< அப்போஸ்தலர் 10 >

1 இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
കൈസരിയാനഗര ഇതാലിയാഖ്യസൈന്യാന്തർഗതഃ കർണീലിയനാമാ സേനാപതിരാസീത്
2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
സ സപരിവാരോ ഭക്ത ഈശ്വരപരായണശ്ചാസീത്; ലോകേഭ്യോ ബഹൂനി ദാനാദീനി ദത്വാ നിരന്തരമ് ഈശ്വരേ പ്രാർഥയാഞ്ചക്രേ|
3 பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,
ഏകദാ തൃതീയപ്രഹരവേലായാം സ ദൃഷ്ടവാൻ ഈശ്വരസ്യൈകോ ദൂതഃ സപ്രകാശം തത്സമീപമ് ആഗത്യ കഥിതവാൻ, ഹേ കർണീലിയ|
4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
കിന്തു സ തം ദൃഷ്ട്വാ ഭീതോഽകഥയത്, ഹേ പ്രഭോ കിം? തദാ തമവദത് തവ പ്രാർഥനാ ദാനാദി ച സാക്ഷിസ്വരൂപം ഭൂത്വേശ്വരസ്യ ഗോചരമഭവത്|
5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு.
ഇദാനീം യാഫോനഗരം പ്രതി ലോകാൻ പ്രേഷ്യ സമുദ്രതീരേ ശിമോന്നാമ്നശ്ചർമ്മകാരസ്യ ഗൃഹേ പ്രവാസകാരീ പിതരനാമ്നാ വിഖ്യാതോ യഃ ശിമോൻ തമ് ആഹ്വായയ;
6 அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
തസ്മാത് ത്വയാ യദ്യത് കർത്തവ്യം തത്തത് സ വദിഷ്യതി|
7 கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
ഇത്യുപദിശ്യ ദൂതേ പ്രസ്ഥിതേ സതി കർണീലിയഃ സ്വഗൃഹസ്ഥാനാം ദാസാനാം ദ്വൗ ജനൗ നിത്യം സ്വസങ്ഗിനാം സൈന്യാനാമ് ഏകാം ഭക്തസേനാഞ്ചാഹൂയ
8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்.
സകലമേതം വൃത്താന്തം വിജ്ഞാപ്യ യാഫോനഗരം താൻ പ്രാഹിണോത്|
9 மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.
പരസ്മിൻ ദിനേ തേ യാത്രാം കൃത്വാ യദാ നഗരസ്യ സമീപ ഉപാതിഷ്ഠൻ, തദാ പിതരോ ദ്വിതീയപ്രഹരവേലായാം പ്രാർഥയിതും ഗൃഹപൃഷ്ഠമ് ആരോഹത്|
10 ௧0 அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,
ഏതസ്മിൻ സമയേ ക്ഷുധാർത്തഃ സൻ കിഞ്ചിദ് ഭോക്തുമ് ഐച്ഛത് കിന്തു തേഷാമ് അന്നാസാദനസമയേ സ മൂർച്ഛിതഃ സന്നപതത്|
11 ௧௧ வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
തതോ മേഘദ്വാരം മുക്തം ചതുർഭിഃ കോണൈ ർലമ്ബിതം ബൃഹദ്വസ്ത്രമിവ കിഞ്ചന ഭാജനമ് ആകാശാത് പൃഥിവീമ് അവാരോഹതീതി ദൃഷ്ടവാൻ|
12 ௧௨ அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
തന്മധ്യേ നാനപ്രകാരാ ഗ്രാമ്യവന്യപശവഃ ഖേചരോരോഗാമിപ്രഭൃതയോ ജന്തവശ്ചാസൻ|
13 ௧௩ அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
അനന്തരം ഹേ പിതര ഉത്ഥായ ഹത്വാ ഭുംക്ഷ്വ തമ്പ്രതീയം ഗഗണീയാ വാണീ ജാതാ|
14 ௧௪ அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.
തദാ പിതരഃ പ്രത്യവദത്, ഹേ പ്രഭോ ഈദൃശം മാ ഭവതു, അഹമ് ഏതത് കാലം യാവത് നിഷിദ്ധമ് അശുചി വാ ദ്രവ്യം കിഞ്ചിദപി ന ഭുക്തവാൻ|
15 ௧௫ அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.
