< அப்போஸ்தலர் 14 >

1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
इकुनियुम नगर म्ह इसा होया के वे यहूदियाँ के आराधनालय म्ह गैल-गैल गये, अर इस ढाळ बात करी के यहूदियाँ अर यूनानियाँ म्ह घणखरयां नै बिश्वास करया।
2 விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
पर बिश्वास ना करण आळे गैर यहूदियाँ के मन बिश्वासी भाईयाँ कै बिरोध म्ह उकसाये अर कडुवापण पैदा करया।
3 அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
पौलुस अर बरनबास घणे दिन ताहीं उड़ै रहे, अर प्रभु कै भरोसै पै हिम्मत तै बात करै थे, अर वो उनकै हाथ्थां तै चमत्कार अर अनोक्खे काम करवा कै अपणे अनुग्रह के वचन ताहीं साबित करदा रह्या।
4 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
पर नगर के लोग्गां म्ह फूट पड़गी थी, इसतै घणेए तो यहूदियाँ कान्ही अर घणेए प्रेरितां कान्ही होग्ये।
5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
जिब गैर यहूदी अर यहूदी उनकी बेजती करण नै अर उनकै पत्थर मारण कै खात्तर अपणे सरदारां सुधा उन कान्ही भाज्जे,
6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
फेर वे इस बात नै जाणगे अर लुकाउनिया परदेस के लुस्त्रा अर दिरबे नगरां म्ह, अर लोवै-धोरै के परदेसां म्ह भाजगे
7 அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
अर ओड़ै सुसमाचार सुणाण लाग्गे।
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
लुस्त्रा नगर म्ह एक माणस बेठ्या था, जो पायां तै लाचार था। वो जन्म तै ए लंगड़ा था, अर कदे न्ही चाल्या था।
9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
वो पौलुस नै बात करदे सुणै था। पौलुस नै उसकी ओड़ टकटकी लाकै देख्या के उसनै ठीक होण का बिश्वास सै,
10 ௧0 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
अर ठाड्डू आवाज म्ह बोल्या, “अपणे पायां कै बळ सीध्धा खड्या हो।” फेर वो उछळकै चाल्लण-फिरण लाग्या।
11 ௧௧ பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
लोग्गां नै पौलुस का यो काम देखकै लुकाउनिया की भाषा म्ह ठाड्डू आवाज म्ह कह्या, “देवता माणस कै रूप म्ह होकै म्हारै धोरै उतर आये सै।”
12 ௧௨ பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
उननै बरनबास ताहीं ज्यूस देवता, अर पौलुस ताहीं हिरमेस कह्या क्यूँके वो खास संदेश देण आळा था।
13 ௧௩ அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
ज्यूस देवता के उस मन्दर का पुजारी जो उनकै नगर कै स्याम्ही था, बळध अर फूल्लां के हार फाटकां पै ल्याकै लोग्गां कै गेल्या बलिदान करणा चाहवै था।
14 ௧௪ அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
पर बरनबास अर पौलुस प्रेरितां नै जिब यो सुण्या, तो अपणे लत्ते पाड़े अर भीड़ म्ह लपके, अर रुक्का मारकै कहण लाग्गे,
15 ௧௫ மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
“हे भले माणसों, थम के करो सो? हम भी तो थारे तरियां दुख-सुख भोग्गण आळे माणस सां, अर थमनै सुसमाचार सुणावां सां के थम इन बेकार चिज्जां तै न्यारे होकै जिन्दे परमेसवर कै कान्ही फिरो, जिसनै सुर्ग अर धरती अर समुन्दर अर जो किमे उन म्ह सै बणाया सै।
16 ௧௬ கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
उसनै बीत्ते होए बखत म्ह सारी जात्तां ताहीं अपणे-अपणे रास्तयां पै चाल्लण दिया।
17 ௧௭ அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
फेर भी वो अपणे भले काम करण के जरिये अपणे बारें म्ह गवाही देंदा रहया, अर अकास तै मिह अर फळआळी ऋतु देकै थारे मन नै खाणे अर खुशी तै भरदा रहया।”
18 ௧௮ இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
न्यू कहकै भी उननै लोग्गां ताहीं बड्डी मुश्किलां तै रोक्या के उनकै खात्तर बलिदान ना करै।
19 ௧௯ பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
पर कुछ यहूदियाँ नै अन्ताकिया नगर अर इकुनियुम नगर तै आकै लोग्गां ताहीं अपणी ओड़ कर लिया, अर पौलुस पै पत्थर बरसाए, अर मरया होड़ सोचकै उस ताहीं नगर कै बाहरणै घसीट लेगे।
20 ௨0 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
पर चेल्लें जिब उसकै चौगरदेकै आण खड़े होए, तो वो उठकै नगर म्ह गया अर दुसरे दिन बरनबास कै गेल्या दिरबे नगर कान्ही चल्या गया।
21 ௨௧ தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
वे उस नगर के लोग्गां ताहीं सुसमाचार सुणाकै अर घणे चेल्लें बणाकै, लुस्त्रा अर इकुनियुम अर अन्ताकिया नगर नै बोहड़ आये,
22 ௨௨ சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
अर चेल्यां के मनां नै स्थिर करदे अर उत्साहित करते होए या शिक्षा देते रह्ये के बिश्वास म्ह बणे रहो, अर न्यू कहवै थे, “हमनै घणे दुख ठाकै परमेसवर के राज्य म्ह बड़णा होगा।”
23 ௨௩ அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
अर उननै हरेक कलीसिया म्ह उनकै खात्तर अगुवें ठहराए, अर ब्रत सुधा प्रार्थना करकै उन ताहीं प्रभु कै हाथ्थां म्ह सौप्या जिसपै उननै बिश्वास करया था।
24 ௨௪ பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
फेर पिसिदिया परदेस तै होन्दे होए वे पंफूलिया परदेस पोहचे,
25 ௨௫ பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
फेर पिरगा नगर म्ह वचन सुणाकै अत्तलिया नगर म्ह आये,
26 ௨௬ அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
अर ओड़ै तै वे पाणी के जहाज तै अन्ताकिया नगर गये, जित्त वे उस काम कै खात्तर जो उननै पूरा करया था परमेसवर के अनुग्रह म्ह सौपे गये थे।
27 ௨௭ அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
अन्ताकिया नगर पोहचकै उननै कलीसिया कठ्ठी करी अर बताया के परमेसवर नै उनकै गेल्या होकै किसे बड़े-बड़े काम करे, अर गैर यहूदियाँ कै खात्तर बिश्वास का बारणा खोल दिया।
28 ௨௮ அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
अर वे चेल्यां कै गेल्या घणे दिन ताहीं रहे।

< அப்போஸ்தலர் 14 >