< அப்போஸ்தலர் 15 >

1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள்.
फिरी किछ लोक यहूदिया इलाके मरां आए, ते विश्वासी ढ्लान ए शिक्षा देने लगे, “अगर मूसेरे रसमरे मुताबिक तुश्शो खतनो नईं भोरो त तुसन मुक्ति न मैल्ली बटे।”
2 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
एस गल्ली पुड़ पौलुस ते बरनबासेरो तैन लोकन सेइं बड़ो मतभेद ते बड़ी बेंस भोइ, ते कलीसियारे लोकेईं पौलुस ते बरनबास ते किछ होरे मैन्हु च़ुने कि तैना यरूशलेम नगरे मां गेइतां तैड़ी एस मसले पुड़ प्रेरितन ते बुज़ुर्गन सेइं गलबात केरतां हल कढन।
3 அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
तैखन कलीसियारे लोकेईं तैना खर्च़ो देइतां भेज़े, ते ज़ैखन तैना फीनीके ते सामरियारे इलाकन मांमेइं च़लोरे थिये, तैनेईं ज़ोवं, कि केन्च़रे गैर कौमां केरे लोक खुशखबरी शुन्तां मसीह पुड़ विश्वास कियो, ते कलीसियाई मां शामल भोए, एन शुन्तां सारे मसीह ढ्ला बड़े खुश किये।
4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள்.
ज़ैखन तैना यरूशलेम नगरे मां पुज़े, त तैठेरी कलीसियारे लोक ते प्रेरित ते बुज़ुर्ग तैन सेइं बेड़ि खुशी सेइं मिले, ते तैखन पौलुस ते बरनबासे सब किछ बिस्तार दित्तो, कि परमेशरे तैन केरे ज़िरिये सेइं केत्रा-केत्रा कम्मां कियां।
5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
पन फरीसी पंथेरे किछ लोकेईं ज़ैनेईं विश्वास कियोरो थियो, तैन मरां किछ ज़ोने लगे, “गैर कौमन मरां विश्वास केरनेबालां केरो खतनो कियोरो लोड़े, ते एन मूसा नेबेरे कानूने पुड़ अमल केरनेरो हुक्म दित्तोरो लोड़ते।”
6 அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
तैखन प्रेरित ते बुज़ुर्ग ए गलबात केरनेरे लेइ अकोट्ठे भोए।
7 மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
बड़ी बेंस भोनेरे बाद पतरसे तैन खड़े भोइतां ज़ोवं, “हे मेरे ढ्लाव, तुस ज़ानतथ कि बड़े च़िरे पेइले परमेशरे अवं तुसन लोकन मरां च़ुनो, ताके गैर कौमन मेरे ज़िरिये खुशखबरी शुनाई गाए ते तैना विश्वास केरन।
8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;
परमेशर ज़ै दिलेरो हाल ज़ानते, तैनी तैन भी इश्शी ज़ेरि पवित्र आत्मा देइतां इन हिराव, कि परमेशरे तैना अपने लोकां केरे ज़ेरे कबूल किये।
9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.
ते विश्वास केरनेरे ज़िरिये सेइं तैन केरे मन पवित्र केरतां असन मां ते तैन मां कोई फर्क न रख्खो।
10 ௧0 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
त हुनी तुस परमेशरेरी अज़मैइश किजो केरतथ? कि गैर कौमन मरां ओरे चेलन (यानी विश्वासी लोकन) पुड़ एत्रो बोझ किजो रखतथ, ज़ै न असेईं छ़ुइयोए ते न इश्शे दादे-पड़दादे छ़ुइयोए।
11 ௧௧ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான்.
एरू केरनू ठीक नईं, किजोकि इश्शू याकीन त इने कि प्रभु यीशु मसीहेरे अनुग्रह सेइं तैन केरे पापां केरि मुक्ति भोली, तेन्च़रे इश्शी मुक्ति भोली, न कि मूसेरे कानूने सेइं।”
12 ௧௨ அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.