തതഃ പുനരപി താദൃശീ വിഹയസീയാ വാണീ ജാതാ യദ് ഈശ്വരഃ ശുചി കൃതവാൻ തത് ത്വം നിഷിദ്ധം ന ജാനീഹി|
16 ௧௬ மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ഇത്ഥം ത്രിഃ സതി തത് പാത്രം പുനരാകൃഷ്ടം ആകാശമ് അഗച്ഛത്|
17 ௧௭ அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:
തതഃ പരം യദ് ദർശനം പ്രാപ്തവാൻ തസ്യ കോ ഭാവ ഇത്യത്ര പിതരോ മനസാ സന്ദേഗ്ധി, ഏതസ്മിൻ സമയേ കർണീലിയസ്യ തേ പ്രേഷിതാ മനുഷ്യാ ദ്വാരസ്യ സന്നിധാവുപസ്ഥായ,
18 ௧௮ பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
ശിമോനോ ഗൃഹമന്വിച്ഛന്തഃ സമ്പൃഛ്യാഹൂയ കഥിതവന്തഃ പിതരനാമ്നാ വിഖ്യാതോ യഃ ശിമോൻ സ കിമത്ര പ്രവസതി?
19 ௧௯ பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
യദാ പിതരസ്തദ്ദർശനസ്യ ഭാവം മനസാന്ദോലയതി തദാത്മാ തമവദത്, പശ്യ ത്രയോ ജനാസ്ത്വാം മൃഗയന്തേ|
20 ௨0 நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
ത്വമ് ഉത്ഥായാവരുഹ്യ നിഃസന്ദേഹം തൈഃ സഹ ഗച്ഛ മയൈവ തേ പ്രേഷിതാഃ|
21 ௨௧ அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
തസ്മാത് പിതരോഽവരുഹ്യ കർണീലിയപ്രേരിതലോകാനാം നികടമാഗത്യ കഥിതവാൻ പശ്യത യൂയം യം മൃഗയധ്വേ സ ജനോഹം, യൂയം കിന്നിമിത്തമ് ആഗതാഃ?
22 ௨௨ அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.
തതസ്തേ പ്രത്യവദൻ കർണീലിയനാമാ ശുദ്ധസത്ത്വ ഈശ്വരപരായണോ യിഹൂദീയദേശസ്ഥാനാം സർവ്വേഷാം സന്നിധൗ സുഖ്യാത്യാപന്ന ഏകഃ സേനാപതി ർനിജഗൃഹം ത്വാമാഹൂയ നേതും ത്വത്തഃ കഥാ ശ്രോതുഞ്ച പവിത്രദൂതേന സമാദിഷ്ടഃ|
23 ௨௩ அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
തദാ പിതരസ്താനഭ്യന്തരം നീത്വാ തേഷാമാതിഥ്യം കൃതവാൻ, പരേഽഹനി തൈഃ സാർദ്ധം യാത്രാമകരോത്, യാഫോനിവാസിനാം ഭ്രാതൃണാം കിയന്തോ ജനാശ്ച തേന സഹ ഗതാഃ|
24 ௨௪ மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
പരസ്മിൻ ദിവസേ കൈസരിയാനഗരമധ്യപ്രവേശസമയേ കർണീലിയോ ജ്ഞാതിബന്ധൂൻ ആഹൂയാനീയ താൻ അപേക്ഷ്യ സ്ഥിതഃ|
25 ௨௫ பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
പിതരേ ഗൃഹ ഉപസ്ഥിതേ കർണീലിയസ്തം സാക്ഷാത്കൃത്യ ചരണയോഃ പതിത്വാ പ്രാണമത്|
26 ௨௬ பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
പിതരസ്തമുത്ഥാപ്യ കഥിതവാൻ, ഉത്തിഷ്ഠാഹമപി മാനുഷഃ|
27 ௨௭ அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
തദാ കർണീലിയേന സാകമ് ആലപൻ ഗൃഹം പ്രാവിശത് തന്മധ്യേ ച ബഹുലോകാനാം സമാഗമം ദൃഷ്ട്വാ താൻ അവദത്,
28 ௨௮ அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.
