< 2 கொரிந்தியர் 8 >
1 ௧ அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਮਾਕਿਦਨਿਯਾਦੇਸ਼ਸ੍ਥਾਸੁ ਸਮਿਤਿਸ਼਼ੁ ਪ੍ਰਕਾਸ਼ਿਤੋ ਯ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਨੁਗ੍ਰਹਸ੍ਤਮਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਜ੍ਞਾਪਯਾਮਿ|
2 ௨ அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள்.
ਵਸ੍ਤੁਤੋ ਬਹੁਕ੍ਲੇਸ਼ਪਰੀਕ੍ਸ਼਼ਾਸਮਯੇ ਤੇਸ਼਼ਾਂ ਮਹਾਨਨ੍ਦੋ(ਅ)ਤੀਵਦੀਨਤਾ ਚ ਵਦਾਨ੍ਯਤਾਯਾਃ ਪ੍ਰਚੁਰਫਲਮ੍ ਅਫਲਯਤਾਂ|
3 ௩ மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன்.
ਤੇ ਸ੍ਵੇੱਛਯਾ ਯਥਾਸ਼ਕ੍ਤਿ ਕਿਞ੍ਚਾਤਿਸ਼ਕ੍ਤਿ ਦਾਨ ਉਦ੍ਯੁਕ੍ਤਾ ਅਭਵਨ੍ ਇਤਿ ਮਯਾ ਪ੍ਰਮਾਣੀਕ੍ਰਿਯਤੇ|
4 ௪ தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள்.
ਵਯਞ੍ਚ ਯਤ੍ ਪਵਿਤ੍ਰਲੋਕੇਭ੍ਯਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਦਾਨਮ੍ ਉਪਕਾਰਾਰ੍ਥਕਮ੍ ਅੰਸ਼ਨਞ੍ਚ ਗ੍ਰੁʼਹ੍ਲਾਮਸ੍ਤਦ੍ ਬਹੁਨੁਨਯੇਨਾਸ੍ਮਾਨ੍ ਪ੍ਰਾਰ੍ਥਿਤਵਨ੍ਤਃ|
5 ௫ மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
ਵਯੰ ਯਾਦ੍ਰੁʼਕ੍ ਪ੍ਰਤ੍ਯੈ਼ਕ੍ਸ਼਼ਾਮਹਿ ਤਾਦ੍ਰੁʼਗ੍ ਅਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤੇ(ਅ)ਗ੍ਰੇ ਪ੍ਰਭਵੇ ਤਤਃ ਪਰਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯੇੱਛਯਾਸ੍ਮਭ੍ਯਮਪਿ ਸ੍ਵਾਨ੍ ਨ੍ਯਵੇਦਯਨ੍|
6 ௬ எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
ਅਤੋ ਹੇਤੋਸ੍ਤ੍ਵੰ ਯਥਾਰਬ੍ਧਵਾਨ੍ ਤਥੈਵ ਕਰਿਨ੍ਥਿਨਾਂ ਮਧ੍ਯੇ(ਅ)ਪਿ ਤਦ੍ ਦਾਨਗ੍ਰਹਣੰ ਸਾਧਯੇਤਿ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਧਿ ਵਯੰ ਤੀਤੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਮਹਿ|
7 ௭ அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
ਅਤੋ ਵਿਸ਼੍ਵਾਸੋ ਵਾਕ੍ਪਟੁਤਾ ਜ੍ਞਾਨੰ ਸਰ੍ੱਵੋਤ੍ਸਾਹੋ (ਅ)ਸ੍ਮਾਸੁ ਪ੍ਰੇਮ ਚੈਤੈ ਰ੍ਗੁਣੈ ਰ੍ਯੂਯੰ ਯਥਾਪਰਾਨ੍ ਅਤਿਸ਼ੇਧ੍ਵੇ ਤਥੈਵੈਤੇਨ ਗੁਣੇਨਾਪ੍ਯਤਿਸ਼ੇਧ੍ਵੰ|
8 ௮ இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன்.
ਏਤਦ੍ ਅਹਮ੍ ਆਜ੍ਞਯਾ ਕਥਯਾਮੀਤਿ ਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵਨ੍ਯੇਸ਼਼ਾਮ੍ ਉਤ੍ਸਾਹਕਾਰਣਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕਮਪਿ ਪ੍ਰੇਮ੍ਨਃ ਸਾਰਲ੍ਯੰ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੁਮਿੱਛਤਾ ਮਯੈਤਤ੍ ਕਥ੍ਯਤੇ|
9 ௯ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.
