បាទយិឞ្យតិ, តតះ ស យត៑ កិញ្ចិត៑ កថយិឞ្យតិ តត្រ យូយំ មនាំសិ និធទ្ធ្វំ។
23 ௨௩ அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
កិន្តុ យះ កឝ្ចិត៑ ប្រាណី តស្យ ភវិឞ្យទ្វាទិនះ កថាំ ន គ្រហីឞ្យតិ ស និជលោកានាំ មធ្យាទ៑ ឧច្ឆេត្ស្យតេ," ឥមាំ កថាម៑ អស្មាកំ បូវ៌្វបុរុឞេភ្យះ កេវលោ មូសាះ កថយាមាស ឥតិ នហិ,
24 ௨௪ சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.
ឝិមូយេល្ភវិឞ្យទ្វាទិនម៑ អារភ្យ យាវន្តោ ភវិឞ្យទ្វាក្យម៑ អកថយន៑ តេ សវ៌្វឯវ សមយស្យៃតស្យ កថាម៑ អកថយន៑។
25 ௨௫ நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
យូយមបិ តេឞាំ ភវិឞ្យទ្វាទិនាំ សន្តានាះ, "តវ វំឝោទ្ភវបុំសា សវ៌្វទេឝីយា លោកា អាឝិឞំ ប្រាប្តា ភវិឞ្យន្តិ", ឥព្រាហីមេ កថាមេតាំ កថយិត្វា ឦឝ្វរោស្មាកំ បូវ៌្វបុរុឞៃះ សាទ៌្ធំ យំ និយមំ ស្ថិរីក្ឫតវាន៑ តស្យ និយមស្យាធិការិណោបិ យូយំ ភវថ។
26 ௨௬ அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
អត ឦឝ្វរោ និជបុត្រំ យីឝុម៑ ឧត្ថាប្យ យុឞ្មាកំ សវ៌្វេឞាំ ស្វស្វបាបាត៑ បរាវត៌្ត្យ យុឞ្មភ្យម៑ អាឝិឞំ ទាតុំ ប្រថមតស្តំ យុឞ្មាកំ និកដំ ប្រេឞិតវាន៑។

< அப்போஸ்தலர் 3 >