< 1 பேதுரு 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
ପନ୍ତ-ଗାଲାତିଯା-କପ୍ପଦକିଯା-ଆଶିଯା-ବିଥୁନିଯାଦେଶେଷୁ ପ୍ରୱାସିନୋ ଯେ ୱିକୀର୍ଣଲୋକାଃ
2 ௨ பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும்.
ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ପୂର୍ୱ୍ୱନିର୍ଣଯାଦ୍ ଆତ୍ମନଃ ପାୱନେନ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାଜ୍ଞାଗ୍ରହଣାଯ ଶୋଣିତପ୍ରୋକ୍ଷଣାଯ ଚାଭିରୁଚିତାସ୍ତାନ୍ ପ୍ରତି ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ପ୍ରେରିତଃ ପିତରଃ ପତ୍ରଂ ଲିଖତି| ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତି ବାହୁଲ୍ୟେନ ଶାନ୍ତିରନୁଗ୍ରହଶ୍ଚ ଭୂଯାସ୍ତାଂ|
3 ௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ତାତ ଈଶ୍ୱରୋ ଧନ୍ୟଃ, ଯତଃ ସ ସ୍ୱକୀଯବହୁକୃପାତୋ ମୃତଗଣମଧ୍ୟାଦ୍ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟୋତ୍ଥାନେନ ଜୀୱନପ୍ରତ୍ୟାଶାର୍ଥମ୍ ଅର୍ଥତୋ
4 ௪ தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார்.
ଽକ୍ଷଯନିଷ୍କଲଙ୍କାମ୍ଲାନସମ୍ପତ୍ତିପ୍ରାପ୍ତ୍ୟର୍ଥମ୍ ଅସ୍ମାନ୍ ପୁନ ର୍ଜନଯାମାସ| ସା ସମ୍ପତ୍ତିଃ ସ୍ୱର୍ଗେ ଽସ୍ମାକଂ କୃତେ ସଞ୍ଚିତା ତିଷ୍ଠତି,
5 ௫ கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ଯୂଯଞ୍ଚେଶ୍ୱରସ୍ୟ ଶକ୍ତିତଃ ଶେଷକାଲେ ପ୍ରକାଶ୍ୟପରିତ୍ରାଣାର୍ଥଂ ୱିଶ୍ୱାସେନ ରକ୍ଷ୍ୟଧ୍ୱେ|
6 ௬ இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
ତସ୍ମାଦ୍ ଯୂଯଂ ଯଦ୍ୟପ୍ୟାନନ୍ଦେନ ପ୍ରଫୁଲ୍ଲା ଭୱଥ ତଥାପି ସାମ୍ପ୍ରତଂ ପ୍ରଯୋଜନହେତୋଃ କିଯତ୍କାଲପର୍ୟ୍ୟନ୍ତଂ ନାନାୱିଧପରୀକ୍ଷାଭିଃ କ୍ଲିଶ୍ୟଧ୍ୱେ|
7 ௭ அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.
ଯତୋ ୱହ୍ନିନା ଯସ୍ୟ ପରୀକ୍ଷା ଭୱତି ତସ୍ମାତ୍ ନଶ୍ୱରସୁୱର୍ଣାଦପି ବହୁମୂଲ୍ୟଂ ଯୁଷ୍ମାକଂ ୱିଶ୍ୱାସରୂପଂ ଯତ୍ ପରୀକ୍ଷିତଂ ସ୍ୱର୍ଣଂ ତେନ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାଗମନସମଯେ ପ୍ରଶଂସାଯାଃ ସମାଦରସ୍ୟ ଗୌରୱସ୍ୟ ଚ ଯୋଗ୍ୟତା ପ୍ରାପ୍ତୱ୍ୟା|
8 ௮ நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து,
ଯୂଯଂ ତଂ ଖ୍ରୀଷ୍ଟମ୍ ଅଦୃଷ୍ଟ୍ୱାପି ତସ୍ମିନ୍ ପ୍ରୀଯଧ୍ୱେ ସାମ୍ପ୍ରତଂ ତଂ ନ ପଶ୍ୟନ୍ତୋଽପି ତସ୍ମିନ୍ ୱିଶ୍ୱସନ୍ତୋ ଽନିର୍ୱ୍ୱଚନୀଯେନ ପ୍ରଭାୱଯୁକ୍ତେନ ଚାନନ୍ଦେନ ପ୍ରଫୁଲ୍ଲା ଭୱଥ,
9 ௯ உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.
