< 2 கொரிந்தியர் 6 >

1 தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
তস্য সহাযা ৱযং যুষ্মান্ প্রার্থযামহে, ঈশ্ৱরস্যানুগ্রহো যুষ্মাভি র্ৱৃথা ন গৃহ্যতাং|
2 சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
তেনোক্তমেতৎ, সংশ্রোষ্যামি শুভে কালে ৎৱদীযাং প্রার্থনাম্ অহং| উপকারং করিষ্যামি পরিত্রাণদিনে তৱ| পশ্যতাযং শুভকালঃ পশ্যতেদং ত্রাণদিনং|
3 இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
অস্মাকং পরিচর্য্যা যন্নিষ্কলঙ্কা ভৱেৎ তদর্থং ৱযং কুত্রাপি ৱিঘ্নং ন জনযামঃ,
4 அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
কিন্তু প্রচুরসহিষ্ণুতা ক্লেশো দৈন্যং ৱিপৎ তাডনা কারাবন্ধনং নিৱাসহীনৎৱং পরিশ্রমো জাগরণম্ উপৱসনং
5 அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
নির্ম্মলৎৱং জ্ঞানং মৃদুশীলতা হিতৈষিতা
6 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
পৱিত্র আত্মা নিষ্কপটং প্রেম সত্যালাপ ঈশ্ৱরীযশক্তি
7 சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
র্দক্ষিণৱামাভ্যাং করাভ্যাং ধর্ম্মাস্ত্রধারণং
8 கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
মানাপমানযোরখ্যাতিসুখ্যাত্যো র্ভাগিৎৱম্ এতৈঃ সর্ৱ্ৱৈরীশ্ৱরস্য প্রশংস্যান্ পরিচারকান্ স্ৱান্ প্রকাশযামঃ|
9 அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
ভ্রমকসমা ৱযং সত্যৱাদিনো ভৱামঃ, অপরিচিতসমা ৱযং সুপরিচিতা ভৱামঃ, মৃতকল্পা ৱযং জীৱামঃ, দণ্ড্যমানা ৱযং ন হন্যামহে,
10 ௧0 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
১০শোকযুক্তাশ্চ ৱযং সদানন্দামঃ, দরিদ্রা ৱযং বহূন্ ধনিনঃ কুর্ম্মঃ, অকিঞ্চনাশ্চ ৱযং সর্ৱ্ৱং ধারযামঃ|
11 ௧௧ கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
১১হে করিন্থিনঃ, যুষ্মাকং প্রতি মমাস্যং মুক্তং মমান্তঃকরণাঞ্চ ৱিকসিতং|
12 ௧௨ எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
১২যূযং মমান্তরে ন সঙ্কোচিতাঃ কিঞ্চ যূযমেৱ সঙ্কোচিতচিত্তাঃ|
13 ௧௩ எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
১৩কিন্তু মহ্যং ন্যায্যফলদানার্থং যুষ্মাভিরপি ৱিকসিতৈ র্ভৱিতৱ্যম্ ইত্যহং নিজবালকানিৱ যুষ্মান্ ৱদামি|
14 ௧௪ அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
১৪অপরম্ অপ্রত্যযিভিঃ সার্দ্ধং যূযম্ একযুগে বদ্ধা মা ভূত, যস্মাদ্ ধর্ম্মাধর্ম্মযোঃ কঃ সম্বন্ধোঽস্তি? তিমিরেণ সর্দ্ধং প্রভাযা ৱা কা তুলনাস্তি?
15 ௧௫ கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
১৫বিলীযালদেৱেন সাকং খ্রীষ্টস্য ৱা কা সন্ধিঃ? অৱিশ্ৱাসিনা সার্দ্ধং ৱা ৱিশ্ৱাসিলোকস্যাংশঃ কঃ?
16 ௧௬ தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
১৬ঈশ্ৱরস্য মন্দিরেণ সহ ৱা দেৱপ্রতিমানাং কা তুলনা? অমরস্যেশ্ৱরস্য মন্দিরং যূযমেৱ| ঈশ্ৱরেণ তদুক্তং যথা, তেষাং মধ্যেঽহং স্ৱাৱাসং নিধাস্যামি তেষাং মধ্যে চ যাতাযাতং কুর্ৱ্ৱন্ তেষাম্ ঈশ্ৱরো ভৱিষ্যামি তে চ মল্লোকা ভৱিষ্যন্তি|
17 ௧௭ எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
১৭অতো হেতোঃ পরমেশ্ৱরঃ কথযতি যূযং তেষাং মধ্যাদ্ বহির্ভূয পৃথগ্ ভৱত, কিমপ্যমেধ্যং ন স্পৃশত; তেনাহং যুষ্মান্ গ্রহীষ্যামি,
18 ௧௮ அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
১৮যুষ্মাকং পিতা ভৱিষ্যামি চ, যূযঞ্চ মম কন্যাপুত্রা ভৱিষ্যথেতি সর্ৱ্ৱশক্তিমতা পরমেশ্ৱরেণোক্তং|

< 2 கொரிந்தியர் 6 >