< அப்போஸ்தலர் 20 >

1 கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்
ଇତ୍ଥଂ କଲହେ ନିୱୃତ୍ତେ ସତି ପୌଲଃ ଶିଷ୍ୟଗଣମ୍ ଆହୂଯ ୱିସର୍ଜନଂ ପ୍ରାପ୍ୟ ମାକିଦନିଯାଦେଶଂ ପ୍ରସ୍ଥିତୱାନ୍|
2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான்.
ତେନ ସ୍ଥାନେନ ଗଚ୍ଛନ୍ ତଦ୍ଦେଶୀଯାନ୍ ଶିଷ୍ୟାନ୍ ବହୂପଦିଶ୍ୟ ଯୂନାନୀଯଦେଶମ୍ ଉପସ୍ଥିତୱାନ୍|
3 அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.
ତତ୍ର ମାସତ୍ରଯଂ ସ୍ଥିତ୍ୱା ତସ୍ମାତ୍ ସୁରିଯାଦେଶଂ ଯାତୁମ୍ ଉଦ୍ୟତଃ, କିନ୍ତୁ ଯିହୂଦୀଯାସ୍ତଂ ହନ୍ତୁଂ ଗୁପ୍ତା ଅତିଷ୍ଠନ୍ ତସ୍ମାତ୍ ସ ପୁନରପି ମାକିଦନିଯାମାର୍ଗେଣ ପ୍ରତ୍ୟାଗନ୍ତୁଂ ମତିଂ କୃତୱାନ୍|
4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள்.
ବିରଯାନଗରୀଯସୋପାତ୍ରଃ ଥିଷଲନୀକୀଯାରିସ୍ତାର୍ଖସିକୁନ୍ଦୌ ଦର୍ବ୍ବୋନଗରୀଯଗାଯତୀମଥିଯୌ ଆଶିଯାଦେଶୀଯତୁଖିକତ୍ରଫିମୌ ଚ ତେନ ସାର୍ଦ୍ଧଂ ଆଶିଯାଦେଶଂ ଯାୱଦ୍ ଗତୱନ୍ତଃ|
5 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
ଏତେ ସର୍ୱ୍ୱେ ଽଗ୍ରସରାଃ ସନ୍ତୋ ଽସ୍ମାନ୍ ଅପେକ୍ଷ୍ୟ ତ୍ରୋଯାନଗରେ ସ୍ଥିତୱନ୍ତଃ|
6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு, நாங்கள் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப்பின்பு துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு ஏழுநாட்கள் தங்கியிருந்தோம்.
କିଣ୍ୱଶୂନ୍ୟପୂପୋତ୍ସୱଦିନେ ଚ ଗତେ ସତି ୱଯଂ ଫିଲିପୀନଗରାତ୍ ତୋଯପଥେନ ଗତ୍ୱା ପଞ୍ଚଭି ର୍ଦିନୈସ୍ତ୍ରୋଯାନଗରମ୍ ଉପସ୍ଥାଯ ତତ୍ର ସପ୍ତଦିନାନ୍ୟୱାତିଷ୍ଠାମ|
7 வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
ସପ୍ତାହସ୍ୟ ପ୍ରଥମଦିନେ ପୂପାନ୍ ଭଂକ୍ତୁ ଶିଷ୍ୟେଷୁ ମିଲିତେଷୁ ପୌଲଃ ପରଦିନେ ତସ୍ମାତ୍ ପ୍ରସ୍ଥାତୁମ୍ ଉଦ୍ୟତଃ ସନ୍ ତଦହ୍ନି ପ୍ରାଯେଣ କ୍ଷପାଯା ଯାମଦ୍ୱଯଂ ଯାୱତ୍ ଶିଷ୍ୟେଭ୍ୟୋ ଧର୍ମ୍ମକଥାମ୍ ଅକଥଯତ୍|
8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது.