ਯੂਯਞ੍ਚਾਸ੍ਮਤ੍ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਨੁਗ੍ਰਹੰ ਜਾਨੀਥ ਯਤਸ੍ਤਸ੍ਯ ਨਿਰ੍ਧਨਤ੍ਵੇਨ ਯੂਯੰ ਯਦ੍ ਧਨਿਨੋ ਭਵਥ ਤਦਰ੍ਥੰ ਸ ਧਨੀ ਸੰਨਪਿ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਕ੍ਰੁʼਤੇ ਨਿਰ੍ਧਨੋ(ਅ)ਭਵਤ੍|
10 ௧0 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
ਏਤਸ੍ਮਿਨ੍ ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸ੍ਵਵਿਚਾਰੰ ਜ੍ਞਾਪਯਾਮਿ| ਗਤੰ ਸੰਵਤ੍ਸਰਮ੍ ਆਰਭ੍ਯ ਯੂਯੰ ਕੇਵਲੰ ਕਰ੍ੰਮ ਕਰ੍ੱਤੰ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵਿੱਛੁਕਤਾਂ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਤੁਮਪ੍ਯੁਪਾਕ੍ਰਾਭ੍ਯਧ੍ਵੰ ਤਤੋ ਹੇਤੋ ਰ੍ਯੁਸ਼਼੍ਮਤ੍ਕ੍ਰੁʼਤੇ ਮਮ ਮਨ੍ਤ੍ਰਣਾ ਭਦ੍ਰਾ|
11 ௧௧ எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
ਅਤੋ (ਅ)ਧੁਨਾ ਤਤ੍ਕਰ੍ੰਮਸਾਧਨੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਕ੍ਰਿਯਤਾਂ ਤੇਨ ਯਦ੍ਵਦ੍ ਇੱਛੁਕਤਾਯਾਮ੍ ਉਤ੍ਸਾਹਸ੍ਤਦ੍ਵਦ੍ ਏਕੈਕਸ੍ਯ ਸਮ੍ਪਦਨੁਸਾਰੇਣ ਕਰ੍ੰਮਸਾਧਨਮ੍ ਅਪਿ ਜਨਿਸ਼਼੍ਯਤੇ|
12 ௧௨ ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.
ਯਸ੍ਮਿਨ੍ ਇੱਛੁਕਤਾ ਵਿਦ੍ਯਤੇ ਤੇਨ ਯੰਨ ਧਾਰ੍ੱਯਤੇ ਤਸ੍ਮਾਤ੍ ਸੋ(ਅ)ਨੁਗ੍ਰੁʼਹ੍ਯਤ ਇਤਿ ਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਯਦ੍ ਧਾਰ੍ੱਯਤੇ ਤਸ੍ਮਾਦੇਵ|
13 ௧௩ மற்றவர்களுக்கு உதவியும், உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
ਯਤ ਇਤਰੇਸ਼਼ਾਂ ਵਿਰਾਮੇਣ ਯੁਸ਼਼੍ਮਾਕਞ੍ਚ ਕ੍ਲੇਸ਼ੇਨ ਭਵਿਤਵ੍ਯੰ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਸਮਤਯੈਵ|
14 ௧௪ எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி,
ਵਰ੍ੱਤਮਾਨਸਮਯੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਧਨਾਧਿਕ੍ਯੇਨ ਤੇਸ਼਼ਾਂ ਧਨਨ੍ਯੂਨਤਾ ਪੂਰਯਿਤਵ੍ਯਾ ਤਸ੍ਮਾਤ੍ ਤੇਸ਼਼ਾਮਪ੍ਯਾਧਿਕ੍ਯੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਨ੍ਯੂਨਤਾ ਪੂਰਯਿਸ਼਼੍ਯਤੇ ਤੇਨ ਸਮਤਾ ਜਨਿਸ਼਼੍ਯਤੇ|
15 ௧௫ ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
ਤਦੇਵ ਸ਼ਾਸ੍ਤ੍ਰੇ(ਅ)ਪਿ ਲਿਖਿਤਮ੍ ਆਸ੍ਤੇ ਯਥਾ, ਯੇਨਾਧਿਕੰ ਸੰਗ੍ਰੁʼਹੀਤੰ ਤਸ੍ਯਾਧਿਕੰ ਨਾਭਵਤ੍ ਯੇਨ ਚਾਲ੍ਪੰ ਸੰਗ੍ਰੁʼਹੀਤੰ ਤਸ੍ਯਾਲ੍ਪੰ ਨਾਭਵਤ੍|
16 ௧௬ அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட வாஞ்சை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਹਿਤਾਯ ਤੀਤਸ੍ਯ ਮਨਸਿ ਯ ਈਸ਼੍ਵਰ ਇਮਮ੍ ਉਦ੍ਯੋਗੰ ਜਨਿਤਵਾਨ੍ ਸ ਧਨ੍ਯੋ ਭਵਤੁ|
17 ௧௭ நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கீகரித்ததோடு, அவன் அதிக வாஞ்சையாக இருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடம் வருவதற்காகப் புறப்பட்டான்.
ਤੀਤੋ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਗ੍ਰੁʼਹੀਤਵਾਨ੍ ਕਿਞ੍ਚ ਸ੍ਵਯਮ੍ ਉਦ੍ਯੁਕ੍ਤਃ ਸਨ੍ ਸ੍ਵੇੱਛਯਾ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਸਮੀਪੰ ਗਤਵਾਨ੍|
18 ௧௮ நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.
