< அப்போஸ்தலர் 18 >

1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
ⲁ̅ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲁⲑⲏⲛⲛⲏⲥ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲕⲟⲣⲓⲛⲑⲟⲥ.
2 யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
ⲃ̅ⲁϥϫⲓⲙⲓ ⳿ⲛⲟⲩⲒⲟⲩⲇⲁⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲁⲕⲩⲗⲗⲁⲥ ⳿ⲉⲟⲩⲡⲟⲛⲧⲓⲟⲥ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲉϥⲅⲉⲛⲟⲥ ⳿ⲉⲁϥ⳿ⲓ ⲥⲁⲧⲟⲧϥ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ϯϩⲩⲧⲁⲗⲓ⳿ⲁ ⲛⲉⲙ ⳿ⲡⲣⲓⲥⲕⲩⲗⲗⲁ ⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ ϫⲉ ⲛⲉ ⲁϥⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⳿ⲕⲗⲁⲩⲇⲓⲟⲥ ⲉⲑⲣⲉ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲫⲱⲣϫ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲣⲱⲙⲏⲁϥ⳿ⲓ ϣⲁⲣⲱⲟⲩ.
3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
ⲅ̅ⲟⲩⲟϩ ⲁϥϣⲱⲡⲓ ϧⲁⲧⲟⲧⲟⲩ ⲉⲑⲃⲉ ϫⲉ ⲟⲩ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛⲧⲉⲭⲛⲏ⳿ⲛⲧⲁϥ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲉⲣϩⲱⲃ ⲡⲉ ⲛⲉ ϩⲁⲛⲣⲉϥⲑⲁⲙⲓ⳿ⲉ ⳿ⲥⲕⲩⲛⲏⲅⲁⲣ ⲛⲉ ϧⲉⲛ ⲧⲟⲩⲧⲉⲭⲛⲏ.
4 ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
ⲇ̅ⲛⲁⲩⲥⲁϫⲓ ⲇⲉ ⲡⲉ ϧⲉⲛ ϯⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲕⲁⲧⲁ ⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲑⲱⲧ ⳿ⲙ⳿ⲡϩⲏⲧ ⳿ⲛⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲛⲉⲙ ⲛⲓⲟⲩⲉⲓⲛⲓⲛ.
5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
ⲉ̅⳿ⲉⲧⲁⲩ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲑⲙⲁⲕⲉⲇⲟⲛⲓ⳿ⲁ ⳿ⲛϫⲉ ⲥⲓⲗⲁⲥ ⲛⲉⲙ ⲧⲓⲙⲟⲑⲉⲟⲥ ⲛⲁϥⲙⲏⲛ ⲇⲉ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲡⲁⲩⲗⲟⲥ ϧⲉⲛ ⲡⲓⲥⲁϫⲓ ⲉϥⲉⲣⲙⲉⲑⲣⲉ ⳿ⲛⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ϫⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲡⲉ Ⲓⲏ̅ⲥ̅.
6 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
ⲋ̅ⲉⲩϯ ⲇⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲁϥ ⲟⲩⲟϩ ⲉⲩϫⲉⲟⲩ⳿ⲁ ⲁϥⲛⲉϩ ⲛⲉϥ⳿ϩⲃⲱⲥ ⳿ⲉⲃⲟⲗ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲡⲉⲧⲉⲛ⳿ⲥⲛⲟϥ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲁⲫⲉ ϯⲟⲩⲁⲃ ⳿ⲁⲛⲟⲕ ⲓⲥϫⲉⲛ ϯⲛⲟⲩ ⲉⲓ⳿ⲉϣⲉⲛⲏⲓ ⳿ⲉⲛⲓⲉⲑⲛⲟⲥ.
