< அப்போஸ்தலர் 20 >

1 கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்
ఇత్థం కలహే నివృత్తే సతి పౌలః శిష్యగణమ్ ఆహూయ విసర్జనం ప్రాప్య మాకిదనియాదేశం ప్రస్థితవాన్|
2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான்.
తేన స్థానేన గచ్ఛన్ తద్దేశీయాన్ శిష్యాన్ బహూపదిశ్య యూనానీయదేశమ్ ఉపస్థితవాన్|
3 அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.
తత్ర మాసత్రయం స్థిత్వా తస్మాత్ సురియాదేశం యాతుమ్ ఉద్యతః, కిన్తు యిహూదీయాస్తం హన్తుం గుప్తా అతిష్ఠన్ తస్మాత్ స పునరపి మాకిదనియామార్గేణ ప్రత్యాగన్తుం మతిం కృతవాన్|
4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள்.
బిరయానగరీయసోపాత్రః థిషలనీకీయారిస్తార్ఖసికున్దౌ దర్బ్బోనగరీయగాయతీమథియౌ ఆశియాదేశీయతుఖికత్రఫిమౌ చ తేన సార్ద్ధం ఆశియాదేశం యావద్ గతవన్తః|
5 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
ఏతే సర్వ్వే ఽగ్రసరాః సన్తో ఽస్మాన్ అపేక్ష్య త్రోయానగరే స్థితవన్తః|
6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு, நாங்கள் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப்பின்பு துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு ஏழுநாட்கள் தங்கியிருந்தோம்.
కిణ్వశూన్యపూపోత్సవదినే చ గతే సతి వయం ఫిలిపీనగరాత్ తోయపథేన గత్వా పఞ్చభి ర్దినైస్త్రోయానగరమ్ ఉపస్థాయ తత్ర సప్తదినాన్యవాతిష్ఠామ|
7 வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
సప్తాహస్య ప్రథమదినే పూపాన్ భంక్తు శిష్యేషు మిలితేషు పౌలః పరదినే తస్మాత్ ప్రస్థాతుమ్ ఉద్యతః సన్ తదహ్ని ప్రాయేణ క్షపాయా యామద్వయం యావత్ శిష్యేభ్యో ధర్మ్మకథామ్ అకథయత్|
8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது.
ఉపరిస్థే యస్మిన్ ప్రకోష్ఠే సభాం కృత్వాసన్ తత్ర బహవః ప్రదీపాః ప్రాజ్వలన్|
9 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.
ఉతుఖనామా కశ్చన యువా చ వాతాయన ఉపవిశన్ ఘోరతరనిద్రాగ్రస్తో ఽభూత్ తదా పౌలేన బహుక్షణం కథాయాం ప్రచారితాయాం నిద్రామగ్నః స తస్మాద్ ఉపరిస్థతృతీయప్రకోష్ఠాద్ అపతత్, తతో లోకాస్తం మృతకల్పం ధృత్వోదతోలయన్|
10 ௧0 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
తతః పౌలోఽవరుహ్య తస్య గాత్రే పతిత్వా తం క్రోడే నిధాయ కథితవాన్, యూయం వ్యాకులా మా భూత నాయం ప్రాణై ర్వియుక్తః|
11 ௧௧ பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
పశ్చాత్ స పునశ్చోపరి గత్వా పూపాన్ భంక్త్వా ప్రభాతం యావత్ కథోపకథనే కృత్వా ప్రస్థితవాన్|
12 ௧௨ அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
తే చ తం జీవన్తం యువానం గృహీత్వా గత్వా పరమాప్యాయితా జాతాః|
13 ௧௩ பவுல் ஆசோ பட்டணம்வரைக்கும் தரைவழியாகப் போகத் திட்டமிட்டிருந்தான். நாங்கள் கப்பல் ஏறி, பவுலுக்கு முன்னதாகவே ஆசோ பட்டணத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்லவேண்டுமென்று அவன்‌ திட்டம் செய்திருந்தார்.
