< 2 பேதுரு 1 >
1 ௧ நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:
ⲁ̅ⲤⲒⲘⲰⲚ ⲠⲈⲦⲢⲞⲤ ⲪⲂⲰⲔ ⲞⲨⲞϨ ⲠⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ⲚⲦⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲚⲎ ⲈⲦⲞⲒ ⲚϨⲨⲤⲞⲤ ⲚⲦⲀⲒⲞ ⲚⲈⲘⲀⲚ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲈⲦⲀϤⲰⲠ ⲈⲢⲞⲚ ϦⲈⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲠⲈⲚⲚⲞⲨϮ ⲚⲈⲘ ⲠⲈⲚⲤⲰⲦⲎ ⲢⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲈⲚϬⲞⲒⲤ.
2 ௨ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின் மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
ⲃ̅ⲠϨⲘⲞⲦ ⲚⲈⲘ ϮϨⲒⲢⲎⲚⲎ ⲚⲦⲞⲨⲀϢⲀⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲠⲤⲞⲨⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲚⲈⲘ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
3 ௩ தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்,
ⲅ̅ϨⲰⲤ ⲈⲀ ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ϢⲰⲠⲒ ⲚⲀⲚ ϦⲈⲚϮϪⲞⲘ ⲚⲦⲈⲦⲈϤⲘⲈⲐⲚⲞⲨϮ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲰⲚϦ ⲚⲈⲘ ϮⲘⲈⲦⲈⲨⲤⲈⲂⲎⲤ ⲐⲎ ⲈⲦⲀⲨⲦⲎⲒⲤ ⲚⲀⲚ ⲚϪⲒⲚϪⲎ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠⲤⲞⲨⲈⲚ ⲪⲎ ⲈⲦⲀϤⲐⲀϨⲘⲈⲚ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲈϤⲰⲞⲨ ⲚⲈⲘ ϮⲀⲢⲈⲦⲎ.
4 ௪ இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ⲇ̅ⲚⲈⲘ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲚⲀⲒⲚⲒϢϮ ⲚⲰⲞⲨ ⲈⲦⲦⲀⲒⲎⲞⲨⲦ ⲈⲦⲀⲨⲦⲎⲒⲦⲞⲨ ⲚⲀⲚ ⲚⲦⲀⲒⲞ ϨⲒⲚⲀ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲚⲀⲒ ⲚⲦⲈⲦⲈⲚϢⲰⲠⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚϢⲪⲎⲢ ⲚⲦⲪⲨⲤⲒⲤ ⲚⲦⲈϮⲘⲈⲐⲚⲞⲨϮ ⲈⲢⲈⲦⲈⲚⲪⲎ ⲦⲤⲀⲂⲞⲖ ⲚϮⲈⲠⲒⲐⲨⲘⲒⲀ ⲚⲦⲈⲠⲦⲀⲔⲞ ⲐⲎ ⲈⲦⲈ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ
5 ௫ இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,
ⲉ̅ⲞⲨⲞϨ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲪⲀⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲒⲚⲒ ⲈϦⲞⲨⲚ ⲚⲤⲠⲞⲆⲎ ⲚⲒⲂⲈⲚ ⲤⲀϨⲚⲒ ⲚⲤⲀϮⲀⲢⲈⲦⲎ ϦⲈⲚⲠⲈⲦⲈⲚⲚⲀϨϮ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮⲀⲢⲈⲦⲎ ϮⲄⲚⲰⲤⲒⲤ
6 ௬ ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும்,