ଉପରିସ୍ଥେ ଯସ୍ମିନ୍ ପ୍ରକୋଷ୍ଠେ ସଭାଂ କୃତ୍ୱାସନ୍ ତତ୍ର ବହୱଃ ପ୍ରଦୀପାଃ ପ୍ରାଜ୍ୱଲନ୍|
9 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.
ଉତୁଖନାମା କଶ୍ଚନ ଯୁୱା ଚ ୱାତାଯନ ଉପୱିଶନ୍ ଘୋରତରନିଦ୍ରାଗ୍ରସ୍ତୋ ଽଭୂତ୍ ତଦା ପୌଲେନ ବହୁକ୍ଷଣଂ କଥାଯାଂ ପ୍ରଚାରିତାଯାଂ ନିଦ୍ରାମଗ୍ନଃ ସ ତସ୍ମାଦ୍ ଉପରିସ୍ଥତୃତୀଯପ୍ରକୋଷ୍ଠାଦ୍ ଅପତତ୍, ତତୋ ଲୋକାସ୍ତଂ ମୃତକଲ୍ପଂ ଧୃତ୍ୱୋଦତୋଲଯନ୍|
10 ௧0 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.
ତତଃ ପୌଲୋଽୱରୁହ୍ୟ ତସ୍ୟ ଗାତ୍ରେ ପତିତ୍ୱା ତଂ କ୍ରୋଡେ ନିଧାଯ କଥିତୱାନ୍, ଯୂଯଂ ୱ୍ୟାକୁଲା ମା ଭୂତ ନାଯଂ ପ୍ରାଣୈ ର୍ୱିଯୁକ୍ତଃ|
11 ௧௧ பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான்.
ପଶ୍ଚାତ୍ ସ ପୁନଶ୍ଚୋପରି ଗତ୍ୱା ପୂପାନ୍ ଭଂକ୍ତ୍ୱା ପ୍ରଭାତଂ ଯାୱତ୍ କଥୋପକଥନେ କୃତ୍ୱା ପ୍ରସ୍ଥିତୱାନ୍|
12 ௧௨ அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
ତେ ଚ ତଂ ଜୀୱନ୍ତଂ ଯୁୱାନଂ ଗୃହୀତ୍ୱା ଗତ୍ୱା ପରମାପ୍ୟାଯିତା ଜାତାଃ|
13 ௧௩ பவுல் ஆசோ பட்டணம்வரைக்கும் தரைவழியாகப் போகத் திட்டமிட்டிருந்தான். நாங்கள் கப்பல் ஏறி, பவுலுக்கு முன்னதாகவே ஆசோ பட்டணத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்லவேண்டுமென்று அவன்‌ திட்டம் செய்திருந்தார்.
ଅନନ୍ତରଂ ୱଯଂ ପୋତେନାଗ୍ରସରା ଭୂତ୍ୱାସ୍ମନଗରମ୍ ଉତ୍ତୀର୍ୟ୍ୟ ପୌଲଂ ଗ୍ରହୀତୁଂ ମତିମ୍ ଅକୁର୍ମ୍ମ ଯତଃ ସ ତତ୍ର ପଦ୍ଭ୍ୟାଂ ୱ୍ରଜିତୁଂ ମତିଂ କୃତ୍ୱେତି ନିରୂପିତୱାନ୍|
14 ௧௪ அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.
ତସ୍ମାତ୍ ତତ୍ରାସ୍ମାଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ତସ୍ମିନ୍ ମିଲିତେ ସତି ୱଯଂ ତଂ ନୀତ୍ୱା ମିତୁଲୀନ୍ୟୁପଦ୍ୱୀପଂ ପ୍ରାପ୍ତୱନ୍ତଃ|
15 ௧௫ அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து,
ତସ୍ମାତ୍ ପୋତଂ ମୋଚଯିତ୍ୱା ପରେଽହନି ଖୀଯୋପଦ୍ୱୀପସ୍ୟ ସମ୍ମୁଖଂ ଲବ୍ଧୱନ୍ତସ୍ତସ୍ମାଦ୍ ଏକେନାହ୍ନା ସାମୋପଦ୍ୱୀପଂ ଗତ୍ୱା ପୋତଂ ଲାଗଯିତ୍ୱା ତ୍ରୋଗୁଲ୍ଲିଯେ ସ୍ଥିତ୍ୱା ପରସ୍ମିନ୍ ଦିୱସେ ମିଲୀତନଗରମ୍ ଉପାତିଷ୍ଠାମ|
16 ௧௬ பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம்.
