< 2 கொரிந்தியர் 7 >

1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.
అతఏవ హే ప్రియతమాః, ఏతాదృశీః ప్రతిజ్ఞాః ప్రాప్తైరస్మాభిః శరీరాత్మనోః సర్వ్వమాలిన్యమ్ అపమృజ్యేశ్వరస్య భక్త్యా పవిత్రాచారః సాధ్యతాం|
2 எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
యూయమ్ అస్మాన్ గృహ్లీత| అస్మాభిః కస్యాప్యన్యాయో న కృతః కోఽపి న వఞ్చితః|
3 உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
యుష్మాన్ దోషిణః కర్త్తమహం వాక్యమేతద్ వదామీతి నహి యుష్మాభిః సహ జీవనాయ మరణాయ వా వయం యుష్మాన్ స్వాన్తఃకరణై ర్ధారయామ ఇతి పూర్వ్వం మయోక్తం|
4 அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.
యుష్మాన్ ప్రతి మమ మహేత్సాహో జాయతే యుష్మాన్ అధ్యహం బహు శ్లాఘే చ తేన సర్వ్వక్లేశసమయేఽహం సాన్త్వనయా పూర్ణో హర్షేణ ప్రఫుల్లితశ్చ భవామి|
5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
అస్మాసు మాకిదనియాదేశమ్ ఆగతేష్వస్మాకం శరీరస్య కాచిదపి శాన్తి ర్నాభవత్ కిన్తు సర్వ్వతో బహి ర్విరోధేనాన్తశ్చ భీత్యా వయమ్ అపీడ్యామహి|
6 ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
కిన్తు నమ్రాణాం సాన్త్వయితా య ఈశ్వరః స తీతస్యాగమనేనాస్మాన్ అసాన్త్వయత్|
7 அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.
కేవలం తస్యాగమనేన తన్నహి కిన్తు యుష్మత్తో జాతయా తస్య సాన్త్వనయాపి, యతోఽస్మాసు యుష్మాకం హార్ద్దవిలాపాసక్తత్వేష్వస్మాకం సమీపే వర్ణితేషు మమ మహానన్దో జాతః|
8 ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
అహం పత్రేణ యుష్మాన్ శోకయుక్తాన్ కృతవాన్ ఇత్యస్మాద్ అన్వతప్యే కిన్త్వధునా నానుతప్యే| తేన పత్రేణ యూయం క్షణమాత్రం శోకయుక్తీభూతా ఇతి మయా దృశ్యతే|
9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
ఇత్యస్మిన్ యుష్మాకం శోకేనాహం హృష్యామి తన్నహి కిన్తు మనఃపరివర్త్తనాయ యుష్మాకం శోకోఽభవద్ ఇత్యనేన హృష్యామి యతోఽస్మత్తో యుష్మాకం కాపి హాని ర్యన్న భవేత్ తదర్థం యుష్మాకమ్ ఈశ్వరీయః శోకో జాతః|
10 ௧0 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
స ఈశ్వరీయః శోకః పరిత్రాణజనకం నిరనుతాపం మనఃపరివర్త్తనం సాధయతి కిన్తు సాంసారికః శోకో మృత్యుం సాధయతి|
11 ௧௧ பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
పశ్యత తేనేశ్వరీయేణ శోకేన యుష్మాకం కిం న సాధితం? యత్నో దోషప్రక్షాలనమ్ అసన్తుష్టత్వం హార్ద్దమ్ ఆసక్తత్వం ఫలదానఞ్చైతాని సర్వ్వాణి| తస్మిన్ కర్మ్మణి యూయం నిర్మ్మలా ఇతి ప్రమాణం సర్వ్వేణ ప్రకారేణ యుష్మాభి ర్దత్తం|
12 ௧௨ எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன்.
యేనాపరాద్ధం తస్య కృతే కింవా యస్యాపరాద్ధం తస్య కృతే మయా పత్రమ్ అలేఖి తన్నహి కిన్తు యుష్మానధ్యస్మాకం యత్నో యద్ ఈశ్వరస్య సాక్షాద్ యుష్మత్సమీపే ప్రకాశేత తదర్థమేవ|
13 ௧௩ இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
ఉక్తకారణాద్ వయం సాన్త్వనాం ప్రాప్తాః; తాఞ్చ సాన్త్వనాం వినావరో మహాహ్లాదస్తీతస్యాహ్లాదాదస్మాభి ర్లబ్ధః, యతస్తస్యాత్మా సర్వ్వై ర్యుష్మాభిస్తృప్తః|
14 ௧௪ இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
పూర్వ్వం తస్య సమీపేఽహం యుష్మాభిర్యద్ అశ్లాఘే తేన నాలజ్జే కిన్తు వయం యద్వద్ యుష్మాన్ ప్రతి సత్యభావేన సకలమ్ అభాషామహి తద్వత్ తీతస్య సమీపేఽస్మాకం శ్లాఘనమపి సత్యం జాతం|
15 ௧௫ மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.
యూయం కీదృక్ తస్యాజ్ఞా అపాలయత భయకమ్పాభ్యాం తం గృహీతవన్తశ్చైతస్య స్మరణాద్ యుష్మాసు తస్య స్నేహో బాహుల్యేన వర్త్తతే|
16 ௧௬ எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.
యుష్మాస్వహం సర్వ్వమాశంసే, ఇత్యస్మిన్ మమాహ్లాదో జాయతే|

< 2 கொரிந்தியர் 7 >