< அப்போஸ்தலர் 24 >

1 ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
పఞ్చభ్యో దినేభ్యః పరం హనానీయనామా మహాయాజకోఽధిపతేః సమక్షం పౌలస్య ప్రాతికూల్యేన నివేదయితుం తర్తుల్లనామానం కఞ్చన వక్తారం ప్రాచీనజనాంశ్చ సఙ్గినః కృత్వా కైసరియానగరమ్ ఆగచ్ఛత్|
2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
తతః పౌలే సమానీతే సతి తర్తుల్లస్తస్యాపవాదకథాం కథయితుమ్ ఆరభత హే మహామహిమఫీలిక్ష భవతో వయమ్ అతినిర్వ్విఘ్నం కాలం యాపయామో భవతః పరిణామదర్శితయా ఏతద్దేశీయానాం బహూని మఙ్గలాని ఘటితాని,
3 கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.
ఇతి హేతో ర్వయమతికృతజ్ఞాః సన్తః సర్వ్వత్ర సర్వ్వదా భవతో గుణాన్ గాయమః|
4 உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
కిన్తు బహుభిః కథాభి ర్భవన్తం యేన న విరఞ్జయామి తస్మాద్ వినయే భవాన్ బనుకమ్ప్య మదల్పకథాం శృణోతు|
5 என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
ఏష మహామారీస్వరూపో నాసరతీయమతగ్రాహిసంఘాతస్య ముఖ్యో భూత్వా సర్వ్వదేశేషు సర్వ్వేషాం యిహూదీయానాం రాజద్రోహాచరణప్రవృత్తిం జనయతీత్యస్మాభి ర్నిశ్చితం|
6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.
స మన్దిరమపి అశుచి కర్త్తుం చేష్టితవాన్; ఇతి కారణాద్ వయమ్ ఏనం ధృత్వా స్వవ్యవస్థానుసారేణ విచారయితుం ప్రావర్త్తామహి;
7 அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,
కిన్తు లుషియః సహస్రసేనాపతిరాగత్య బలాద్ అస్మాకం కరేభ్య ఏనం గృహీత్వా
8 இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
ఏతస్యాపవాదకాన్ భవతః సమీపమ్ ఆగన్తుమ్ ఆజ్ఞాపయత్| వయం యస్మిన్ తమపవాదామో భవతా పదపవాదకథాయాం విచారితాయాం సత్యాం సర్వ్వం వృత్తాన్తం వేదితుం శక్ష్యతే|
9 யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
తతో యిహూదీయా అపి స్వీకృత్య కథితవన్త ఏషా కథా ప్రమాణమ్|
10 ௧0 பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.
అధిపతౌ కథాం కథయితుం పౌలం ప్రతీఙ్గితం కృతవతి స కథితవాన్ భవాన్ బహూన్ వత్సరాన్ యావద్ ఏతద్దేశస్య శాసనం కరోతీతి విజ్ఞాయ ప్రత్యుత్తరం దాతుమ్ అక్షోభోఽభవమ్|
11 ௧௧ நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
అద్య కేవలం ద్వాదశ దినాని యాతాని, అహమ్ ఆరాధనాం కర్త్తుం యిరూశాలమనగరం గతవాన్ ఏషా కథా భవతా జ్ఞాతుం శక్యతే;
12 ௧௨ தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
కిన్త్విభే మాం మధ్యేమన్దిరం కేనాపి సహ వితణ్డాం కుర్వ్వన్తం కుత్రాపి భజనభవనే నగరే వా లోకాన్ కుప్రవృత్తిం జనయన్తుం న దృష్టవన్తః|
13 ௧௩ இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.
