< 2 சாமுவேல் 17 >
1 ௧ பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் 12,000 பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இரவு தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
阿希托費耳向說:「讓我選拔一萬二千人,今夜起程去追趕達味。
2 ௨ அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி,
正當他困乏疲倦時,我忽然趕到,使他驚惶失措,隨從他的人,必會逃散,我只把君王一人殺了,
3 ௩ மக்களை எல்லாம் உம்முடைய பக்கமாகத் திரும்பச்செய்வேன், இப்படிச் செய்ய நீர் முயற்சித்தால், எல்லோரும் திரும்பினபின்பு மக்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
然後人民來歸順你,像新娘回到新郎那裏;你只須害一人的性命,全民眾就都和平無事了」。
4 ௪ இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய எல்லா மூப்பர்களின் பார்வைக்கும் நலமாகத் தோன்றியது.
阿貝沙隆和以色列的眾長老,對這提議都很贊成。
5 ௫ ஆனாலும் அப்சலோம்: அற்கியனான ஊசாயைக் கூப்பிட்டு, அவன் சொல்வதையும் கேட்போம் என்றான்.
阿貝沙隆說:「讓把阿爾基人胡瑟召來,我們也願聽聽他說什麼」。
6 ௬ ஊசாய் அப்சலோமிடம் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இப்படியாக அகித்தோப்பேல் சொன்னான்; அவனுடைய வார்த்தையின்படி செய்வோமா? அல்லது, நீ சொல் என்றான்.
胡瑟來到阿貝沙隆前,阿貝沙隆向他說:「阿希托費耳說出這樣的話,我們應按他的主意去行嗎﹖請你提議吧! 」
7 ௭ அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
胡瑟回答阿貝沙隆說:「阿希托費耳這次所出的計謀卻是不妙」。
8 ௮ மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
胡瑟接著說:「你知道你父親和隨從他的人,都是勇將,現在心情惱怒,好像田野間喪子的母熊;何況,你父親又是歷戰陣的人,夜間決不會讓軍民安睡。
9 ௯ இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறு எந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார்; ஆரம்பத்திலே நம்முடையவர்களில் சிலர் தாக்கப்பட்டார்கள் என்றால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமுக்குப் பின்செல்லுகிற வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பார்கள்.
他現在必藏在一個山洞裏,或另一個地方;若起初我們的人就有傷亡,人們聽見必要說:跟隨阿貝沙隆的人,慘遭失敗;
10 ௧0 அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள்.
那麼,連性情兇猛如獅子的壯士,也要灰心喪膽,因為全以色列人都知道你父親是個勇將,跟隨他的人,也都是驍勇的人。
11 ௧௧ ஆதலால் நான் சொல்லுகிற ஆலோசனை என்னவென்றால், தாண்முதல் பெயெர்செபாவரை இருக்கிற கடற்கரை மணலைப்போல திரளான இஸ்ரவேலர்கள் எல்லோரும் உம்முடைய அருகில் சேர்க்கப்பட்டு, நீரும் யுத்தத்திற்குப் போகவேண்டும்.
我的計劃,是先把所有的以色列人集合在你身邊,從丹直到貝爾舍巴,像海邊沙粒那樣多,然後由你親自率領,前去征討;
12 ௧௨ அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எந்த இடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனிதர்களிலும் ஒருவனும் அவருக்கு மீதியாக இருப்பதில்லை.
他不論到那裏,我們也突然到那裏;像露一樣襲擊他,使他和跟隨他的人一個也不留下。
13 ௧௩ ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
若他退入一座城內,全以色列就帶著繩索去攻擊那城,將那城拉到山谷裏,連一塊小石也不剩下」。
14 ௧௪ அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைவிட அற்கியனான ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி யெகோவா அப்சலோமின்மேல் தீங்கு வரச்செய்வதற்காக, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அழிக்கிறதற்குக் யெகோவா கட்டளையிட்டார்.
阿貝沙隆和全以色列人都說:「阿爾基人胡瑟的計謀比阿希托費耳的更為可取」。原是上主決定了要破壞阿希托費耳是好計謀,為給阿彼瑟降下災禍。
15 ௧௫ பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இதன் இதன்படி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இதன் இதன்படி ஆலோசனை சொன்னேன்.
