< அப்போஸ்தலர் 22 >

1 சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான்.
హే పితృగణా హే భ్రాతృగణాః, ఇదానీం మమ నివేదనే సమవధత్త|
2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:
తదా స ఇబ్రీయభాషయా కథాం కథయతీతి శ్రుత్వా సర్వ్వే లోకా అతీవ నిఃశబ్దా సన్తోఽతిష్ఠన్|
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
పశ్చాత్ సోఽకథయద్ అహం యిహూదీయ ఇతి నిశ్చయః కిలికియాదేశస్య తార్షనగరం మమ జన్మభూమిః, ఏతన్నగరీయస్య గమిలీయేలనామ్నోఽధ్యాపకస్య శిష్యో భూత్వా పూర్వ్వపురుషాణాం విధివ్యవస్థానుసారేణ సమ్పూర్ణరూపేణ శిక్షితోఽభవమ్ ఇదానీన్తనా యూయం యాదృశా భవథ తాదృశోఽహమపీశ్వరసేవాయామ్ ఉద్యోగీ జాతః|
4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
మతమేతద్ ద్విష్ట్వా తద్గ్రాహినారీపురుషాన్ కారాయాం బద్ధ్వా తేషాం ప్రాణనాశపర్య్యన్తాం విపక్షతామ్ అకరవమ్|
5 அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.
మహాయాజకః సభాసదః ప్రాచీనలోకాశ్చ మమైతస్యాః కథాయాః ప్రమాణం దాతుం శక్నువన్తి, యస్మాత్ తేషాం సమీపాద్ దమ్మేషకనగరనివాసిభ్రాతృగణార్థమ్ ఆజ్ఞాపత్రాణి గృహీత్వా యే తత్ర స్థితాస్తాన్ దణ్డయితుం యిరూశాలమమ్ ఆనయనార్థం దమ్మేషకనగరం గతోస్మి|
6 அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
కిన్తు గచ్ఛన్ తన్నగరస్య సమీపం ప్రాప్తవాన్ తదా ద్వితీయప్రహరవేలాయాం సత్యామ్ అకస్మాద్ గగణాన్నిర్గత్య మహతీ దీప్తి ర్మమ చతుర్దిశి ప్రకాశితవతీ|
7 நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
తతో మయి భూమౌ పతితే సతి, హే శౌల హే శౌల కుతో మాం తాడయసి? మామ్ప్రతి భాషిత ఏతాదృశ ఏకో రవోపి మయా శ్రుతః|
8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
తదాహం ప్రత్యవదం, హే ప్రభే కో భవాన్? తతః సోఽవాదీత్ యం త్వం తాడయసి స నాసరతీయో యీశురహం|
9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
మమ సఙ్గినో లోకాస్తాం దీప్తిం దృష్ట్వా భియం ప్రాప్తాః, కిన్తు మామ్ప్రత్యుదితం తద్వాక్యం తే నాబుధ్యన్త|
10 ௧0 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.
తతః పరం పృష్టవానహం, హే ప్రభో మయా కిం కర్త్తవ్యం? తతః ప్రభురకథయత్, ఉత్థాయ దమ్మేషకనగరం యాహి త్వయా యద్యత్ కర్త్తవ్యం నిరూపితమాస్తే తత్ తత్ర త్వం జ్ఞాపయిష్యసే|
11 ௧௧ அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
అనన్తరం తస్యాః ఖరతరదీప్తేః కారణాత్ కిమపి న దృష్ట్వా సఙ్గిగణేన ధృతహస్తః సన్ దమ్మేషకనగరం వ్రజితవాన్|
12 ௧௨ அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
తన్నగరనివాసినాం సర్వ్వేషాం యిహూదీయానాం మాన్యో వ్యవస్థానుసారేణ భక్తశ్చ హనానీయనామా మానవ ఏకో
13 ௧௩ என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
మమ సన్నిధిమ్ ఏత్య తిష్ఠన్ అకథయత్, హే భ్రాతః శౌల సుదృష్టి ర్భవ తస్మిన్ దణ్డేఽహం సమ్యక్ తం దృష్టవాన్|
14 ௧௪ அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
తతః స మహ్యం కథితవాన్ యథా త్వమ్ ఈశ్వరస్యాభిప్రాయం వేత్సి తస్య శుద్ధసత్త్వజనస్య దర్శనం ప్రాప్య తస్య శ్రీముఖస్య వాక్యం శృణోషి తన్నిమిత్తమ్ అస్మాకం పూర్వ్వపురుషాణామ్ ఈశ్వరస్త్వాం మనోనీతం కృతవానం|
15 ௧௫ நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.
యతో యద్యద్ అద్రాక్షీరశ్రౌషీశ్చ సర్వ్వేషాం మానవానాం సమీపే త్వం తేషాం సాక్షీ భవిష్యసి|
16 ௧௬ இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
అతఏవ కుతో విలమ్బసే? ప్రభో ర్నామ్నా ప్రార్థ్య నిజపాపప్రక్షాలనార్థం మజ్జనాయ సముత్తిష్ఠ|
17 ௧௭ பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.