అనన్తరం వయం పోతేనాగ్రసరా భూత్వాస్మనగరమ్ ఉత్తీర్య్య పౌలం గ్రహీతుం మతిమ్ అకుర్మ్మ యతః స తత్ర పద్భ్యాం వ్రజితుం మతిం కృత్వేతి నిరూపితవాన్|
14 ௧௪ அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.
తస్మాత్ తత్రాస్మాభిః సార్ద్ధం తస్మిన్ మిలితే సతి వయం తం నీత్వా మితులీన్యుపద్వీపం ప్రాప్తవన్తః|
15 ௧௫ அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து,
తస్మాత్ పోతం మోచయిత్వా పరేఽహని ఖీయోపద్వీపస్య సమ్ముఖం లబ్ధవన్తస్తస్మాద్ ఏకేనాహ్నా సామోపద్వీపం గత్వా పోతం లాగయిత్వా త్రోగుల్లియే స్థిత్వా పరస్మిన్ దివసే మిలీతనగరమ్ ఉపాతిష్ఠామ|
16 ௧௬ பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம்.
యతః పౌల ఆశియాదేశే కాలం యాపయితుమ్ నాభిలషన్ ఇఫిషనగరం త్యక్త్వా యాతుం మన్త్రణాం స్థిరీకృతవాన్; యస్మాద్ యది సాధ్యం భవతి తర్హి నిస్తారోత్సవస్య పఞ్చాశత్తమదినే స యిరూశాలమ్యుపస్థాతుం మతిం కృతవాన్|
17 ௧௭ மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான்.
పౌలో మిలీతాద్ ఇఫిషం ప్రతి లోకం ప్రహిత్య సమాజస్య ప్రాచీనాన్ ఆహూయానీతవాన్|
18 ௧௮ அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
తేషు తస్య సమీపమ్ ఉపస్థితేషు స తేభ్య ఇమాం కథాం కథితవాన్, అహమ్ ఆశియాదేశే ప్రథమాగమనమ్ ఆరభ్యాద్య యావద్ యుష్మాకం సన్నిధౌ స్థిత్వా సర్వ్వసమయే యథాచరితవాన్ తద్ యూయం జానీథ;
19 ௧௯ நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.
ఫలతః సర్వ్వథా నమ్రమనాః సన్ బహుశ్రుపాతేన యిహుదీయానామ్ కుమన్త్రణాజాతనానాపరీక్షాభిః ప్రభోః సేవామకరవం|
20 ௨0 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
కామపి హితకథాం న గోపాయితవాన్ తాం ప్రచార్య్య సప్రకాశం గృహే గృహే సముపదిశ్యేశ్వరం ప్రతి మనః పరావర్త్తనీయం ప్రభౌ యీశుఖ్రీష్టే విశ్వసనీయం
21 ௨௧ தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
యిహూదీయానామ్ అన్యదేశీయలోకానాఞ్చ సమీప ఏతాదృశం సాక్ష్యం దదామి|
22 ௨௨ இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது.
పశ్యత సామ్ప్రతమ్ ఆత్మనాకృష్టః సన్ యిరూశాలమ్నగరే యాత్రాం కరోమి, తత్ర మామ్ప్రతి యద్యద్ ఘటిష్యతే తాన్యహం న జానామి;
23 ௨௩ தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன்.
కిన్తు మయా బన్ధనం క్లేశశ్చ భోక్తవ్య ఇతి పవిత్ర ఆత్మా నగరే నగరే ప్రమాణం దదాతి|
24 ௨௪ ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
తథాపి తం క్లేశమహం తృణాయ న మన్యే; ఈశ్వరస్యానుగ్రహవిషయకస్య సుసంవాదస్య ప్రమాణం దాతుం, ప్రభో ర్యీశోః సకాశాద యస్యాః సేవాయాః భారం ప్రాప్నవం తాం సేవాం సాధయితుం సానన్దం స్వమార్గం సమాపయితుఞ్చ నిజప్రాణానపి ప్రియాన్ న మన్యే|
25 ௨௫ இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன்.