7 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
ⲍ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲟⲩ⳿ⲱⲧⲉⲃ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉ⳿ⲡⲏⲓ ⳿ⲛⲟⲩⲁⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲧⲓⲧⲟⲥ ⲫⲁⲓ ⲟⲩⲡⲓⲥⲧⲟⲥ ⲉϥⲉⲣⲥⲉⲃⲉⲥⲑⲉ ⳿ⲙⲪϯ ⲫⲁⲓ ⳿ⲉⲛⲁⲣⲉ ⲡⲉϥⲏⲓ ⲧⲟⲙⲓ ⳿ⲉϯⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ.
8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ⲏ̅⳿ⲕⲣⲓⲥⲡⲟⲥ ⲇⲉ ⲡⲓⲁⲣⲭⲏⲥⲩⲛⲁⲅⲱⲅⲟⲥ ⲁϥⲛⲁϩϯ ⳿ⲉⲠ⳪ ⲛⲉⲙ ⲡⲉϥⲏⲓ ⲧⲏⲣϥ ⲟⲩⲟϩ ⲟⲩⲙⲏϣ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲕⲟⲣⲓⲛⲑⲟⲥ ⲉⲩⲥⲱⲧⲉⲙ ⲛⲁⲩⲛⲁϩϯ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϭⲓⲱⲙⲥ.
9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
ⲑ̅ⲡⲉϫⲉ Ⲡ⳪ ⲇⲉ ⳿ⲙⲡⲁⲩⲗⲟⲥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ ⲟⲩϩⲟⲣⲁⲙⲁ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϫⲱⲣϩ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ⲁⲗⲗⲁ ⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲣⲭⲁⲣⲱⲕ.
10 ௧0 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
ⲓ̅ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ϯⲭⲏ ⲛⲉⲙⲁⲕ ⲟⲩⲟϩ ⳿ⲛⲛⲉ ⳿ϩⲗⲓ ⲧⲱⲛϥ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱⲕ ⳿ⲉϯ⳿ⲙⲕⲁϩ ⲛⲁⲕ ϫⲉ ⲟⲩⲟⲛ ⳿ⲛⲧⲏⲓ ⳿ⲛⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲗⲁⲟⲥ ϧⲉⲛ ⲧⲁⲓⲡⲟⲗⲓⲥ.
11 ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ⲓ̅ⲁ̅ⲁϥϩⲉⲙⲥⲓ ⲇⲉ ⳿ⲛⲟⲩⲣⲟⲙⲡⲓ ⲛⲉⲙ ⳿ⲛ⳿ⲁⲃⲟⲧ ⲉϥϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
12 ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
ⲓ̅ⲃ̅ⲅⲁⲗⲓⲱⲛ ⲇⲉ ⲉϥⲟⲓ ⳿ⲛⲁⲛⲑⲩⲡⲁⲧⲟⲥ ⳿ⲉϯ⳿ⲁⲭⲁⲓ⳿ⲁ ⲁⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲉⲩⲥⲟⲡ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲁⲩⲗⲟⲥ ⲟⲩⲟϩ ⲁⲩⲉⲛϥ ⳿ⲉⲡⲓⲙⲁ ⳿ⲛϯϩⲁⲡ.
13 ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
ⲓ̅ⲅ̅ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲁⲓ ⲑⲱⲧ ⳿ⲙ⳿ⲡϩⲏⲧ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲓ ⳿ⲉⲉⲣⲥⲉⲃⲉⲥⲑⲉ ⳿ⲙⲪϯ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ.
14 ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
ⲓ̅ⲇ̅ⲉϥⲛⲁⲟⲩⲱⲛ ⲇⲉ ⳿ⲛⲣⲱϥ ⳿ⲛϫⲉ ⲡⲁⲩⲗⲟⲥ ⲡⲉϫⲉ ⲅⲁⲗⲓⲱⲛ ⳿ⲛⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⳿⳿ⲉⲛⲉ ⲟⲩⲟⲛ ϭⲓ ⳿ⲛϫⲟⲛⲥ ⲓⲉ ⲟⲩϩⲱⲃ ⲉϥϩⲱⲟⲩ ⳿ⲙⲡⲟⲛⲏⲣⲟⲛ ⳿ⲱ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲕⲁⲗⲱⲥ ⲛⲁⲓⲛⲁⲉⲣⲁⲛⲉⲭⲉⲥⲑⲉ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ.
