< அப்போஸ்தலர் 18 >

1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
ತದ್ಘಟನಾತಃ ಪರಂ ಪೌಲ ಆಥೀನೀನಗರಾದ್ ಯಾತ್ರಾಂ ಕೃತ್ವಾ ಕರಿನ್ಥನಗರಮ್ ಆಗಚ್ಛತ್|
2 யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಕ್ಲೌದಿಯಃ ಸರ್ವ್ವಾನ್ ಯಿಹೂದೀಯಾನ್ ರೋಮಾನಗರಂ ವಿಹಾಯ ಗನ್ತುಮ್ ಆಜ್ಞಾಪಯತ್, ತಸ್ಮಾತ್ ಪ್ರಿಸ್ಕಿಲ್ಲಾನಾಮ್ನಾ ಜಾಯಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಇತಾಲಿಯಾದೇಶಾತ್ ಕಿಞ್ಚಿತ್ಪೂರ್ವ್ವಮ್ ಆಗಮತ್ ಯಃ ಪನ್ತದೇಶೇ ಜಾತ ಆಕ್ಕಿಲನಾಮಾ ಯಿಹೂದೀಯಲೋಕಃ ಪೌಲಸ್ತಂ ಸಾಕ್ಷಾತ್ ಪ್ರಾಪ್ಯ ತಯೋಃ ಸಮೀಪಮಿತವಾನ್|
3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
ತೌ ದೂಷ್ಯನಿರ್ಮ್ಮಾಣಜೀವಿನೌ, ತಸ್ಮಾತ್ ಪರಸ್ಪರಮ್ ಏಕವೃತ್ತಿಕತ್ವಾತ್ ಸ ತಾಭ್ಯಾಂ ಸಹ ಉಷಿತ್ವಾ ತತ್ ಕರ್ಮ್ಮಾಕರೋತ್|
4 ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
ಪೌಲಃ ಪ್ರತಿವಿಶ್ರಾಮವಾರಂ ಭಜನಭವನಂ ಗತ್ವಾ ವಿಚಾರಂ ಕೃತ್ವಾ ಯಿಹೂದೀಯಾನ್ ಅನ್ಯದೇಶೀಯಾಂಶ್ಚ ಪ್ರವೃತ್ತಿಂ ಗ್ರಾಹಿತವಾನ್|
5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
ಸೀಲತೀಮಥಿಯಯೋ ರ್ಮಾಕಿದನಿಯಾದೇಶಾತ್ ಸಮೇತಯೋಃ ಸತೋಃ ಪೌಲ ಉತ್ತಪ್ತಮನಾ ಭೂತ್ವಾ ಯೀಶುರೀಶ್ವರೇಣಾಭಿಷಿಕ್ತೋ ಭವತೀತಿ ಪ್ರಮಾಣಂ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಸಮೀಪೇ ಪ್ರಾದಾತ್|
6 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
ಕಿನ್ತು ತೇ ಽತೀವ ವಿರೋಧಂ ವಿಧಾಯ ಪಾಷಣ್ಡೀಯಕಥಾಂ ಕಥಿತವನ್ತಸ್ತತಃ ಪೌಲೋ ವಸ್ತ್ರಂ ಧುನ್ವನ್ ಏತಾಂ ಕಥಾಂ ಕಥಿತವಾನ್, ಯುಷ್ಮಾಕಂ ಶೋಣಿತಪಾತಾಪರಾಧೋ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತ್ಯೇವ ಭವತು, ತೇನಾಹಂ ನಿರಪರಾಧೋ ಽದ್ಯಾರಭ್ಯ ಭಿನ್ನದೇಶೀಯಾನಾಂ ಸಮೀಪಂ ಯಾಮಿ|
