< அப்போஸ்தலர் 18 >

1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
येको बाद पौलुस एथेंस ख छोड़ क कुरिन्थुस नगर म आयो।
2 யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
उत ओख अक्विला नाम को एक यहूदी मिल्यो, जेको जनम पुन्तुस म भयो होतो। ऊ अपनी पत्नी प्रिस्किल्ला को संग इटली सी आयो होतो, कहालीकि क्लौदियुस न सब यहूदियों ख रोम सी निकल जान की आज्ञा दी होती। येकोलायी ऊ उन्को इत गयो।
3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
ओको अऊर उन्को एकच काम होतो, येकोलायी ऊ उन्को संग रह्यो अऊर हि काम करन लग्यो; अऊर उन्को काम तम्बू बनान को होतो।
4 ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
ऊ हर एक आराम को दिन आराधनालय म वाद-विवाद कर क् यहूदियों अऊर गैरयहूदियों ख भी समझावत होतो।
5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
जब सीलास अऊर तीमुथियुस मकिदुनिया सी आयो, त पौलुस वचन सुनावन की धुन म यहूदियों ख गवाही देन लग्यो कि यीशुच मसीह आय।
6 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
पर जब हि विरोध अऊर निन्दा करन लग्यो, त ओन अपनो कपड़ा झाड़ क उन्को सी कह्यो, “तुम्हरो खून तुम्हरीच मान पर रहे! मय निर्दोष हय। अब सी मय गैरयहूदियों को जवर जाऊं।”
7 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
उत सी चल क ऊ तीतुस यूस्तुस नाम को परमेश्वर को एक भक्त को घर म आयो; जेको घर आराधनालय सी लग्यो हुयो होतो।
8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
तब आराधनालय को मुखिया क्रिसपुस न अपनो पूरो घरानों को संग प्रभु पर विश्वास करयो; अऊर बहुत सी कुरिन्थवासी सुन क विश्वास लायो अऊर बपतिस्मा लियो।
9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
प्रभु न एक रात दर्शन म पौलुस सी कह्यो, “मत डर, बल्की कहत जा अऊर चुप मत रह्य;
10 ௧0 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
कहालीकि मय तोरो संग हय, अऊर कोयी तोरो पर चढ़ायी कर क् तोरी हानि नहीं करेंन; कहालीकि यो नगर म मोरो बहुत सी लोग हंय।”
11 ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
येकोलायी ऊ उन्म परमेश्वर को वचन सिखातो हुयो डेढ़ साल तक रह्यो।
12 ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
जब गल्लियो अखया देश को शासक होतो, त यहूदी लोग एकता कर क् पौलुस पर चढ़ आयो, अऊर ओख न्याय आसन को आगु लाय क कहन लग्यो,
13 ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
“यो लोगों ख समझावय हय कि परमेश्वर की भक्ति असी रीति सी करे, जो व्यवस्था को विरुद्ध हय।”
14 ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
जब पौलुस बोलन परच होतो, त गल्लियो न यहूदियों सी कह्यो, “हे यहूदियों, यदि यो कुछ अन्याय या अपराध की बात होती, त ठीक होतो कि मय तुम्हरी सुनतो।
15 ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
पर यदि यो वाद-विवाद शब्दों, अऊर नामो, अऊर तुम्हरो इत की व्यवस्था को बारे म आय, त तुमच जानो; कहालीकि मय इन बातों को सच्चो नहीं बननो चाहऊं।”
16 ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
अऊर ओन उन्ख न्याय आसन को आगु सी निकाल दियो।
17 ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
तब सब लोगों न आराधनालय को मुखिया सोस्थिनेस ख पकड़ क् न्याय आसन को आगु पिट्यो। पर गल्लियो न इन बातों की कुछ भी चिन्ता नहीं करी।
18 ௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
पौलुस बहुत दिन तक उत रह्यो। तब भाऊ सी बिदा होय क किंख्रिया म येकोलायी मुंड मुंडायो, कहालीकि ओन मन्नत मानी होती, अऊर जहाज पर सीरिया ख चल दियो अऊर ओको संग प्रिस्किल्ला अऊर अक्विला होतो।
19 ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
ओन इफिसुस पहुंच क उन्ख उत छोड़्यो, अऊर खुद आराधनालय म जाय क यहूदियों सी विवाद करन लग्यो।
20 ௨0 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
जब उन्न ओको सी बिनती करी, “हमरो संग अऊर कुछ दिन रह्य।” त ओन स्वीकार नहीं करयो;
21 ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
पर यो कह्य क उन्को सी बिदा भयो, “यदि परमेश्वर न चाह्यो त मय तुम्हरो जवर फिर आऊं।” तब ऊ इफिसुस सी जहाज खोल क चली गयो।
22 ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
अऊर कैसरिया म उतर क यरूशलेम ख गयो अऊर मण्डली ख नमस्कार कर क् अन्ताकिया म आयो।
23 ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
तब कुछ दिन रह्य क ऊ उत सी निकल्यो, अऊर एक तरफ सी गलातिया अऊर फ्रूगिया प्रदेशों म सब चेलां ख स्थिर करतो फिरयो।
24 ௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
अपुल्लोस नाम को एक यहूदी, जेको जनम सिकन्दरियां म भयो होतो, जो ज्ञानी पुरुष होतो अऊर पवित्र शास्त्र ख अच्छो तरह सी जानत होतो, इफिसुस म आयो।
25 ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ओन प्रभु म चलन की शिक्षा पायी होती, अऊर मन लगाय क यीशु को बारे म ठीक ठीक सुनावतो अऊर सिखावत होतो, पर ऊ केवल यूहन्ना को बपतिस्मा की बात जानत होतो।
26 ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
ऊ आराधनालय म निडर होय क बोलन लग्यो, पर प्रिस्किल्ला अऊर अक्विला ओकी बाते सुन क ओख अपनो इत ले गयो अऊर परमेश्वर को शिक्षा ओख अऊर भी ठीक ठीक बतायो।
27 ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
जब ओन ठान लियो कि ओन पार उतर क अखया ख जाये त भाऊ न ओख हिम्मत दे क चेलां ख लिख्यो कि हि ओको सी अच्छो तरह मिले; अऊर ओन उत पहुंच क उन लोगों की बड़ी मदत करी जिन्न अनुग्रह को वजह विश्वास करयो होतो।
28 ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
कहालीकि ऊ पवित्र शास्त्र सी सबूत दे क कि यीशुच मसीह आय, बड़ी मजबुतायी सी यहूदियों ख सब को आगु बतावत रह्यो।

< அப்போஸ்தலர் 18 >