ଯତଃ ପୌଲ ଆଶିଯାଦେଶେ କାଲଂ ଯାପଯିତୁମ୍ ନାଭିଲଷନ୍ ଇଫିଷନଗରଂ ତ୍ୟକ୍ତ୍ୱା ଯାତୁଂ ମନ୍ତ୍ରଣାଂ ସ୍ଥିରୀକୃତୱାନ୍; ଯସ୍ମାଦ୍ ଯଦି ସାଧ୍ୟଂ ଭୱତି ତର୍ହି ନିସ୍ତାରୋତ୍ସୱସ୍ୟ ପଞ୍ଚାଶତ୍ତମଦିନେ ସ ଯିରୂଶାଲମ୍ୟୁପସ୍ଥାତୁଂ ମତିଂ କୃତୱାନ୍|
17 ௧௭ மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான்.
ପୌଲୋ ମିଲୀତାଦ୍ ଇଫିଷଂ ପ୍ରତି ଲୋକଂ ପ୍ରହିତ୍ୟ ସମାଜସ୍ୟ ପ୍ରାଚୀନାନ୍ ଆହୂଯାନୀତୱାନ୍|
18 ௧௮ அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ତେଷୁ ତସ୍ୟ ସମୀପମ୍ ଉପସ୍ଥିତେଷୁ ସ ତେଭ୍ୟ ଇମାଂ କଥାଂ କଥିତୱାନ୍, ଅହମ୍ ଆଶିଯାଦେଶେ ପ୍ରଥମାଗମନମ୍ ଆରଭ୍ୟାଦ୍ୟ ଯାୱଦ୍ ଯୁଷ୍ମାକଂ ସନ୍ନିଧୌ ସ୍ଥିତ୍ୱା ସର୍ୱ୍ୱସମଯେ ଯଥାଚରିତୱାନ୍ ତଦ୍ ଯୂଯଂ ଜାନୀଥ;
19 ௧௯ நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.
ଫଲତଃ ସର୍ୱ୍ୱଥା ନମ୍ରମନାଃ ସନ୍ ବହୁଶ୍ରୁପାତେନ ଯିହୁଦୀଯାନାମ୍ କୁମନ୍ତ୍ରଣାଜାତନାନାପରୀକ୍ଷାଭିଃ ପ୍ରଭୋଃ ସେୱାମକରୱଂ|
20 ௨0 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
କାମପି ହିତକଥାଂ ନ ଗୋପାଯିତୱାନ୍ ତାଂ ପ୍ରଚାର୍ୟ୍ୟ ସପ୍ରକାଶଂ ଗୃହେ ଗୃହେ ସମୁପଦିଶ୍ୟେଶ୍ୱରଂ ପ୍ରତି ମନଃ ପରାୱର୍ତ୍ତନୀଯଂ ପ୍ରଭୌ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେ ୱିଶ୍ୱସନୀଯଂ
21 ௨௧ தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன்.
ଯିହୂଦୀଯାନାମ୍ ଅନ୍ୟଦେଶୀଯଲୋକାନାଞ୍ଚ ସମୀପ ଏତାଦୃଶଂ ସାକ୍ଷ୍ୟଂ ଦଦାମି|
22 ௨௨ இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது.
ପଶ୍ୟତ ସାମ୍ପ୍ରତମ୍ ଆତ୍ମନାକୃଷ୍ଟଃ ସନ୍ ଯିରୂଶାଲମ୍ନଗରେ ଯାତ୍ରାଂ କରୋମି, ତତ୍ର ମାମ୍ପ୍ରତି ଯଦ୍ୟଦ୍ ଘଟିଷ୍ୟତେ ତାନ୍ୟହଂ ନ ଜାନାମି;
23 ௨௩ தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன்.
