< 2 பேதுரு 1 >
1 ௧ நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:
યે જના અસ્માભિઃ સાર્દ્ધમ્ અસ્તદીશ્વરે ત્રાતરિ યીશુખ્રીષ્ટે ચ પુણ્યસમ્બલિતવિશ્વાસધનસ્ય સમાનાંશિત્વં પ્રાપ્તાસ્તાન્ પ્રતિ યીશુખ્રીષ્ટસ્ય દાસઃ પ્રેરિતશ્ચ શિમોન્ પિતરઃ પત્રં લિખતિ|
2 ௨ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின் மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
ઈશ્વરસ્યાસ્માકં પ્રભો ર્યીશોશ્ચ તત્વજ્ઞાનેન યુષ્માસ્વનુગ્રહશાન્ત્યો ર્બાહુલ્યં વર્ત્તતાં|
3 ௩ தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்,
જીવનાર્થમ્ ઈશ્વરભક્ત્યર્થઞ્ચ યદ્યદ્ આવશ્યકં તત્ સર્વ્વં ગૌરવસદ્ગુણાભ્યામ્ અસ્મદાહ્વાનકારિણસ્તત્ત્વજ્ઞાનદ્વારા તસ્યેશ્વરીયશક્તિરસ્મભ્યં દત્તવતી|
4 ௪ இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
તત્સર્વ્વેણ ચાસ્મભ્યં તાદૃશા બહુમૂલ્યા મહાપ્રતિજ્ઞા દત્તા યાભિ ર્યૂયં સંસારવ્યાપ્તાત્ કુત્સિતાભિલાષમૂલાત્ સર્વ્વનાશાદ્ રક્ષાં પ્રાપ્યેશ્વરીયસ્વભાવસ્યાંશિનો ભવિતું શક્નુથ|
5 ௫ இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,
તતો હેતો ર્યૂયં સમ્પૂર્ણં યત્નં વિધાય વિશ્વાસે સૌજન્યં સૌજન્યે જ્ઞાનં
6 ௬ ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும்,
જ્ઞાન આયતેન્દ્રિયતામ્ આયતેન્દ્રિયતાયાં ધૈર્ય્યં ધૈર્ય્ય ઈશ્વરભક્તિમ્
7 ௭ தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
ઈશ્વરભક્તૌ ભ્રાતૃસ્નેહે ચ પ્રેમ યુઙ્ક્ત|
8 ௮ இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
એતાનિ યદિ યુષ્માસુ વિદ્યન્તે વર્દ્ધન્તે ચ તર્હ્યસ્મત્પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્ય તત્ત્વજ્ઞાને યુષ્માન્ અલસાન્ નિષ્ફલાંશ્ચ ન સ્થાપયિષ્યન્તિ|
9 ௯ இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
કિન્ત્વેતાનિ યસ્ય ન વિદ્યન્તે સો ઽન્ધો મુદ્રિતલોચનઃ સ્વકીયપૂર્વ્વપાપાનાં માર્જ્જનસ્ય વિસ્મૃતિં ગતશ્ચ|
10 ௧0 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
તસ્માદ્ હે ભ્રાતરઃ, યૂયં સ્વકીયાહ્વાનવરણયો ર્દૃઢકરણે બહુ યતધ્વં, તત્ કૃત્વા કદાચ ન સ્ખલિષ્યથ|
11 ௧௧ இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
યતો ઽનેન પ્રકારેણાસ્માકં પ્રભોસ્ત્રાતૃ ર્યીશુખ્રીષ્ટસ્યાનન્તરાજ્યસ્ય પ્રવેશેન યૂયં સુકલેન યોજયિષ્યધ્વે| (aiōnios )
12 ௧௨ இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
યદ્યપિ યૂયમ્ એતત્ સર્વ્વં જાનીથ વર્ત્તમાને સત્યમતે સુસ્થિરા ભવથ ચ તથાપિ યુષ્માન્ સર્વ્વદા તત્ સ્મારયિતુમ્ અહમ્ અયત્નવાન્ ન ભવિષ્યામિ|
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
યાવદ્ એતસ્મિન્ દૂષ્યે તિષ્ઠામિ તાવદ્ યુષ્માન્ સ્મારયન્ પ્રબોધયિતું વિહિતં મન્યે|
14 ௧௪ நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.
યતો ઽસ્માકં પ્રભુ ર્યીશુખ્રીષ્ટો માં યત્ જ્ઞાપિતવાન્ તદનુસારાદ્ દૂષ્યમેતત્ મયા શીઘ્રં ત્યક્તવ્યમ્ ઇતિ જાનામિ|
15 ௧௫ மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
મમ પરલોકગમનાત્ પરમપિ યૂયં યદેતાનિ સ્મર્ત્તું શક્ષ્યથ તસ્મિન્ સર્વ્વથા યતિષ્યે|
16 ௧௬ நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
યતો ઽસ્માકં પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્ય પરાક્રમં પુનરાગમનઞ્ચ યુષ્માન્ જ્ઞાપયન્તો વયં કલ્પિતાન્યુપાખ્યાનાન્યન્વગચ્છામેતિ નહિ કિન્તુ તસ્ય મહિમ્નઃ પ્રત્યક્ષસાક્ષિણો ભૂત્વા ભાષિતવન્તઃ|
17 ௧௭ இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
યતઃ સ પિતુરીશ્વરાદ્ ગૌરવં પ્રશંસાઞ્ચ પ્રાપ્તવાન્ વિશેષતો મહિમયુક્તતેજોમધ્યાદ્ એતાદૃશી વાણી તં પ્રતિ નિર્ગતવતી, યથા, એષ મમ પ્રિયપુત્ર એતસ્મિન્ મમ પરમસન્તોષઃ|
18 ௧௮ அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
સ્વર્ગાત્ નિર્ગતેયં વાણી પવિત્રપર્વ્વતે તેન સાર્દ્ધં વિદ્યમાનૈરસ્માભિરશ્રાવિ|
19 ௧௯ அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
અપરમ્ અસ્મત્સમીપે દૃઢતરં ભવિષ્યદ્વાક્યં વિદ્યતે યૂયઞ્ચ યદિ દિનારમ્ભં યુષ્મન્મનઃસુ પ્રભાતીયનક્ષત્રસ્યોદયઞ્ચ યાવત્ તિમિરમયે સ્થાને જ્વલન્તં પ્રદીપમિવ તદ્ વાક્યં સમ્મન્યધ્વે તર્હિ ભદ્રં કરિષ્યથ|
20 ௨0 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.
શાસ્ત્રીયં કિમપિ ભવિષ્યદ્વાક્યં મનુષ્યસ્ય સ્વકીયભાવબોધકં નહિ, એતદ્ યુષ્માભિઃ સમ્યક્ જ્ઞાયતાં|
21 ௨௧ தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
યતો ભવિષ્યદ્વાક્યં પુરા માનુષાણામ્ ઇચ્છાતો નોત્પન્નં કિન્ત્વીશ્વરસ્ય પવિત્રલોકાઃ પવિત્રેણાત્મના પ્રવર્ત્તિતાઃ સન્તો વાક્યમ્ અભાષન્ત|