तैखन सारे लोक च़ुपच़ाप बरनबास ते पौलुसेरी गल्लां शुन्ने लग्गे, कि परमेशरे केन्च़रे गैर कौमन मां तैन केरे ज़िरिये केरहे-केरहे निशान ते चमत्कार किये।
13 ௧௩ அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
ज़ैखन तैना च़ुप भोए त याकूब ज़ोने लगो, “मेरे ढ्लाव मेरी गल शुना।”
14 ௧௪ தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
शमौन पतरसे रोड़ेच़ारे ज़ोवं, कि परमेशरे पेइले केन्च़रे गैर कौमन पुड़ सिद्धी नज़र की, ताके तैन मरां मैन्हु च़ुनतां अपने लोक बनाए।
15 ௧௫ அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
नेबी केरू बच्चन भी एसेरू ज़ेरूए ज़ेन्च़रे लिखोरूए कि।
16 ௧௬ எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி,
एसेरां बाद अवं फिरी एइतां दाऊदेरू राज़ बनेइलो, ज़ैन तैसेरे दुश्मनेईं नाश कियोरू थियूं।
17 ௧௭ நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ताके बाकी सारे लोक ते गैर कौमन समेत ज़ैना मीं कुजोरेन मेरे लोक भोन, ते मीं तोप्पन।
18 ௧௮ உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ए तैए प्रभु ज़ोते ज़ै दुनियारे शुरुआती करां इन गल्लां केरि खबर देतो अव। (aiōn g165)
19 ௧௯ எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும்,
“एल्हेरेलेइ मेरो खियाल ईए, गैर कौमन मरां ज़ैना लोक परमेशरे कां एइतन, तैन अस यहूदी केरो कानून मन्नेरे लेइ मजबूर न केरम।
20 ௨0 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
बल्के तैन चिट्ठी लिखतां एन ज़ोम कि मूरतन कां च़ैढ़ोरी चीज़ां करां दूर रान, ते बदमैशी ते गलचैटी देइतां मारोरे जानवरां केरू मास न खान ते खून न खान।
21 ௨௧ ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
किजोकि बड़े पेइले नगर-नगरे मां मूसेरे कानूनेरो प्रचार केरनेबाले भोते आए, ते तैना हर आरामेरे दिहाड़े प्रार्थना घरे मां पेढ़ी गाती थी।”
22 ௨௨ அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
तैखन प्रेरित ते बुज़ुर्ग ते सारी यरूशलेमेरे सारे कलीसिया मिलतां एन रोड़ू समझ़ू, कि असन मरां किछ मैन्हु च़ुने गान, मतलब यहूदा, ज़ैस जो बरसब्बास ज़ोतन ते सीलास ज़ैना ढ्लान मां खास आन, ते तैन पौलुस ते बरनबासे सेइं साथी अन्ताकिया नगरेरे कलीसियाई मां भेज़म।
23 ௨௩ இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்:
ते तैनेईं तैन केरे हथ्थे इन लिखतां भेज़ू, “अन्ताकिया नगरे ते सीरिया ते किलिकिया इलाकां केरे रानेबाले विश्वासी ढ्लान ज़ैना गैर कौमन मरां आन, प्रेरितां ते बुज़ुर्ग ढ्लां केरू नमस्कार!
24 ௨௪ எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,
असेईं शुनेरूए, कि किछ मैन्हु बगैर अजाज़तां तुश्शे इड़ी आए, ते तैनेईं अपनि गल्लेईं सेइं तुश्शो दिल परेशान कियो।
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு,
एल्हेरेलेइ असेईं एन ठीक समझ़ू, कि इट्ठां दूई मैन्हु अपने ट्लारे बरनबास ते पौलुस सेइं साथी तुसन कां भेज़म।
26 ௨௬ எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.
