< 3 யோவான் 1 >
1 ௧ மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
ପ୍ରାଚୀନୋ ଽହଂ ସତ୍ୟମତାଦ୍ ଯସ୍ମିନ୍ ପ୍ରୀଯେ ତଂ ପ୍ରିଯତମଂ ଗାଯଂ ପ୍ରତି ପତ୍ରଂ ଲିଖାମି|
2 ௨ பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன்.
ହେ ପ୍ରିଯ, ତୱାତ୍ମା ଯାଦୃକ୍ ଶୁଭାନ୍ୱିତସ୍ତାଦୃକ୍ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ତୱ ଶୁଭଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟଞ୍ଚ ଭୂଯାତ୍|
3 ௩ சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன்.
ଭ୍ରାତୃଭିରାଗତ୍ୟ ତୱ ସତ୍ୟମତସ୍ୟାର୍ଥତସ୍ତ୍ୱଂ କୀଦୃକ୍ ସତ୍ୟମତମାଚରସ୍ୟେତସ୍ୟ ସାକ୍ଷ୍ୟେ ଦତ୍ତେ ମମ ମହାନନ୍ଦୋ ଜାତଃ|
4 ௪ என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
ମମ ସନ୍ତାନାଃ ସତ୍ୟମତମାଚରନ୍ତୀତିୱାର୍ତ୍ତାତୋ ମମ ଯ ଆନନ୍ଦୋ ଜାଯତେ ତତୋ ମହତ୍ତରୋ ନାସ୍ତି|
5 ௫ பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.
ହେ ପ୍ରିଯ, ଭ୍ରାତୃନ୍ ପ୍ରତି ୱିଶେଷତସ୍ତାନ୍ ୱିଦେଶିନୋ ଭୃତୃନ୍ ପ୍ରତି ତ୍ୱଯା ଯଦ୍ୟତ୍ କୃତଂ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ୱିଶ୍ୱାସିନୋ ଯୋଗ୍ୟଂ|
6 ௬ அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்.
ତେ ଚ ସମିତେଃ ସାକ୍ଷାତ୍ ତୱ ପ୍ରମ୍ନଃ ପ୍ରମାଣଂ ଦତ୍ତୱନ୍ତଃ, ଅପରମ୍ ଈଶ୍ୱରଯୋଗ୍ୟରୂପେଣ ତାନ୍ ପ୍ରସ୍ଥାପଯତା ତ୍ୱଯା ସତ୍କର୍ମ୍ମ କାରିଷ୍ୟତେ|
7 ௭ ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
ଯତସ୍ତେ ତସ୍ୟ ନାମ୍ନା ଯାତ୍ରାଂ ୱିଧାଯ ଭିନ୍ନଜାତୀଯେଭ୍ୟଃ କିମପି ନ ଗୃହୀତୱନ୍ତଃ|
8 ௮ ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ତସ୍ମାଦ୍ ୱଯଂ ଯତ୍ ସତ୍ୟମତସ୍ୟ ସହାଯା ଭୱେମ ତଦର୍ଥମେତାଦୃଶା ଲୋକା ଅସ୍ମାଭିରନୁଗ୍ରହୀତୱ୍ୟାଃ|
9 ௯ நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
ସମିତିଂ ପ୍ରତ୍ୟହଂ ପତ୍ରଂ ଲିଖିତୱାନ୍ କିନ୍ତୁ ତେଷାଂ ମଧ୍ୟେ ଯୋ ଦିଯତ୍ରିଫିଃ ପ୍ରଧାନାଯତେ ସୋ ଽସ୍ମାନ୍ ନ ଗୃହ୍ଲାତି|
10 ௧0 ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.
ଅତୋ ଽହଂ ଯଦୋପସ୍ଥାସ୍ୟାମି ତଦା ତେନ ଯଦ୍ୟତ୍ କ୍ରିଯତେ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ତଂ ସ୍ମାରଯିଷ୍ୟାମି, ଯତଃ ସ ଦୁର୍ୱ୍ୱାକ୍ୟୈରସ୍ମାନ୍ ଅପୱଦତି, ତେନାପି ତୃପ୍ତିଂ ନ ଗତ୍ୱା ସ୍ୱଯମପି ଭ୍ରାତୃନ୍ ନାନୁଗୃହ୍ଲାତି ଯେ ଚାନୁଗ୍ରହୀତୁମିଚ୍ଛନ୍ତି ତାନ୍ ସମିତିତୋ ଽପି ବହିଷ୍କରୋତି|
11 ௧௧ பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை.
ହେ ପ୍ରିଯ, ତ୍ୱଯା ଦୁଷ୍କର୍ମ୍ମ ନାନୁକ୍ରିଯତାଂ କିନ୍ତୁ ସତ୍କର୍ମ୍ମୈୱ| ଯଃ ସତ୍କର୍ମ୍ମାଚାରୀ ସ ଈଶ୍ୱରାତ୍ ଜାତଃ, ଯୋ ଦୁଷ୍କର୍ମ୍ମାଚାରୀ ସ ଈଶ୍ୱରଂ ନ ଦୃଷ୍ଟୱାନ୍|
12 ௧௨ தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.
ଦୀମୀତ୍ରିଯସ୍ୟ ପକ୍ଷେ ସର୍ୱ୍ୱୈଃ ସାକ୍ଷ୍ୟମ୍ ଅଦାଯି ୱିଶେଷତଃ ସତ୍ୟମତେନାପି, ୱଯମପି ତତ୍ପକ୍ଷେ ସାକ୍ଷ୍ୟଂ ଦଦ୍ମଃ, ଅସ୍ମାକଞ୍ଚ ସାକ୍ଷ୍ୟଂ ସତ୍ୟମେୱେତି ଯୂଯଂ ଜାନୀଥ|
13 ௧௩ எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
ତ୍ୱାଂ ପ୍ରତି ମଯା ବହୂନି ଲେଖିତୱ୍ୟାନି କିନ୍ତୁ ମସୀଲେଖନୀଭ୍ୟାଂ ଲେଖିତୁଂ ନେଚ୍ଛାମି|
14 ௧௪ சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.
ଅଚିରେଣ ତ୍ୱାଂ ଦ୍ରକ୍ଷ୍ୟାମୀତି ମମ ପ୍ରତ୍ୟାଶାସ୍ତେ ତଦାୱାଂ ସମ୍ମୁଖୀଭୂଯ ପରସ୍ପରଂ ସମ୍ଭାଷିଷ୍ୟାୱହେ| ତୱ ଶାନ୍ତି ର୍ଭୂଯାତ୍| ଅସ୍ମାକଂ ମିତ୍ରାଣି ତ୍ୱାଂ ନମସ୍କାରଂ ଜ୍ଞାପଯନ୍ତି ତ୍ୱମପ୍ୟେକୈକସ୍ୟ ନାମ ପ୍ରୋଚ୍ୟ ମିତ୍ରେଭ୍ୟୋ ନମସ୍କୁରୁ| ଇତି|