15 ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
ⲓ̅ⲉ̅ⲓⲥϫⲉ ⲇⲉ ϩⲁⲛⲍⲏⲧⲏⲙⲁ ⲛⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩⲥⲁϫⲓ ⲛⲉⲙ ϩⲁⲛⲣⲁⲛ ⲛⲉⲙ ⲡⲉⲧⲉⲛⲛⲟⲙⲟⲥ ⳿ⲉⲣⲉⲧ⳿ⲉⲛⲉⲣⲱϣⲓ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϯⲟⲩ⳿ⲱϣ ⳿ⲁⲛⲟⲕ ⲁⲛ ⳿ⲉⲉⲣⲣⲉϥϯϩⲁⲡ ⳿ⲛⲧⲉ ⲛⲁⲓ.
16 ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
ⲓ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲁⲩϩⲓⲧⲟⲩ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲡⲓⲃⲏⲙⲁ.
17 ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
ⲓ̅ⲍ̅ⲁⲩ⳿ⲁⲙⲟⲛⲓ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⳿ⲛⲥⲱⲥⲑⲉⲛⲏⲥ ⲡⲓⲁⲣⲭⲏⲥⲩⲛⲁⲅⲱⲅⲟⲥ ⲁⲩϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲡⲓⲃⲏⲙⲁ ⲟⲩⲟϩ ⲛⲁⲥⲉⲣⲙⲉⲗⲉⲥⲑⲉ ⲁⲛ ⳿ⲛⲅⲁⲗⲓⲱⲛ ⲉⲑⲃⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲛⲁⲓ.
18 ௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
ⲓ̅ⲏ̅ⲡⲁⲩⲗⲟⲥ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲛⲕⲉⲙⲏϣ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ϧⲁⲧⲉⲛ ⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⲁϥⲉⲣⲁⲡⲟⲇⲁⲍⲉⲥⲑⲉ ⲛⲱⲟⲩ ⲁϥⲉⲣϩⲱⲧ ⳿ⲉ⳿ⲧⲤⲩⲣⲓ⳿ⲁ ⲉⲥⲛⲉⲙⲁϥ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲣⲓⲥⲕⲩⲗⲗⲁ ⲛⲉⲙ ⲁⲕⲩⲗⲗⲁⲥ ⳿ⲉⲁϥϣⲉⲡ ϫⲱϥ ϧⲉⲛ ⲕⲉⲛⲭⲣⲉⲉⲥ ⲛⲁϥϧⲉⲛ ⲟⲩⲉⲩⲭⲏⲅⲁⲣ ⲡⲉ.
19 ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
ⲓ̅ⲑ̅ⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉⲉⲫⲉⲥⲟⲥ ⲟⲩⲟϩ ⲁϥⲥⲉϫⲡ ⲛⲏ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϯⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ.
20 ௨0 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
ⲕ̅ⲉⲩⲧⲱⲃϩ ⲇⲉ ⳿ⲙⲙⲟϥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲉⲣ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲥⲏⲟⲩ ϧⲁⲧⲟⲧⲟⲩ ⳿ⲙⲡⲉϥⲟⲩⲱϣ.
21 ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
ⲕ̅ⲁ̅ⲁⲗⲗⲁ ⲁϥⲉⲣⲁⲡⲟⲇⲁⲍⲉⲥⲑⲉ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲁϥϫⲟⲥ ϫⲉ ϯⲛⲁⲕⲟⲧⲧ ϩⲁⲣⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲡⲉⲧⲉϩⲛⲉ Ⲫϯ ⲁϥⲉⲣϩⲱⲧ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲉⲫⲉⲥⲟⲥ.
