< 1 தெசலோனிக்கேயர் 2 >

1 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
హే భ్రాతరః, యుష్మన్మధ్యే ఽస్మాకం ప్రవేశో నిష్ఫలో న జాత ఇతి యూయం స్వయం జానీథ|
2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
అపరం యుష్మాభి ర్యథాశ్రావి తథా పూర్వ్వం ఫిలిపీనగరే క్లిష్టా నిన్దితాశ్చ సన్తోఽపి వయమ్ ఈశ్వరాద్ ఉత్సాహం లబ్ధ్వా బహుయత్నేన యుష్మాన్ ఈశ్వరస్య సుసంవాదమ్ అబోధయామ|
3 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை.
యతోఽస్మాకమ్ ఆదేశో భ్రాన్తేరశుచిభావాద్ వోత్పన్నః ప్రవఞ్చనాయుక్తో వా న భవతి|
4 தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
కిన్త్వీశ్వరేణాస్మాన్ పరీక్ష్య విశ్వసనీయాన్ మత్త్వా చ యద్వత్ సుసంవాదోఽస్మాసు సమార్ప్యత తద్వద్ వయం మానవేభ్యో న రురోచిషమాణాః కిన్త్వస్మదన్తఃకరణానాం పరీక్షకాయేశ్వరాయ రురోచిషమాణా భాషామహే|
5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.
వయం కదాపి స్తుతివాదినో నాభవామేతి యూయం జానీథ కదాపి ఛలవస్త్రేణ లోభం నాచ్ఛాదయామేత్యస్మిన్ ఈశ్వరః సాక్షీ విద్యతే|
6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
వయం ఖ్రీష్టస్య ప్రేరితా ఇవ గౌరవాన్వితా భవితుమ్ అశక్ష్యామ కిన్తు యుష్మత్తః పరస్మాద్ వా కస్మాదపి మానవాద్ గౌరవం న లిప్సమానా యుష్మన్మధ్యే మృదుభావా భూత్వావర్త్తామహి|
7 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;
యథా కాచిన్మాతా స్వకీయశిశూన్ పాలయతి తథా వయమపి యుష్మాన్ కాఙ్క్షమాణా
8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம்.
యుష్మభ్యం కేవలమ్ ఈశ్వరస్య సుసంవాదం తన్నహి కిన్తు స్వకీయప్రాణాన్ అపి దాతుం మనోభిరభ్యలషామ, యతో యూయమ్ అస్మాకం స్నేహపాత్రాణ్యభవత|
9 சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
హే భ్రాతరః, అస్మాకం శ్రమః క్లేశశ్చ యుష్మాభిః స్మర్య్యతే యుష్మాకం కోఽపి యద్ భారగ్రస్తో న భవేత్ తదర్థం వయం దివానిశం పరిశ్రామ్యన్తో యుష్మన్మధ్య ఈశ్వరస్య సుసంవాదమఘోషయామ|
10 ௧0 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
అపరఞ్చ విశ్వాసినో యుష్మాన్ ప్రతి వయం కీదృక్ పవిత్రత్వయథార్థత్వనిర్దోషత్వాచారిణోఽభవామేత్యస్మిన్ ఈశ్వరో యూయఞ్చ సాక్షిణ ఆధ్వే|
11 ௧௧ மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று,
అపరఞ్చ యద్వత్ పితా స్వబాలకాన్ తద్వద్ వయం యుష్మాకమ్ ఏకైకం జనమ్ ఉపదిష్టవన్తః సాన్త్వితవన్తశ్చ,
12 ௧௨ தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
య ఈశ్వరః స్వీయరాజ్యాయ విభవాయ చ యుష్మాన్ ఆహూతవాన్ తదుపయుక్తాచరణాయ యుష్మాన్ ప్రవర్త్తితవన్తశ్చేతి యూయం జానీథ|
13 ௧௩ ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.
యస్మిన్ సమయే యూయమ్ అస్మాకం ముఖాద్ ఈశ్వరేణ ప్రతిశ్రుతం వాక్యమ్ అలభధ్వం తస్మిన్ సమయే తత్ మానుషాణాం వాక్యం న మత్త్వేశ్వరస్య వాక్యం మత్త్వా గృహీతవన్త ఇతి కారణాద్ వయం నిరన్తరమ్ ఈశ్వరం ధన్యం వదామః, యతస్తద్ ఈశ్వరస్య వాక్యమ్ ఇతి సత్యం విశ్వాసినాం యుష్మాకం మధ్యే తస్య గుణః ప్రకాశతే చ|
14 ௧௪ எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள்.
హే భ్రాతరః, ఖ్రీష్టాశ్రితవత్య ఈశ్వరస్య యాః సమిత్యో యిహూదాదేశే సన్తి యూయం తాసామ్ అనుకారిణోఽభవత, తద్భుక్తా లోకాశ్చ యద్వద్ యిహూదిలోకేభ్యస్తద్వద్ యూయమపి స్వజాతీయలోకేభ్యో దుఃఖమ్ అలభధ్వం|
15 ௧௫ அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,
తే యిహూదీయాః ప్రభుం యీశుం భవిష్యద్వాదినశ్చ హతవన్తో ఽస్మాన్ దూరీకృతవన్తశ్చ, త ఈశ్వరాయ న రోచన్తే సర్వ్వేషాం మానవానాం విపక్షా భవన్తి చ;
16 ௧௬ யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.
అపరం భిన్నజాతీయలోకానాం పరిత్రాణార్థం తేషాం మధ్యే సుసంవాదఘోషణాద్ అస్మాన్ ప్రతిషేధన్తి చేత్థం స్వీయపాపానాం పరిమాణమ్ ఉత్తరోత్తరం పూరయన్తి, కిన్తు తేషామ్ అన్తకారీ క్రోధస్తాన్ ఉపక్రమతే|
17 ௧௭ சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.
హే భ్రాతరః మనసా నహి కిన్తు వదనేన కియత్కాలం యుష్మత్తో ఽస్మాకం విచ్ఛేదే జాతే వయం యుష్మాకం ముఖాని ద్రష్టుమ్ అత్యాకాఙ్క్షయా బహు యతితవన్తః|
18 ௧௮ ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
ద్విరేకకృత్వో వా యుష్మత్సమీపగమనాయాస్మాకం విశేషతః పౌలస్య మమాభిలాషోఽభవత్ కిన్తు శయతానో ఽస్మాన్ నివారితవాన్|
19 ௧௯ எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
యతోఽస్మాకం కా ప్రత్యాశా కో వానన్దః కిం వా శ్లాఘ్యకిరీటం? అస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్యాగమనకాలే తత్సమ్ముఖస్థా యూయం కిం తన్న భవిష్యథ?
20 ௨0 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.
యూయమ్ ఏవాస్మాకం గౌరవానన్దస్వరూపా భవథ|

< 1 தெசலோனிக்கேயர் 2 >