एना एरे मैन्हु आन कि ज़ैन इश्शे प्रभु यीशु मसीहेरे लेइ अपनि जानरी भी परवाह नईं।
27 ௨௭ அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
एल्हेरेलेइ असेईं यहूदा ते सीलास भेज़ोरेन, ते तैना एप्पू भी एना गल्लां शुनाले।
28 ௨௮ என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே.
पवित्र आत्मा, ते असेईं एन ठीक समझ़ू, कि इना ज़रूरी गल्लां केरे अलावा तुसन पुड़ होरो बोझ न देम।
29 ௨௯ அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
बस्सा तुस मूरतन कां च़ाढ़ोरे बलिदाने ते खून करां ते गल दुबेइतां मारोरे जानवरे करां ते बदमाशी केरने करां दूर राथ एन तुश्शे लेइ रोड़ू भोलू। अग्रोवं जो शुभकामना”
30 ௩0 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.
बस्सा तैना मैन्हु च़लते-च़लते अन्ताकिया नगरे मां पुज़े, तैड़ी तैनेईं कलीसियारे लोक अकोट्ठे केरतां ए चिट्ठी तैन केरे हवाले की।
31 ௩௧ அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.
तैना चिट्ठी मां लिखोरी गल्लां पेढ़तां बड़े खुशी भोए।
32 ௩௨ யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
यहूदा ते सीलास एप्पू भी नबी थिये, तैनेईं तैट्ठेरे विश्वासी ढ्लान शिक्षा दित्ती ते तैना विश्वासे मां पक्के बनाए।
33 ௩௩ சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
किछ दिहाड़ना बाद तैट्ठेरे विश्वासी ढ्लाएईं आनन्दे सेइं ते प्रार्थना केरतां वापस भेज़े, ताके अपने भेज़ने बालन कां वापस गान।
34 ௩௪ ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது.
सीलासे अन्ताकिया नगरे मां रानेरो फैसलो कियो ते यहूदा अकैल्लो वापस यरूशलेमे जो अव।
35 ௩௫ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள்.
ते पौलुस ते बरनबास अन्ताकिया नगरे मां रुकी जे, तैड़ी तैना काई होरि लोकन सेइं मिलतां लोकन प्रभु यीशुएरे वचनेरी शिक्षा देंते राए ते खुशखबरी शुनाते राए।
36 ௩௬ சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான்.
किछ च़िरेरां बाद पौलुसे बरनबास सेइं ज़ोवं, “च़ल असां तैन सारे नगरन मां गाम, ज़ैड़ी असेईं खुशखबरी शुनावरी थी, ते तैन विश्वासी ढ्लान सेइं मुलाकात केरम, ते हेरम कि तैन केरो कुन हाले।”
37 ௩௭ அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
तैखन बरनबासे यूहन्ना ज़ैस जो मरकुस ज़ोतन, साथी नेनो चाव।
38 ௩௮ ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
पन पौलुसे ठीक न समझ़ू, कि यूहन्ना तैन सेइं साथी गाए, किजोकि तै पंफूलिया इलाके मां कम शैरतां अलग भोरो थियो।
39 ௩௯ இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான்.
पौलुस त बरनबासे एप्पू मांमेइं बड़ी अनबन भोइ, ते तैना अलग भोए, बरनबास ते मरकुस ज़िहाज़े मां साइप्रस जो च़लो जे।
40 ௪0 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
पन पौलुसे सीलास एप्पू साथी नीयो, ते विश्वासी ढ्लाएईं तैन केरे लेइ प्रार्थना की, ते तैना परमेशरेरे अनुग्रहेरे सुपुर्द किये ते तैना तैट्ठां च़ले जे।
41 ௪௧ சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
पौलुस सीरिया ते किलिकिया इलाकन मांमेइं निस्सो च़लतो ते कलीसियां केरे विश्वासी लोकन मज़बूत केरतो जेव।

< அப்போஸ்தலர் 15 >