< 2 இராஜாக்கள் 6 >

1 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
Фиий пророчилор ау зис луй Елисей: „Ятэ кэ локул унде локуим ной ку тине есте пря стрымт пентру ной.
2 நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
Хайдем пынэ ла Йордан ка сэ луэм де аколо фиекаре кыте о бырнэ ши сэ не фачем аколо ун лок де локуит.” Елисей а рэспунс: „Дучеци-вэ.”
3 அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
Ши унул дин ей а зис: „Фий бун ши вино ку служиторий тэй.” Ел а рэспунс: „Вой мерӂе!”
4 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
А плекат деч ку ей. Ажунгынд ла Йордан, ау тэят лемне.
5 ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
Ши, пе кынд тэя унул дин ей о бырнэ, а кэзут ферул де ла секуре ын апэ. Ел а стригат: „Ах, домнул меу, ера ымпрумутат!”
6 தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
Омул луй Думнезеу а зис: „Унде а кэзут?” Ши й-а арэтат локул. Атунч, Елисей а тэят о букатэ де лемн, а арункат-о ын локул ачела, ши ферул де ла секуре а плутит пе апэ.
7 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
Апой а зис: „Ридикэ-л!” Ши а ынтинс мына ши л-а луат.
8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.
Ымпэратул Сирией ера ын рэзбой ку Исраел. Ши, ынтр-ун сфат пе каре л-а цинут ку служиторий сэй, а зис: „Табэра мя ва фи ын кутаре лок.”
9 ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
Дар омул луй Думнезеу а тримис сэ спунэ ымпэратулуй луй Исраел: „Фереште-те сэ тречь пе лынгэ локул ачела, кэч аколо сунт аскуншь сириений.”
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான்.
Ши ымпэратул луй Исраел а тримис ниште оамень сэ стя ла пындэ спре локул пе каре и-л спусесе ши деспре каре ыл ынштиинцасе омул луй Думнезеу. Ачаста с-а ынтымплат ну о датэ, нич де доуэ орь.
11 ௧௧ இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
Ымпэратулуй Сирией и с-а тулбурат инима. А кемат пе служиторий сэй ши ле-а зис: „Ну воиць сэ-мь спунець каре дин ной есте пентру ымпэратул луй Исраел?”
12 ௧௨ அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
Унул дин служиторий сэй а рэспунс: „Нимень, ымпэрате, домнул меу, дар пророкул Елисей, каре есте ын Исраел, спуне ымпэратулуй луй Исраел кувинтеле пе каре ле ростешть ын одая та де кулкаре.”
13 ௧௩ அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
Ши ымпэратул а зис: „Дучеци-вэ ши ведець унде есте, ка сэ тримит сэ-л приндэ.” Ау венит ши й-ау спус: „Ятэ кэ есте ла Дотан.”
14 ௧௪ அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
А тримис аколо кай, каре ши о оасте путерникэ. Ау ажунс ноаптя ши ау ынконжурат четатя.
15 ௧௫ தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
Служиторул омулуй луй Думнезеу с-а скулат дис-де-диминяцэ ши а ешит. Ши ятэ кэ о оасте ынконжура четатя ку кай ши каре. Ши служиторул а зис омулуй луй Думнезеу: „Ах, домнул меу, кум вом фаче?”
16 ௧௬ அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
Ел а рэспунс: „Ну те теме, кэч май мулць сунт чей ку ной декыт чей ку ей.”
17 ௧௭ அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
Елисей с-а ругат ши а зис: „Доамне, дескиде-й окий сэ вадэ.” Ши Домнул а дескис окий служиторулуй, каре а вэзут мунтеле плин де кай ши де каре де фок ымпрежурул луй Елисей.
18 ௧௮ அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
Сириений с-ау коборыт ла Елисей. Ел а фэкут атунч урмэтоаря ругэчуне кэтре Домнул: „Ловеште, рогу-Те, пе попорул ачеста ку орбире.” Ши Домнул й-а ловит ку орбире, дупэ кувынтул луй Елисей.