ⲋ̅ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮⲄⲚⲰⲤⲒⲤ ϮⲈⲄⲔⲢⲀⲦⲒⲀ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮⲈⲄⲔⲢⲀⲦⲒⲀ ϮϨⲨⲠⲞⲘⲞⲚⲎ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮϨⲞⲠⲞⲘⲞⲚⲎ ϮⲘⲈⲦⲈⲨⲤⲈⲂⲎⲤ
7 ௭ தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
ⲍ̅ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮⲘⲈⲦⲈⲨⲤⲈⲂⲎⲤ ϮⲘⲈⲦⲘⲀⲒⲤⲞⲚ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϮⲘⲈⲦⲘⲀⲒⲤⲞⲚ ϮⲀⲄⲀⲠⲎ
8 ௮ இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
ⲏ̅ⲚⲀⲒ ⲆⲈ ⲦⲎⲢⲞⲨ ⲈⲨϢⲞⲠ ⲚⲰⲦⲈⲚ ⲞⲨⲞϨ ⲈⲨⲈⲈⲢϨⲞⲨⲞ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲚⲤⲈⲚⲀⲈⲢ ⲐⲎⲚⲞⲨ ⲚⲀⲢⲄⲞⲤ ⲀⲚ ⲞⲨⲞϨ ⲚⲀⲦⲞⲨⲦⲀϨ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲤⲞⲨⲈⲚ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲤ
9 ௯ இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
ⲑ̅ⲪⲎ ⲈⲦⲈ ⲚⲀⲒ ϢⲞⲠ ⲚⲀϤ ⲀⲚ ⲞⲨⲂⲈⲖⲖⲈ ⲠⲈ ⲈϤϪⲞⲘϪⲈⲘ ⲈⲀϤϬⲒ ⲚⲞⲨⲈⲂϢⲒ ⲚⲦⲈⲠⲦⲞⲨⲂⲞ ⲚⲦⲈⲚⲈϤϢⲞⲢⲠ ⲚⲚⲞⲂⲒ
10 ௧0 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
ⲓ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲘⲀⲖⲖⲞⲚ ⲚⲈⲚⲤⲚⲎⲞⲨ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ϨⲒⲚⲀ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲈⲐⲚⲀⲚⲈⲨ ⲚⲦⲈⲦⲈⲚⲦⲀϪⲢⲈ ⲠⲈⲦⲈⲚⲐⲰϨⲈⲘ ⲚⲈⲘ ⲦⲈⲦⲈⲚⲘⲈⲦⲤⲰⲦⲠ ⲚⲀⲒ ⲄⲀⲢ ⲈⲢⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ ⲚⲚⲈⲦⲈⲚⲤⲖⲀϮ ⲈⲚⲈϨ.
11 ௧௧ இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
ⲓ̅ⲁ̅ⲠⲀⲒⲢⲎϮ ⲄⲀⲢ ϦⲈⲚⲞⲨⲘⲈⲦⲢⲀⲘⲀⲞ ⲈⲨⲈⲤⲈϨⲚⲈ ⲠⲒⲘⲰⲒⲦ ⲈϦⲞⲨⲚ ⲚⲰⲦⲈⲚ ⲚⲦⲈⲐⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲈⲚⲈϨ ⲚⲦⲈⲠⲈⲚϬⲞⲒⲤ ⲞⲨⲞϨ ⲠⲈⲚⲤⲰⲦⲎ ⲢⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲤ (aiōnios )
12 ௧௨ இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
ⲓ̅ⲃ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ϮⲚⲀϮ ⲘⲪⲘⲈⲨⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲂⲈ ⲚⲀⲒ ⲔⲈⲠⲈⲢ ⲈⲢⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲦⲀϪⲢⲎⲞⲨⲦ ϦⲈⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲈⲦϢⲞⲠ
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
ⲓ̅ⲅ̅ϮⲘⲈⲨⲒ ⲄⲀⲢ ϪⲈ ⲞⲨϨⲰⲂ ⲘⲘⲎⲒ ⲠⲈ ⲪⲀⲒ ⲈϮⲘⲈⲨⲒ ⲈⲢⲞϤ ϪⲈ ⲈⲪⲞⲤⲞⲚ ϮϢⲞⲠ ϦⲈⲚⲠⲀⲒⲘⲀ ⲚϢⲰⲠⲒ ⲈⲒⲈⲦⲞⲨⲚⲞⲤ ⲐⲎⲚⲞⲨ ⲈϦⲢⲎⲒ ϦⲈⲚⲞⲨⲘⲈⲨⲒ
14 ௧௪ நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.