ਤੇਨ ਸਹ ਯੋ(ਅ)ਪਰ ਏਕੋ ਭ੍ਰਾਤਾਸ੍ਮਾਭਿਃ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਃ ਸੁਸੰਵਾਦਾਤ੍ ਤਸ੍ਯ ਸੁਖ੍ਯਾਤ੍ਯਾ ਸਰ੍ੱਵਾਃ ਸਮਿਤਯੋ ਵ੍ਯਾਪ੍ਤਾਃ|
19 ௧௯ அதுமட்டும் இல்லை, கர்த்தருக்கு மகிமை உண்டாகவும், உங்களுடைய மனவிருப்பம் விளங்கவும், எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகும்போது, எங்களுடைய பயணத்தில் துணையாக இருப்பதற்காக, அவன் சபைகளால் தெரிந்து நியமிக்கப்பட்டவனாகவும் இருக்கிறான்.
ਪ੍ਰਭੋ ਰ੍ਗੌਰਵਾਯ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਇੱਛੁਕਤਾਯੈ ਚ ਸ ਸਮਿਤਿਭਿਰੇਤਸ੍ਯੈ ਦਾਨਸੇਵਾਯੈ ਅਸ੍ਮਾਕੰ ਸਙ੍ਗਿਤ੍ਵੇ ਨ੍ਯਯੋਜ੍ਯਤ|
20 ௨0 எங்களுடைய ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த அதிகமான தர்மப்பணத்தைக்குறித்து யாரும் எங்களைக் குற்றப்படுத்தாதபடி நாங்கள் எச்சரிக்கையாக இருந்து,
ਯਤੋ ਯਾ ਮਹੋਪਾਯਨਸੇਵਾਸ੍ਮਾਭਿ ਰ੍ਵਿਧੀਯਤੇ ਤਾਮਧਿ ਵਯੰ ਯਤ੍ ਕੇਨਾਪਿ ਨ ਨਿਨ੍ਦ੍ਯਾਮਹੇ ਤਦਰ੍ਥੰ ਯਤਾਮਹੇ|
21 ௨௧ கர்த்தருக்கு முன்பாகமட்டும் இல்லை, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய விரும்புகிறோம்.
ਯਤਃ ਕੇਵਲੰ ਪ੍ਰਭੋਃ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਤੰਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਮਾਨਵਾਨਾਮਪਿ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਸਦਾਚਾਰੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਆਲੋਚਾਮਹੇ|
22 ௨௨ மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக நம்பிக்கையினாலே அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
ਤਾਭ੍ਯਾਂ ਸਹਾਪਰ ਏਕੋ ਯੋ ਭ੍ਰਾਤਾਸ੍ਮਾਭਿਃ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਃ ਸੋ(ਅ)ਸ੍ਮਾਭਿ ਰ੍ਬਹੁਵਿਸ਼਼ਯੇਸ਼਼ੁ ਬਹਵਾਰਾਨ੍ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤ ਉਦ੍ਯੋਗੀਵ ਪ੍ਰਕਾਸ਼ਿਤਸ਼੍ਚ ਕਿਨ੍ਤ੍ਵਧੁਨਾ ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਦ੍ਰੁʼਢਵਿਸ਼੍ਵਾਸਾਤ੍ ਤਸ੍ਯੋਤ੍ਸਾਹੋ ਬਹੁ ਵਵ੍ਰੁʼਧੇ|
23 ௨௩ தீத்துவைக்குறித்து யாராவது விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாக இருக்கிறான் என்றும்; எங்களுடைய சகோதரர்களைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளில் இருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகளும், கிறிஸ்துவிற்கு மகிமையுமாக இருக்கிறார்கள் என்றும் அறியவேண்டும்.
ਯਦਿ ਕਸ਼੍ਚਿਤ੍ ਤੀਤਸ੍ਯ ਤੱਤ੍ਵੰ ਜਿਜ੍ਞਾਸਤੇ ਤਰ੍ਹਿ ਸ ਮਮ ਸਹਭਾਗੀ ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯੇ ਸਹਕਾਰੀ ਚ, ਅਪਰਯੋ ਰ੍ਭ੍ਰਾਤ੍ਰੋਸ੍ਤੱਤ੍ਵੰ ਵਾ ਯਦਿ ਜਿਜ੍ਞਾਸਤੇ ਤਰ੍ਹਿ ਤੌ ਸਮਿਤੀਨਾਂ ਦੂਤੌ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰਤਿਬਿਮ੍ਬੌ ਚੇਤਿ ਤੇਨ ਜ੍ਞਾਯਤਾਂ|
24 ௨௪ எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ਅਤੋ ਹੇਤੋਃ ਸਮਿਤੀਨਾਂ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਪ੍ਰੇਮ੍ਨੋ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਸ਼੍ਲਾਘਾਯਾਸ਼੍ਚ ਪ੍ਰਾਮਾਣ੍ਯੰ ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਤਵ੍ਯੰ|