ఇదానీం యస్మిన్ యస్మిన్ మామ్ అపవదన్తే తస్య కిమపి ప్రమాణం దాతుం న శక్నువన్తి|
14 ௧௪ உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
కిన్తు భవిష్యద్వాక్యగ్రన్థే వ్యవస్థాగ్రన్థే చ యా యా కథా లిఖితాస్తే తాసు సర్వ్వాసు విశ్వస్య యన్మతమ్ ఇమే విధర్మ్మం జానన్తి తన్మతానుసారేణాహం నిజపితృపురుషాణామ్ ఈశ్వరమ్ ఆరాధయామీత్యహం భవతః సమక్షమ్ అఙ్గీకరోమి|
15 ௧௫ நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
ధార్మ్మికాణామ్ అధార్మ్మికాణాఞ్చ ప్రమీతలోకానామేవోత్థానం భవిష్యతీతి కథామిమే స్వీకుర్వ్వన్తి తథాహమపి తస్మిన్ ఈశ్వరే ప్రత్యాశాం కరోమి;
16 ௧௬ இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
ఈశ్వరస్య మానవానాఞ్చ సమీపే యథా నిర్దోషో భవామి తదర్థం సతతం యత్నవాన్ అస్మి|
17 ௧௭ பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
బహుషు వత్సరేషు గతేషు స్వదేశీయలోకానాం నిమిత్తం దానీయద్రవ్యాణి నైవేద్యాని చ సమాదాయ పునరాగమనం కృతవాన్|
18 ௧௮ அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
తతోహం శుచి ర్భూత్వా లోకానాం సమాగమం కలహం వా న కారితవాన్ తథాప్యాశియాదేశీయాః కియన్తో యిహుదీయలోకా మధ్యేమన్దిరం మాం ధృతవన్తః|
19 ௧௯ அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
మమోపరి యది కాచిదపవాదకథాస్తి తర్హి భవతః సమీపమ్ ఉపస్థాయ తేషామేవ సాక్ష్యదానమ్ ఉచితమ్|
20 ௨0 நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
నోచేత్ పూర్వ్వే మహాసభాస్థానాం లోకానాం సన్నిధౌ మమ దణ్డాయమానత్వసమయే, అహమద్య మృతానాముత్థానే యుష్మాభి ర్విచారితోస్మి,
21 ௨௧ நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
తేషాం మధ్యే తిష్ఠన్నహం యామిమాం కథాముచ్చైః స్వరేణ కథితవాన్ తదన్యో మమ కోపి దోషోఽలభ్యత న వేతి వరమ్ ఏతే సముపస్థితలోకా వదన్తు|
22 ௨௨ இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
తదా ఫీలిక్ష ఏతాం కథాం శ్రుత్వా తన్మతస్య విశేషవృత్తాన్తం విజ్ఞాతుం విచారం స్థగితం కృత్వా కథితవాన్ లుషియే సహస్రసేనాపతౌ సమాయాతే సతి యుష్మాకం విచారమ్ అహం నిష్పాదయిష్యామి|
23 ௨௩ பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
అనన్తరం బన్ధనం వినా పౌలం రక్షితుం తస్య సేవనాయ సాక్షాత్కరణాయ వా తదీయాత్మీయబన్ధుజనాన్ న వారయితుఞ్చ శమసేనాపతిమ్ ఆదిష్టవాన్|
24 ௨௪ சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
అల్పదినాత్ పరం ఫీలిక్షోఽధిపతి ర్ద్రుషిల్లానామ్నా యిహూదీయయా స్వభార్య్యయా సహాగత్య పౌలమాహూయ తస్య ముఖాత్ ఖ్రీష్టధర్మ్మస్య వృత్తాన్తమ్ అశ్రౌషీత్|
25 ௨௫ அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
పౌలేన న్యాయస్య పరిమితభోగస్య చరమవిచారస్య చ కథాయాం కథితాయాం సత్యాం ఫీలిక్షః కమ్పమానః సన్ వ్యాహరద్ ఇదానీం యాహి, అహమ్ అవకాశం ప్రాప్య త్వామ్ ఆహూస్యామి|
26 ௨௬ மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
ముక్తిప్రప్త్యర్థం పౌలేన మహ్యం ముద్రాదాస్యన్తే ఇతి పత్యాశాం కృత్వా స పునః పునస్తమాహూయ తేన సాకం కథోపకథనం కృతవాన్|
27 ௨௭ இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
కిన్తు వత్సరద్వయాత్ పరం పర్కియఫీష్ట ఫాలిక్షస్య పదం ప్రాప్తే సతి ఫీలిక్షో యిహూదీయాన్ సన్తుష్టాన్ చికీర్షన్ పౌలం బద్ధం సంస్థాప్య గతవాన్|

< அப்போஸ்தலர் 24 >