ⲓ̅ⲇ̅ⲈⲒⲈⲘⲒ ϪⲈ ϤⲚⲀⲂⲰⲖ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲠⲀⲒⲘⲀ ⲚϢⲰⲠⲒ ⲚⲬⲰⲖⲈⲘ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ϨⲰϤ ⲈⲦⲀ ⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲦⲀⲘⲞⲚ ⲈⲢⲞϤ
15 ௧௫ மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
ⲓ̅ⲉ̅ϮⲚⲀⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲚⲦⲞⲦ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲦⲈⲚⲈⲢⲪⲘⲈⲨⲒ ⲚⲚⲀⲒ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲠⲀⲘⲰⲒⲦ ⲈⲂⲞⲖ
16 ௧௬ நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ⲓ̅ⲋ̅ϨⲀⲚϢϤⲰ ⲀⲚ ⲘⲘⲈⲦⲤⲈⲂ ⲠⲈ ⲈⲦⲀⲚⲘⲞϢⲒ ⲚⲤⲰⲞⲨ ⲀⲚⲦⲀⲘⲰⲦⲈⲚ ⲈⲦϪⲞⲘ ⲞⲨⲞϨ ⲈⲦⲠⲀⲢⲞⲨⲤⲒⲀ ⲘⲠⲈⲚϬⲞⲒⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲀⲖⲖⲀ ⲀⲚⲈⲢⲢⲈϤⲚⲀⲨ ⲈϮⲘⲈⲦⲚⲒϢϮ ⲚⲦⲈⲪⲎ ⲈⲦⲈⲘⲘⲀⲨ
17 ௧௭ இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
ⲓ̅ⲍ̅ⲀϤϬⲒ ⲚⲞⲨⲦⲀⲒⲞ ⲚⲈⲘ ⲞⲨⲰⲞⲨ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲪⲒⲰⲦ ⲞⲨⲞϨ ⲀⲞⲨⲤⲘⲎ ⲒⲚⲀϤ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲠⲒⲚⲒϢϮ ⲚⲰⲞⲨ ⲈⲐⲚⲀⲀϤ ϪⲈ ⲪⲀⲒ ⲠⲈ ⲠⲀϢⲎⲢⲒ ⲠⲀⲘⲈⲚⲢⲒⲦ ⲪⲀⲒ ⲈⲦⲀⲒϮⲘⲀϮ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ.
18 ௧௮ அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
ⲓ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲦⲀⲒⲤⲘⲎ ⲀⲚⲤⲞⲐⲘⲈⲤ ⲈⲤⲚⲎⲞⲨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲪⲈ ⲈⲚⲬⲎ ⲚⲈⲘⲀϤ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲦⲰⲞⲨ ⲈⲐⲞⲨⲀⲂ
19 ௧௯ அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
ⲓ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲈϤⲦⲀϪⲢⲎⲞⲨⲦ ⲚⲦⲞⲦⲈⲚ ⲚϪⲈⲠⲒⲤⲀϪⲒ ⲚⲦⲈⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲪⲀⲒ ⲈⲦⲈ ⲔⲀⲖⲰⲤ ⲦⲈⲦⲈⲚⲢⲀ ⲘⲘⲞϤ ⲈⲢⲈⲦⲈⲚϮϨⲐⲎⲦⲈⲚ ⲚⲀϤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨϦⲎⲂⲤ ⲈϤⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ϦⲈⲚⲞⲨⲘⲀ ⲚⲬⲀⲔⲒ ϢⲀⲦⲈϤⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲠⲒⲈϨⲞⲞⲨ ⲞⲨⲞϨ ⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ϢⲀϤϢⲀⲒ ⲚⲦⲈϤⲪⲒⲢⲒ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚϨⲎⲦ
20 ௨0 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.
ⲕ̅ⲪⲀⲒ ⲆⲈ ⲚϢⲞⲢⲠ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲘⲒ ⲈⲢⲞϤ ϪⲈ ⲠⲢⲞⲪⲎⲦⲒⲀ ⲚⲒⲂⲈⲚ ⲚⲦⲈⲚⲒⲄⲢⲀⲪⲎ ⲚⲀⲢⲈ ⲠⲞⲨⲂⲰⲖ ϢⲞⲠ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦⲞⲨ ⲘⲘⲀⲨⲀⲦⲞⲨ ⲀⲚ
21 ௨௧ தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲆⲈ ⲄⲀⲢ ϦⲈⲚⲪⲞⲨⲰϢ ⲚⲢⲰⲘⲒ ⲀⲚ ⲀⲨⲒⲚⲒ ⲚⲞⲨⲠⲢⲞⲪⲎⲦⲒⲀ ⲚⲞⲨⲤⲎⲞⲨ ⲀⲖⲖⲀ ⲀⲨⲤⲀϪⲒ ⲚϪⲈϨⲀⲚⲢⲰⲘⲒ ϦⲈⲚⲪⲞⲨⲰϢ ⲘⲪⲚⲞⲨϮ ⲚϦⲢⲎⲒ ⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲈⲐⲞⲨⲀⲂ.