< அப்போஸ்தலர் 18 >
1 ௧ அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
ཏདྒྷཊནཱཏཿ པརཾ པཽལ ཨཱཐཱིནཱིནགརཱད྄ ཡཱཏྲཱཾ ཀྲྀཏྭཱ ཀརིནྠནགརམ྄ ཨཱགཙྪཏ྄།
2 ௨ யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
ཏསྨིན྄ སམཡེ ཀླཽདིཡཿ སཪྻྭཱན྄ ཡིཧཱུདཱིཡཱན྄ རོམཱནགརཾ ཝིཧཱཡ གནྟུམ྄ ཨཱཛྙཱཔཡཏ྄, ཏསྨཱཏ྄ པྲིསྐིལླཱནཱམྣཱ ཛཱཡཡཱ སཱརྡྡྷམ྄ ཨིཏཱལིཡཱདེཤཱཏ྄ ཀིཉྩིཏྤཱུཪྻྭམ྄ ཨཱགམཏ྄ ཡཿ པནྟདེཤེ ཛཱཏ ཨཱཀྐིལནཱམཱ ཡིཧཱུདཱིཡལོཀཿ པཽལསྟཾ སཱཀྵཱཏ྄ པྲཱཔྱ ཏཡོཿ སམཱིཔམིཏཝཱན྄།
3 ௩ அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
ཏཽ དཱུཥྱནིརྨྨཱཎཛཱིཝིནཽ, ཏསྨཱཏ྄ པརསྤརམ྄ ཨེཀཝྲྀཏྟིཀཏྭཱཏ྄ ས ཏཱབྷྱཱཾ སཧ ཨུཥིཏྭཱ ཏཏ྄ ཀརྨྨཱཀརོཏ྄།
4 ௪ ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
པཽལཿ པྲཏིཝིཤྲཱམཝཱརཾ བྷཛནབྷཝནཾ གཏྭཱ ཝིཙཱརཾ ཀྲྀཏྭཱ ཡིཧཱུདཱིཡཱན྄ ཨནྱདེཤཱིཡཱཾཤྩ པྲཝྲྀཏྟིཾ གྲཱཧིཏཝཱན྄།
5 ௫ மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
སཱིལཏཱིམཐིཡཡོ རྨཱཀིདནིཡཱདེཤཱཏ྄ སམེཏཡོཿ སཏོཿ པཽལ ཨུཏྟཔྟམནཱ བྷཱུཏྭཱ ཡཱིཤུརཱིཤྭརེཎཱབྷིཥིཀྟོ བྷཝཏཱིཏི པྲམཱཎཾ ཡིཧཱུདཱིཡཱནཱཾ སམཱིཔེ པྲཱདཱཏ྄།
6 ௬ அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
ཀིནྟུ ཏེ ྅ཏཱིཝ ཝིརོདྷཾ ཝིདྷཱཡ པཱཥཎྜཱིཡཀཐཱཾ ཀཐིཏཝནྟསྟཏཿ པཽལོ ཝསྟྲཾ དྷུནྭན྄ ཨེཏཱཾ ཀཐཱཾ ཀཐིཏཝཱན྄, ཡུཥྨཱཀཾ ཤོཎིཏཔཱཏཱཔརཱདྷོ ཡུཥྨཱན྄ པྲཏྱེཝ བྷཝཏུ, ཏེནཱཧཾ ནིརཔརཱདྷོ ྅དྱཱརབྷྱ བྷིནྣདེཤཱིཡཱནཱཾ སམཱིཔཾ ཡཱམི།
7 ௭ அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
ས ཏསྨཱཏ྄ པྲསྠཱཡ བྷཛནབྷཝནསམཱིཔསྠསྱ ཡུསྟནཱམྣ ཨཱིཤྭརབྷཀྟསྱ བྷིནྣདེཤཱིཡསྱ ནིཝེཤནཾ པྲཱཝིཤཏ྄།
8 ௮ ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ཏཏཿ ཀྲཱིཥྤནཱམཱ བྷཛནབྷཝནཱདྷིཔཏིཿ སཔརིཝཱརཿ པྲབྷཽ ཝྱཤྭསཱིཏ྄, ཀརིནྠནགརཱིཡཱ བཧཝོ ལོཀཱཤྩ སམཱཀརྞྱ ཝིཤྭསྱ མཛྫིཏཱ ཨབྷཝན྄།
9 ௯ இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
ཀྵཎདཱཡཱཾ པྲབྷུཿ པཽལཾ དརྴནཾ དཏྭཱ བྷཱཥིཏཝཱན྄, མཱ བྷཻཥཱིཿ, མཱ ནིརསཱིཿ ཀཐཱཾ པྲཙཱརཡ།
