< 1 தெசலோனிக்கேயர் 1 >

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
పౌలః సిల్వానస్తీమథియశ్చ పితురీశ్వరస్య ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య చాశ్రయం ప్రాప్తా థిషలనీకీయసమితిం ప్రతి పత్రం లిఖన్తి| అస్మాకం తాత ఈశ్వరః ప్రభు ర్యీశుఖ్రీష్టశ్చ యుష్మాన్ ప్రత్యనుగ్రహం శాన్తిఞ్చ క్రియాస్తాం|
2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
వయం సర్వ్వేషాం యుష్మాకం కృతే ఈశ్వరం ధన్యం వదామః ప్రార్థనాసమయే యుష్మాకం నామోచ్చారయామః,
3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
అస్మాకం తాతస్యేశ్వరస్య సాక్షాత్ ప్రభౌ యీశుఖ్రీష్టే యుష్మాకం విశ్వాసేన యత్ కార్య్యం ప్రేమ్నా యః పరిశ్రమః ప్రత్యాశయా చ యా తితిక్షా జాయతే
4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
తత్ సర్వ్వం నిరన్తరం స్మరామశ్చ| హే పియభ్రాతరః, యూయమ్ ఈశ్వరేణాభిరుచితా లోకా ఇతి వయం జానీమః|
5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
యతోఽస్మాకం సుసంవాదః కేవలశబ్దేన యుష్మాన్ న ప్రవిశ్య శక్త్యా పవిత్రేణాత్మనా మహోత్సాహేన చ యుష్మాన్ ప్రావిశత్| వయన్తు యుష్మాకం కృతే యుష్మన్మధ్యే కీదృశా అభవామ తద్ యుష్మాభి ర్జ్ఞాయతే|
6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
యూయమపి బహుక్లేశభోగేన పవిత్రేణాత్మనా దత్తేనానన్దేన చ వాక్యం గృహీత్వాస్మాకం ప్రభోశ్చానుగామినోఽభవత|
7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
తేన మాకిదనియాఖాయాదేశయో ర్యావన్తో విశ్వాసినో లోకాః సన్తి యూయం తేషాం సర్వ్వేషాం నిదర్శనస్వరూపా జాతాః|
8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
యతో యుష్మత్తః ప్రతినాదితయా ప్రభో ర్వాణ్యా మాకిదనియాఖాయాదేశౌ వ్యాప్తౌ కేవలమేతన్నహి కిన్త్వీశ్వరే యుష్మాకం యో విశ్వాసస్తస్య వార్త్తా సర్వ్వత్రాశ్రావి, తస్మాత్ తత్ర వాక్యకథనమ్ అస్మాకం నిష్ప్రయోజనం|
9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
యతో యుష్మన్మధ్యే వయం కీదృశం ప్రవేశం ప్రాప్తా యూయఞ్చ కథం ప్రతిమా విహాయేశ్వరం ప్రత్యావర్త్తధ్వమ్ అమరం సత్యమీశ్వరం సేవితుం
10 ௧0 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.
మృతగణమధ్యాచ్చ తేనోత్థాపితస్య పుత్రస్యార్థత ఆగామిక్రోధాద్ అస్మాకం నిస్తారయితు ర్యీశోః స్వర్గాద్ ఆగమనం ప్రతీక్షితుమ్ ఆరభధ్వమ్ ఏతత్ సర్వ్వం తే లోకాః స్వయమ్ అస్మాన్ జ్ఞాపయన్తి|

< 1 தெசலோனிக்கேயர் 1 >