କିନ୍ତୁ ମଯା ବନ୍ଧନଂ କ୍ଲେଶଶ୍ଚ ଭୋକ୍ତୱ୍ୟ ଇତି ପୱିତ୍ର ଆତ୍ମା ନଗରେ ନଗରେ ପ୍ରମାଣଂ ଦଦାତି|
24 ௨௪ ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
ତଥାପି ତଂ କ୍ଲେଶମହଂ ତୃଣାଯ ନ ମନ୍ୟେ; ଈଶ୍ୱରସ୍ୟାନୁଗ୍ରହୱିଷଯକସ୍ୟ ସୁସଂୱାଦସ୍ୟ ପ୍ରମାଣଂ ଦାତୁଂ, ପ୍ରଭୋ ର୍ୟୀଶୋଃ ସକାଶାଦ ଯସ୍ୟାଃ ସେୱାଯାଃ ଭାରଂ ପ୍ରାପ୍ନୱଂ ତାଂ ସେୱାଂ ସାଧଯିତୁଂ ସାନନ୍ଦଂ ସ୍ୱମାର୍ଗଂ ସମାପଯିତୁଞ୍ଚ ନିଜପ୍ରାଣାନପି ପ୍ରିଯାନ୍ ନ ମନ୍ୟେ|
25 ௨௫ இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன்.
ଅଧୁନା ପଶ୍ୟତ ଯେଷାଂ ସମୀପେଽହମ୍ ଈଶ୍ୱରୀଯରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାର୍ୟ୍ୟ ଭ୍ରମଣଂ କୃତୱାନ୍ ଏତାଦୃଶା ଯୂଯଂ ମମ ୱଦନଂ ପୁନ ର୍ଦ୍ରଷ୍ଟୁଂ ନ ପ୍ରାପ୍ସ୍ୟଥ ଏତଦପ୍ୟହଂ ଜାନାମି|
26 ௨௬ தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால்,
ଯୁଷ୍ମଭ୍ୟମ୍ ଅହମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ସର୍ୱ୍ୱାନ୍ ଆଦେଶାନ୍ ପ୍ରକାଶଯିତୁଂ ନ ନ୍ୟୱର୍ତ୍ତେ|
27 ௨௭ எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன்.
ଅହଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ଲୋକାନାଂ ରକ୍ତପାତଦୋଷାଦ୍ ଯନ୍ନିର୍ଦୋଷ ଆସେ ତସ୍ୟାଦ୍ୟ ଯୁଷ୍ମାନ୍ ସାକ୍ଷିଣଃ କରୋମି|
28 ௨௮ ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள்.
ଯୂଯଂ ସ୍ୱେଷୁ ତଥା ଯସ୍ୟ ୱ୍ରଜସ୍ୟାଧ୍ୟକ୍ଷନ୍ ଆତ୍ମା ଯୁଷ୍ମାନ୍ ୱିଧାଯ ନ୍ୟଯୁଙ୍କ୍ତ ତତ୍ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସାୱଧାନା ଭୱତ, ଯ ସମାଜଞ୍ଚ ପ୍ରଭୁ ର୍ନିଜରକ୍ତମୂଲ୍ୟେନ କ୍ରୀତୱାନ ତମ୍ ଅୱତ,
29 ௨௯ நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
ଯତୋ ମଯା ଗମନେ କୃତଏୱ ଦୁର୍ଜଯା ୱୃକା ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟଂ ପ୍ରୱିଶ୍ୟ ୱ୍ରଜଂ ପ୍ରତି ନିର୍ଦଯତାମ୍ ଆଚରିଷ୍ୟନ୍ତି,
30 ௩0 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
ଯୁଷ୍ମାକମେୱ ମଧ୍ୟାଦପି ଲୋକା ଉତ୍ଥାଯ ଶିଷ୍ୟଗଣମ୍ ଅପହନ୍ତୁଂ ୱିପରୀତମ୍ ଉପଦେକ୍ଷ୍ୟନ୍ତୀତ୍ୟହଂ ଜାନାମି|
31 ௩௧ எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள்.