10 ௧0 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
ཨཧཾ ཏྭཡཱ སཱརྡྡྷམ྄ ཨཱས ཧིཾསཱརྠཾ ཀོཔི ཏྭཱཾ སྤྲཥྚུཾ ན ཤཀྵྱཏི ནགརེ྅སྨིན྄ མདཱིཡཱ ལོཀཱ བཧཝ ཨཱསཏེ།
11 ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ཏསྨཱཏ྄ པཽལསྟནྣགརེ པྲཱཡེཎ སཱརྡྡྷཝཏྶརཔཪྻྱནྟཾ སཾསྠཱཡེཤྭརསྱ ཀཐཱམ྄ ཨུཔཱདིཤཏ྄།
12 ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
གཱལླིཡནཱམཱ ཀཤྩིད྄ ཨཱཁཱཡཱདེཤསྱ པྲཱཌྭིཝཱཀཿ སམབྷཝཏ྄, ཏཏོ ཡིཧཱུདཱིཡཱ ཨེཀཝཱཀྱཱཿ སནྟཿ པཽལམ྄ ཨཱཀྲམྱ ཝིཙཱརསྠཱནཾ ནཱིཏྭཱ
13 ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
མཱནུཥ ཨེཥ ཝྱཝསྠཱཡ ཝིརུདྡྷམ྄ ཨཱིཤྭརབྷཛནཾ ཀརྟྟུཾ ལོཀཱན྄ ཀུཔྲཝྲྀཏྟིཾ གྲཱཧཡཏཱིཏི ནིཝེདིཏཝནྟཿ།
14 ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
ཏཏཿ པཽལེ པྲཏྱུཏྟརཾ དཱཏུམ྄ ཨུདྱཏེ སཏི གཱལླིཡཱ ཡིཧཱུདཱིཡཱན྄ ཝྱཱཧརཏ྄, ཡདི ཀསྱཙིད྄ ཨནྱཱཡསྱ ཝཱཏིཤཡདུཥྚཏཱཙརཎསྱ ཝིཙཱརོ྅བྷཝིཥྱཏ྄ ཏརྷི ཡུཥྨཱཀཾ ཀཐཱ མཡཱ སཧནཱིཡཱབྷཝིཥྱཏ྄།
15 ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
ཀིནྟུ ཡདི ཀེཝལཾ ཀཐཱཡཱ ཝཱ ནཱམྣོ ཝཱ ཡུཥྨཱཀཾ ཝྱཝསྠཱཡཱ ཝིཝཱདོ བྷཝཏི ཏརྷི ཏསྱ ཝིཙཱརམཧཾ ན ཀརིཥྱཱམི, ཡཱུཡཾ ཏསྱ མཱིམཱཾསཱཾ ཀུརུཏ།
16 ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
ཏཏཿ ས ཏཱན྄ ཝིཙཱརསྠཱནཱད྄ དཱུརཱིཀྲྀཏཝཱན྄།
17 ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
ཏདཱ བྷིནྣདེཤཱིཡཱཿ སོསྠིནིནཱམཱནཾ བྷཛནབྷཝནསྱ པྲདྷཱནཱདྷིཔཏིཾ དྷྲྀཏྭཱ ཝིཙཱརསྠཱནསྱ སམྨུཁེ པྲཱཧརན྄ ཏཐཱཔི གཱལླིཡཱ ཏེཥུ སཪྻྭཀརྨྨསུ ན མནོ ནྱདདྷཱཏ྄།
18 ௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
པཽལསྟཏྲ པུནརྦཧུདིནཱནི ནྱཝསཏ྄, ཏཏོ བྷྲཱཏྲྀགཎཱད྄ ཝིསརྫནཾ པྲཱཔྱ ཀིཉྩནཝྲཏནིམིཏྟཾ ཀིཾཀྲིཡཱནགརེ ཤིརོ མུཎྜཡིཏྭཱ པྲིསྐིལླཱཀྐིལཱབྷྱཱཾ སཧིཏོ ཛལཔཐེན སུརིཡཱདེཤཾ གཏཝཱན྄།
19 ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
ཏཏ ཨིཕིཥནགར ཨུཔསྠཱཡ ཏཏྲ ཏཽ ཝིསྲྀཛྱ སྭཡཾ བྷཛནབྷྭནཾ པྲཝིཤྱ ཡིཧཱུདཱིཡཻཿ སཧ ཝིཙཱརིཏཝཱན྄།