അന്യജാതീയലോകൈഃ മഹാലപനം വാ തേഷാം ഗൃഹമധ്യേ പ്രവേശനം യിഹൂദീയാനാം നിഷിദ്ധമ് അസ്തീതി യൂയമ് അവഗച്ഛഥ; കിന്തു കമപി മാനുഷമ് അവ്യവഹാര്യ്യമ് അശുചിം വാ ജ്ഞാതും മമ നോചിതമ് ഇതി പരമേശ്വരോ മാം ജ്ഞാപിതവാൻ|
29 ௨௯ ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
ഇതി ഹേതോരാഹ്വാനശ്രവണമാത്രാത് കാഞ്ചനാപത്തിമ് അകൃത്വാ യുഷ്മാകം സമീപമ് ആഗതോസ്മി; പൃച്ഛാമി യൂയം കിന്നിമിത്തം മാമ് ആഹൂയത?
30 ௩0 அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
തദാ കർണീലിയഃ കഥിതവാൻ, അദ്യ ചത്വാരി ദിനാനി ജാതാനി ഏതാവദ്വേലാം യാവദ് അഹമ് അനാഹാര ആസൻ തതസ്തൃതീയപ്രഹരേ സതി ഗൃഹേ പ്രാർഥനസമയേ തേജോമയവസ്ത്രഭൃദ് ഏകോ ജനോ മമ സമക്ഷം തിഷ്ഠൻ ഏതാം കഥാമ് അകഥയത്,
31 ௩௧ கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது.
ഹേ കർണീലിയ ത്വദീയാ പ്രാർഥനാ ഈശ്വരസ്യ കർണഗോചരീഭൂതാ തവ ദാനാദി ച സാക്ഷിസ്വരൂപം ഭൂത്വാ തസ്യ ദൃഷ്ടിഗോചരമഭവത്|
32 ௩௨ யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
അതോ യാഫോനഗരം പ്രതി ലോകാൻ പ്രഹിത്യ തത്ര സമുദ്രതീരേ ശിമോന്നാമ്നഃ കസ്യചിച്ചർമ്മകാരസ്യ ഗൃഹേ പ്രവാസകാരീ പിതരനാമ്നാ വിഖ്യാതോ യഃ ശിമോൻ തമാഹൂയയ; തതഃ സ ആഗത്യ ത്വാമ് ഉപദേക്ഷ്യതി|
33 ௩௩ அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
ഇതി കാരണാത് തത്ക്ഷണാത് തവ നികടേ ലോകാൻ പ്രേഷിതവാൻ, ത്വമാഗതവാൻ ഇതി ഭദ്രം കൃതവാൻ| ഈശ്വരോ യാന്യാഖ്യാനാനി കഥയിതുമ് ആദിശത് താനി ശ്രോതും വയം സർവ്വേ സാമ്പ്രതമ് ഈശ്വരസ്യ സാക്ഷാദ് ഉപസ്ഥിതാഃ സ്മഃ|
34 ௩௪ அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
തദാ പിതര ഇമാം കഥാം കഥയിതുമ് ആരബ്ധവാൻ, ഈശ്വരോ മനുഷ്യാണാമ് അപക്ഷപാതീ സൻ
35 ௩௫ எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.
യസ്യ കസ്യചിദ് ദേശസ്യ യോ ലോകാസ്തസ്മാദ്ഭീത്വാ സത്കർമ്മ കരോതി സ തസ്യ ഗ്രാഹ്യോ ഭവതി, ഏതസ്യ നിശ്ചയമ് ഉപലബ്ധവാനഹമ്|
36 ௩௬ எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே.
സർവ്വേഷാം പ്രഭു ര്യോ യീശുഖ്രീഷ്ടസ്തേന ഈശ്വര ഇസ്രായേല്വംശാനാം നികടേ സുസംവാദം പ്രേഷ്യ സമ്മേലനസ്യ യം സംവാദം പ്രാചാരയത് തം സംവാദം യൂയം ശ്രുതവന്തഃ|
37 ௩௭ யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.