ଇତି ହେତୋ ର୍ୟୂଯଂ ସଚୈତନ୍ୟାଃ ସନ୍ତସ୍ତିଷ୍ଟତ, ଅହଞ୍ଚ ସାଶ୍ରୁପାତଃ ସନ୍ ୱତ୍ସରତ୍ରଯଂ ଯାୱଦ୍ ଦିୱାନିଶଂ ପ୍ରତିଜନଂ ବୋଧଯିତୁଂ ନ ନ୍ୟୱର୍ତ୍ତେ ତଦପି ସ୍ମରତ|
32 ௩௨ இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
ଇଦାନୀଂ ହେ ଭ୍ରାତରୋ ଯୁଷ୍ମାକଂ ନିଷ୍ଠାଂ ଜନଯିତୁଂ ପୱିତ୍ରୀକୃତଲୋକାନାଂ ମଧ୍ୟେଽଧିକାରଞ୍ଚ ଦାତୁଂ ସମର୍ଥୋ ଯ ଈଶ୍ୱରସ୍ତସ୍ୟାନୁଗ୍ରହସ୍ୟ ଯୋ ୱାଦଶ୍ଚ ତଯୋରୁଭଯୋ ର୍ୟୁଷ୍ମାନ୍ ସମାର୍ପଯମ୍|
33 ௩௩ ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை.
କସ୍ୟାପି ସ୍ୱର୍ଣଂ ରୂପ୍ୟଂ ୱସ୍ତ୍ରଂ ୱା ପ୍ରତି ମଯା ଲୋଭୋ ନ କୃତଃ|
34 ௩௪ நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது.
କିନ୍ତୁ ମମ ମତ୍ସହଚରଲୋକାନାଞ୍ଚାୱଶ୍ୟକୱ୍ୟଯାଯ ମଦୀଯମିଦଂ କରଦ୍ୱଯମ୍ ଅଶ୍ରାମ୍ୟଦ୍ ଏତଦ୍ ଯୂଯଂ ଜାନୀଥ|
35 ௩௫ இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
ଅନେନ ପ୍ରକାରେଣ ଗ୍ରହଣଦ୍ ଦାନଂ ଭଦ୍ରମିତି ଯଦ୍ୱାକ୍ୟଂ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଃ କଥିତୱାନ୍ ତତ୍ ସ୍ମର୍ତ୍ତୁଂ ଦରିଦ୍ରଲୋକାନାମୁପକାରାର୍ଥଂ ଶ୍ରମଂ କର୍ତ୍ତୁଞ୍ଚ ଯୁଷ୍ମାକମ୍ ଉଚିତମ୍ ଏତତ୍ସର୍ୱ୍ୱଂ ଯୁଷ୍ମାନହମ୍ ଉପଦିଷ୍ଟୱାନ୍|
36 ௩௬ இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.
ଏତାଂ କଥାଂ କଥଯିତ୍ୱା ସ ଜାନୁନୀ ପାତଯିତ୍ୱା ସର୍ୱୈଃ ସହ ପ୍ରାର୍ଥଯତ|
37 ௩௭ அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு,
ତେନ ତେ କ୍ରନ୍ଦ୍ରନ୍ତଃ
38 ௩௮ பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள்.
ପୁନ ର୍ମମ ମୁଖଂ ନ ଦ୍ରକ୍ଷ୍ୟଥ ୱିଶେଷତ ଏଷା ଯା କଥା ତେନାକଥି ତତ୍କାରଣାତ୍ ଶୋକଂ ୱିଲାପଞ୍ଚ କୃତ୍ୱା କଣ୍ଠଂ ଧୃତ୍ୱା ଚୁମ୍ବିତୱନ୍ତଃ| ପଶ୍ଚାତ୍ ତେ ତଂ ପୋତଂ ନୀତୱନ୍ତଃ|

< அப்போஸ்தலர் 20 >