ସ୍ୱୱିଶ୍ୱାସସ୍ୟ ପରିଣାମରୂପମ୍ ଆତ୍ମନାଂ ପରିତ୍ରାଣଂ ଲଭଧ୍ୱେ ଚ|
10 ௧0 உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;
ଯୁଷ୍ମାସୁ ଯୋ ଽନୁଗ୍ରହୋ ୱର୍ତ୍ତତେ ତଦ୍ୱିଷଯେ ଯ ଈଶ୍ୱରୀଯୱାକ୍ୟଂ କଥିତୱନ୍ତସ୍ତେ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନସ୍ତସ୍ୟ ପରିତ୍ରାଣସ୍ୟାନ୍ୱେଷଣମ୍ ଅନୁସନ୍ଧାନଞ୍ଚ କୃତୱନ୍ତଃ|
11 ௧௧ தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள்.
ୱିଶେଷତସ୍ତେଷାମନ୍ତର୍ୱ୍ୱାସୀ ଯଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାତ୍ମା ଖ୍ରୀଷ୍ଟେ ୱର୍ତ୍ତିଷ୍ୟମାଣାନି ଦୁଃଖାନି ତଦନୁଗାମିପ୍ରଭାୱଞ୍ଚ ପୂର୍ୱ୍ୱଂ ପ୍ରାକାଶଯତ୍ ତେନ କଃ କୀଦୃଶୋ ୱା ସମଯୋ ନିରଦିଶ୍ୟତୈତସ୍ୟାନୁସନ୍ଧାନଂ କୃତୱନ୍ତଃ|
12 ௧௨ தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.
ତତସ୍ତୈ ର୍ୱିଷଯୈସ୍ତେ ଯନ୍ନ ସ୍ୱାନ୍ କିନ୍ତ୍ୱସ୍ମାନ୍ ଉପକୁର୍ୱ୍ୱନ୍ତ୍ୟେତତ୍ ତେଷାଂ ନିକଟେ ପ୍ରାକାଶ୍ୟତ| ଯାଂଶ୍ଚ ତାନ୍ ୱିଷଯାନ୍ ଦିୱ୍ୟଦୂତା ଅପ୍ୟୱନତଶିରସୋ ନିରୀକ୍ଷିତୁମ୍ ଅଭିଲଷନ୍ତି ତେ ୱିଷଯାଃ ସାମ୍ପ୍ରତଂ ସ୍ୱର୍ଗାତ୍ ପ୍ରେଷିତସ୍ୟ ପୱିତ୍ରସ୍ୟାତ୍ମନଃ ସହାଯ୍ୟାଦ୍ ଯୁଷ୍ମତ୍ସମୀପେ ସୁସଂୱାଦପ୍ରଚାରଯିତୃଭିଃ ପ୍ରାକାଶ୍ୟନ୍ତ|
13 ௧௩ ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.
ଅତଏୱ ଯୂଯଂ ମନଃକଟିବନ୍ଧନଂ କୃତ୍ୱା ପ୍ରବୁଦ୍ଧାଃ ସନ୍ତୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ପ୍ରକାଶସମଯେ ଯୁଷ୍ମାସୁ ୱର୍ତ୍ତିଷ୍ୟମାନସ୍ୟାନୁଗ୍ରହସ୍ୟ ସମ୍ପୂର୍ଣାଂ ପ୍ରତ୍ୟାଶାଂ କୁରୁତ|
14 ௧௪ நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து,
ଅପରଂ ପୂର୍ୱ୍ୱୀଯାଜ୍ଞାନତାୱସ୍ଥାଯାଃ କୁତ୍ସିତାଭିଲାଷାଣାଂ ଯୋଗ୍ୟମ୍ ଆଚାରଂ ନ କୁର୍ୱ୍ୱନ୍ତୋ ଯୁଷ୍ମଦାହ୍ୱାନକାରୀ ଯଥା ପୱିତ୍ରୋ ଽସ୍ତି
15 ௧௫ உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.
ଯୂଯମପ୍ୟାଜ୍ଞାଗ୍ରାହିସନ୍ତାନା ଇୱ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ଆଚାରେ ତାଦୃକ୍ ପୱିତ୍ରା ଭୱତ|
16 ௧௬ நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
ଯତୋ ଲିଖିତମ୍ ଆସ୍ତେ, ଯୂଯଂ ପୱିତ୍ରାସ୍ତିଷ୍ଠତ ଯସ୍ମାଦହଂ ପୱିତ୍ରଃ|
17 ௧௭ அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள்.