19 ௧௯ அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
Елисей ле-а зис: „Ну есте ачаста каля ши ну есте ачаста четатя; вениць дупэ мине ши вэ вой дуче ла омул пе каре-л кэутаць.” Ши й-а дус ла Самария.
20 ௨0 அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
Кынд ау интрат ын Самария, Елисей а зис: „Доамне, дескиде окий оаменилор ачестора сэ вадэ!” Ши Домнул ле-а дескис окий ши ау вэзут кэ ерау ын мижлокул Самарией.
21 ௨௧ இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
Ымпэратул луй Исраел, вэзынду-й, а зис луй Елисей: „Сэ-й мэчелэреск, сэ-й мэчелэреск, пэринте?”
22 ௨௨ அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
„Сэ ну-й мэчелэрешть”, а рэспунс Елисей. „Обишнуешть ту оаре сэ мэчелэрешть пе ачея пе каре ый ей приншь ку сабия ши ку аркул тэу? Дэ-ле пыне ши апэ, ка сэ мэнынче ши сэ бя, апой сэ се дукэ ла стэпынул лор.”
23 ௨௩ அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
Ымпэратул луй Исраел ле-а дат ун прынз маре ши ей ау мынкат ши ау бэут, апой ле-а дат друмул ши ау плекат ла стэпынул лор. Ши оштиле сириенилор ну с-ау май ынторс пе цинутул луй Исраел.
24 ௨௪ இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
Дупэ ачея, Бен-Хадад, ымпэратул Сирией, стрынгынду-шь тоатэ оштиря, с-а суит ши а ымпресурат Самария.
25 ௨௫ அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள்.
Ын Самария а фост о маре фоамете ши атыт де мулт ау стрымторат-о, ынкыт ун кап де мэгар прецуя оптзечь де сикли де арӂинт ши ун сферт де каб де гэинац де порумбел, чинч сикли де арӂинт.
26 ௨௬ இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
Ши, пе кынд тречя ымпэратул пе зид, о фемее й-а стригат: „Скапэ-мэ, ымпэрате, домнул меу!”
27 ௨௭ அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
Ел а рэспунс: „Дакэ ну те скапэ Домнул, ку че сэ те скап еу? Ку венитул арией сау ал тяскулуй?”
28 ௨௮ ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.
Ши ымпэратул й-а зис: „Че ай?” Еа а рэспунс: „Фемея ачея мь-а зис: ‘Дэ-мь пе фиул тэу сэ-л мынкэм астэзь, ши мыне вом мынка пе фиул меу.’
29 ௨௯ அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.
Ной ам ферт пе фиул меу ши л-ам мынкат. Ши ын зиуа урмэтоаре й-ам зис: ‘Дэ пе фиул тэу сэ-л мынкэм.’ Дар еа а аскунс пе фиул ей.”
30 ௩0 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.
Кум а аузит ымпэратул кувинтеле ачестей фемей, шь-а рупт хайнеле, кынд стэтя пе зид. Ши попорул а вэзут кэ пе динэунтру авя ун сак де пэр пе труп.
31 ௩௧ அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
Ымпэратул а зис: „Сэ мэ педепсяскэ Думнезеу ку тоатэ аспримя дакэ ва рэмыне астэзь капул луй Елисей, фиул луй Шафат, пе трупул луй!”
32 ௩௨ எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
Елисей шедя ын касэ ши бэтрыний шедяу лынгэ ел. Ымпэратул а тримис пе чинева ынаинте. Дар, ынаинте ка сэ ажунгэ солул, Елисей а зис бэтрынилор: „Ведець кэ ачест фиу де учигаш тримите пе чинева сэ-мь я капул? Аскултаць! Кынд ва вени солул, ынкидець уша ши оприци-л ла ушэ; ну се ауде оаре сунетул пашилор стэпынулуй сэу ын урма луй?”
33 ௩௩ அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
Пе кынд ле ворбя ел ынкэ, солул се ши коборысе ла ел, ши ымпэратул а зис: „Ятэ, рэул ачеста вине де ла Домнул. Че май ам де нэдэждуит де ла Домнул?”

< 2 இராஜாக்கள் 6 >