7 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
ಸ ತಸ್ಮಾತ್ ಪ್ರಸ್ಥಾಯ ಭಜನಭವನಸಮೀಪಸ್ಥಸ್ಯ ಯುಸ್ತನಾಮ್ನ ಈಶ್ವರಭಕ್ತಸ್ಯ ಭಿನ್ನದೇಶೀಯಸ್ಯ ನಿವೇಶನಂ ಪ್ರಾವಿಶತ್|
8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ತತಃ ಕ್ರೀಷ್ಪನಾಮಾ ಭಜನಭವನಾಧಿಪತಿಃ ಸಪರಿವಾರಃ ಪ್ರಭೌ ವ್ಯಶ್ವಸೀತ್, ಕರಿನ್ಥನಗರೀಯಾ ಬಹವೋ ಲೋಕಾಶ್ಚ ಸಮಾಕರ್ಣ್ಯ ವಿಶ್ವಸ್ಯ ಮಜ್ಜಿತಾ ಅಭವನ್|
9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
ಕ್ಷಣದಾಯಾಂ ಪ್ರಭುಃ ಪೌಲಂ ದರ್ಶನಂ ದತ್ವಾ ಭಾಷಿತವಾನ್, ಮಾ ಭೈಷೀಃ, ಮಾ ನಿರಸೀಃ ಕಥಾಂ ಪ್ರಚಾರಯ|
10 ௧0 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
ಅಹಂ ತ್ವಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಆಸ ಹಿಂಸಾರ್ಥಂ ಕೋಪಿ ತ್ವಾಂ ಸ್ಪ್ರಷ್ಟುಂ ನ ಶಕ್ಷ್ಯತಿ ನಗರೇಽಸ್ಮಿನ್ ಮದೀಯಾ ಲೋಕಾ ಬಹವ ಆಸತೇ|
11 ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ತಸ್ಮಾತ್ ಪೌಲಸ್ತನ್ನಗರೇ ಪ್ರಾಯೇಣ ಸಾರ್ದ್ಧವತ್ಸರಪರ್ಯ್ಯನ್ತಂ ಸಂಸ್ಥಾಯೇಶ್ವರಸ್ಯ ಕಥಾಮ್ ಉಪಾದಿಶತ್|
12 ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
ಗಾಲ್ಲಿಯನಾಮಾ ಕಶ್ಚಿದ್ ಆಖಾಯಾದೇಶಸ್ಯ ಪ್ರಾಡ್ವಿವಾಕಃ ಸಮಭವತ್, ತತೋ ಯಿಹೂದೀಯಾ ಏಕವಾಕ್ಯಾಃ ಸನ್ತಃ ಪೌಲಮ್ ಆಕ್ರಮ್ಯ ವಿಚಾರಸ್ಥಾನಂ ನೀತ್ವಾ
13 ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
ಮಾನುಷ ಏಷ ವ್ಯವಸ್ಥಾಯ ವಿರುದ್ಧಮ್ ಈಶ್ವರಭಜನಂ ಕರ್ತ್ತುಂ ಲೋಕಾನ್ ಕುಪ್ರವೃತ್ತಿಂ ಗ್ರಾಹಯತೀತಿ ನಿವೇದಿತವನ್ತಃ|
14 ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
ತತಃ ಪೌಲೇ ಪ್ರತ್ಯುತ್ತರಂ ದಾತುಮ್ ಉದ್ಯತೇ ಸತಿ ಗಾಲ್ಲಿಯಾ ಯಿಹೂದೀಯಾನ್ ವ್ಯಾಹರತ್, ಯದಿ ಕಸ್ಯಚಿದ್ ಅನ್ಯಾಯಸ್ಯ ವಾತಿಶಯದುಷ್ಟತಾಚರಣಸ್ಯ ವಿಚಾರೋಽಭವಿಷ್ಯತ್ ತರ್ಹಿ ಯುಷ್ಮಾಕಂ ಕಥಾ ಮಯಾ ಸಹನೀಯಾಭವಿಷ್ಯತ್|
15 ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
ಕಿನ್ತು ಯದಿ ಕೇವಲಂ ಕಥಾಯಾ ವಾ ನಾಮ್ನೋ ವಾ ಯುಷ್ಮಾಕಂ ವ್ಯವಸ್ಥಾಯಾ ವಿವಾದೋ ಭವತಿ ತರ್ಹಿ ತಸ್ಯ ವಿಚಾರಮಹಂ ನ ಕರಿಷ್ಯಾಮಿ, ಯೂಯಂ ತಸ್ಯ ಮೀಮಾಂಸಾಂ ಕುರುತ|
16 ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
ತತಃ ಸ ತಾನ್ ವಿಚಾರಸ್ಥಾನಾದ್ ದೂರೀಕೃತವಾನ್|
17 ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
ತದಾ ಭಿನ್ನದೇಶೀಯಾಃ ಸೋಸ್ಥಿನಿನಾಮಾನಂ ಭಜನಭವನಸ್ಯ ಪ್ರಧಾನಾಧಿಪತಿಂ ಧೃತ್ವಾ ವಿಚಾರಸ್ಥಾನಸ್ಯ ಸಮ್ಮುಖೇ ಪ್ರಾಹರನ್ ತಥಾಪಿ ಗಾಲ್ಲಿಯಾ ತೇಷು ಸರ್ವ್ವಕರ್ಮ್ಮಸು ನ ಮನೋ ನ್ಯದಧಾತ್|
18 ௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
ಪೌಲಸ್ತತ್ರ ಪುನರ್ಬಹುದಿನಾನಿ ನ್ಯವಸತ್, ತತೋ ಭ್ರಾತೃಗಣಾದ್ ವಿಸರ್ಜನಂ ಪ್ರಾಪ್ಯ ಕಿಞ್ಚನವ್ರತನಿಮಿತ್ತಂ ಕಿಂಕ್ರಿಯಾನಗರೇ ಶಿರೋ ಮುಣ್ಡಯಿತ್ವಾ ಪ್ರಿಸ್ಕಿಲ್ಲಾಕ್ಕಿಲಾಭ್ಯಾಂ ಸಹಿತೋ ಜಲಪಥೇನ ಸುರಿಯಾದೇಶಂ ಗತವಾನ್|
19 ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
ತತ ಇಫಿಷನಗರ ಉಪಸ್ಥಾಯ ತತ್ರ ತೌ ವಿಸೃಜ್ಯ ಸ್ವಯಂ ಭಜನಭ್ವನಂ ಪ್ರವಿಶ್ಯ ಯಿಹೂದೀಯೈಃ ಸಹ ವಿಚಾರಿತವಾನ್|
20 ௨0 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
ತೇ ಸ್ವೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಪುನಃ ಕತಿಪಯದಿನಾನಿ ಸ್ಥಾತುಂ ತಂ ವ್ಯನಯನ್, ಸ ತದನುರರೀಕೃತ್ಯ ಕಥಾಮೇತಾಂ ಕಥಿತವಾನ್,
21 ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
ಯಿರೂಶಾಲಮಿ ಆಗಾಮ್ಯುತ್ಸವಪಾಲನಾರ್ಥಂ ಮಯಾ ಗಮನೀಯಂ; ಪಶ್ಚಾದ್ ಈಶ್ವರೇಚ್ಛಾಯಾಂ ಜಾತಾಯಾಂ ಯುಷ್ಮಾಕಂ ಸಮೀಪಂ ಪ್ರತ್ಯಾಗಮಿಷ್ಯಾಮಿ| ತತಃ ಪರಂ ಸ ತೈ ರ್ವಿಸೃಷ್ಟಃ ಸನ್ ಜಲಪಥೇನ ಇಫಿಷನಗರಾತ್ ಪ್ರಸ್ಥಿತವಾನ್|
22 ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
ತತಃ ಕೈಸರಿಯಾಮ್ ಉಪಸ್ಥಿತಃ ಸನ್ ನಗರಂ ಗತ್ವಾ ಸಮಾಜಂ ನಮಸ್ಕೃತ್ಯ ತಸ್ಮಾದ್ ಆನ್ತಿಯಖಿಯಾನಗರಂ ಪ್ರಸ್ಥಿತವಾನ್|
23 ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
ತತ್ರ ಕಿಯತ್ಕಾಲಂ ಯಾಪಯಿತ್ವಾ ತಸ್ಮಾತ್ ಪ್ರಸ್ಥಾಯ ಸರ್ವ್ವೇಷಾಂ ಶಿಷ್ಯಾಣಾಂ ಮನಾಂಸಿ ಸುಸ್ಥಿರಾಣಿ ಕೃತ್ವಾ ಕ್ರಮಶೋ ಗಲಾತಿಯಾಫ್ರುಗಿಯಾದೇಶಯೋ ರ್ಭ್ರಮಿತ್ವಾ ಗತವಾನ್|
24 ௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
ತಸ್ಮಿನ್ನೇವ ಸಮಯೇ ಸಿಕನ್ದರಿಯಾನಗರೇ ಜಾತ ಆಪಲ್ಲೋನಾಮಾ ಶಾಸ್ತ್ರವಿತ್ ಸುವಕ್ತಾ ಯಿಹೂದೀಯ ಏಕೋ ಜನ ಇಫಿಷನಗರಮ್ ಆಗತವಾನ್|
25 ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ಸ ಶಿಕ್ಷಿತಪ್ರಭುಮಾರ್ಗೋ ಮನಸೋದ್ಯೋಗೀ ಚ ಸನ್ ಯೋಹನೋ ಮಜ್ಜನಮಾತ್ರಂ ಜ್ಞಾತ್ವಾ ಯಥಾರ್ಥತಯಾ ಪ್ರಭೋಃ ಕಥಾಂ ಕಥಯನ್ ಸಮುಪಾದಿಶತ್|
26 ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
ಏಷ ಜನೋ ನಿರ್ಭಯತ್ವೇನ ಭಜನಭವನೇ ಕಥಯಿತುಮ್ ಆರಬ್ಧವಾನ್, ತತಃ ಪ್ರಿಸ್ಕಿಲ್ಲಾಕ್ಕಿಲೌ ತಸ್ಯೋಪದೇಶಕಥಾಂ ನಿಶಮ್ಯ ತಂ ಸ್ವಯೋಃ ಸಮೀಪಮ್ ಆನೀಯ ಶುದ್ಧರೂಪೇಣೇಶ್ವರಸ್ಯ ಕಥಾಮ್ ಅಬೋಧಯತಾಮ್|
27 ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
ಪಶ್ಚಾತ್ ಸ ಆಖಾಯಾದೇಶಂ ಗನ್ತುಂ ಮತಿಂ ಕೃತವಾನ್, ತದಾ ತತ್ರತ್ಯಃ ಶಿಷ್ಯಗಣೋ ಯಥಾ ತಂ ಗೃಹ್ಲಾತಿ ತದರ್ಥಂ ಭ್ರಾತೃಗಣೇನ ಸಮಾಶ್ವಸ್ಯ ಪತ್ರೇ ಲಿಖಿತೇ ಸತಿ, ಆಪಲ್ಲಾಸ್ತತ್ರೋಪಸ್ಥಿತಃ ಸನ್ ಅನುಗ್ರಹೇಣ ಪ್ರತ್ಯಯಿನಾಂ ಬಹೂಪಕಾರಾನ್ ಅಕರೋತ್,
28 ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
ಫಲತೋ ಯೀಶುರಭಿಷಿಕ್ತಸ್ತ್ರಾತೇತಿ ಶಾಸ್ತ್ರಪ್ರಮಾಣಂ ದತ್ವಾ ಪ್ರಕಾಶರೂಪೇಣ ಪ್ರತಿಪನ್ನಂ ಕೃತ್ವಾ ಯಿಹೂದೀಯಾನ್ ನಿರುತ್ತರಾನ್ ಕೃತವಾನ್|

< அப்போஸ்தலர் 18 >