< 2 கொரிந்தியர் 6 >
1 ௧ தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
परमेश्वरे सोगी कम्म करणे बाले होणे दिया बजा ला असां तुसां ने बिनती करदे न, की परमेश्वरे दा अनुग्रह जड़ा तुसां पर होया है, उसयो तुसां बेकार मत जाणा दिया।
2 ௨ சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
क्योंकि पबित्र शास्त्र च परमेश्वर बोलदा है, “सही बकत पर मैं तेरी सुणी, कने उद्धार दे रोजे मैं तेरी सहायता किती।” सुणा; हुण ही सही बकत है; सुणा, ऐ ही है उद्धार दा दिन।
3 ௩ இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
परमेश्वरे सोगी कम्म करदे होऐ साड़ा व्यवहार कुसी तांई कोई भी रुकाबट नी बणदा है, ताकि ऐसा ना हो की कोई साड़िया सेबा पर दोष लाऐ।
4 ௪ அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
असां हर इक तरीके ला दसदे न की असां परमेश्वर दे सच्चे सेवक न। क्योंकि असां बड़ा सबर रखीकरी कलेशां जो, दरिद्रता कने मुसीबतां जो सेहन करिरी,
5 ௫ அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
असां कोड़े खादे, जेला च गे, कने दंगे फसादां च चोटां लगियां, असां बड़ी मेहनत किती, बगेर सोऐ कने बगेर खादे-पिते रे,
6 ௬ கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
पर असां अपु जो बड़ा पबित्र रखया, अकली ला कम्म किते, सबर रखया कने दुज्जयां पर दया किती, पबित्र आत्मा दे हुकम मने,
7 ௭ சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
सच्चा प्यार किता, असां सच्चाई दा संदेश सुणाया, परमेश्वरे दिया शक्तिया साड़े च कम्म किता। असां सज्जे हथे च धार्मिकता दे हथियारे जो हमला करणे तांई कने खबे हथे जो बचाब तांई इस्तेमाल करदे न,
8 ௮ கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
चाहे लोकां साड़ी इज्जत किती या बेइज्जती किती, तारीफ या बुराई किती, पर असां इमानदार न, पर सै बोलदे न की असां झूठे न।
9 ௯ அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
भले ही लोक सांझो अनजाण समझदे न, पर फिरी भी असां प्रसिद्ध न; भले ही लोक सांझो मरयां सांई समझदे न, पर फिरी भी असां जिंदे न; सांझो सजा तां मिलदी है पर जानी ला नी मारी सके।
10 ௧0 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
सांझो बड़े दुख थे, पर असां हमेशा खुश रेंदे थे। असां अपु तां गरीब थे, पर बाकियां जो आत्मिक रुपे च अमीर बणाई दिन्दे न। इयां न जियां साड़े बाल कुछ नी फिरी भी साड़े बाल सब कुछ है।
11 ௧௧ கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
हे कुरिन्थुस शेहर दे मसीह लोको, असां खुली करी तुसां जो सच्चियां गल्लां बोलदे न, असां पुरे दिले ला तुहांजो प्यार करदे न।
12 ௧௨ எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
तुहाड़े तांई साड़ा प्यार कदी घट नी होया, पर तुसां दा प्यार साड़े तांई घटी गिया है।
13 ௧௩ எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
पर अपणे बाल बच्चे समझीकरी मैं तुहांजो बोलदा है, की तुसां भी साड़े प्यार दे बदले च साड़े सोगी पुरे दिले ला प्यार करा।
14 ௧௪ அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
भरोसा नी करणे बाले लोकां सोगी कोई रिशता मत रखा, क्योंकि धार्मिक कम्मा दा कने बुरे कम्मा दी कोई बराबरी नी। लौई दा कने नेहरे दा कोई रिशता नी।
15 ௧௫ கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
कने मसीह दा शैताने सोगी कोई रिशता नी है। कने भरोसा करणे बाले लोकां दा भरोसा नी करणे बाले लोकां सोगी कोई रिशता नी।
16 ௧௬ தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
कने मूर्तियाँ दी परमेश्वरे दे मंदरे च कोई जगा नी। क्योंकि असां तां जिंदे परमेश्वरे दे मंदर न; जियां परमेश्वरे पबित्र शास्त्र च बोलया है, “मैं इना लोकां सोगी रेंणा कने उना बिच ही चलणा फिरणा; कने मैं उना दा परमेश्वर होणा, कने सै मेरे लोक होंणे।”
17 ௧௭ எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
इस तांई प्रभुऐ सांझो ला पबित्र शास्त्र दे जरिये बोलया है की, “उना लोकां ला लग होई जा जड़े परमेश्वरे पिच्छे नी चलदे। कने गंदिया चीजां सोगी कोई रिश्ता मत रखा, तां मैं तुहांजो अपनाणा।”
18 ௧௮ அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
“कने मैं तुहाड़ा पिता होणा कने तुसां मेरे बेटे कने बेटियाँ होणे: ऐ सारयां ला शक्तिशाली प्रभु परमेश्वर दा बचन है।”