తతః పరం యిరూశాలమ్నగరం ప్రత్యాగత్య మన్దిరేఽహమ్ ఏకదా ప్రార్థయే, తస్మిన్ సమయేఽహమ్ అభిభూతః సన్ ప్రభూం సాక్షాత్ పశ్యన్,
18 ௧௮ அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
త్వం త్వరయా యిరూశాలమః ప్రతిష్ఠస్వ యతో లోకామయి తవ సాక్ష్యం న గ్రహీష్యన్తి, మామ్ప్రత్యుదితం తస్యేదం వాక్యమ్ అశ్రౌషమ్|
19 ௧௯ அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
తతోహం ప్రత్యవాదిషమ్ హే ప్రభో ప్రతిభజనభవనం త్వయి విశ్వాసినో లోకాన్ బద్ధ్వా ప్రహృతవాన్,
20 ௨0 உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
తథా తవ సాక్షిణః స్తిఫానస్య రక్తపాతనసమయే తస్య వినాశం సమ్మన్య సన్నిధౌ తిష్ఠన్ హన్తృలోకానాం వాసాంసి రక్షితవాన్, ఏతత్ తే విదుః|
21 ௨௧ அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
తతః సోఽకథయత్ ప్రతిష్ఠస్వ త్వాం దూరస్థభిన్నదేశీయానాం సమీపం ప్రేషయిష్యే|
22 ௨௨ இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
తదా లోకా ఏతావత్పర్య్యన్తాం తదీయాం కథాం శ్రుత్వా ప్రోచ్చైరకథయన్, ఏనం భూమణ్డలాద్ దూరీకురుత, ఏతాదృశజనస్య జీవనం నోచితమ్|
23 ௨௩ இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
ఇత్యుచ్చైః కథయిత్వా వసనాని పరిత్యజ్య గగణం ప్రతి ధూలీరక్షిపన్
24 ௨௪ ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
తతః సహస్రసేనాపతిః పౌలం దుర్గాభ్యన్తర నేతుం సమాదిశత్| ఏతస్య ప్రతికూలాః సన్తో లోకాః కిన్నిమిత్తమ్ ఏతావదుచ్చైఃస్వరమ్ అకుర్వ్వన్, ఏతద్ వేత్తుం తం కశయా ప్రహృత్య తస్య పరీక్షాం కర్త్తుమాదిశత్|
25 ௨௫ அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான்.
పదాతయశ్చర్మ్మనిర్మ్మితరజ్జుభిస్తస్య బన్ధనం కర్త్తుముద్యతాస్తాస్తదానీం పౌలః సమ్ముఖస్థితం శతసేనాపతిమ్ ఉక్తవాన్ దణ్డాజ్ఞాయామ్ అప్రాప్తాయాం కిం రోమిలోకం ప్రహర్త్తుం యుష్మాకమ్ అధికారోస్తి?
26 ௨௬ நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
ఏనాం కథాం శ్రుత్వా స సహస్రసేనాపతేః సన్నిధిం గత్వా తాం వార్త్తామవదత్ స రోమిలోక ఏతస్మాత్ సావధానః సన్ కర్మ్మ కురు|
27 ௨௭ இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
తస్మాత్ సహస్రసేనాపతి ర్గత్వా తమప్రాక్షీత్ త్వం కిం రోమిలోకః? ఇతి మాం బ్రూహి| సోఽకథయత్ సత్యమ్|
28 ௨௮ ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
తతః సహస్రసేనాపతిః కథితవాన్ బహుద్రవిణం దత్త్వాహం తత్ పౌరసఖ్యం ప్రాప్తవాన్; కిన్తు పౌలః కథితవాన్ అహం జనునా తత్ ప్రాప్తోఽస్మి|
29 ௨௯ அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.
ఇత్థం సతి యే ప్రహారేణ తం పరీక్షితుం సముద్యతా ఆసన్ తే తస్య సమీపాత్ ప్రాతిష్ఠన్త; సహస్రసేనాపతిస్తం రోమిలోకం విజ్ఞాయ స్వయం యత్ తస్య బన్ధనమ్ అకార్షీత్ తత్కారణాద్ అబిభేత్|
30 ௩0 பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
యిహూదీయలోకాః పౌలం కుతోఽపవదన్తే తస్య వృత్తాన్తం జ్ఞాతుం వాఞ్ఛన్ సహస్రసేనాపతిః పరేఽహని పౌలం బన్ధనాత్ మోచయిత్వా ప్రధానయాజకాన్ మహాసభాయాః సర్వ్వలోకాశ్చ సముపస్థాతుమ్ ఆదిశ్య తేషాం సన్నిధౌ పౌలమ్ అవరోహ్య స్థాపితవాన్|

< அப்போஸ்தலர் 22 >