< 1 தீமோத்தேயு 6 >

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
ยาวนฺโต โลกา ยุคธาริโณ ทาสา: สนฺติ เต สฺวสฺวสฺวามินํ ปูรฺณสมาทรโยคฺยํ มนฺยนฺตำ โน เจทฺ อีศฺวรสฺย นามฺน อุปเทศสฺย จ นินฺทา สมฺภวิษฺยติฯ
2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
เยษาญฺจ สฺวามิโน วิศฺวาสิน: ภวนฺติ ไตเสฺต ภฺราตฺฤตฺวาตฺ นาวชฺเญยา: กินฺตุ เต กรฺมฺมผลโภคิโน วิศฺวาสิน: ปฺริยาศฺจ ภวนฺตีติ เหโต: เสวนียา เอว, ตฺวมฺ เอตานิ ศิกฺษย สมุปทิศ จฯ
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
ย: กศฺจิทฺ อิตรศิกฺษำ กโรติ, อสฺมากํ ปฺรโภ รฺยีศุขฺรีษฺฏสฺย หิตวากฺยานีศฺวรภกฺเต โรฺยคฺยำ ศิกฺษาญฺจ น สฺวีกโรติ
4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
ส ทรฺปธฺมาต: สรฺวฺวถา ชฺญานหีนศฺจ วิวาไท รฺวาคฺยุทฺไธศฺจ โรคยุกฺตศฺจ ภวติฯ
5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
ตาทฺฤศาทฺ ภาวาทฺ อีรฺษฺยาวิโรธาปวาททุษฺฏาสูยา ภฺรษฺฏมนสำ สตฺยชฺญานหีนานามฺ อีศฺวรภกฺตึ ลาโภปายมฺ อิว มนฺยมานานำ โลกานำ วิวาทาศฺจ ชายนฺเต ตาทฺฤเศโภฺย โลเกภฺยสฺตฺวํ ปฺฤถกฺ ติษฺฐฯ
6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
สํยเตจฺฉยา ยุกฺตา เยศฺวรภกฺติ: สา มหาลาโภปาโย ภวตีติ สตฺยํฯ
7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
เอตชฺชคตฺปฺรเวศนกาเล'สฺมาภิ: กิมปิ นานายิ ตตฺตยชนกาเล'ปิ กิมปิ เนตุํ น ศกฺษฺยต อิติ นิศฺจิตํฯ
8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
อเตอว ขาทฺยานฺยาจฺฉาทนานิ จ ปฺราปฺยาสฺมาภิ: สนฺตุษฺไฏ รฺภวิตวฺยํฯ
9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
เย ตุ ธนิโน ภวิตุํ เจษฺฏนฺเต เต ปรีกฺษายามฺ อุนฺมาเถ ปตนฺติ เย จาภิลาษา มานวานฺ วินาเศ นรเก จ มชฺชยนฺติ ตาทฺฤเศษฺวชฺญานาหิตาภิลาเษษฺวปิ ปตนฺติฯ
10 ௧0 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ยโต'รฺถสฺปฺฤหา สรฺเวฺวษำ ทุริตานำ มูลํ ภวติ ตามวลมฺพฺย เกจิทฺ วิศฺวาสาทฺ อภฺรํศนฺต นานาเกฺลไศศฺจ สฺวานฺ อวิธฺยนฺฯ
11 ௧௧ நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
เห อีศฺวรสฺย โลก ตฺวมฺ เอเตภฺย: ปลายฺย ธรฺมฺม อีศฺวรภกฺติ รฺวิศฺวาส: เปฺรม สหิษฺณุตา กฺษานฺติศฺไจตานฺยาจรฯ
12 ௧௨ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
วิศฺวาสรูปมฺ อุตฺตมยุทฺธํ กุรุ, อนนฺตชีวนมฺ อาลมฺพสฺว ยตสฺตทรฺถํ ตฺวมฺ อาหูโต 'ภว: , พหุสากฺษิณำ สมกฺษญฺโจตฺตมำ ปฺรติชฺญำ สฺวีกฺฤตวานฺฯ (aiōnios g166)
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
อปรํ สรฺเวฺวษำ ชีวยิตุรีศฺวรสฺย สากฺษาทฺ ยศฺจ ขฺรีษฺโฏ ยีศุ: ปนฺตียปีลาตสฺย สมกฺษมฺ อุตฺตมำ ปฺรติชฺญำ สฺวีกฺฤตวานฺ ตสฺย สากฺษาทฺ อหํ ตฺวามฺ อิทมฺ อาชฺญาปยามิฯ
14 ௧௪ எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
อีศฺวเรณ สฺวสมเย ปฺรกาศิตวฺยมฺ อสฺมากํ ปฺรโภ รฺยีศุขฺรีษฺฏสฺยาคมนํ ยาวตฺ ตฺวยา นิษฺกลงฺกเตฺวน นิรฺทฺโทษเตฺวน จ วิธี รกฺษฺยตำฯ
15 ௧௫ இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
ส อีศฺวร: สจฺจิทานนฺท: , อทฺวิตียสมฺราฏฺ, ราชฺญำ ราชา, ปฺรภูนำ ปฺรภุ: ,
16 ௧௬ அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
อมรตายา อทฺวิตีย อากร: , อคมฺยเตโชนิวาสี, มรฺตฺตฺยานำ เกนาปิ น ทฺฤษฺฏ: เกนาปิ น ทฺฤศฺยศฺจฯ ตสฺย เคารวปรากฺรเมา สทาตเนา ภูยาสฺตำฯ อาเมนฺฯ (aiōnios g166)
17 ௧௭ இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
อิหโลเก เย ธนินเสฺต จิตฺตสมุนฺนตึ จปเล ธเน วิศฺวาสญฺจ น กุรฺวฺวตำ กินฺตุ โภคารฺถมฺ อสฺมภฺยํ ปฺรจุรเตฺวน สรฺวฺวทาตา (aiōn g165)
18 ௧௮ நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
โย'มร อีศฺวรสฺตสฺมินฺ วิศฺวสนฺตุ สทาจารํ กุรฺวฺวนฺตุ สตฺกรฺมฺมธเนน ธนิโน สุกลา ทาตารศฺจ ภวนฺตุ,
19 ௧௯ நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
ยถา จ สตฺยํ ชีวนํ ปาปฺนุยุสฺตถา ปารตฺริกามฺ อุตฺตมสมฺปทํ สญฺจินฺวนฺเตฺวติ ตฺวยาทิศฺยนฺตำฯ
20 ௨0 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
เห ตีมถิย, ตฺวมฺ อุปนิธึ โคปย กาลฺปนิกวิทฺยายา อปวิตฺรํ ปฺรลาปํ วิโรโธกฺติญฺจ ตฺยช จ,
21 ௨௧ சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.
ยต: กติปยา โลกาสฺตำ วิทฺยามวลมฺพฺย วิศฺวาสาทฺ ภฺรษฺฏา อภวนฯ ปฺรสาทสฺตว สหาโย ภูยาตฺฯ อาเมนฺฯ

< 1 தீமோத்தேயு 6 >