യതോ യോഹനാ മജ്ജനേ പ്രചാരിതേ സതി സ ഗാലീലദേശമാരഭ്യ സമസ്തയിഹൂദീയദേശം വ്യാപ്നോത്;
38 ௩௮ நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.
ഫലത ഈശ്വരേണ പവിത്രേണാത്മനാ ശക്ത്യാ ചാഭിഷിക്തോ നാസരതീയയീശുഃ സ്ഥാനേ സ്ഥാനേ ഭ്രമൻ സുക്രിയാം കുർവ്വൻ ശൈതാനാ ക്ലിഷ്ടാൻ സർവ്വലോകാൻ സ്വസ്ഥാൻ അകരോത്, യത ഈശ്വരസ്തസ്യ സഹായ ആസീത്;
39 ௩௯ யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
വയഞ്ച യിഹൂദീയദേശേ യിരൂശാലമ്നഗരേ ച തേന കൃതാനാം സർവ്വേഷാം കർമ്മണാം സാക്ഷിണോ ഭവാമഃ| ലോകാസ്തം ക്രുശേ വിദ്ധ്വാ ഹതവന്തഃ,
40 ௪0 மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார்.
കിന്തു തൃതീയദിവസേ ഈശ്വരസ്തമുത്ഥാപ്യ സപ്രകാശമ് അദർശയത്|
41 ௪௧ என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார்.
സർവ്വലോകാനാം നികട ഇതി ന ഹി, കിന്തു തസ്മിൻ ശ്മശാനാദുത്ഥിതേ സതി തേന സാർദ്ധം ഭോജനം പാനഞ്ച കൃതവന്ത ഏതാദൃശാ ഈശ്വരസ്യ മനോനീതാഃ സാക്ഷിണോ യേ വയമ് അസ്മാകം നികടേ തമദർശയത്|
42 ௪௨ அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
ജീവിതമൃതോഭയലോകാനാം വിചാരം കർത്തുമ് ഈശ്വരോ യം നിയുക്തവാൻ സ ഏവ സ ജനഃ, ഇമാം കഥാം പ്രചാരയിതും തസ്മിൻ പ്രമാണം ദാതുഞ്ച സോഽസ്മാൻ ആജ്ഞാപയത്|
43 ௪௩ அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
യസ്തസ്മിൻ വിശ്വസിതി സ തസ്യ നാമ്നാ പാപാന്മുക്തോ ഭവിഷ്യതി തസ്മിൻ സർവ്വേ ഭവിഷ്യദ്വാദിനോപി ഏതാദൃശം സാക്ഷ്യം ദദതി|
44 ௪௪ இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
പിതരസ്യൈതത്കഥാകഥനകാലേ സർവ്വേഷാം ശ്രോതൃണാമുപരി പവിത്ര ആത്മാവാരോഹത്|
45 ௪௫ அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும்,
തതഃ പിതരേണ സാർദ്ധമ് ആഗതാസ്ത്വക്ഛേദിനോ വിശ്വാസിനോ ലോകാ അന്യദേശീയേഭ്യഃ പവിത്ര ആത്മനി ദത്തേ സതി
46 ௪௬ பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள்.
തേ നാനാജാതീയഭാഷാഭിഃ കഥാം കഥയന്ത ഈശ്വരം പ്രശംസന്തി, ഇതി ദൃഷ്ട്വാ ശ്രുത്വാ ച വിസ്മയമ് ആപദ്യന്ത|
47 ௪௭ அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,
തദാ പിതരഃ കഥിതവാൻ, വയമിവ യേ പവിത്രമ് ആത്മാനം പ്രാപ്താസ്തേഷാം ജലമജ്ജനം കിം കോപി നിഷേദ്ധും ശക്നോതി?
48 ௪௮ கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
തതഃ പ്രഭോ ർനാമ്നാ മജ്ജിതാ ഭവതേതി താനാജ്ഞാപയത്| അനന്തരം തേ സ്വൈഃ സാർദ്ധം കതിപയദിനാനി സ്ഥാതും പ്രാർഥയന്ത|

< அப்போஸ்தலர் 10 >