隨後,胡瑟報告匝多克和厄貝雅塔爾說:「阿希托費耳給阿貝沙隆和以色列長老出了那樣的計謀,我卻出了這樣的計謀。
16 ௧௬ இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாகத் தாவீதுக்கு அறிவிக்கும்படிச் செய்தி அனுப்பி; நீர் இன்று இரவு வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கவேண்டாம்; நீரும் உம்மோடிருக்கிற எல்லா மக்களும் ராஜாவால் விழுங்கப்படாதபடித் தாமதம் இல்லாமல் அக்கரைக்குப் போகவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
現在,快派人去報告達味說:今夜不可在曠野的渡口露宿,要趕快過河,免得君王和隨從他的人民都遭殲滅」。
17 ௧௭ யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, என்ரோகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள்.
那時,約納堂和阿希瑪茲已在洛革泉傍等候,因怕被人看見,不敢進城;有個使女出來給他們傳信,他們就去報告達味君王。
18 ௧௮ ஒரு வாலிபன் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாகப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்கள்; அவனுடைய முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
但有一個少年人看見了他們,便向阿貝沙隆報告了;他們二人就急速逃匿,來到巴胡陵的一個人家裏,他院子裏有一口井,他們便下到井裏。
19 ௧௯ வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றின்மேல் விரித்து, அவர்கள் உள்ளே இருக்கிறதைத் தெரியாதபடி, அதின்மேல் தானியத்தைப் பரப்பிவைத்தாள்.
那家的婦女取了一個蓋子蓋在井口上,蓋子上又撒了些麥粒,免得有人注意。
20 ௨0 அப்சலோமின் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்தப் பெண்: வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திற்கு போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடியும் காணாமல், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
阿貝沙隆的差役來到那家的婦女前問說:「阿希瑪茲和約納堂在哪裏﹖那婦女答說:「他們早過了蓄水池」。差役就去搜索他們,卻沒有找著,便回了耶路撒冷。
21 ௨௧ இவர்கள் போனபின்பு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாக எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இதன்படி அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
差役走了以後,兩人就為井裏上來;去給達味君王報信,對達味說:「起身,趕快過河,因為阿希托費耳為害你們出了這樣的計謀」。
22 ௨௨ அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த எல்லா மக்களும் எழுந்து யோர்தான் நதியைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடந்துபோகாதவன் ஒருவனும் இல்லை.
達味和隨從他的人就起身過了約旦河。到天亮時,沒有一個沒有過約旦河的。
23 ௨௩ அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.
阿希托費耳看見人不依從他的計謀,就備上驢,動身回家,回了本城,安排了自己的家務以後,就上吊死了。人將他埋在他父親的墳墓裏。
24 ௨௪ தாவீது மகனாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.
阿貝沙隆率領以色列人過約旦河時,達味已到了瑪哈納因。
25 ௨௫ அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக ஆக்கினான்; இந்த அமாசா, நாகாசின் மகளும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமான அபிகாயிலை திருமணம் செய்த இஸ்ரவேலனான எத்திரா என்னும் பெயருள்ள ஒருவனுடைய மகனாக இருந்தான்.
阿貝沙隆派阿瑪撒代約阿布為統帥。阿瑪撒是依市瑪耳人依特辣的兒子。依特辣曾走近過葉瑟的女兒,約阿布的母親,責魯雅的姐妹阿彼蓋耳。
26 ௨௬ இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள்.
以色列人同阿貝沙隆在基肋阿得一帶紮了營。
27 ௨௭ தாவீது மகனாயீமை அடைந்தபோது, அம்மோனியர்கள் தேசத்து ரப்பா பட்டணத்தானான சோபி என்னும் நாகாசின் மகனும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரைச்சேர்ந்தவனும் கீலேயாத்தியனுமான பர்சிலாயியும்,
當達味來到瑪哈納因時,納哈士的兒子芍彼,由阿孟人民的辣巴城,阿米爾的兒子瑪基爾由羅德巴爾城,基肋阿得人巴爾齊來由洛革林城,
28 ௨௮ மெத்தைகளையும், போர்வைகளையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயிற்றையும், பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும், வறுத்த சிறு பயிற்றையும்,
帶來了床、鋪蓋、杯盤、炊具、小麥、麵粉、炒麥、豆子、扁豆、
29 ௨௯ தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடு இருந்த மக்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த மக்கள் வனாந்திரத்திலே பசியும், களைப்பும், தாகமாகவும் இருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.
蜂蜜、奶油、奶餅、牛肉和羊肉,供給達味和他的的人吃用,因為他們想:這些人經過了曠野,必定感到飢餓和疲勞。