22 ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
ⲕ̅ⲃ̅⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲔⲉⲥⲁⲣⲓⲁ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲉⲣⲁⲥⲡⲁⲍⲉⲥⲑⲉ ⳿ⲛϯⲉⲕ⳿ⲕⲗⲏⲥⲓ⳿ⲁ ⲁϥ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲁⲛⲧⲓⲟⲭⲓ⳿ⲁ.
23 ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
ⲕ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲉⲣⲟⲩⲥⲏⲟⲩ ⳿ⲙⲙⲁⲩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲉϥⲥⲓⲛⲓ ⲕⲁⲧⲁ ⲙⲁ ⳿ⲛⲧⲉ ϯⲭⲱⲣⲁ ⳿ⲛⲧⲉ ϯⲅⲁⲗⲁⲧⲓ⳿ⲁ ⲛⲉⲙ ϯ⳿ⲫⲣⲓⲕⲓⲁ ⲉϥⲧⲁϫⲣⲟ ⳿ⲛⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲧⲏⲣⲟⲩ.
24 ௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
ⲕ̅ⲇ̅ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲒⲟⲩⲇⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⳿ⲁⲡⲉⲗⲗⲏⲥ ⳿ⲉⲟⲩⲣⲉⲙⲣⲁⲕⲟϯ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲉϥⲅⲉⲛⲟⲥ ⳿ⲉⲟⲩⲣⲱⲙⲓ ⲡⲉ ⳿ⲛⲗⲟⲅⲓⲙⲟⲥ ⳿ⲉⲁϥⲉⲣⲕⲁⲧⲁⲛⲧⲁⲛ ⳿ⲉⲉⲫⲉⲥⲟⲥⲉ ⲟⲩⲟⲛ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ.
25 ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
ⲕ̅ⲉ̅ⲫⲁⲓ ⲛⲉ ⲁⲩⲉⲣⲕⲁⲑⲏⲕⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲡⲓⲙⲱⲓⲧ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲟⲩⲟϩ ⲉϥϧⲏⲙ ϧⲉⲛ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲛⲁϥⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⲛⲁϥϯ⳿ⲥⲃⲱ ϧⲉⲛ ⲟⲩⲧⲁϫⲣⲟ ⲉⲑⲃⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲡⲓⲱⲙⲥ ⳿ⲛⲧⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⳿ⲉⲧⲉϥⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ.
26 ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
ⲕ̅ⲋ̅ⲫⲁⲓ ⲇⲉ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛⲟⲩⲟⲛϩϥ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ϯⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⳿ⲉⲧⲁⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲣⲓⲥⲕⲩⲗⲗⲁ ⲛⲉⲙ ⲁⲕⲩⲗⲗⲁ ⲁⲩϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲁⲩⲧⲁⲙⲟϥ ϧⲉⲛ ⲟⲩⲧⲁϫⲣⲟ ⳿ⲉⲡⲓⲙⲱⲓⲧ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
27 ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
ⲕ̅ⲍ̅ⲉϥⲟⲩⲱϣ ⲇⲉ ⳿ⲉ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉϯⲁⲭⲁⲓ⳿ⲁ ⲁⲩϯⲉⲣⲟⲩⲟⲧ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⲁⲩ⳿ⲥϧⲁⲓ ⳿ⲛⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⳿ⲛⲥⲉϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲫⲁⲓ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⲁϥⲉⲣ ⲟⲩⲛⲟϥⲣⲓ ⳿ⲉⲙⲁϣⲱ ⳿ⲛⲛⲏ⳿ⲉⲧⲁⲩⲛⲁϩϯ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ ⲡⲓ⳿ϩⲙⲟⲧ.
28 ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
ⲕ̅ⲏ̅ⲛⲁϥⲥⲟϩⲓ ⳿ⲛⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ϧⲉⲛ ⲟⲩⲧⲁϫⲣⲟ ⳿ⲛⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⲉϥⲧⲁⲙⲟ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲡⲉ Ⲓⲏ̅ⲥ̅

< அப்போஸ்தலர் 18 >