ଅପରଞ୍ଚ ଯୋ ୱିନାପକ୍ଷପାତମ୍ ଏକୈକମାନୁଷସ୍ୟ କର୍ମ୍ମାନୁସାରାଦ୍ ୱିଚାରଂ କରୋତି ସ ଯଦି ଯୁଷ୍ମାଭିସ୍ତାତ ଆଖ୍ୟାଯତେ ତର୍ହି ସ୍ୱପ୍ରୱାସସ୍ୟ କାଲୋ ଯୁଷ୍ମାଭି ର୍ଭୀତ୍ୟା ଯାପ୍ୟତାଂ|
18 ௧௮ உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,
ଯୂଯଂ ନିରର୍ଥକାତ୍ ପୈତୃକାଚାରାତ୍ କ୍ଷଯଣୀଯୈ ରୂପ୍ୟସୁୱର୍ଣାଦିଭି ର୍ମୁକ୍ତିଂ ନ ପ୍ରାପ୍ୟ
19 ௧௯ குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
ନିଷ୍କଲଙ୍କନିର୍ମ୍ମଲମେଷଶାୱକସ୍ୟେୱ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ବହୁମୂଲ୍ୟେନ ରୁଧିରେଣ ମୁକ୍ତିଂ ପ୍ରାପ୍ତୱନ୍ତ ଇତି ଜାନୀଥ|
20 ௨0 அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
ସ ଜଗତୋ ଭିତ୍ତିମୂଲସ୍ଥାପନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ନିଯୁକ୍ତଃ କିନ୍ତୁ ଚରମଦିନେଷୁ ଯୁଷ୍ମଦର୍ଥଂ ପ୍ରକାଶିତୋ ଽଭୱତ୍|
21 ௨௧ உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ଯତସ୍ତେନୈୱ ମୃତଗଣାତ୍ ତସ୍ୟୋତ୍ଥାପଯିତରି ତସ୍ମୈ ଗୌରୱଦାତରି ଚେଶ୍ୱରେ ୱିଶ୍ୱସିଥ ତସ୍ମାଦ୍ ଈଶ୍ୱରେ ଯୁଷ୍ମାକଂ ୱିଶ୍ୱାସଃ ପ୍ରତ୍ୟାଶା ଚାସ୍ତେ|
22 ௨௨ ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;
ଯୂଯମ୍ ଆତ୍ମନା ସତ୍ୟମତସ୍ୟାଜ୍ଞାଗ୍ରହଣଦ୍ୱାରା ନିଷ୍କପଟାଯ ଭ୍ରାତୃପ୍ରେମ୍ନେ ପାୱିତମନସୋ ଭୂତ୍ୱା ନିର୍ମ୍ମଲାନ୍ତଃକରଣୈଃ ପରସ୍ପରଂ ଗାଢଂ ପ୍ରେମ କୁରୁତ|
23 ௨௩ அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
ଯସ୍ମାଦ୍ ଯୂଯଂ କ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାତ୍ ନହି କିନ୍ତ୍ୱକ୍ଷଯଣୀଯୱୀର୍ୟ୍ୟାଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଜୀୱନଦାଯକେନ ନିତ୍ୟସ୍ଥାଯିନା ୱାକ୍ୟେନ ପୁନର୍ଜନ୍ମ ଗୃହୀତୱନ୍ତଃ| (aiōn )
24 ௨௪ மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
ସର୍ୱ୍ୱପ୍ରାଣୀ ତୃଣୈସ୍ତୁଲ୍ୟସ୍ତତ୍ତେଜସ୍ତୃଣପୁଷ୍ପୱତ୍| ତୃଣାନି ପରିଶୁଷ୍ୟତି ପୁଷ୍ପାଣି ନିପତନ୍ତି ଚ|
25 ௨௫ கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
କିନ୍ତୁ ୱାକ୍ୟଂ ପରେଶସ୍ୟାନନ୍ତକାଲଂ ୱିତିଷ୍ଠତେ| ତଦେୱ ଚ ୱାକ୍ୟଂ ସୁସଂୱାଦେନ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତିକେ ପ୍ରକାଶିତଂ| (aiōn )