20 ௨0 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
ཏེ སྭཻཿ སཱརྡྡྷཾ པུནཿ ཀཏིཔཡདིནཱནི སྠཱཏུཾ ཏཾ ཝྱནཡན྄, ས ཏདནུརརཱིཀྲྀཏྱ ཀཐཱམེཏཱཾ ཀཐིཏཝཱན྄,
21 ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
ཡིརཱུཤཱལམི ཨཱགཱམྱུཏྶཝཔཱལནཱརྠཾ མཡཱ གམནཱིཡཾ; པཤྩཱད྄ ཨཱིཤྭརེཙྪཱཡཱཾ ཛཱཏཱཡཱཾ ཡུཥྨཱཀཾ སམཱིཔཾ པྲཏྱཱགམིཥྱཱམི། ཏཏཿ པརཾ ས ཏཻ ཪྻིསྲྀཥྚཿ སན྄ ཛལཔཐེན ཨིཕིཥནགརཱཏ྄ པྲསྠིཏཝཱན྄།
22 ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
ཏཏཿ ཀཻསརིཡཱམ྄ ཨུཔསྠིཏཿ སན྄ ནགརཾ གཏྭཱ སམཱཛཾ ནམསྐྲྀཏྱ ཏསྨཱད྄ ཨཱནྟིཡཁིཡཱནགརཾ པྲསྠིཏཝཱན྄།
23 ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
ཏཏྲ ཀིཡཏྐཱལཾ ཡཱཔཡིཏྭཱ ཏསྨཱཏ྄ པྲསྠཱཡ སཪྻྭེཥཱཾ ཤིཥྱཱཎཱཾ མནཱཾསི སུསྠིརཱཎི ཀྲྀཏྭཱ ཀྲམཤོ གལཱཏིཡཱཕྲུགིཡཱདེཤཡོ རྦྷྲམིཏྭཱ གཏཝཱན྄།
24 ௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
ཏསྨིནྣེཝ སམཡེ སིཀནྡརིཡཱནགརེ ཛཱཏ ཨཱཔལློནཱམཱ ཤཱསྟྲཝིཏ྄ སུཝཀྟཱ ཡིཧཱུདཱིཡ ཨེཀོ ཛན ཨིཕིཥནགརམ྄ ཨཱགཏཝཱན྄།
25 ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ས ཤིཀྵིཏཔྲབྷུམཱརྒོ མནསོདྱོགཱི ཙ སན྄ ཡོཧནོ མཛྫནམཱཏྲཾ ཛྙཱཏྭཱ ཡཐཱརྠཏཡཱ པྲབྷོཿ ཀཐཱཾ ཀཐཡན྄ སམུཔཱདིཤཏ྄།
26 ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
ཨེཥ ཛནོ ནིརྦྷཡཏྭེན བྷཛནབྷཝནེ ཀཐཡིཏུམ྄ ཨཱརབྡྷཝཱན྄, ཏཏཿ པྲིསྐིལླཱཀྐིལཽ ཏསྱོཔདེཤཀཐཱཾ ནིཤམྱ ཏཾ སྭཡོཿ སམཱིཔམ྄ ཨཱནཱིཡ ཤུདྡྷརཱུཔེཎེཤྭརསྱ ཀཐཱམ྄ ཨབོདྷཡཏཱམ྄།
27 ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
པཤྩཱཏ྄ ས ཨཱཁཱཡཱདེཤཾ གནྟུཾ མཏིཾ ཀྲྀཏཝཱན྄, ཏདཱ ཏཏྲཏྱཿ ཤིཥྱགཎོ ཡཐཱ ཏཾ གྲྀཧླཱཏི ཏདརྠཾ བྷྲཱཏྲྀགཎེན སམཱཤྭསྱ པཏྲེ ལིཁིཏེ སཏི, ཨཱཔལླཱསྟཏྲོཔསྠིཏཿ སན྄ ཨནུགྲཧེཎ པྲཏྱཡིནཱཾ བཧཱུཔཀཱརཱན྄ ཨཀརོཏ྄,
28 ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
ཕལཏོ ཡཱིཤུརབྷིཥིཀྟསྟྲཱཏེཏི ཤཱསྟྲཔྲམཱཎཾ དཏྭཱ པྲཀཱཤརཱུཔེཎ པྲཏིཔནྣཾ ཀྲྀཏྭཱ ཡིཧཱུདཱིཡཱན྄ ནིརུཏྟརཱན྄ ཀྲྀཏཝཱན྄།