అధునా పశ్యత యేషాం సమీపేఽహమ్ ఈశ్వరీయరాజ్యస్య సుసంవాదం ప్రచార్య్య భ్రమణం కృతవాన్ ఏతాదృశా యూయం మమ వదనం పున ర్ద్రష్టుం న ప్రాప్స్యథ ఏతదప్యహం జానామి|
26 ௨௬ தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால்,
యుష్మభ్యమ్ అహమ్ ఈశ్వరస్య సర్వ్వాన్ ఆదేశాన్ ప్రకాశయితుం న న్యవర్త్తే|
27 ௨௭ எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன்.
అహం సర్వ్వేషాం లోకానాం రక్తపాతదోషాద్ యన్నిర్దోష ఆసే తస్యాద్య యుష్మాన్ సాక్షిణః కరోమి|
28 ௨௮ ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.
యూయం స్వేషు తథా యస్య వ్రజస్యాధ్యక్షన్ ఆత్మా యుష్మాన్ విధాయ న్యయుఙ్క్త తత్సర్వ్వస్మిన్ సావధానా భవత, య సమాజఞ్చ ప్రభు ర్నిజరక్తమూల్యేన క్రీతవాన తమ్ అవత,
29 ௨௯ நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
యతో మయా గమనే కృతఏవ దుర్జయా వృకా యుష్మాకం మధ్యం ప్రవిశ్య వ్రజం ప్రతి నిర్దయతామ్ ఆచరిష్యన్తి,
30 ௩0 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
యుష్మాకమేవ మధ్యాదపి లోకా ఉత్థాయ శిష్యగణమ్ అపహన్తుం విపరీతమ్ ఉపదేక్ష్యన్తీత్యహం జానామి|
31 ௩௧ எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள்.
ఇతి హేతో ర్యూయం సచైతన్యాః సన్తస్తిష్టత, అహఞ్చ సాశ్రుపాతః సన్ వత్సరత్రయం యావద్ దివానిశం ప్రతిజనం బోధయితుం న న్యవర్త్తే తదపి స్మరత|
32 ௩௨ இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
ఇదానీం హే భ్రాతరో యుష్మాకం నిష్ఠాం జనయితుం పవిత్రీకృతలోకానాం మధ్యేఽధికారఞ్చ దాతుం సమర్థో య ఈశ్వరస్తస్యానుగ్రహస్య యో వాదశ్చ తయోరుభయో ర్యుష్మాన్ సమార్పయమ్|
33 ௩௩ ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை.
కస్యాపి స్వర్ణం రూప్యం వస్త్రం వా ప్రతి మయా లోభో న కృతః|
34 ௩௪ நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.
కిన్తు మమ మత్సహచరలోకానాఞ్చావశ్యకవ్యయాయ మదీయమిదం కరద్వయమ్ అశ్రామ్యద్ ఏతద్ యూయం జానీథ|
35 ௩௫ இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
అనేన ప్రకారేణ గ్రహణద్ దానం భద్రమితి యద్వాక్యం ప్రభు ర్యీశుః కథితవాన్ తత్ స్మర్త్తుం దరిద్రలోకానాముపకారార్థం శ్రమం కర్త్తుఞ్చ యుష్మాకమ్ ఉచితమ్ ఏతత్సర్వ్వం యుష్మానహమ్ ఉపదిష్టవాన్|
36 ௩௬ இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.
ఏతాం కథాం కథయిత్వా స జానునీ పాతయిత్వా సర్వైః సహ ప్రార్థయత|
37 ௩௭ அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு,
తేన తే క్రన్ద్రన్తః
38 ௩௮ பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள்.
పున ర్మమ ముఖం న ద్రక్ష్యథ విశేషత ఏషా యా కథా తేనాకథి తత్కారణాత్ శోకం విలాపఞ్చ కృత్వా కణ్ఠం ధృత్వా చుమ్బితవన్తః| పశ్చాత్ తే తం పోతం నీతవన్తః|

< அப்போஸ்தலர் 20 >