< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
అస్మాకం వినిమయేన ఖ్రీష్టః శరీరసమ్బన్ధే దణ్డం భుక్తవాన్ అతో హేతోః శరీరసమ్బన్ధే యో దణ్డం భుక్తవాన్ స పాపాత్ ముక్త
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
ఇతిభావేన యూయమపి సుసజ్జీభూయ దేహవాసస్యావశిష్టం సమయం పునర్మానవానామ్ ఇచ్ఛాసాధనార్థం నహి కిన్త్వీశ్వరస్యేచ్ఛాసాధనార్థం యాపయత|
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
ఆయుషో యః సమయో వ్యతీతస్తస్మిన్ యుష్మాభి ర్యద్ దేవపూజకానామ్ ఇచ్ఛాసాధనం కామకుత్సితాభిలాషమద్యపానరఙ్గరసమత్తతాఘృణార్హదేవపూజాచరణఞ్చాకారి తేన బాహుల్యం|
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
యూయం తైః సహ తస్మిన్ సర్వ్వనాశపఙ్కే మజ్జితుం న ధావథ, ఇత్యనేనాశ్చర్య్యం విజ్ఞాయ తే యుష్మాన్ నిన్దన్తి|
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
కిన్తు యో జీవతాం మృతానాఞ్చ విచారం కర్త్తుమ్ ఉద్యతోఽస్తి తస్మై తైరుత్తరం దాయిష్యతే|
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
యతో హేతో ర్యే మృతాస్తేషాం యత్ మానవోద్దేశ్యః శారీరికవిచారః కిన్త్వీశ్వరోద్దేశ్యమ్ ఆత్మికజీవనం భవత్ తదర్థం తేషామపి సన్నిధౌ సుసమాచారః ప్రకాశితోఽభవత్|
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
సర్వ్వేషామ్ అన్తిమకాల ఉపస్థితస్తస్మాద్ యూయం సుబుద్ధయః ప్రార్థనార్థం జాగ్రతశ్చ భవత|
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
విశేషతః పరస్పరం గాఢం ప్రేమ కురుత, యతః, పాపానామపి బాహుల్యం ప్రేమ్నైవాచ్ఛాదయిష్యతే|
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
కాతరోక్తిం వినా పరస్పరమ్ ఆతిథ్యం కృరుత|
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
యేన యో వరో లబ్ధస్తేనైవ స పరమ్ ఉపకరోతృ, ఇత్థం యూయమ్ ఈశ్వరస్య బహువిధప్రసాదస్యోత్తమా భాణ్డాగారాధిపా భవత|
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
యో వాక్యం కథయతి స ఈశ్వరస్య వాక్యమివ కథయతు యశ్చ పరమ్ ఉపకరోతి స ఈశ్వరదత్తసామర్థ్యాదివోపకరోతు| సర్వ్వవిషయే యీశుఖ్రీష్టేనేశ్వరస్య గౌరవం ప్రకాశ్యతాం తస్యైవ గౌరవం పరాక్రమశ్చ సర్వ్వదా భూయాత్| ఆమేన| (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
హే ప్రియతమాః, యుష్మాకం పరీక్షార్థం యస్తాపో యుష్మాసు వర్త్తతే తమ్ అసమ్భవఘటితం మత్వా నాశ్చర్య్యం జానీత,
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
కిన్తు ఖ్రీష్టేన క్లేశానాం సహభాగిత్వాద్ ఆనన్దత తేన తస్య ప్రతాపప్రకాశేఽప్యాననన్దేన ప్రఫుల్లా భవిష్యథ|
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
యది ఖ్రీష్టస్య నామహేతునా యుష్మాకం నిన్దా భవతి తర్హి యూయం ధన్యా యతో గౌరవదాయక ఈశ్వరస్యాత్మా యుష్మాస్వధితిష్ఠతి తేషాం మధ్యే స నిన్ద్యతే కిన్తు యుష్మన్మధ్యే ప్రశంస్యతే|
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
కిన్తు యుష్మాకం కోఽపి హన్తా వా చైరో వా దుష్కర్మ్మకృద్ వా పరాధికారచర్చ్చక ఇవ దణ్డం న భుఙ్క్తాం|
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
యది చ ఖ్రీష్టీయాన ఇవ దణ్డం భుఙ్క్తే తర్హి స న లజ్జమానస్తత్కారణాద్ ఈశ్వరం ప్రశంసతు|
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
యతో విచారస్యారమ్భసమయే ఈశ్వరస్య మన్దిరే యుజ్యతే యది చాస్మత్స్వారభతే తర్హీశ్వరీయసుసంవాదాగ్రాహిణాం శేషదశా కా భవిష్యతి?
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
ధార్మ్మికేనాపి చేత్ త్రాణమ్ అతికృచ్ఛ్రేణ గమ్యతే| తర్హ్యధార్మ్మికపాపిభ్యామ్ ఆశ్రయః కుత్ర లప్స్యతే|
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
అత ఈశ్వరేచ్ఛాతో యే దుఃఖం భుఞ్జతే తే సదాచారేణ స్వాత్మానో విశ్వాస్యస్రష్టురీశ్వస్య కరాభ్యాం నిదధతాం|

< 1 பேதுரு 4 >